Pages

Tuesday 23 October 2012

உள்விதி மனிதன் பாகம்: 23 உள் உடலைத் தினமும் சுத்தம் செய்வது யார்? WHO IS CLEANING YOUR INNER BODY?



உள்விதி மனிதன் 
 சம மனிதக்  கொள்கை 

பாகம்: 23 உன் உள் உடலைத்  தினமும் 
சுத்தம் செய்வது யார்?
WHO IS CLEANING YOUR INNER BODY?



என் இனிய மனிதா! எனக்கு இருக்கும் ஆதங்கம், அவசரம், ஆசை என்னவென்றால் உனது ஜீவ ஓட்டம் நிற்ப்பதற்கு முன்னே நான் உனக்களித்தச் செல்வங்களை பத்திரமாக மீட்டு உன்னிடம் கொடுப்பது தான். என்னென்ன செல்வங்கள் என்று கேட்கிறாயா! இதோ பட்டியலிட்டு சொல்கிறேன். 

* ஆரோக்கியமான உடல் மற்றும் மனம், 
* எப்போதும் மகிழ்ச்சியை கொடுப்பது மூலம் உன்னை என்றும்     
   இளமையாக  வைத்திருத்தல்,
* அன்பான குடும்பமும், உறவும்,
* பேர் சொல்லும் நன்மக்கட்செல்வமும்,
* எல்லோருக்கும் நன்மை செய்யும் குணமும்,
* மானம் காக்கும் உடையும்,
* சகாதாரமான இருப்பிடமும்,
* பசியறியாமல் இருக்க உணவும்,
* பசுமை மாறாத இயற்கை வளமும்,
* நல்ல நட்பை நாடும் நண்பர்களும்,
* வாக்கு தவறாத குணமும்,
* பிறர்க்கு அள்ளித் தருவதற்குச் செல்வமும்,
* தடைபடாத உனது இளமையின் கல்வி,
* செல்வங்களை சேர்க்கும் நல்ல தொழிலும்,
* துன்பம் இல்லாத பெருவாழ்வும்,
* சான்றோர்களை மதிக்கும் குணமும்,
* பெரியவர்களின் நல்லாசியும் 
* நிறைந்த ஆயுளும் 
* என்னை மறக்காமல் இருக்கும் மனம் 

பிரியமுள்ள மனிதா! இந்த செல்வங்களில் இப்போது உன்னிடத்தில் என்னென்ன இருக்கின்றது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். உன்னிடத்தில் பாதிக்கும் கீழ் உள்ளது தான் என்னை பாதித்த விஷயம். அனைத்தையும் உனக்கு கொடுப்பதற்குத் தான் இத்தனை படாதபாடு படவேண்டியுள்ளது. உன்னை என்னுடன் கைகோர்த்துக் கொண்டு வருமாறு கூறுகிறேன். இப்போதாவது என் வாக்கு உன் மனதில் பிரதிபலிக்கின்றதா! இன்னமும் உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதன் நம்பிக்கை இழக்கவில்லை! உன்னை ஜெயிக்க வைப்பதே என் குறிக்கோள் கூட.

பாசமுள்ள மனிதா! நீ மூச்சு இழுத்துவிடும் போது என்ன நடக்கிறது என்று தெரியுமா! சுத்தமான காற்று உள்ளே உடலுக்குள் இழுத்து அசுத்த காற்றை வெளியே தள்ளுகிறேன். அப்போது ஏதேனும் சிறிய தூசி இருந்தால் உடனே தாமதிக்காமல் உன்னிடம் கேட்காமல்  இருமல் மற்றும் தும்மல் மூலமாக வெளியே தள்ளி விடுகிறேன் எனபதை உனக்கு ஞாபகப்படுத்துகிறேன். காற்று சுத்தமாக தான் இருக்கவேண்டும் என்று ஏன் நான் அடம்பிடிக்கிறேன் - விரும்புகிறேன் - பிடிவாதம் பிடிக்கிறேன் - மறைமுகமாக கட்டளையிடுகிறேன் ஏனென்றால் சுத்தமான காற்று ஒன்றினால் தான் உன் உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள இயலும். அந்தக் காற்று எவ்வளவு சுத்தமாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு உனது ஜீவ ஓட்டத்தின் ஆயுள் கெட்டியாக இருக்கும். காற்று தான் என் முதல் ஜீவ நாடி. அதேபோல் நீ உண்ணும் உணவும், நீரும் கூட சுத்தமாக இருக்கவேண்டும். அப்போது தான் உன்னை என்னால் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியும். கெட்ட அல்லது அசுத்தமான காற்று அல்லது உணவு எனது ஆன்ம ஓட்டத்தை பாதிக்கச் செய்து உன்னை கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது திடீரென்றோ அழித்துவிடும். பிறகு நான் எடுத்த முயற்சி அனைத்தும் வீணாகிவிடும். 

மதிப்புமிக்க மனிதா! நான் உனக்குள் இருந்துகொண்டு என்ன செய்கிறேன்? என்னால் உனக்கு என்ன லாபம்? உள்விதி மனிதன் என்று யாருமில்லை! அவன் தயவுத் தேவையில்லை என்று ஒரு இளைஞன்  என்னுடன் விவாதம் செய்தான்.அதற்கு நான் அவனிடம் கோபப்படவில்லை. 

"அப்படியா, உன்னைப்போன்ற ஒருவனைத் தான் இதுநாள் வரை தேடிக்கொண்டு இருந்தேன்" என்றேன்.
  
