Pages

Saturday 21 July 2012

காம்பை தேடும் பூக்கள் - கவிதை

காம்பை தேடும் பூக்கள்  - கவிதை 






காம்பை விட்டு வந்த 
பூக்கள் நாங்கள் !


தென்றல் தீண்டினால் கூட 
துவண்டு விடுகின்றோம்.


வெயிளின் கொடுமை 
அப்பப்பா..கருகி விடுகிறோம்.


ஒட்டிக் கொள்ள 
காம்பு கிடைத்து விட்டால் !!


தென்றல் காற்று 
எங்களுக்கு இனிமையாயிருக்கும் 


வாட வைக்கும் வெயில் வருனினும் 
வாட மாட்டோம்.
மாறாய் பூத்துக் குலுங்குவோம்.


மடித்து விடும் காற்று  அடிப்பினும் 
மடிய மாட்டோம்.
மாறாய் மலர்வோம்.


வெட்டி விடும் மின்னல் வருனினும் 
வீழ மாட்டோம்.
மாறாய் வலிமை பெறுவோம்.


காம்பு! என்போன்ற பூக்களுக்கு 
இரும்பு கம்பி.


காம்பு இருக்கும்வரை 
நாம் உயிரோடு இருப்போம்.


மனிதா! நாம் மலர்வது 
உன்னை மகிழ்விக்க தான்.


உன் மகிழ்ச்சிக்காக  நாங்கள் 
காம்பை இழக்கத் தயார். 


என்னைப் போல நீயும் 
பிறர் மகிழ்ச்சிக்காக வாழ. 




  

No comments:

Post a Comment