Pages

Showing posts with label இரண்டாயிரம் ரூபாயை (2000) அறிமுகப்படுத்தியதன் இரகசியம். Show all posts
Showing posts with label இரண்டாயிரம் ரூபாயை (2000) அறிமுகப்படுத்தியதன் இரகசியம். Show all posts

Friday, 9 December 2016

இரண்டாயிரம் ரூபாயை (2000) அறிமுகப்படுத்தியதன் இரகசியம்

The secrets behind the Rs 2000 introduced in India
இரண்டாயிரம் ரூபாயை (2000) அறிமுகப்படுத்தியதன் இரகசியம்
விழிப்புணர்வுக் கட்டுரை
மதுரை கங்காதரன்


உங்களிடத்தில் வருமானத்திற்கு அதிமாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இருக்கின்றனவா? அப்படியென்றால் அது செல்லாமல் போகும் நிலை வரலாம்.  உயர் மதிப்புள்ள ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகளால்தான் கறுப்புப் பணம், போலி நோட்டுகள், லஞ்சம், ஊழல், தீவிரவாதம், செயற்கை விலைவாசி ஏற்றம் போன்றவைகள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது என்று மக்கள் உறுதியாய் நம்பிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ஏன் இரண்டாயிரம் ரூபாயை வெளியிட்டார்கள் எங்கிற சந்தேகம் வரலாம். எல்லாம் காரணமாகத்தான் இருக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? இதுவும் எளிதாக கறுப்புப்பணம் காட்டிக் கொடுக்கும் வழி என்றே நான் கருதுகிறேன். எவ்வாறு இருக்கலாம் என்று இ்க்கட்டுரையை படியுங்கள். ஒருவேளை ஒருவரிடத்தில் இரண்டாயிரம் நோட்டுகள் அதிகமாக இருந்தால் எவ்வாறு செல்லுபடி ஆகாமல் போகும் என்றும், எவ்வாறு வருமான வரித்துறையினரால் பிடிபடலாம் என்றும் பார்க்கலாம். அவர்கள் வீட்டிற்கு, நிறுவனத்திற்கு வந்து சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்களே அவர்களைக் காட்டிக் கொடுத்துக் கொள்வார்கள்.

இப்போது புதிதாக வெளியாகியிருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் வரிசை எண் இருக்கும். இதுவரையில் வெளியாயிருக்கும் அனைத்து வரிசை எண்களும் கணினியில் பதிவாகியிருக்கும். அவ்வகை நோட்டுகள் வங்கியில் மற்றும் மக்களிடத்தில் தான் இருக்கும். அப்படித்தானே?

