Pages

Showing posts with label மதுரையில் 18.5.2017 கவியரங்கில் கவிஞர்களின் மின்படங்கள்... Show all posts
Showing posts with label மதுரையில் 18.5.2017 கவியரங்கில் கவிஞர்களின் மின்படங்கள்... Show all posts

Wednesday, 17 May 2017

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையில் 18.5.2017 கவியரங்கில் கவிஞர்களின் மின்படங்கள்..


மதிப்புக்குரிய தமிழ் நெஞ்சங்களே!
நமது அருமைக் கவிஞர்களின் இனிய கவிகளைச் செவி சாய்த்து விழாவினைச் சிறப்பாக நடைபெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையில் 18.5.2017 அன்று நடந்த 
கவியரங்கில் கவிஞர்கள் கவி பாடும்போது எடுத்த சில மின்படங்கள் இதோ ..

எனது கவிதை இதோ ....
        தலைப்பு: தேமதுரத் தமிழோசை

தமிழ் வளர்க்கும் உலகத் தமிழ்ச் சங்கம்
தமிழ் பாடும் உலகக் கவிஞர்களின் சங்கமம்
தமிழ்நாடு உலகின் முதன்மை அங்கம்
தமிழ் மொழி உலக மொழிகளில் தங்கம்.

அறிவுக்கு  விருந்தளிக்கும் நம் தமிழ்
உடலுக்கு மருந்தளிக்கும் நம் தமிழ்
வாழ்வுக்கு வளமளிக்கும் நம் தமிழ்.
வையகத்திற்கு உயர்வளிக்கும் நம் தமிழ்.

எட்டுத்திசைகளில் ஒலிக்கும் இசைத்தமிழ்
எட்டாத உயரத்தில் நிற்கும் இயற்றமிழ்
சொட்டும் தேனாய் இனிக்கும் நாடகத்தமிழ்
கிட்டாத புகழ் தரும் முத்தமிழ்.

கலையானாலும் தமிழில் வளர்ப்போம்
கவியானாலும் தமிழில் பாடுவோம்
கதையானாலும் தமிழில் உரைப்போம்
காதலானாலும் தமிழில் பகிர்வோம்.

தமிழ்க்காற்று தென்றலாய் வீசட்டும்
தமிழ் மழை அருவியாய்க் கொட்டட்டும்
தமிழ் நிலம் பசுமையாய்ச் செழிக்கட்டும்
தமிழ் விருந்து எந்நாளும் படைக்கட்டும்.
 
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!! வெல்க தமிழ்!!!
















































































































நன்றி , வணக்கம்...