Pages

Tuesday, 24 July 2012

பெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை



   பெரிய பெரிய ஆசைகள் - 
முதல் பரிசு பெற்ற கவிதை  




மண்ணில் வாழும் மனிதனும் சரி 
விண்ணில் இருக்கும் தேவனும் சரி 
முற்றிலும் துறந்த முனிவனும் சரி 
ஆசையில்லாமல் இருந்தனரா?

ஆசையில் அசை போட்டு 
கற்பனையில் மிதந்து 
காற்றினிலே கோட்டை கட்டுவார்கள் 
சோம்பேறிகள்.

ஆசையையே ருசி பார்த்து 
நிஜவாழ்வில் தின்று ஏப்பமிட்டு 
அதிர்ஷ்ட வாழ்க்கை வாழ்பவர்கள் 
உழைப்பாளிகள்.

பிறந்த குழந்தை முதல் 
இறக்கும் மனிதன் வரை 
பூமி பிறந்த காலம் முதல் 
அது அழியும் காலம் வரை 
எங்கும் எப்போதும் இருப்பது ஆசை! ஆசை!!

ஆடையில்லாதவன் அரை மனிதன் 
ஆசை இல்லாதவன் மனிதன் அல்ல.
ஆசை எளிதில் புகுவது 
ஆசை உலகத்தை ஆட்டி படைக்கிறதே .

நேற்று கற்கால மனிதன் 
இன்று கம்பியூட்டர் மனிதன் 
நாளை ........... மனிதன் !
எல்லாமே ஆசை! ஆசை !!

காந்திஜீக்கு அஹிம்சை மீது ஆசை 
சுதந்திர இந்தியா பிறந்தது 

புத்தனுக்கு ஆசையே துறக்க ஆசை 
மகனாக மாறினார் 

அன்னை தெரசாவுக்கு மக்கள் தொண்டின் மீது ஆசை 
ஏழைகள் வாழ்கின்றனர் 

ஷாஜஹானுக்கு காதல் மீது ஆசை 
உலக அதிசயம் உருவானது 

ஆம்ஸ்டிராங்க்கு விண்ணில் பறக்க ஆசை 
நிலவினில் நடந்தார் 

டென்சிங், ஹிலாரிக்கு வானத்தை தொட ஆசை 
இமயத்தின் முனையை அடைந்தார் 

இவர்களின் பெரிய பெரிய ஆசைகள் 
கால ஏட்டிலே நீங்கா இடம் பிடித்தன 

எனக்கும் பெரிய பெரிய ஆசைகள் உண்டு 
இந்த ஈராயிரத்தொன்றாம் நூற்றாண்டில் !

பாகிஸ்தான், இலங்கையை நண்பர்களாக பார்க்க ஆசை 
இந்து-முஸ்லிம்-சிங்களர் பரம்பரை எதிரிகள் அல்லவே 

தீவிரவாதிகளை நல்லவர்களாக திருத்த ஆசை 
பிறக்கும் அனைவரும் நல்லவர்கள் தானே.

சாதி, மத பிரிவினை சுவரை இடித்திட ஆசை 
எல்லா மனிதனில் இருப்பது ஓருயிர் தானே.

பாமரனை படித்தவனாக்க ஆசை 
அறிவு ஒரு பிரிவுக்கு மட்டும் சொந்தமல்லவே

பூமி செல்வங்களனைத்தும் பொது தானே.

ஏழ்மையை உலகை விட்டு  ஒழித்திட  ஆசை 


தனிக்குடித்தன  நாடுகள் நீக்கி கூட்டு குடும்ப உலகு காண ஆசை 
உலகம் என்பது ஒரே வீடல்லவா!

எயிட்ஸ் மருந்தினை கொடுக்க ஆசை 
முயன்றால் முடியாது ஏதுமில்லையே 

குறுகிய மனப்பான்மை இல்லா  பரந்த மனம் காண ஆசை 
மனிதன் ஒவ்வொருவரும் சுயநலவாதிகள் அல்லவே 

அடாவடித்தனம் , ஊழல் இல்லாத அரசியல் பார்க்க ஆசை 
எல்லோரும் சத்தியத்தை விரும்ம்புவது சகஜம் தானே!