இப்படியிருக்கும்போது, மைய அரசு ஒரு நாள் திடீரென்று இவ்வாறு அறிவிப்பார்கள். அதாவது இன்று நள்ளிரவு முதல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இரண்டாயிரம் ரூபாய் யாரும் பயன்படுத்துவதோ, மாற்றுவதோ, பிறர்க்கு கொடுப்பதோ கூடாது என்றும் அன்றைய மூன்று நாட்கள் கண்டிப்பாக உங்களிடத்தில் தான் அந்த இரண்டாயிரம் நோட்டுகள் இருக்க வேண்டும் என்று அறிவிப்பார்கள். அதேசமயத்தில் ஏதாவது ஒரு வங்கியின் மூலமாக எல்லோருக்கும் ஒரு இரகசிய எண் தருவார்கள். (இரண்டாயிரம் ரூபாய் இல்லாதவர்கள் இது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை). அதில் உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், பான் மற்றும் ஆதார் எண், வங்கிகளின் கணக்கு எண்களைப் (உங்களுடைய தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிக் கணக்கு, கோ-ஆபரேடிவ் வங்கிகளின் கணக்கு உட்பட - ஒரு வேளை ஏதாவது ஒன்றோ அல்லது பல வங்கி கணக்கு எண் காட்டாமல் இருந்தால் அந்தக் கணக்கு காலாவதி ஆகிவிடும். எச்சரிக்கை!) பதிவு செய்ய வேண்டும். அதோடு உங்களிடத்தில் உள்ள அனைத்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டின் வரிசை எண்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். உதாரணமாக, உங்களிடத்தில் ஆயிரம் நோட்டுகள் (1000) இருந்தால் அதன் வரிசை எண்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் மதிப்பு, இருபது லட்சம். அதேபோல் ஒரு கோடி பணம் வைத்திருந்தால், ஐயாயிரம் நோட்டுகளின் வரிசை எண்களை பதிவேற்றம செய்ய வேண்டும். நூறு கோடி பணம் வைத்திருந்தால் ஐந்து லட்சம் நோட்டுகளின் வரிசை எண்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதவும் மைய அரசு கொடுக்கும் காலக் கெடுவுக்குள். சரியா? அதற்கு வருமானவரி கட்டியிருந்தால் ஏதும் பிரச்சனை இல்லை. ஆனால், வருமானவரி கட்டாமல் இருந்தது தெரிய வந்தால், உங்களுடைய அனைத்து வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கி வைக்கலாம். மேலும் ரூபாய் வரிசை எண்களை பதிவேற்றம் செய்ய முடியாது. மேலும் பதிவேற்றம் செய்யும் அனைத்தும் வரிசை எண்கள் அனைத்தும் சரிதானா? அல்லது போலியானவையா? என்று கணினி உடனுக்குடன் சரிபார்த்துச் சொல்லிவிடும். எல்லாம் பதிவு செய்து முடிந்த பிறகு மொத்தம் இவ்வளவு பணம் உள்ளது என்று சொல்லும். அது வருமான வரிவரம்பில் இருந்தால் அவருக்கு எவ்வித பாதிப்பில்லை. வருமானவரி கட்டாமல் அதிக பணம் இருந்தால் அப்பணம் வருமானவரித்துறையினரால் பறிமுதல் செய்யப்படும்.

இப்போது நீங்கள் வங்கிக்குச் செல்ல அவசியம் இல்லை. 'கியூ' வரிசை நிற்கத் தேவையில்லை. நீங்களாக அல்லது பிறர் உதவியுடன் இந்த பதிவு செய்யலாம். இந்நிலையில் சரியான வங்கிக் கணக்கு, பான் மற்றும் ஆதார் எண் இருப்பவர்களால் மட்டுமே பதிவேற்ற முடியும். அவைகள் இல்லாதவர்களால் பதிவேற்றம் செய்ய முடியாது. அவர்களிடத்தில் இருக்கும் இரண்டாயிரம் நோட்டின் வரிசை எண்கள் பதிவேற்றம் செய்யப்படாததால் அதன் வரிசை எண்கள் அனைத்தும் செல்லாது என்று வங்கிக்கும் பொது மக்களுக்கும் இணையதளம் மூலம் தெரியப்படுத்துவார்கள். இனிமேலும் உங்களிடத்தில் புழங்கும் நோட்டுகள் உண்மையானதா? என்பதனை கணினி, லேப்டாப், மொபைல் போன்கள் மூலம் உங்களிடத்தில் இருக்கும் வரிசை எண்ணை பதிவேற்றம் செய்தும் படம் பிடித்தோ சரி பார்த்துக் கொள்ளலாம். மேலும் ஏற்கனவே பதிவேற்றம் செய்த வரிசை எண் நோட்டே உங்களிடத்தில் இருந்தால் அதனை உங்களால் மீண்டும் பதிவேற்றம் செய்ய முடியாது. அது ஒருவேளை போலி நோட்டு என்று சொல்லும். அதன் தகவலை அருகில் இருக்கும் வங்கியில் தெரிவிக்க வேண்டும். அதேபோல் செல்லாத வரிசை நோட்டுகள் இருந்தால் அது யாரிடத்திலிருந்து பெற்றீர்கள் என்கிற விவரத்தையும் வங்கியில் சொல்ல வேண்டும். இந்த பதிவேற்றம் முடிந்தவுடத்தில் மைய அரசு கறுப்புப்பணம் இவ்வளவு இருகின்றது என்றும் வரி ஏய்ப்பினால் இவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிப்பார்கள்.
ஒருவேளை உங்களுக்காக மற்றவர்களின் வங்கிக் கணக்கில் பதிவேற்றம் செய்தால் அவர்களிடத்தில் வருமானவரித்துறை திவிர விசாரணை மேற்கொண்டு பறிமுதல் செய்வதற்கும், அத்தகைய கணக்கினை முடக்குவதற்க்கும் வழி உண்டு. பெரும்பாலும் மொத்தமாய் கறுப்புப்பணமாய் பதுக்கி வைப்பவர்கள் அதன் வரிசை எண்கள் சீராக இருப்பதால் 'இந்த எண் முதல் இந்த எண் வரைச் செல்லாது' என்கிற அறிவிப்பு எளிதாகத் தான் இருக்கும்.

