இருக்கும் போது இல்லாது போல் இரு

IF YOU HAVE, ASSUME YOU DON'T HAVE

PUTHU KAVITHAI
மதுரை கங்காதரன்

பறக்கும் வசதி இருக்கும்போது
நடக்கவும் செய்
உனது நிலைமை மாறினாலும்
ஒன்றும் தெரியாது.

பணம் இருக்கும் போது
சிக்கனம் கடைபிடி.
பணம் இழக்கும் போது
உனக்கு வலி தெரியாது.

பதவியில் இருக்கும்போது
சாதாரணமாய் இரு
பதவி பறிபோகும் போது
நீ தளராமல் இருக்கலாம்.

முதல் தேதியில் சம்பளம் கிடைத்தாலும்
மத்தியில் எடுத்து செலவழி.
முதல் தேதியில் தவறி கிடைத்தாலும்
நீ சமாளித்து விடலாம்.
அறுசுவை உணவு கிடைக்கும்போது
பத்தியத்தையும் தெரிந்து கொள்.
ஒருவேளை அறுசுவை இல்லாதபோது
உனக்கு வித்தியாசம் தெரியாது.
புகழ் உச்சியில் இருக்கும்போது
இயல்பாய் இருந்து பழகு.
புகழ் மறையும்போது
நீ கேலிக்கு ஆளாகமாட்டாய்.

மாளிகை வாழ்க்கை வாழும்போதும்
அவ்வப்போது எளிமை மேற்க்கொள்
கோலம் மாறினாலும்
நீ நிம்மதி பெறுவாய்.

வெற்றியடையும் போதும்
தோல்வியை நினைவில் கொள்
வெற்றி கிட்டாதபோது
உனக்கு மனவலிமை கொடுக்கும்.
நினைத்தது கிடைக்காதபோது
கிடைத்ததை ஏற்றுக்கொள்
திருப்தி என்ற எண்ணம்
உனக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.

ஓடி ஓடி உழைக்கின்ற போதும்
தேவையான ஓய்வு எடுத்துக்கொள்
ஓடி ஓய்ந்த பிறகு
உனக்கு மனஅமைதி கொடுக்கும்.

மகிழ்ச்சி வரும்போது
முகத்தில் அமைதி காட்டு
ஒருவேளை உனக்கு துக்கம் வந்தால்
உனது இதயம் உடைந்து விடாது.
உறவுகள் இருக்கும்போது
தனிமையையும் கற்றுக்கொள்.
உறவுகள் பிரியும்போது
நீ துன்பப்படமாட்டாய்.

நினைப்பது நடக்காதபோது
நடந்தது நன்மையென எண்ணு
அந்த அளவான ஆசை உள்ளம்
உனக்கு வாழ்கையில் தெளிவை தரும்.

இருக்கின்றபோது இல்லாது போல் இரு
இல்லாத போது இருக்கின்றது போல் இரு
உனக்குள் எல்லாமே இருக்கிறது
எல்லாமே உனக்குள் இல்லை.

IF YOU HAVE, ASSUME YOU DON'T HAVE
PUTHU KAVITHAI
மதுரை கங்காதரன்
பறக்கும் வசதி இருக்கும்போது
நடக்கவும் செய்
உனது நிலைமை மாறினாலும்
ஒன்றும் தெரியாது.
பணம் இருக்கும் போது
சிக்கனம் கடைபிடி.
பணம் இழக்கும் போது
உனக்கு வலி தெரியாது.
பதவியில் இருக்கும்போது
சாதாரணமாய் இரு
பதவி பறிபோகும் போது
நீ தளராமல் இருக்கலாம்.
முதல் தேதியில் சம்பளம் கிடைத்தாலும்
மத்தியில் எடுத்து செலவழி.
முதல் தேதியில் தவறி கிடைத்தாலும்
நீ சமாளித்து விடலாம்.
அறுசுவை உணவு கிடைக்கும்போது
பத்தியத்தையும் தெரிந்து கொள்.
ஒருவேளை அறுசுவை இல்லாதபோது
உனக்கு வித்தியாசம் தெரியாது.
புகழ் உச்சியில் இருக்கும்போது
இயல்பாய் இருந்து பழகு.
புகழ் மறையும்போது
நீ கேலிக்கு ஆளாகமாட்டாய்.
மாளிகை வாழ்க்கை வாழும்போதும்
அவ்வப்போது எளிமை மேற்க்கொள்
கோலம் மாறினாலும்
நீ நிம்மதி பெறுவாய்.
வெற்றியடையும் போதும்
தோல்வியை நினைவில் கொள்
வெற்றி கிட்டாதபோது
உனக்கு மனவலிமை கொடுக்கும்.
நினைத்தது கிடைக்காதபோது
கிடைத்ததை ஏற்றுக்கொள்
திருப்தி என்ற எண்ணம்
உனக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.
ஓடி ஓடி உழைக்கின்ற போதும்
தேவையான ஓய்வு எடுத்துக்கொள்
ஓடி ஓய்ந்த பிறகு
உனக்கு மனஅமைதி கொடுக்கும்.
மகிழ்ச்சி வரும்போது
முகத்தில் அமைதி காட்டு
ஒருவேளை உனக்கு துக்கம் வந்தால்
உனது இதயம் உடைந்து விடாது.
உறவுகள் இருக்கும்போது
தனிமையையும் கற்றுக்கொள்.
உறவுகள் பிரியும்போது
நீ துன்பப்படமாட்டாய்.
நினைப்பது நடக்காதபோது
நடந்தது நன்மையென எண்ணு
அந்த அளவான ஆசை உள்ளம்
உனக்கு வாழ்கையில் தெளிவை தரும்.
இருக்கின்றபோது இல்லாது போல் இரு
இல்லாத போது இருக்கின்றது போல் இரு
உனக்குள் எல்லாமே இருக்கிறது
எல்லாமே உனக்குள் இல்லை.
No comments:
Post a Comment