Pages

Showing posts with label கற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு. Show all posts
Showing posts with label கற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு. Show all posts

Monday, 14 July 2014

கற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு


கற்றோர் போற்றும் நம்ம காமராசர் 
(காமராசர் பிறந்த நாள் சிறப்பு புதுக்கவிதை 
புதுக்கவிதை 

மதுரை கங்காதரன் 

நம்ம காமராசர் ! நம்ம காமராசர்!

கற்பனைக்கு எட்டாததை சொன்னவர்  
கனவிலும் நடக்காததை நடத்தினவர்  

தன்னலம் கருதாத மனித தெய்வமானவர் 
தன்னம்பிக்கையில் சிகரமானவர் நம்ம காமராசர்.   

கல்வியில் கலங்கரை விளக்கம் 
தொழிலில் திசை காட்டி 

  

அரசியலில்  சாணக்கியர் 
பல திட்டங்களுக்கு முன்னோடி நம்ம காமராசர்!

பிறந்தார்கள் இருந்தார்கள் இறந்தார்கள் இவ்வுலகில் பலர் 
பிறந்தார் இருந்தார் இன்னமும் இருக்கிறார் மக்கள் மனதில்  

சொல்வதை செய்யாதவர் பலர் உள்ளார் 
சொல்லாமல் பல செய்தவர் நம்ம காமராசர் .

இவர் படிக்காதவர் ! என்ன செய்திடுவார் ? என 
இவரை ஏளனம் செய்தோர் பலர்.


இவர் மாமேதை ! எதையும் செய்திடுவார் என 
இவரை கற்றோரும் போற்றினர் நம்ம காமராசர் 

கேள்விக்குறி போல் வளைந்திருந்த ஏழைகளின் வாழ்வை 
வேள்வித் தீயால் ஆச்சரியக்குறியாய் மாற்றியவர் 

சரித்திரம் படிப்பவர்களுக்கு நடுவில் 
சரித்தரம் படைத்தவர் நம்ம காமராசர் 

எளிமையால் ஏழைப் பங்காளரானார் 
திறமையால் பாரத ரத்னாவானார்

ஆற்றலால் தென்னக காந்தியானார் 
கடமையால் கர்ம வீரரானார் நம்ம காமராசர்.

  

சுயநலத்திற்கு சாவு மணி அடித்தார் 
பொதுநலத்திற்கு ஆலய மணி ஒலித்தார்.

இறைவன் எனக்கு ஒரு வரம் கொடுத்தால் 
நம்ம காமராசரை மீண்டும் தர வேண்டுவேன்.

நன்றி ..வணக்கம் .

*****************************************************************************************