இரு கைகொண்டு சுனாமியை தடுக்க ஆசை 
பூகம்பத்தை காலால் அழுத்தி நிறுத்திட ஆசை.
உடலால் வெள்ளத்தை கரை கட்ட  ஆசை.
உடல் உழைப்பால் பசி, பஞ்சம் நீக்கிட ஆசை.

கடைசியில் எனது பெரிய ஆசை 
என் வாழ்வில் இறைவனை காண ஆசை அவன் 
காற்றில் மறைந்ந்திருந்தாலும் சரி 
சுடராக ஒட்டி கொண்டிருந்தாலும் சரி 
நிலத்தில் புதைந்திருந்தாலும் சரி 
நீரில் கரைந்திருந்தாலும் சரி 
மேகத்தில் ஒளிந்திருந்தாலும் சரி 
எனது ஆசை அவனை தேடி அடைவதே.

***********************************************************************



இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..






Monday, 23 July 2012

பைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை

பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை 





(  மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப் பட்ட சிறந்த கவிதைகளுள் ஒன்று.)


பாரதியே! தமிழில் சுதந்திர தாகத்தை தூண்டினாய் 
பாமரன் புரிய பாட்டிலே எளிமை புகுத்தினாய் 


புதுமை பெண்களை கொடுத்து புரட்சி படைத்தாய் 
பார்த்தினீய கலையான நஞ்சு செந்தமிழில் நுழைந்தால் 
பொறுப்பானா ? உன் வழி தமிழன் ! பொசுக்குவான் ?


தமிழா ! பார்த்தினீய  களைக்கு  விலையாகாதே 
தமிழ் பயிரில் கலக்க நினைக்காதே.


இன்று களை  ! நாளை பைந்தமிழிழை அளிக்கும் உலையாக்காதே 
மறக்காதே! பஞ்ச பூதத்தையும் வெல்ல வல்லது தமிழ்!


காற்றில் கலந்து உயிர் சுவாசமாய் இயக்கும் 
அக்னியில் அழியாது  பிரகாசமாய் ஒளிரும் 


நிலத்தில் புதையாது உலக உயிரை காக்கும் 
ஆகாயத்தில்  மறையாது மலையாய் பொழியும் 


நீராய் கொடுத்து பயிர் களை பசுமையாக்கும் 
முறத்தால் புலியை துரத்திய தமிழச்சி பரம்பரை !


இளமை நாகரீக பசப்பு வார்த்தையில் மயங்காதே 
இனிய தமிழன் பண்பாட்டை விற்று விடாதே 


பாரதியே ! உன் ஆயுசு நீண்டிருந்தால் 
பார்தினீயக் களையை கவியால் வேரறுத்து தீயிட்டிருப்பாய்   


செய்வோம் சத்தியத்தை ! துரத்துவோம் பார்தினீ யத்தை   
காத்திடுவோம் தமிழை! போற்றிடுவோம் தமிழன் கலாச்சாரத்தை!


************************************************************************

Saturday, 21 July 2012

புகை உயிருக்கு பகை - பரிசு கவிதை

புகை உயிருக்கு பகை - பரிசு கவிதை 






அகில இந்திய தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் மாநில அளவில் நடந்த புது கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது 

புகை பிடிப்பவனே 
கொஞ்சம் நில்.


என்னை ஆசையாய் எடுத்தாய் 
ஆதரவாய் முத்தமிட்டாய் 
அன்பென எண்ணி ஏமாந்தேன் - பிறகு 


தீயிட்டும் பொசுக்கினாய் 
'இறந்து விட்டேன்' என்று எண்ணி.


நானும் பொசுக்குவேன் - உன் 
உடம்பினுள் புகையாக மாறி.


அது மட்டுமா?
சுகத்தைத தந்த நான்- உன் 
சுகத்தை அழிக்கப்போகிறேன் .


ஒரு நாள் உன்னையும் 
'புற்று நோய்' சூட்டால் 
எரித்துச சாம்பலாக்குவேன்.


என் வெள்ளாடையை 
எரித்தாயல்லவா?  உன் 
மனைவிக்கு அந்த வெள்ளாடையை 
பரிசளிப்பேன்.


பௌர்ணமி போல  இருக்கும் 
உன் வாழ்வை  என் 
புகை கொண்டு மூடி 
அமாவாசையாக்குவேன்.


இதெல்லாம் தேவையா? நான் 
என்ன உன் கை பாவையா.?


