Pages

Thursday 4 October 2012

உள்விதி மனிதன் பாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள்விதி மனித ஜீவ ஓட்டம்- CIRCULATION OF BLOOD IS YOUR INNER HAPPY MAN'S SOUL


உள்விதி மனிதன் 
சம மனிதக்  கொள்கை 

பாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள்விதி  மனித ஜீவ ஓட்டம்- 
CIRCULATION OF BLOOD IS YOUR
 INNER HAPPY MAN'S SOUL

அன்பு மனிதா! சில நேரங்களில் நீ செய்யும் காரியங்கள் எனக்கு மிகவும் வேடிக்கையாய் இருக்கின்றது. அதாவது நீ செய்யும் தவறுகள் உன்னைத் தவிர யாருக்கும் தெரியாது என்று இதுநாள் வரை எண்ணிக் கொண்டு இருக்கின்றாய்.  எனக்குத் தெரியாமல் நீ எதுவும் செய்யமுடியாது என்று இப்போதாவது தெரிந்து கொள். நான் உனக்குள் இருப்பதையும், நான் எப்படி , என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று நான் சொன்னால் தான் உனக்குத் தெரியும். நான் சதா ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பது தெரிந்து கொள்! என்ன? ஓடிகொண்டா ??? என்று ஆச்சரியமாய் கேட்பது எனக்கு தெரிகின்றது. 


இனிய மனிதா! உன்னுள் ஓடும் இரத்த ஓட்டமே எனது ஓட்டம்! அதுவும் சுத்தமுள்ள இரத்த ஓட்டம்! அது நின்று விட்டால் நான் உன்னுடன் இல்லை என்று அர்த்தம். அப்படி நான் நின்று விட்டால் யாராலும் என்னை மறுபடியும் ஓட வைக்கமுடியாது. எல்லோரும் மனிதனின் முக்கிய உறுப்பு மூளை என்று இதுநாள் வரை எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மூளையை விட இரத்த ஓட்டமே முக்கியம். மூளை செயலற்று இருந்தால் கூட நீண்ட நாட்கள் வாழலாம்! ஆனால் இரத்த ஓட்டம்  செய்யலற்றுவிட்டால் சில வினாடிகளில் உள்விதி மனிதனாகிய நான் உன்னைவிட்டு பிரிந்துவிடுவேன். இப்போது சொல். நான் எங்கு, எப்படி இருக்கிறேன் என்று தெரிந்துவிட்டதா?

பிரியமான மனிதா! உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனின் அளவில்லா ஆற்றல் உன் இரத்தத்தில் கலந்து இருக்கின்றது. உனது எண்ண ஓட்டங்கள் நன்மை தருவதாக இருந்தால் அதை இந்த இரத்த ஓட்டத்தில் கலந்துவிடு. நான் அதை செய்யலாக்கிக் காட்டுகிறேன். நீ உறங்கினாலும், ஏதும் செய்யாமல் சும்மா உட்கார்ந்து இருந்தாலும் நான் நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பேன். ஒவ்வொரு வினாடியும் உன்னிடமிருந்து நல்ல எண்ணங்களை எதிர்பார்த்து ஓடிக்கொண்டிருக்கிறேன். உன் கண்கள் தூக்கத்தில் மூடினாலும் நான் விழித்துக் கொண்டுதான் இருப்பேன். அதுபோல் காது, மூக்கு, வாய், கை, கால் எல்லாம் ஓய்ந்து இளைப்பாற உறங்கிக் கொண்டிருந்தாலும் எனது ஓட்டம் எப்போதும் நிற்காது. 



பாசமுள்ள மனிதா! நீ அசைவற்று உறங்குவதுபோல் நான் இளைப்பாற நினைத்தால் ... நீ என்னாவாய் என்று சற்று சிந்தித்துச் செயல் படு. எனது ஆற்றல் இப்போது புரிந்துவிட்டதா? உனது ஒவ்வொரு அசைவுகளும் செயல்படுகிறதென்றால் இந்த உள்விதி மனிதன் ஓட்டத்தினால் தான்., ஒவ்வொரு நினைவும் கை நொடிக்கும் வேளையில் நடைபெறுகிறதென்றால்  என்னால் தான். அதுபோல் உனக்கு அறிவு கொடுத்து உதவி செய்கிறேன். நீ நினைக்கும் பலவித நினைவுகளை ஒன்று திரட்டி சேமித்து வைத்திருக்கிறேன். அங்கு ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் கலந்து உன் மூலம் புதிய படைப்புகளை படை த்துவருகிறேன். 