இப்போது சொல்லுங்கள். இனிமேலும் யாராவது இரண்டாயிரம் நோட்டை அதிகமாகக் கறுப்புப்பணமாக வைத்துக் கொள்வார்களா? மீறியும், வைத்திருந்தால் அவர்கள் பாடு திண்டாட்டம்தான். இப்போது சொல்லுங்கள் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வெளியிட்டது சரியா? தவறா? இவற்றால் கறுப்புப் பணம், போலி நோட்டுகள், லஞ்சம், ஊழல், தீவிரவாதம், செயற்கை விலைவாசி ஏற்றம் போன்றவைகள் கட்டுப்படுத்த முடியுமா? முடியாதா? ஆக இதிலிருந்து தப்பிக்க சில வழிகள்; சரியானபடி வருமான வரி கட்ட வேண்டும்; பிறரின் பணத்தை உங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளவே கூடாது; அளவாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வைத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக இருந்தால் உங்கள் கணக்கில் வங்கியில் உடன் செலுத்திவிட வேண்டும். இந்ந நடவடிக்கையால் கட்டாயம் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்குப் பாதகம் இருக்காதுபணப்பரிமாற்றம் எங்கு நிகழ்ந்தாலும் அதைக் கணினியானது கண்கானித்துக் கொண்டிருக்கின்றது என்பதை என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய சிறப்பான தொழில்நுட்பம் இக்காலம் பெற்றுள்ளது. ஆகையால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு அதிகம் வைத்திருப்பவர்களின் தலைக்கு மேல் எப்போதும் கத்தி தொங்கிக் கொண்டிருக்கின்றது என்கிற அபாயத்தை உணர்ந்து அதற்கேற்றபடி நேர்மையாக நடந்து கொண்டால் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்கலாம். இது எனது கருத்து.

பெரிய நிறுவனங்கள், தொழிலதிபர்கள், பதவியில் உள்ளவர்கள் பெரும்பாலும் மின்னணு பரிமாற்றம் மேற்கொள்வதால் எவ்வித பிரச்சனையும் அவர்களுக்கு இருக்காது. வருமானவரி கட்டாமல் பணத்தைப் பதுக்கி வைப்பவர்களுக்குத்தான் இந்த ஆப்பு. இது இப்போது படிக்கும்போது சிரிப்பாக, கோமாளித்தனமாகத் தெரியலாம். ஆனால் நடைமுறைப்படுத்தும்போது அய்யோ, அப்பா, போச்சே, எண் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுவிட்டதே! என்று புலம்புவதில் எவ்வித பயனும் இல்லை. மேலும் தங்கத்தில், ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்ய முடியாது. அதற்கும் வரம்பு இருக்கின்றது. ஒருவேளை முதலீடு செய்தால் கணினி அதன் விவரங்களைக் காட்டிவிடும். முடிவாக, உங்கள் வருமானத்திற்கு மேல் எவ்வித பணமும் சேர்க்கக் கூடாது. வருமானத்திற்கு ஏற்ற வரியை காலதாமதம் இல்லாமல் உடனடியாக கட்டிவிட்டால் எவ்வித தொல்லையும், பயமும் இருக்காது. ஒருவேளை அந்த நேரத்தில் உங்களுக்கு மட்டுமே பணம் மறைத்து வைத்திருக்கும் இடம் தெரியும் நிலை இருந்தால், மைய அரசு அறிவிக்கும் நேரத்தில்  நீங்கள் வெளிநாடு  சென்றிருந்தாலும் சரி, நினைவில்லாமல் போனாலும் சரி, சுகமில்லாமல் படுத்தாலும் சரி இப்படி ஏதாவது ஒன்றில் சிக்கி இருந்தால் உங்கள் பணம் அம்போதான்.   
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%