மனிதா 
என் புகை உயிருக்குப் பகை 
அதை மறந்துவிட்டால் 
வாழ்வை துறந்துவிடுவாய்.!


என்னை முத்தமிட்டவர்கள் 
மாண்டு போவார்கள் 
ஜாக்கிரதை!


'ரெட்' அபாய அறிகுறி 
'சிகரெட்' மரண அறிகுறி.







  

காம்பை தேடும் பூக்கள் - கவிதை

காம்பை தேடும் பூக்கள்  - கவிதை 






காம்பை விட்டு வந்த 
பூக்கள் நாங்கள் !


தென்றல் தீண்டினால் கூட 
துவண்டு விடுகின்றோம்.


வெயிளின் கொடுமை 
அப்பப்பா..கருகி விடுகிறோம்.


ஒட்டிக் கொள்ள 
காம்பு கிடைத்து விட்டால் !!


தென்றல் காற்று 
எங்களுக்கு இனிமையாயிருக்கும் 


வாட வைக்கும் வெயில் வருனினும் 
வாட மாட்டோம்.
மாறாய் பூத்துக் குலுங்குவோம்.


மடித்து விடும் காற்று  அடிப்பினும் 
மடிய மாட்டோம்.
மாறாய் மலர்வோம்.


வெட்டி விடும் மின்னல் வருனினும் 
வீழ மாட்டோம்.
மாறாய் வலிமை பெறுவோம்.


காம்பு! என்போன்ற பூக்களுக்கு 
இரும்பு கம்பி.


காம்பு இருக்கும்வரை 
நாம் உயிரோடு இருப்போம்.


மனிதா! நாம் மலர்வது 
உன்னை மகிழ்விக்க தான்.


உன் மகிழ்ச்சிக்காக  நாங்கள் 
காம்பை இழக்கத் தயார். 


என்னைப் போல நீயும் 
பிறர் மகிழ்ச்சிக்காக வாழ. 




  

கலியுலக கம்ஸன் - கவிதை

கலியுலக கம்ஸன் - கவிதை 





கலியுலக கம்ஸன் 
விலைவாசியை 
அழிப்பதற்கு 
மீண்டும் 
கிருஷ்ணாவதாரம் 
எப்போது?

5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி (5 MINUTES BREATHING EXERCISE)



5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி   

    (5 MINUTES BREATHING EXERCISE ) 



எதற்க்காக இந்த பயிற்சி என்பது பற்றிய விளக்கம் :

இதயம், நுரையீரல், இரத்த  ஓட்டம், சர்க்கரை அளவு, இரத்த  கொதிப்பு, உடல் புத்துணர்ச்சிக்காக பயன் படுவது.



    
மேலே உள்ள முதல் படத்தில் மூச்சு இழுக்கும் போது  எப்படி காற்று நுரையீரல் மூலம் உள்ளே வருகிறது என்பதை காட்டும் படம் 

இரண்டவது படத்தில் மூச்சு வெளியே விடும்  போது  எப்படி காற்று நுரையீரல் மூலம் வெளியே செல்கிறது என்பதை காட்டும் படம் 

ஒருவனுக்கு வயது ஏற ஏறத்தான் உடல் ஆரோக்கியத்தை பற்றிய சிந்தனை வருகின்றது. அப்போது அவன் பல வேலைகள் செய்ய நினைத்தாலும் அவன் உடல் அவனுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. அப்போது தான் தன உடலை நன்றாக பேணி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கின்றது . ஏன் கட்டாயமும் வருகின்றது . அதற்காக சிறந்த வழிகளை தேடுகின்றான். பணம் கொடுத்து பல பயிற்சி செய்கிறான். விளம்பத்தின் கவர்ச்சியை நம்பி ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து பல உடல் பயிற்சி சாதனங்களை வாங்கி பயிற்சியை மேற்கொள்கிறான். அவ்வளவும் அதிகபட்ஷம் ஓரிரு மாதங்கள் வரை தான். அதற்குப் பிறகு அனைத்தும் வீட்டின் ஒரு மூலையில் தூங்கி கிடக்கும். ஏன் ? உடல் பயிற்சி செய்யவில்லை என்று கேட்டால் "நேரமில்லை அல்லது உடல் ஒத்துழைக்கவில்லை " என்ற பதில் தான் வரும். நான் சொல்வது உண்மை தானே!



