Pages

Showing posts with label உங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது? HOW ABOUT YOUR LIFE? புதுக்கவிதை - MADURAI GANGADHARAN. Show all posts
Showing posts with label உங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது? HOW ABOUT YOUR LIFE? புதுக்கவிதை - MADURAI GANGADHARAN. Show all posts

Monday, 18 February 2013

உங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது ? HOW ABOUT YOUR LIFE? புதுக்கவிதை - MADURAI GANGADHARAN

உங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது  ?
        
              HOW ABOUT YOUR LIFE?
                        
                                  புதுக்கவிதை 
                            மதுரை கங்காதரன் 
                          
வாழ்க்கை எனக்கு கடவுள் போல 
இருப்பது போல் இருக்கின்றது 
இல்லாதது போலும் இருக்கின்றது.

வாழ்க்கை எனக்கு அதிர்ஷ்டம் போல 
எப்போது வரும் இன்று தெரியவில்லை 
எப்போது வராது என்றும் தெரியவில்லை.

வாழ்க்கை எனக்கு கனவு போல 
தூக்கும் போது இனிமையாய் இருக்கிறது 
விழிக்கும்போது கசப்பாய் இருக்கிறது.

வாழ்கை எனக்கு பேயைப் போல 
நேற்றும் அடித்து விரட்டுகிறது 
இன்றும் அடிக்க வருகின்றது.



வாழ்க்கை எனக்கு மனம் போல 
நேற்று நான் நினைத்தபடி நடந்தது 
இன்றும் அதுபோல் நடக்கிறது.

வாழ்க்கை எனக்கு குரங்கு போல 
நேற்று இருந்த குணம் இன்றில்லை 
இன்றைய குணம் நாளை மாறிவிடுமோ?

வாழக்கை எனக்கு டி.வி சீரியல் போல 
'முடியும்' என்று நினைக்கும்போது தொடர்கிறது 
'தொடரும்' என்கிறபோது முடிந்து விடுகிறது.

வாழ்க்கை எனக்கு கிரிக்கெட் போல 
எப்போது 'சிக்ஸர்' அடிப்பேன் 
எப்போது 'டக் அவுட்' ஆவேன் தெரியவில்லை.

வாழ்க்கை எனக்கு விதை போல 
நேற்று தான் விதைத்தது போல இருந்தது.
இன்று நெடு நெடுவென்று வளர்ந்துவிட்டது.

வாழ்க்கை எனக்கு கடல் போல் 
நீந்தத் தெரிந்தோர் பிழைக்கின்றனர் 
தெரியாதோர் செத்து மடிகின்றனர்.

வாழ்க்கை எனக்கு விலைவாசி போல 
தினம் தினம் ஏறிக்கொண்டிருக்கின்றது 
ஏறிய வயது இறங்குவதுண்டோ ?

வாழ்க்கை எனக்கு செல்வம் போல 
நேற்று என்னிடத்தில் இருந்தது 
இன்று வேறு ஒருவனிடத்தில் போய்விட்டது.

வாழ்க்கை எனக்கு தேன்கூடு போல 
கஷ்டப்பட்டு கட்டியது நான் 
ஆனால் அனுபவிப்பதோ வேறொருவன்.

பொதுவாக வாழ்க்கை என்பது 
உண்மையும் பொய்யும் கலந்த கலவை 
பிறப்பும் இறப்பும் கொண்ட அதிசயம்.
                 
                               நன்றி 
                
                          வணக்கம்.