Pages

Monday 26 November 2012

உள்விதி மனிதன் பாகம்: 32 அறுபட்டத் தோலை ஒட்ட வைப்பவன் - INNER MAN HELPS TO JOIN YOUR CUT SKIN

உள்விதி மனிதன்  


சமமனிதக் கொள்கை  

பாகம்: 32 உனது உடலில் அறுபட்டத் தோலை ஒட்ட வைக்கும் உள் மனிதன்-
INNER MAN HELPS TO JOIN YOUR CUT SKIN



அன்புள்ளம் கொண்ட மனிதா! உனக்குள் ஆன்ம ஓட்டமாய் ஓடிக் கொண்டிருக்கும் உள்விதி மனிதன் உனது வாழ்க்கைக்குத் தேவையான மகிழ்ச்சிகளைக் கொடுக்க வந்திருக்கிறேன். நீ என்னை விருந்தாளியாக எண்ணிவிடாதே! உனது உள்ளக்கோவிலில் இருக்கும் அணையாத கோடி பிரகாசம் வெளிச்சம் கொண்ட 'சேவகன்' என்பதை சொல்லிக் கொள்வதில்  பெருமைபடுகிறேன். எனது அனுபவங்களை கடல்போல் வற்றாமல் உனக்குள் வைத்திருக்கிறேன். அந்த அனுபவக்கடல் நிஜக்கடலைக் காட்டிலும் மாறுபட்டு உள்ளது. அதாவது நிஜக்கடலில் மதிப்புமிக்க பொக்கிஷங்கள் கடலின் ஆழத்தில் இருக்கும். சாதாரணமான உள்ளவைகள் மேல்பகுதியில் இருக்கும்.


பிரிய மனிதா! எனது இந்த அனுபவக்கடலில் விலைமதிப்பில்லாத நன்மை தரும் செயல்கள் அவைகள் எளிதில் கிடைக்கும் வண்ணம் தனியாக மேலேயும், தீய மற்றும் அழிவு செயல்கள் அதலபாதாளத்தில் உனக்குத் தெரியாதவாறு புதைத்து வைத்திருக்கிறேன். எப்படியென்றால் நாலுபேருக்கு நன்மை செய்ய நினைத்தால் அதை பகிரங்கமாக உடனே செய்வதற்குத் துணிவு தந்துள்ளேன். அதனால் உனக்கு தீங்கு எதுவும் வராது. ஆனால் தீய செயல்கள் உன்னால் எளிதாகவோ, அனைவருக்கும் தெரியும்படியோ சட்டென்று செய்யவிடாமல் மிகவும் யோசித்து பயத்துடன் ஒருவித படபடப்புடன் நிதானமாக அதைச் செய்யலாமா? வேண்டாமா? என்று நானே முடிந்தவரை தடை போட பார்ப்பேன். என்ன செய்வது! அதையும் மீறி சிலர் தீய செயல்கள் செய்யும்போது எனது ஓட்டம் பாதிப்படைகின்றது. அது உனக்கு கெடுதல் விளைவிக்கும் என்று எண்ணியே உன்னறிவுக்கு எளிதில் எட்டாதவாறு மறைத்து வைத்திருக்கிறேன். 


மதிப்புமிக்க மனிதா! எனது கோடிக்கணக்கான வருட அனுபவங்களை மறைத்து வைக்கமுடியாது. ஆனால் உனக்கு எது நல்லது என்பதை முதலில் அடுக்கி வைக்க முடியும். ஆகவே உனக்கு நல்லவைகள் மேலேயும், கெட்டவைகள் கீழேயும் கஷ்டப்பட்டு அடுக்கி வைத்துள்ளேன். 