வயதான பிறகு உடலை பல கோணங்களில் நீட்டி, மடக்கி, வளைத்து , நிமிர்ந்து , உட்கார்ந்து செய்யும் யோகாசனங்கள் இளம் வயதுகாரங்க கூட செய்வதுற்கு கஷ்டமாய் இருக்கும்.அப்படி இருக்கும் போது வயதானவர்கள் எப்படி செய்ய முடியும். அதனாலே தான் பெரியவங்க '5 ல் வளையாதது 50 ல் வளையமா ? ,  என்றும் 'தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் ' என்றும் சொல்லியிருக்கிறார்கள். இது உடற்பயிற்சிக்கு மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் பொருந்தும். அதாவது சிறிய வயதிலிருந்து கற்றுக் கொடுத்திருந்தால் வயதான பிறகும் உடல் ஒத்துழைப்பு தந்திருக்கும்.அனால் 'சிறிய வயதில் கற்று கொடுப்பதற்கு நேரம் இல்லை தகுந்த ஆட்களும் கிடைக்கவில்லை' என்பது தான் பஹில் வரும். 

ஒருவனுக்கு உடல் ஆரோக்கியம் தான் அடித்தளம். அதைகொண்டு தான் உடல் பலம் பெறமுடியும். அதற்கு செலவில்லாமல் எளிய வழியில் பக்க விளைவு இல்லாத  உடலை 'சிலிம்'மாக வைக்கும் வழியைத்தான் அனைவரும் விரும்புவர்.பணம் கொடுத்துவிட்டலோ, பணம் செலவழித்து விட்டாலோ உடல் ஆரோக்கியம் வந்து விடாது. உங்கள் உடலை நீங்கள் தான் பலப்படுத்திக் கொள்ளவேண்டும்.

உடலின் பலம் 'தம்' மில் தான் இருக்கின்றது. 'தம்' என்றால் புகை பிடிப்பது என்ற அர்த்தம் இல்லை.மூச்சை (காற்றை) பிடித்து வைப்பதில் தான் இருக்கின்றது. எவ்வளவுகெவ்வளவு அதிக நேரம் மூச்சை அடக்கி வைத்திருகின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு உடலில் தெம்பு இருக்கின்றது என்று அர்த்தம். குறைந்தது 5 அல்லது 10 வினாடிகள் வரை மூச்சை அடக்கி வைத்திருந்தால் உடல் பலம் நல்லநிலையில் இருக்கின்றது என்று அர்த்தம்.சிலர் குறிப்பாக நீச்சல் தெரிந்தவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் 60 வினாடிக்கும் மேலாக மூச்சை அடக்கி வைத்திருப்பார்கள். டயரில் காற்று இருக்கும் வண்டிகள் இலேசாகவும் அதிக வேகத்தில் ஓடுவதற்கு  உதவி செய்வது போல உடலில் மூச்சு அடக்கப்படும்போது உடல் இலேசாகவும் , அதிக அளவு சக்தியையும்  கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் வேகமாக ஓடுவதற்கு மூச்சை அடக்கிக்கொண்டு நீங்கள் கவனித்திருப்பீர்கள்.அதற்கு மூச்சு பயிற்சி மிகவும் அவசியம்.



இந்த பயிற்சியில் மூச்சை வயிறை  சுருக்கி உள்ளே இழுப்பதால் 'தொப்பை' என்கிற பேச்சுக்கு இடம் ஏதுமில்லை. அப்படி 'தொப்பை' உள்ளவர்கள் இந்த பயிற்சி தீவிரமாக செய்வதன் மூலம் 'தொப்பை' நன்றாக குறைத்து 'சிலிம்' மாக மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது.

காற்றை வேக வேகமாக மூக்கின் வழியே சுவாசிப்பதால் காற்று உடலின் உள்ள அனைத்து பாகங்களுக்கும் போய்  சேருவதற்கு அதிகநேரம் எடுத்துக்கொள்கிறது.அதனால் உடல் விரைவில் சோர்வு அடைகிறது.

உதாரணமாக சற்று பருமனானவர்கள் சிறிதளவு வேகமாக நடந்தாலே இளைக்க ஆரம்பித்து சோர்வடைந்து விடுகின்றனர்.ஏனென்றால் அவர்கள் இருதயமும் , நுரையீரலும் வேக வேக வேலை செய்து கலைத்து விடுகின்றது.

