விட்டில் பூச்சி மனிதர்கள்

DON'T GO TO DANGER WAY. BE SAFE YOUR SELF

PUTHU KAVITHAI
மதுரை கங்காதரன்

புயல் அடிக்கும் உனக்குத் தெரிகிறது
பயணம் தொடரலாமா?
புயல் ஓயும் வரை பொறுமையாய் இரு.

அவன் வீரன் உனக்கு புரிகிறது
சண்டைக்கு போகலாமா?
அவனுக்கு நிகர் வீரம் வளர்த்துக் கொள்.

மூடன் என்று உனக்கு தெரிகிறது
அவனிடம் வாதாடலாமா?
அமைதியாக இரு.

உன்னுடைய எதிரி என்று தெரிகிறது
அவனிடம் நட்பு கொள்ளலாமா?
விலகிக் கொள்.

பாரம் அதிகம் என்று தெரிகிறது
தனியே தூக்கி சிரமப்படலாமா?
உறவையும், நட்பையும் சேர்த்துக் கொள்.

ஏமாற்றுபவன் என்று தெரிகிறது
பணமுதலீடு செய்து ஏமாறலாமா?
பலமுறை யோசித்து செயல்பாடு.

தீயவன் என்று தெரிகிறது
அவனிடம் சவகாசம் கொள்ளலாமா?
ஒதுங்கிக் கொள்.

பணமாசை கொண்டவன் என்று தெரிகிறது
பழக்கம் வைத்துக்கொள்ளலாமா?
பணம் இருப்பதை அவனிடம் காட்டாதே !

தவறான பாதை என்று தெரிகிறது
அதில் பிரயாணம் செய்யலாமா?
சரியான பாதையை அறிந்து கொள்.

மயக்கம் தரும் பழக்கம் என்று தெரிகிறது
வழக்கமாக கொள்வது வாழ்க்கைக்கு நல்லதா?
நீ அடிமையாகுமுன்னே விட்டுவிடு.

சுயநல அரசியவாதி என்று தெரிகிறது
அவன் பேச்சை நம்பலாமா?
உன் சொந்தக்காலில் நிற்கப் பழகு.

ஆழம் இருப்பது தெரிகிறது
காலைவிட்டு அவதிபடலாமா?
தற்காப்புடன் காலை விடு.

கொழுந்துவிட்டு எரியும் சுடரில்
மடியும் விட்டில் பூச்சியாய் இராதே!
தன்னுள் ஒளி உள்ள மின்மினியாய் இரு.

நன்றி

வணக்கம்

DON'T GO TO DANGER WAY. BE SAFE YOUR SELF
PUTHU KAVITHAI
மதுரை கங்காதரன்
புயல் அடிக்கும் உனக்குத் தெரிகிறது
பயணம் தொடரலாமா?
புயல் ஓயும் வரை பொறுமையாய் இரு.
அவன் வீரன் உனக்கு புரிகிறது
சண்டைக்கு போகலாமா?
அவனுக்கு நிகர் வீரம் வளர்த்துக் கொள்.
மூடன் என்று உனக்கு தெரிகிறது
அவனிடம் வாதாடலாமா?
அமைதியாக இரு.
உன்னுடைய எதிரி என்று தெரிகிறது
அவனிடம் நட்பு கொள்ளலாமா?
விலகிக் கொள்.
பாரம் அதிகம் என்று தெரிகிறது
தனியே தூக்கி சிரமப்படலாமா?
உறவையும், நட்பையும் சேர்த்துக் கொள்.
ஏமாற்றுபவன் என்று தெரிகிறது
பணமுதலீடு செய்து ஏமாறலாமா?
பலமுறை யோசித்து செயல்பாடு.
தீயவன் என்று தெரிகிறது
அவனிடம் சவகாசம் கொள்ளலாமா?
ஒதுங்கிக் கொள்.
பணமாசை கொண்டவன் என்று தெரிகிறது
பழக்கம் வைத்துக்கொள்ளலாமா?
பணம் இருப்பதை அவனிடம் காட்டாதே !
தவறான பாதை என்று தெரிகிறது
அதில் பிரயாணம் செய்யலாமா?
சரியான பாதையை அறிந்து கொள்.
மயக்கம் தரும் பழக்கம் என்று தெரிகிறது
வழக்கமாக கொள்வது வாழ்க்கைக்கு நல்லதா?
நீ அடிமையாகுமுன்னே விட்டுவிடு.
சுயநல அரசியவாதி என்று தெரிகிறது
அவன் பேச்சை நம்பலாமா?
உன் சொந்தக்காலில் நிற்கப் பழகு.
ஆழம் இருப்பது தெரிகிறது
காலைவிட்டு அவதிபடலாமா?
தற்காப்புடன் காலை விடு.
கொழுந்துவிட்டு எரியும் சுடரில்
மடியும் விட்டில் பூச்சியாய் இராதே!
தன்னுள் ஒளி உள்ள மின்மினியாய் இரு.
நன்றி
வணக்கம்
No comments:
Post a Comment