Pages
- Home
- * வெற்றி தரும் வழிகள் (101)
- * உள்விதி மனிதன் (49)
- * எனது புதுக்கவிதைகள் (293)
- * புதிய விளையாட்டுகள் (9)
- * சிரிப்பு மாத்திரைகள் (10)
- * விளையாட்டு புதிர்கள் (4)
- * ISO 9001-உயர்வுக்கு வழி (12)
- * லாபம் தரும் தொழில்கள்(5)
- * தன்னம்பிக்கை இரகசியங்கள் (87)
- *மனம், யோகா, தியானம், ஆன்மீகம், WHO AM I? ANSWER (7)
- * நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)
- *குறு, சிறுகதைகள் (49)
- * நாட்டு நடப்புகள் (171)
- * விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)
- * இது நம்ம டி.வி சானல் (8)
- * வெற்றிப் படிகள் (89)
- வாழ்க்கைக்கான கதைகள் (1)
- * தொழில் நிர்வாக வழிகாட்டி (14)
- * UMASK - FOR EASY TYPING (13)
- * மிதுனமதி (குறுநாவல்)
- * WORLD LANGUAGES PROTECTOR- UMASK (4)
- BLOG CREATION (வலைப்பூ)?
- * MY IDEAS & INNOVATIONS (31)
- பருத்தியில் புரட்சி (4) (குறுநாவல்)
- அறிமுக தத்துவவியல் தொடர் - V.R.கணேஷ் சந்தர் மற்றும் K.K.கங்காதரன் (6)
Wednesday, 23 January 2019
13.1.19 தைமகளே தைமகளே வருக இங்கே தமிழர்களுக்குத் தமிழ்பற்று தருக நன்றே
அன்று நான் வாசித்தக் கவிதை
தைமகளே தைமகளே வருக இங்கே
தைமகளே தைமகளே வருக இங்கே
தமிழர்களுக்குத் தமிழ்பற்று தருக நன்றே
மதுரை கங்காதரன்
மதுரை கங்காதரன்
தொன்று
தொட்டுத் தொடரும் திருநாள்
தைப்பொங்கல்
கொண்டாடும் தமிழர்களே
தொன்மையான
மூத்தமொழித் 'தமிழே'
தமிழரின்
அடையாளமென உணர்வீரோ.
அடங்க
மறுத்துச் சீறிப்பாயும் காளைகளை
அடக்கும்
சிங்கங்களைப் பெற்றத் தமிழ்த்தாயே
தமிழில்
கலந்துள்ள கிரந்த
எழுத்துக்களைத்
தணிக்கை
செய்யும் துணிவை தருவாயே.
முன்னிரு
ஆண்டுகள் முடங்கிய சல்லிக்கட்டை
மெரினாவில்
முடிவு கட்டியத் தமிழினமே
தமிழில்
தழுவி நிற்கும் அந்நியச் சொற்களைத்
தூக்கி
எறிந்து வலிமையை நிலைநாட்டுவாயே .
மஞ்சுவிரட்டு
வாடிவாசலில் நுழைந்த காளைகளை
முட்டிமோதி
விரட்டும் திறன்மிக்க தமிழர்களே
தமிழில் பின்வாசலில்
நுழைந்த அயலெழுத்துகளைத்
தடுத்து
விரட்டும் நெஞ்சுறுதியை காட்டுவாயே.
உலகத்
தமிழர்களே ஒருகுடையில் கூடுங்கள்
உறவுகளே
நட்புகளே சபதம் எடுங்கள்
தைத்திருநாளில்
பொங்கல் திருநாளை மறவோம்
தமிழ்பற்றைத்
தலையாய்த் தவறாது கடைபிடிப்போம்.
கு.கி.கங்காதரன், மதுரை
மேலும் கவிஞர்களின் கவிகள் மற்றும் மின்படங்களுக்கு.....
இதனை 'கிளிக்' செய்யவும்...
மின்படங்களுக்கு நன்றி....
ஐக்கூ திலகம் திரு இரா. இரவி மற்றும் திரு கார்த்திகேயன் அவர்கள்..
ஐக்கூ திலகம் திரு இரா. இரவி மற்றும் திரு கார்த்திகேயன் அவர்கள்..
Monday, 31 December 2018
எல்லோருக்கும் புத்தாண்டு 2019 நல்வாழ்த்துக்கள்
எல்லோருக்கும் புத்தாண்டு 2019 நல்வாழ்த்துக்கள் ....
மதுரை கங்காதரன்....
..........
30.12.18 நெகிழிகளால் நிலம்கெடுமே கிரந்தெழுத்தால்தமிழ்கெடுமே - மா.க.பே - மதுரை
நெகிழிகளால் நிலம்கெடுமே
கிரந்தெழுத்தால்தமிழ்கெடுமே
கவியரங்கம் - மாமதுரைக் கவிஞர் பேரவை - மதுரை
மதுரை கங்காதரன்
எங்கும் துணிஎதிலும் துணி மாறி
எங்கும் நெகிழிஎதிலும் நெகிழிஆனது
எங்கும்தமிழ்எதிலும்தமிழ் மாறி
எங்கேதமிழ்எதிலேதமிழ்ஆனது.
மனிதஇனத்தைஅழிக்குமே நெகிழிஅவதாரம்
மக்கும்இனம் காக்குமேமனித வாழ்வாதாரம்
தமிழ்மொழியைஅழிக்குமே கிரந்தெழுத்துகள்
தமிழ்இனத்தைக் காக்குமேதனித்தமிழ்
எழுத்துகள்
அபாயமணி நெகிழிக்குமட்டுமல்லாது
அந்நியமொழிகலந்ததமிழுக்கும் கூடவே
நெகிழிஅழிக்கச்சட்டம்இயற்றும்அரசு
நச்சுகலப்பைத்தடுத்தால்தமிழுக்குப்பரிசு.
புதைத்தால்மடலாகும் பூமி
எரித்தால்நஞ்சாகும் காற்று
கலந்தால் மாசாகும்கடல்
உண்டால் பிணியாகும்உடல்.
சிங்கநடைப் போட்டத்தனித்தமிழ்
அசிங்கமானது கிரந்தஎழுத்துகளாலே
வெகுளித்தமிழர்களால்வந்த வினை
மேலும் மின்படங்கள் மற்றும் விவரங்களுக்கு இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும்
https://maamaduraikavingyarperavai.blogspot.com/2018/12/301218.html
https://maamaduraikavingyarperavai.blogspot.com/2018/12/301218.html
நன்றி
Subscribe to:
Comments (Atom)














































