இதை போக்கத் தான் மூச்சிப்பயிற்சி மிகவும் அவசியமாகிறது . இந்த பயிற்சி உடல் புத்துணர்ச்சி தருகிறது.உடலை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மூச்சை 5 வினாடிகள் வரை அடக்கி வைத்திருப்பதால் சுவாசிக்கும் காற்று உடலின் முளைக்கும் மற்ற பகுதிக்கும் ஒரேமாதிரியாக நிதானமாக    எடுத்துச்சென்று புத்துணர்ச்சியை தருகிறது.

பல வழிகளில் புத்துனர்ச்ச்சியை அடையலாம். நடை பயிற்சி, யோகா, தியானம், ஒலி ஒளி யோகா, உடற்பயிற்ச்சி மற்றும் மூச்சு பயிற்சி. இவற்றில் மிக  மிக எளிதானதும் , எந்த இடத்திலும், எந்த வயதினருக்கும் குறைந்த நேரத்தில் சிறந்த பலனும், இலகுவானதும் இருப்பது இந்த மூச்சு பயிற்சி தான்.

பயிற்சியின் போது  பின்பற்ற வேண்டியவை :

ஒவ்வொரு முறை வயிற்றை சுருக்கி மூச்சு இழுக்கும்போது குறைந்தது 1,2,3,4,5 எண்ணும் வரை நீளமாக மூச்சை மெல்ல மெல்ல இழுக்க வேண்டும்.பிறகு குறைந்தது 1,2,3,4,5 எண்ணும் வரை மூச்சை அடக்கி வைத்திருக்க வேண்டும்.அதேபோல் குறைந்த்தது 1,2,3,4,5 எண்ணும் வரை மூச்சை நீண்டு மெல்ல மெல்ல விடவேண்டும்.  

இனி மூச்சு பயிற்சிக்கு தயாராயிருங்கள்.

முதல் பயிற்சி : இரு துவாரங்கள் வழியாக 

1.  ஓரிடத்தில் சௌகரியமாக அமருங்கள்.

2. உடலை இலேசாக்கி கண்களை மெல்ல மெல்ல மூடுங்கள். பயிற்சி முடியும் வரை கண்களை மூடிக்கொண்டிருக்க வேண்டும்.கட்டை விரலையும்  

3.   இப்போது சாதாரணமாக 1,2,3,4,5 எண்ணிக்கொண்டு மூக்கின் இரு துவாரங்கள் வழியாக வயிற்றை சுருக்கி மூச்சை மெல்ல மெல்ல இழுங்கள்.

4. 1,2,3,4,5 எண்ணும்வரை மூச்சை அடக்கி வைத்திருங்கள் .     

5. பிறகு 1,2,3,4,5 எண்ணும்வரை மூச்சை மெல்ல மெல்ல வெளியே விடுங்கள்.

 இரண்டாவது பயிற்சி : இடது துவாரம் வழியாக மட்டும்

1. கட்டை விரலால் (படத்தில் காட்டியபடி) வலது துவாரத்தை அடைத்துக்கொண்டு இடது துவாரம் மேற்ப்படி முறையே 3,4 மற்றும் 5 ஆவது செய்முறையை பின்பற்ற வேண்டும்.

  மூன்றாவது பயிற்சி :வலது துவாரம் வழியாக மட்டும்      

 1. சுண்டு விரலால் (படத்தில் காட்டியபடி) இடது  துவாரத்தை அடைத்துக்கொண்டு வலது துவாரம்  வழியாக மேற்ப்படி முறையே 3,4 மற்றும் 5 ஆவது செய்முறையை பின்பற்ற வேண்டும்.

  
         நான்காவது பயிற்சி :வலது துவாரம் வழியாக மூச்சை இழுத்து இடது துவாரம் வழியாக 

1.    கட்டை விரல் மற்றும் சுண்டு விரலை உபயோகித்து வலது துவாரம் வழியாக மூச்சை 1,2,3,4,5 எண்ணும் வரை மெல்ல மெல்ல இழுத்து, 1,2,3,4,5,வரை  மூச்சை அடக்கி 1,2,3,4,5 வரை இடது துவாரம் வழியாக மெல்ல லெல்ல வெளியில் விடவேண்டும்.


