Pages

Showing posts with label ஆயிரந்தான் உச்சரிப்பு மாறினும் தமிழுள் அயல்எழுத்து வந்துபுகல் என்ன நீதி?. Show all posts
Showing posts with label ஆயிரந்தான் உச்சரிப்பு மாறினும் தமிழுள் அயல்எழுத்து வந்துபுகல் என்ன நீதி?. Show all posts

Monday, 26 September 2016

ஆயிரந்தான் உச்சரிப்பு மாறினும் தமிழுள் அயல்எழுத்து வந்துபுகல் என்ன நீதி?




ஆயிரந்தான் உச்சரிப்பு மாறினும் தமிழுள்
அயல்எழுத்து வந்துபுகல் என்ன நீதி?
                     புதுக்கவிதை
        மதுரை கங்காதரன்

தமிழ்த்தாய் வாழ்த்து

ஓடையாய் ஓடும் தேன்தமிழ்
கோடையாய் சுடும் செந்தமிழ்
மேடையில் முழங்கிடும் கவித்தமிழ்
வாடை மாறாத அன்னைத் தமிழை வணங்குகிறேன்.
.

            அவை வணக்கம்

உள்ளத்திலும் உதட்டிலும் மெய்யான தமிழில்
எக்கணமும் கவிதையினை 'கணீர் கணீர்' என்று
தந்து கொண்டிருக்கும் அவைத் தலைவர் அவர்களே!
மற்றுமுள்ள தனித்தமிழ் கவிஞர்களே!
அறிஞர்களே!
பெரியோர்களே, தாய்மார்களே!
வந்திருக்கும் அனைவருக்கும் எனது
முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆயிரந்தான் உச்சரிப்பு மாறினும் தமிழுள்
அயல்எழுத்து வந்துபுகல் என்ன நீதி?
                     புதுக்கவிதை
             

மயிலோடு வான்கோழி சேர்ந்தால்
குயிலோடு காக்கை சேர்ந்தால்
தமிழுள் அயல்எழுத்து சேர்ந்தால்
தத்தம் தனித்தன்மை என்னவாகும்?

கல்வியில் அயல்நாட்டு மொழி
உடலுக்கு அயல்நாட்டு மருந்து
பேசுவதில் அயல்மொழி கலப்பு
தமிழுள் அயல்எழுத்து திணிப்பு

சொத்தில் பங்கு கொடுக்கலாம்
மொழியில் பங்கு கொடுக்கலாமா?
இல்லாதவன் கையேந்தினால் யாசகம்
இருப்பவன் கையேந்தினால் பாதகம் தானே!

உயிர் மேல் அக்கறை உண்டு
உடல் மேல் அக்கறை நன்று
உறவு மேல் அக்கறை இருக்கு
தமிழ் மேல் அக்கறை வேண்டாமா!

வலைக்குள் அகப்பட்ட மீன் பிழைத்திடுமா?
அயல்எழுத்தில் அகப்பட்ட தமிழ் வாழ்ந்திடுமா?
கனவு கலைத்து கண்திறந்து விழித்திடு தமிழா?
கண்கெட்ட பிறகு காட்சி காண எண்ணாதே!

தமிழ் வளம் சிறக்க
தமிழுள் அயல்எழுத்து புகுத்தாதே!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&