Pages

Saturday 18 May 2013

'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி HOW DO YOU AVOID YOUR NEXT BIRTH? PUTHUK KAVITHAI

'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி 
HOW DO YOU AVOID YOUR NEXT BIRTH?
PUTHUK KAVITHAI 
புதுக்கவிதை 

இது நாள் வரை நீ 

  

பிறரை கெடுக்கும் செயல் செய்யவில்லையெனில் 
மறுபிறவியில் ' அடிபடும் நாயாய் ' பிறப்பதை தடுக்கும் 
வரம் கிடைக்கும் வழியை தெரிந்துகொள்வாயாக!

 

பிறர் பொருட்களை ஏமாற்றி அபகரிக்கவில்லையெனில்  
மறுபிறவியில் 'பலி ஆடாய் 'பிறப்பதை தடுக்கும் 
வரம் கிடைக்கும் வழியை தெரிந்துகொள்வாயாக! 



ஏழைகளின் வயிற்றை அடித்து வாழவில்லையெனில்  
மறுபிறவியில் 'அற்பப் புழுவாய்' பிறப்பதை தடுக்கும்  
வரம் கிடைக்கும் வழியை தெரிந்துகொள்வாயாக!

 

எவரையும் பணத்திற்காக கொலை செய்யவில்லையெனில் 
மறுபிறவியில் 'சாக்கடை பன்றி'யாய் பிறப்பதை தடுக்கும்  
வரம் கிடைக்கும் வழியை தெரிந்துகொள்வாயாக! 

 

பொறாமையால் எவர் குடியும் கெடுக்கவில்லையெனில் 
மறுபிறவியில் 'கொசுவாய் ' பிறப்பதை தடுக்கும்  
வரம் கிடைக்கும் வழியை தெரிந்துகொள்வாயாக! 

 

பிறர்க்குத் தெரியாமல் திருடவில்லையெனில் 
மறுபிறவியில் 'குட்டை ஈ 'யாய் பிறப்பதை தடுக்கும் 
வரம் கிடைக்கும் வழியை தெரிந்துகொள்வாயாக! 

                              

பொய் சொல்லி ஆதாயம் தேடவில்லையெனில் 
மறுபிறவியில் 'பல்லி 'யாய் பிறப்பதை தடுக்கும்  
வரம் கிடைக்கும் வழியை தெரிந்துகொள்வாயாக! 

 

ஏமாற்றும் தொழில் செய்து சொத்து சேர்க்கவில்லையெனில்
மறுபிறவியில் 'கரப்பான் பூச்சி 'யாய் பிறப்பதை தடுக்கும் 
வரம் கிடைக்கும் வழியை தெரிந்துகொள்வாயாக!  

 

கடமையைச் செய்ய லஞ்சம் வாங்கவில்லையெனில் 
மறுபிறவியில் 'மூட்டைபூச்சி 'யாய் பிறப்பதை தடுக்கும்  
வரம் கிடைக்கும் வழியை தெரிந்துகொள்வாயாக!  

 

ஊழல் செய்து கருப்புப்பணம் பதுக்கவில்லையெனில் 
மறுபிறவியில் 'கழுதை 'யாய் பிறப்பதை தடுக்கும் 
வரம் கிடைக்கும் வழியை தெரிந்துகொள்வாயாக! 

 

உறவு, மக்களை கொடுமை இழிவு படுத்தவில்லையெனில்
மறுபிறவியில் 'வெட்டுக்கிளியாய் ' பிறப்பதை தடுக்கும் 
வரம் கிடைக்கும் வழியை தெரிந்துகொள்வாயாக!   



மக்களுக்கு கொடுத்த நல்வாக்கு தவறவில்லையெனில் 
மறுபிறவியில் 'மிதிபடும் எலி 'யாய் பிறப்பதை தடுக்கும்  
வரம் கிடைக்கும் வழியை தெரிந்துகொள்வாயாக! 



ஆட்சியில் அமர்ந்து நீதி நெறி தவறவில்லையெனில் 
மறுபிறவியில் 'அடிபடும் மாடாய் ' பிறப்பதை தடுக்கும் 
வரம் கிடைக்கும் வழியை தெரிந்துகொள்வாயாக! 



பிறர் உழைப்பில் சோம்பேறியாய் வாழவில்லையெனில் 
மறுபிறவியில் 'சவுக்கடி எருமையாய் 'யாய் பிறப்பதை தடுக்கும்  
வரம் கிடைக்கும் வழியை தெரிந்துகொள்வாயாக! 



மொத்தத்தில் அனைவருக்கும் நல்ல மனிதனாகவாழ்ந்து 
மறுபிறவி இல்லாத பெருவாழ்வு பெறுகின்ற 
வரம் கிடைக்கும் வழியைத் தெரிந்துகொள்வாயாக!




வாழ்க நல்ல எண்ணமுடன் !
வளர்க நல்ல பண்புடன் !
பெருக பெருவாழ்வு !  



நன்றி, வணக்கம்.

No comments:

Post a Comment