    ஐந்தாவது பயிற்சி :இடது  துவாரம் வழியாக மூச்சை இழுத்து வலது  துவாரம் வழியாக 



1.    கட்டை விரல் மற்றும் சுண்டு விரலை உபயோகித்து இடது  துவாரம் வழியாக மூச்சை 1,2,3,4,5 எண்ணும்  வரை வரை மெல்ல மெல்ல இழுத்து, 1,2,3,4,5,வரை  மூச்சை அடக்கி 1,2,3,4,5 வரை இடது துவாரம் வழியாக மெல்ல மெல்ல வெளியில் விடவேண்டும்.

இந்த 5 பயிற்ச்சியும் முடிந்த பிறகு 

சாதாரணமாக மூச்சை மெல்ல மெல்ல இழுத்து , அடக்கி பிறகு வெளியில் விடவேண்டும்.

இப்போது தான் கண்களை மெல்ல மெல்ல திறக்க வேண்டும்.இப்போதது உங்கள் உடலில் புத்துணர்ச்சி பரவுவதை உணர்வீர்கள்.

தினமும்  இந்த பயிற்சியினை செய்யும் போது  புது தெம்பை உணர்வீர்கள்.

தினமும் பயிற்சியினை தவறாது செய்யுங்கள் !
சிறந்த பலன் அடையுங்கள் !

நன்றி .   












Friday, 20 July 2012

e.காதல் - கவிதை

e.காதல் - கவிதை 








வண்ண பூக்களை சுற்றாத 
வண்டுகள் உண்டோ ?


பூவையர்களைச் சுற்றாத 
மண்டுகள் உண்டோ?


வான் நிலவை பாடாத 
கவிஞன் உண்டோ?


காதல் கனவுகளை காணாத 
கண்கள் உண்டோ?


மண்ணையாளும் மன்னவனுக்கு கூட 
மண் குடிசையில் வாழும் பெண் மீது 
காதல்.


மண்ணில் வாழ்ந்த முனிவனுக்கும் கூட 
விண்ணில் இருந்த கன்னியின் மீது 
காதல் 


கண்டம் தாண்டி கூட சாட் செய்து 
கம்பியுட்டர் மூலம் 
காதல்.  


இதற்கு 
நீங்களும் நானும் 
விதி விலக்கா என்ன?


உறவு அனலாய் மாறும்போது 
காதல் உருகி உருக்குலைத்து 
நீராய் , பின் ஆவியாய் மாறி 
காணாமலே செய்து விடும்.


சிலர் 
இன்பத்தை கடனாக வாங்கி 
காதலை அடகு வைக்கிறார்கள் 
'வட்டி' திருமணமாய் வரும்போது 
அசல் காதலையே துறக்கிறார்கள் 


இப்படி 
வரதட்சணைக்காக நெருப்பில் 
வீழ்ந்து அழிந்த காதல்கள் தான் எத்தனை?
சாதி மதத்திற்க்ககாக இதயங்களை 
எரித்த காதல்கள் தான் எத்தனை ?
கெளரவத்திரற்க்காக இளம் பூக்களை 
மண்ணில் புதைத்த காதல்கள் தான் எத்தனை ?


இன்றைய காதல் 
அவன் இவளைப் பார்பான் 
இவள் அவனைப் பார்ப்பாள் 
கண்கள் பேசும் 
மொபைல் மெசேஜ் அனுப்பும் 
கம்பியுட்டரில்  சாட் செய்யும் 
'ஐ லவ் யூ 'என்பார்கள் 
சந்திப்புகள் நிகழும் கைகள் விளையாடும் 
ஆனால் 
திருமணம் வரும் பொது அந்த 
இருமணங்களை எங்கே தேடுவது ?


காமத்தால் வரும் போலி காதல்கள் 
காளான்களாய் போய்விடும் 
உடல் அழகால் உதித்த புனிதமில்லாக் காதல்கள் 
ஊனமாய் இருந்து விடும் 
செல்வத்தால் வளரும் பகட்டு காதல்கள் செத்து மடிந்திடும் 


அன்புமனத்தால் மலர்ந்த தெய்வீக காதல்கள் மட்டுமே 
ஆணி வேறாய் நிலைத்திடுமே.