Pages

Friday 20 July 2012

e.காதல் - கவிதை

e.காதல் - கவிதை 








வண்ண பூக்களை சுற்றாத 
வண்டுகள் உண்டோ ?


பூவையர்களைச் சுற்றாத 
மண்டுகள் உண்டோ?


வான் நிலவை பாடாத 
கவிஞன் உண்டோ?


காதல் கனவுகளை காணாத 
கண்கள் உண்டோ?


மண்ணையாளும் மன்னவனுக்கு கூட 
மண் குடிசையில் வாழும் பெண் மீது 
காதல்.


மண்ணில் வாழ்ந்த முனிவனுக்கும் கூட 
விண்ணில் இருந்த கன்னியின் மீது 
காதல் 


கண்டம் தாண்டி கூட சாட் செய்து 
கம்பியுட்டர் மூலம் 
காதல்.  


இதற்கு 
நீங்களும் நானும் 
விதி விலக்கா என்ன?


உறவு அனலாய் மாறும்போது 
காதல் உருகி உருக்குலைத்து 
நீராய் , பின் ஆவியாய் மாறி 
காணாமலே செய்து விடும்.


சிலர் 
இன்பத்தை கடனாக வாங்கி 
காதலை அடகு வைக்கிறார்கள் 
'வட்டி' திருமணமாய் வரும்போது 
அசல் காதலையே துறக்கிறார்கள் 


இப்படி 
வரதட்சணைக்காக நெருப்பில் 
வீழ்ந்து அழிந்த காதல்கள் தான் எத்தனை?
சாதி மதத்திற்க்ககாக இதயங்களை 
எரித்த காதல்கள் தான் எத்தனை ?
கெளரவத்திரற்க்காக இளம் பூக்களை 
மண்ணில் புதைத்த காதல்கள் தான் எத்தனை ?


இன்றைய காதல் 
அவன் இவளைப் பார்பான் 
இவள் அவனைப் பார்ப்பாள் 
கண்கள் பேசும் 
மொபைல் மெசேஜ் அனுப்பும் 
கம்பியுட்டரில்  சாட் செய்யும் 
'ஐ லவ் யூ 'என்பார்கள் 
சந்திப்புகள் நிகழும் கைகள் விளையாடும் 
ஆனால் 
திருமணம் வரும் பொது அந்த 
இருமணங்களை எங்கே தேடுவது ?


காமத்தால் வரும் போலி காதல்கள் 
காளான்களாய் போய்விடும் 
உடல் அழகால் உதித்த புனிதமில்லாக் காதல்கள் 
ஊனமாய் இருந்து விடும் 
செல்வத்தால் வளரும் பகட்டு காதல்கள் செத்து மடிந்திடும் 


அன்புமனத்தால் மலர்ந்த தெய்வீக காதல்கள் மட்டுமே 
ஆணி வேறாய் நிலைத்திடுமே. 




No comments:

Post a Comment