பாசமுள்ள மனிதா! மனிதருள் சிலர் கெட்ட எண்ணங்கள் கொண்டு இங்குள்ள பலரை நாடு, சாதி, மொழி, இனம் மற்றும் உறவுகளின் பெயரால் தங்களின் சுயநலத்திற்காகவும், பதவி ஆசையினாலும், பேராசை காரணமாகவும் தவறான வழியில் அழைத்துச்சென்று அவர்கள் நினைத்ததை சாதித்துக் கொள்கிறார்கள். ஆனால் சொல்வதோ, உங்களுக்கு நல்வழி காட்டுகிறேன் என்றும், உங்களுக்கு எப்போதும் நிம்மதி சந்தோஷம் கொடுக்கிறேன் என்று சொல்லிச் சொல்லியே செயலில் இம்மியளவு கூட காட்டாமல் அவர்களைப் பசி பட்டினிக்கு ஆளாக்கி, அடிமைகளாக நடத்தி அவர்களின் வாழ்வாதாரங்களை அபகரித்து, அவர்களின் மூளையை மழுங்கடித்து தன்  சுயநலத்திற்க்காக சக்கையாக பிழிந்து வேலை வாங்கி, தாங்கள் சொல்கிறபடி ஆடுகின்ற கைப்பொம்மையாக மாற்றி நல்லவன் போல வேஷம் போடும்  வேடதாரிகளை நம்பாதே! அவர்களின் துணைக்குப் போகாதே! அது உன்னையும், உனது பரம்பரையும் அழித்துவிடும்.


மதிப்புமிக்க மனிதா! அவர்கள் நினைப்பதை நிறைவேற்றிக்கொள்ள உனது உணர்வை தூண்டுவதற்காக வேண்டுமென்றே சாதி , மதம், இனம் பற்றி அவதூறாக பேசுவார்கள். அதனால் உடனே உனக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்து தீய செயலை செய்ய துணிந்துவிடுகின்றாய். அப்படிப்பட்டவர்களை மதியாதே! உனக்குத் தொல்லை கொடுத்து நிரந்தரமாகக் கஷ்டத்தில் மாட்டவைக்க வேண்டுமென்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள். மனிதா! சாதி, மதம், இனம் அனைத்தும் சமுதாயத்தில் ஒழுக்கத்திற்காக உள்ளவை. அவற்றிற்கு கலங்கம் வராமல் காப்பதே நமது கடமையும் கூட. அவற்றில் உனது ஆற்றலை வீணாக்காதே!

பெருமைமிக்க மனிதா! நமது மதம், இனம் என்று சொன்னால் மட்டும் உன்னுடைய பசி நீங்காது. அவற்றை கட்டிக்காத்து உழைத்தால் தான் நீ நினைப்பதை அடைய முடியும். அதற்குப் பரந்தமனப்பன்மையும், விசாலமான குணமும் தேவை. அதற்கு உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள். அதன் மூலம் அனைவருக்கும் நன்மை செய்யப் பார்.

அன்பு மனிதா! உனக்கு ஒரு காயமோ அல்லது கத்தி அறுபட்டாலோ எனது அன்பை துடிப்பை வெளியே காட்டும்விதமாக வலியையும், அதை உனக்கு தெரிவிக்கும் வண்ணமாக வலியைக் கொடுத்து அல்லது இரத்தத்தை வெளியே வரும்படி செய்து உனது கவனத்தை காயம் அல்லது அடிபட்ட இடத்தை உணர்த்துகிறேன். நான் அப்படி உணர்த்தாமல் இருந்து விட்டால் உனது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு என்பதை தெரிந்து கொள். அதை கவனிக்காமல் அலட்சியமாக இருந்தாலும், நானே தோல்களை ஒட்ட வைத்து காயத்தை ஆற்ற வைக்கிறேன்.   


இரக்கமுள்ள மனிதா! இதிலிருந்து தெரிந்துகொள் ! இந்த உள்விதி  மனிதன் எவ்வளவு அன்பானவன், எவ்வளவு இரக்கமானவன் என்று! இந்தச் செயலை நீ எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் யாராலும் செய்ய இயலாது. ஆனால் உனக்கு இலவசமாகச் செய்கிறேன். டாக்டர்கள் ஒருவேளை சீக்கிரம் ஆறவைப்பதற்குக் கிரியா ஊக்கியாக செயல்படலாம். ஆனால் ஒட்டவைக்க என்னால் மட்டுமே முடியும். இதன் மூலம் நான் எவ்வளவு அனுபவசாலி என்பதை புரிந்துகொண்டாயா! 


உள்விதி மனிதனின் மன ஓட்டம் இன்னும் வரும்...
மகிழ்சிகள் தொடரும்...


          

No comments:

Post a Comment