"எதற்காக ?" என்று கேட்டான்.
"அறுசுவை உணவுகொண்டு உனக்கு பரிமாற !" என்று சொல்லி அவனை ஆச்சரியப்படுத்தினேன்.

"மூன்று நாட்கள் தான் உங்களுடன் தங்குவேன்" என்று கண்டிப்பாகச்  சொன்னான்.
"அதுவே எனக்கு அதிகம்" என்று அவனை உட்கார வைத்து மரியாதையாக அனைத்தையும் பரிமாறினேன்.

சாப்பிட்டுக்கொண்டே "என்ன தான் நீங்கள் அன்பாக உபசரித்தாலும் நான் அசர மாட்டேன். எனது எண்ணத்தை இந்த உள்விதி மனிதனால் மாற்றமுடியாது " என்று என்னை எச்சரித்தான்.
நானும் "ம் .." என்று தலையாட்டினேன்.


சும்மா சொல்லக்கூடாது அனைத்தையும் ஒரு வெட்டு வெட்டிமுடித்தான். 
"ரொம்ப திவ்யமாக இருக்கின்றது" என்று எனக்குச் சான்றிதழ் கொடுத்தான்.
"சும்மாவா, அனைத்தும் தனி நெய்யினால் தயாரித்தவை " என்றேன்.
"அப்படியா!" என்று கைகழுவ சென்றான். கழுவுகிறான், கழுவுகிறான் கழுவிக்கொண்டே இருந்தான்.


"என்னப்பா! இன்னும் கை கழுவி முடிக்கவில்லையா ? " 
"எண்ணெய் கையில் ஒட்டிக்கொண்டு போகமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றது. சோப்பு இருந்தால் கொடுங்களேன் "
நானும் அவனுக்கு சோப்பு கொடுத்தேன். கையை சுத்தமாக கழுவிமுடித்தான். சோப்பை என்னிடத்தில் திரும்ப கொடுத்தான். நான் வாங்கிக்கொள்ள மறுத்தேன். காரணம் தெரியாமல் முழித்தான். நானே அதற்கான விளக்கத்தைச் சொன்னேன்.


"இளைஞனே, வெளியே உன் கையில் ஒட்டிய எண்ணெயை சோப்பு போட்டு நன்றாக சுத்தம் செய்தாயே ! உனக்குள்ளேயும் இதே எண்ணெய் ஒட்டிக்கொண்டிருக்குமல்லவா! அதை யார் சுத்தம் செய்வது. இந்தா இந்த சோப்பை முழுங்கு! தானாக சுத்தம் ஆகிவிடும் " என்றேன்.
முதல் முறையாக அவன் ஏதோ உணர்ந்தவனாய் , "இது நாள் வரை நான் என் உடலுக்குள்ளே சுத்தம் செய்யவில்லை. ஆனால் இன்றளவும் அது சுத்தமாக இருக்கின்றது.. எப்படி என்று தெரியவில்லை? என்று என்னிடத்தில் கேள்விகுறியோடு பதில் சொன்னான்.


"இப்போது தெரிந்து கொள் ! உனக்குள் இருக்கும் நான் எவ்வித சோப்புத் துணை இல்லாமல் நீ சாப்பிடும் போது, ஏதாவது குடிக்கும்போதும் உடனுக்குடன் சுத்தம் செய்துகொண்டு வருகிறேன் என்று இப்போதாவது தெரிந்ததா!" என்றேன்.

"தெரிந்தது . பாதியளவு நீ இருப்பதை ஒத்துக்கொள்கிறேன். முழுமையாக இல்லை! " என்றான். இப்படியே இரண்டு நாட்கள் கழிந்தன. மூன்றாவது நாள் வந்தது. இன்றைக்கு என்ன விருந்தோ என்று ஆசையுடன் இருப்பதை தெரிந்து கொண்டேன். நான் அவனுக்கு முன் முதல் நாள் ஆஹா...ஓஹோ..என்று சாப்பிட்ட சாப்பாட்டை அவனருகில் வைத்தேன். மூக்கைப் பொத்திக்கொண்டு ..

" இவ்வளவு நாற்றம் அடிக்கின்றது. இதை யார் சாப்பிடுவது?" என்று சண்டை போடாத குறையாக கேட்டான். நானும் விடாமல் 
"இதைத்தானப்பா இரண்டு நாளுக்கு முன் நன்றாக இருப்பதாகச்  சொன்னாய்.!"
"ஆமாம் சொன்னேன். இப்போது கெட்டுவிட்டது. அதை சாப்பிட முடியுமா!"

"இது தானே இப்போது உன் உடலில் இருக்கும். அது எப்படி கெடாமல் எவ்வித துர்நாற்றமும் இல்லாமல் யார் பார்த்துக்கொண்டிருப்பார்கள்?" என்றேன். இப்போது எவ்வித பதிலும் பேசாமல் பிறகு சிறிது நேரம் சிந்தித்து "இப்போது எல்லாம் புரிந்தது. என் உடல் சுத்தம், எண்ணத்தின் சுத்தத்திற்குக் காரணம் தாங்கள் தான் என்று இப்போது ஒத்துக்கொள்கிறேன். இனிமேலும் இந்த மாதிரியான சந்தேகம் வரவே வராது" என்று என்னைப் பற்றி முழுமையாக இப்போது உணர்ந்தான். நீங்களும் இந்த உள்விதி மனிதன் உங்கள் உடலுக்குள் என்னென்ன வேலைகள் செய்கிறான் என்று புரிந்ததா? புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

உள் மனிதனின் ஓட்டம் தொடரும்.   

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

1 comment: