Pages

Friday, 7 April 2023

26.3.2023 மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் 9 - வாழும் தமிழே வரலாறு கூறும்!

மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்.வடக்குமாசிவீதி மணியம்மை பள்ளி.இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம். மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம்நடந்தது .கவிஞர்கள் இரா .இரவி ,இரா .கல்யாணசுந்தரம் ,கங்காதரன் ,முனைவர் வரதராசன்,முருகுபாரதி குறளடியான் ,கு .பால் பேரின்பநாதன் இதயத்துல்லா,வீரபாகு ,கவிதாயினிகள் ச .லிங்கம்மாள் ,நா .அனுராதா ,சாந்தி திருநாவுக்கரசு,உள்ளிட்ட பலர் பாடினார்கள்

மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில்மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் நடந்த கவியரங்கம். நாள் : 26.3.2023

           தலைப்பு : வாழும் தமிழே வரலாறு கூறும்!

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில்கவிஞர்கள் முனைவர் இரா.வரதராசன்இரா.கல்யாணசுந்தரம், இரா. இரவிபாவலர் குறளடியான்,   கு.கி.கங்காதரன்ச.லிங்கம்மாள்அஞ்சூரியா.க.செயராமன்பெரி.கரு.சம. சமயக்கண்ணுசங்கர்,  முனியாண்டி,   கோ.சங்கரநாராயணன்மு.இதயத்துல்லா.அழகையாபுலவர்.முருகுபாரதிசாந்தி திருநாவுக்கரசு,   மா.வீரபாகு,  ஆகியோர் வாழும் தமிழே வரலாறு கூறும்! என்ற தலைப்பில் கவிதை பாடினார்கள்

மின்படங்கள்: இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.






                            வளரும் தமிழே வரலாறு கூறும்
                                    - கவிஞர் இரா. இரவி 

கீழடி வரலாறு நம் தமிழின் வரலாறு
கீழ்அடியில் கிடைத்ததில் தமிழ் எழுத்துக்கள்!

எழுத்தறிவோடு வாழ்ந்தவர்கள் தமிழ்க்குடிமக்கள்
எந்த நாகரீகத்திற்கும் முந்தைய நாகரீகம்!

உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ்
உலகம் உணர்ந்தது தமிழன் தான் உணரவில்லை!

உலகமொழிகளின் மூலம் நமது தமிழ்மொழி
உலகமொழிகள் அனைத்திலும் உள்ளது தமிழ்!

ஆங்கிலம் தொடங்கி அத்தனை மொழியிலும் தமிழ்
அற்புதத் தமிழ்ச்சொற்கள் இல்லாத மொழியே இல்லை!

உலகின் முதல்மொழிக்குச் சொந்தக்காரன் தமிழன்
உலகம் வியந்து பாராட்டும் மொழி தமிழ்மொழி!

நீண்ட நெடிய வரலாறு படைத்த மொழி தமிழ்
நாம் அனைவரும் தமிழ் வளர்க்க வேண்டும்!

தமிங்கில உரையாடலுக்கு முடிவுரை எழுதிடுவோம்
தமிழை தமிழாகவே நாளும் பேசிட உறுதி எடுப்போம்!

பிறமொழி கலப்பை உடன் நிறுத்திடுவோம்
பண்டைத்தமிழைக் காத்திட தரணியில் திரள்வோம்!

தேசப்பிதா காந்தியடிகள் விரும்பியது தமிழ்மொழி
தேசங்கள் தோறும் ஒலித்திடும் தமிழ்மொழி!

ஒப்பற்ற உயர்ந்த தனி செம்மொழி தமிழ்மொழி
ஓங்கி உரைப்போம் முதல்மொழி தமிழ்மொழி!

அழியாமல் தமிழை காப்பது நமது கடமை
அணியமாவோம் அழகுதமிழை நாளும் வளர்ப்பதற்கு!
















                    வளரும் தமிழே வரலாறு கூறும் 
                                  புதுக்கவிதை
                               கு.கி.கங்காதரன்

எல்லாச் சம்பவங்கள் வரலாற்றில் பதியாது 
எல்லா வரலாறும் மக்களிடையே பேசாது 
என்றோ தொடங்கியது தமிழின் வரலாறு 
இன்றும் தொடர்கிறது தமிழின் வரலாறு.

ஆதியில் அவதரித்த அமுதமான மொழி 
அகிலம் போற்றும் பண்புள்ள பண்பாடு 
எல்லோரையும் ஏற்றுக் கொள்ளும் கலாச்சாரம்  
அனைவரையும் சமநோக்கி அணுகும் நாகரிகம்   

கற்காலம் தொடங்கி வளர்கின்ற தமிழ்
கணினிகாலம் என்று தொடர்ந்திடும் தமிழ்
இனிவரும் காலத்திலும் மிளிர்ந்திடும் தமிழ்
என்றும் தலைசிறந்து நின்றிடும் தமிழ்.

சேரசோழ பாண்டியர்கள் வளர்த்த மொழி 
சிங்கநடை போடும் கம்பீரமான மொழி 
கப்பலோடு கடல்கடந்து பயணித்த மொழி 
கன்னித்தமிழாய் காட்சி தரும் சிங்காரமொழி 

தமிழே மொழிகளின் வரலாற்றில் இன்றியமையாதது 
தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் கிடைத்திருப்பது
தமிழை வான்புகழுக்கு உயர்த்தியது திருக்குறள் 
தனித்தமிழில் சிறப்பாய் அமைந்ததே கம்பராமாயணம் 

முக்கலைகளில் முடிசூடியது எங்கள் தமிழ்
முக்காலங்களில் வரலாறு படைப்பது தமிழ்
எத்திசையிலும் ஓங்கி ஒலிப்பது தமிழ்
என்றும் வரலாற்றில் நிலைப்பது தமிழே
**************************************************************

 

Friday, 10 March 2023

26.2.2023 மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் 8 - அருந்தமிழே நம் அடையாளம் மற்றும் நூல்கள் வெளியீடு

 

மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில், மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் நடந்த கவியரங்கம்.

                                தலைப்பு : அருந்தமிழே நம் அடையாளம்

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில், கவிஞர்கள் முனைவர் இரா.வரதராசன், இரா.கல்யாணசுந்தரம், கு.கி.கங்காதரன், ச.லிங்கம்மாள், அஞ்சூரியா.க.செயராமன், பெரி.கரு.சம .சமயக்கண்ணு, ம.ஜெய்சங்கர், கோ.சங்கரநாராயணன், மு.இதயத்துல்லா, .அழகையா, புலவர்.முருகுபாரதி, சாந்தி திருநாவுக்கரசு, இராமபாண்டியன், பொன்.பாண்டி, பால கிருட்டிணன் ஆகியோர் அருந்தமிழே நம் அடையாளம் என்ற தலைப்பில் கவிதை வாசித்தனர். முனைவர் வரதராசன் எழுதிய "தன்மானத் தமிழ் போற்றி " நூல் வெளியிடப்பட்டது .வருகை தந்த கவிஞர்களுக்கு நூல் ஆசிரியர் நூல் வழங்கினார்.






                      



அருந்தமிழே நம் அடையாளம்!

கவிஞர் இரா. இரவி

உலகில் தமிழ் ஒலிக்காத நாடே இல்லை
உலகம் முழுவதும் பரந்து விரிந்தது தமிழே!

உலகின் முதல் மொழிக்கு சொந்தக்காரன் தமிழன்
உலகில் தமிழன் இல்லாத நாடும் இல்லை

இணையத்தில் கொடிகட்டி பறக்கும் தமிழ்
ஆங்கிலத்துக்கு அடுத்து தமிழே இணையத்தில் உச்சம்

அறம்வழி நல்வழி கற்பிக்கும் தமிழ்
அன்பை அகிலத்திற்கு பறைசாற்றிடும் தமிழ்

அகமும் புறமும் இலக்கியத்தில் பாடிய தமிழ்
அகத்திணை புறத்திணை அற்புதமாக உணர்த்திடும் தமிழ்

ஈடில்லா திருக்குறளை ஈந்திட்ட நம் தமிழ்
எங்கும் அறிந்திட்ட திருக்குறள் தந்த தமிழ்

உலக மனிதநேயத்தை உணர்த்திட்ட தமிழ்
உலகிற்கு பண்பாட்டை பயிற்றுவித்திட்ட தமிழ்

ஒழுக்கத்தை உயிருக்கு மேலாகச் சொல்லிய தமிழ்
ஒப்பற்ற வீரத்தை உலகிற்கு ஓதிய தமிழ்

போர் புரிவதிலும் அறநெறி வகுத்திட்ட தமிழ்
போரில் அநீதியை என்றும் விரும்பிடாத தமிழ்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கணமுள்ள தமிழ்
பண்டைக்காலம் தொட்டே சிறந்து வரும் தமிழ்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ்நாடு
சமஉரிமையை மானிடற்கு கற்பித்த தமிழ்

அகிலம் அறிந்திட்ட அற்புத மொழி தமிழ்
அருந்தமிழே நம் அடையாளம் உணர்ந்திடுக!

















அருந்தமிழே நம் அடையாளம்

புதுக்கவிதை

கு.கி.கங்காதரன்

தலையே  மனிதனின் அடையாளம்
தமிழே தமிழர்களின் அடையாளம்
தலையில்லா மனிதனுக்கு மதிப்பேது?
தமிழில்லாத் தமிழனுக்கு பெருமையேது?

அந்நிய மொழிகளைப் பேசினால் மகிழ்கிறாயே
ஆடிப்பாடி கைத்தட்டி புகழ்ந்து ஆராதிக்கிறாயே
பகட்டுக்கு உதவலாம் அந்நிய மொழிகள்
பழந்தமிழை மறக்கலாமோ பச்சைத் தமிழா!

குயில் கூவுவதை மறக்கின்றதா?
காக்கை கரைவதை வெறுக்கின்றதா?
குயில் கரைவதை ரசிப்பாயா?
காக்கை கூவுவதை விரும்புவாயா?

ரோசாவுக்குக் காப்பு முள்ளிருக்கு 
ராசாவுக்குக் காப்பு படையிருக்கு 
தேளுக்குக் காப்பு விசமிருக்கு 
தமிழுக்குக் காப்பு தமிழனே 

செம்மொழி கௌரவம் தமிழுக்கு உண்டு
செவ்வனே தொண்டாற்று தமிழுக்கு நன்று
தமிழே மூச்சென பாசாங்கை விட்டுவிடு
தெய்வத்திற்கு இணையாய் தமிழை மதித்துவிடு

*********************************************

  

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில், கவிஞர்கள் முனைவர் இரா.வரதராசன், இரா.கல்யாணசுந்தரம், கு.கி.கங்காதரன், ச.லிங்கம்மாள், அஞ்சூரியா.க.செயராமன், பெரி.கரு.சம .சமயக்கண்ணு, ம.ஜெய்சங்கர், கோ.சங்கரநாராயணன், மு.இதயத்துல்லா, .அழகையா, புலவர்.முருகுபாரதி, சாந்தி திருநாவுக்கரசு, இராமபாண்டியன், பொன்.பாண்டி, பால கிருட்டிணன் ஆகியோர் அருந்தமிழே நம் அடையாளம் என்ற தலைப்பில் கவிதை வாசித்தனர். முனைவர் வரதராசன் எழுதிய "தன்மானத் தமிழ் போற்றி " நூல் வெளியிடப்பட்டது .வருகை தந்த கவிஞர்களுக்கு நூல் ஆசிரியர் நூல் வழங்கினார்.



************