மதிப்பு மிக்க மனிதா! இந்த ஓட்டத்தை நீ இரத்த ஓட்டம் என்று சொல்கிறாய்! ஆனால் இதற்கு ஆன்ம ஓட்டம், ஜீவ ஓட்டம், ஆற்றல் ஓட்டம், அறிவு ஓட்டம், செயல் ஓட்டம், எண்ண ஓட்டம், சிந்தனை ஓட்டம், உணர்வு ஓட்டம் என்று பலவித பெயரில் அழைக்கலாம். உனக்குள் உள்விதி மனிதனாக இருக்கும் இந்த ஓட்டம் வெளியில் இருப்பதாக சித்தரித்து என்னை கல்லாக்கி, சிலையாக்கி அதில் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் போன்ற அற்ப விலைகொண்ட (நீயாக அது விலை மதிப்பில்லாது என்று எண்ணிக்கொண்டு இருக்கிறாய். ஆனால் அவையெல்லாம் எனக்கு சாதாரண கற்களுக்குச் சமம்) ஆபரணங்களால் அலங்கரித்து, செயற்கையான முறையில் என்னை பலவகை பொருட்களினால் அபிஷேகம் செய்கிறாயே ! அதில் ஒரு குண்டூசி முனையாவது எனக்குள் வந்து ஒட்டுமா! 

மரியாதை கொண்ட மனிதா! நீ எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்து ஆராதனை செய்தாலும், லட்சக்கணக்கான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தாலும் என்னால் அதை ஏற்றுக்கொள்ள இயலாது. அது எனக்கு சேருவதாக நினைத்து பேராசை கொண்ட வீணர்களுக்கு கொடுத்து ஏமாறுகிறாய்! 



மேன்மையான மனிதா! நான் உனக்குள் உள்விதி மனிதனாக உனது நன்மைக்காக ஓடிக்கொண்டிருக்கும்போது வெளியில் என் பெயரை சொல்லி பணம், தங்கம் வசூல் செய்து தங்களுடைய பணக்கார அந்தஸ்தை வெளியில் சொல்வதற்காக எனக்காக செய்வதுபோல் பாவனை செய்து மனிதகுலத்தை ஏமாற்றும் கயவர்களை அடையாளம் உனக்கு காட்டவே வந்துள்ளேன். அதை உண்மையென எண்ணி , நீ உனது உழைப்பினால் சேர்த்த செல்வத்தை அவர்களிடம் கொடுத்து ஏமாறுவதை தடுக்கவே உனக்குள் உள்விதி மனிதனாக வந்துள்ளேன்.

பெருமைக்குரிய மனிதா! எனது ஓட்டம் தங்கத்தை கொண்டு ஓட வைக்க உன்னால் முடியுமா? கோடிக்கணக்கான பணத்தைக்கொண்டு ஓட வைக்க முடியுமா! எனக்குத் தேவை ஒரு சான் வயிறு உணவு.

அன்பு மனிதா! யார் ஒருவர் உன் வாழ்வைப் பொன்னாக்கி நீ இருக்கும் நிலையைவிட உயர்த்துவதற்கு உன்னிடம் பணம் மற்றும் யாதொரு உதவியும் வாங்கிக்கொள்ளாமல், உனக்குள் இருக்கும் எனது ஜீவ ஓட்டத்திற்காக சக்தியான ஆகாரம், உணவு தருகின்றனரோ அவர்களே நீ தேடும் ஞானி, சந்நியாசி, முனி, மகான், சமூக சேவகர், உனது வாழ்க்கை காப்பாளர், வழிகாட்டி, துணைவன், உனது ஆபத்தை, கஷ்டத்தை போக்கும் பெரியவர். அவர்களை நீ தைரியமாக அணுகினால் உன் நிலை உயரும். உனக்குள் இருக்கும் எனது ஆத்ம ஓட்டமும் நிற்காது. 

