Pages

Friday 20 July 2012

நிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை

நிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை  




நல்லதை செய்தால் ஏசும் உலகம் 
பொறாமை பிடித்தவர்கள் 


நல்லதை சொன்னால் கேலிசெய்யும் சுற்றம் 
கையாலாகாதவர்கள் 


நல்லதை நினைத்தால் பைத்தியக்கார பட்டம் 
அறிவிலிகள் 


பண்பட்ட உன் உள்ளம் 
புண்படத் தான் செய்யும் 


கவலை கொள்ளாதே 
அதை நினைப்பதை நிறுத்தாதே 


வெற்றிகள் கண்ணுக்குத் தெரிவதால் 
தோல்விகளை கண்டு துவளாதே 


வெற்றி ஒருவனுக்கே அடிமை இல்லை 
அவன் உனக்கும் அடிமை ஆவான் 


இறுதி வரை போராடு 
அமைதியுடன் போராடு 


வன்முறைக்கு பலன் இருக்கும் 
ஆனால் ஆபத்து நிறைந்திருக்கும்


அன்பு அமைதியாய் இருக்கும் 
ஆனால் வலிமை பெற்றிருக்கும் 


நிரந்தர சந்தோஷத்தை தேடு 
நிறைவுடன் வாழு 


உன் மனம்  எனக்குத்தெரியும் 
என் மனம் உனக்குத் தெரியும் 


நீயும் என்னைப் போல் மனிதன் 
நானும் நீ தான் 


உனக்குள்ள துன்பம் எனக்குத் துன்பம் 
உனக்குள்ள இன்பம் எனக்கு இன்பம் 


உனக்குள்ள சந்தோஷம் எனக்கு சந்தோஷம் 
உனக்குள்ள கஷ்டம் எனக்கு கஷ்டம் 


நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் 
ஏன் உன்னால் முடியாது?


முயற்சி செய்தால் முடியும் ஏனென்றால் 
உன்னைப் போல நானும் மனிதன்.



1 comment:

  1. "நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்
    ஏன் உன்னால் முடியாது?" - :-) :-) very positive lines!

    ReplyDelete