பெருமைக்குரிய மனிதா! நீ பிறக்கும்போது உனக்குரிய பங்கான நிம்மதி, சந்தோஷம், உணவு, உடை மற்றும் இருப்பிடம் கொடுத்தேன். ஆனால் உன்னுடைய அலட்சியத்தாலும், அஜாக்கிரதையாலும் அதை இழந்து அல்லது தேடி அலைகிறாய். அவைகளை மறுபடியும் உனக்கு கிடைக்கும் வரை எனது ஜீவா ஓட்டம் நிற்காது.



இனிய மனிதா! நீ செய்யும் ஒவ்வொரு செயலையும் நான் கவனித்துக்கொண்டு வருகிறேன் என்று சொன்னால் உனக்கு நம்பிக்கை இருக்காது. நீ நன்மையான, நலம் தரும் செயல் செய்கின்ற போது , எனது ஜீவ ஓட்டம் சீராகவும், ஒரே அளவு வெப்பம் கொண்டதாகவும், இரத்த கொதிப்பு சீராகவும், இதய துடிப்பு ஒரே மாதிரியாக இருக்கும். அப்படி இருந்தால் உனது செயலை நான் ஆமோதிக்கிறேன் என்று அர்த்தம். அந்த செயலை தைரியமாகச் செய்யலாம். அதன் மூலம் மனித குலம் மகிழ்ச்சி அடையும் என்பதை நான் இப்போது உறுதி செய்கிறேன்.



இரக்கமான மனிதா! நீ தவறாக, பிறருக்கு கெடுதல் தரும் செயல் செய்ய நினைத்தால் ஜீவ ஓட்டம் வேகமாகவும், இரத்த கொதிப்பு, இதய துடிப்பு அதிகமாகவும், உடம்பு சூடாகவும் ஆவது எனது எண்ணத்திற்கு முரண்பட்டு உன் செயல் இருப்பதை உனக்கு உணர்த்துகிறேன். உள்ளுக்குள் இருக்கும் எனது இந்த ஓட்டத்தை வெளியில் காண்பிக்கிறேன் என்று யாராவது சொன்னால் அதை ஒருபோதும் நம்பாதே! சில சமயங்களில் நீ அதற்கு பணம் கொடுத்து ஏமாந்தும் , சிலசமயத்தில் தீய செயலில் ஈடுபட்டும் உன்னை நீயே சிறிது சிறிதாக அழித்துக் கொள்வதோடு நில்லாமல் என்னையும் அல்லவா அழித்துக் கொண்டு வருகிறாய். அதற்கு இனிமேல் கட்டாயம் இடம் கொடுக்க மாட்டேன். 



பாசமுள்ள மனிதா! ஓடிக்கொண்டிருக்கும் என்னை கல்லாக்கி, சிலையாக்கி என்னை அலங்கரித்து, அதை வைத்து மனித குலத்திற்கு நல்லது செய்யாமல் என் பெயரைச் சொல்லி சுயநலத்தை மனிதில் கொண்டு சுயலாபம் அடைகிறாய். அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். நான் உன்னுடன் ஆரம்பம் முதலே இருக்கிறேன். எனக்காக பணம் செலவு செய்வதைவிட மனிதகுலத்திற்கு பெருமை தரும் செயலைச் செய்தால் அதற்கு நான் முழு ஒத்துழைப்பைத்  தருகிறேன்.

இனிய மனிதா!


எனது ஓட்டத்தைக் கவனி !

உன்னுடன் இருப்பதைத் தெரிந்து கொள்!

இனி வாழ்கையில் மகிழ்ச்சி பொங்கும்!


இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com  

1 comment:

  1. இரத்தத்தில் உயிர் உள்ளது.
    விவசாயி மட்டுமே உணவின் மூலம் உலகிற்கே உயிர் ஊட்டுபவன்.

    ReplyDelete