Pages

Showing posts with label மனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க- WHY END OF THE LIFE IS NOT LIKE FILM'S END. Show all posts
Showing posts with label மனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க- WHY END OF THE LIFE IS NOT LIKE FILM'S END. Show all posts

Thursday, 21 March 2013

மனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க- WHY END OF THE LIFE IS NOT LIKE FILM'S END

மனிதனின் முடிவு திரைப்படம் போல் 
சுபமாக இருக்க-
WHY END OF THE LIFE IS NOT LIKE FILM'S END 


தன்னம்பிக்கை கட்டுரை 

பொதுவாக எல்லோருக்கும் திரைப்படம் பார்ப்பது என்றால் மிகவும் பிடித்தமானது ஒன்றாகும். ஒரு சிலர் குறிப்பிட்ட திரைப்படத்தை அல்லது திரைப்படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப திரும்ப மிகவும் விரும்பிப் பார்ப்பார்கள். அதே போல் சில திரைப்படங்கள் நீண்ட நாட்கள் அமோகமாக ஓடுகிறது. அது எதனால்  என்று பார்த்தோமானால் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் நகைச்சுவை கலந்தும், கள்ளம், கபடமில்லாமல் இருப்பார்கள் அல்லது மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும்படியாக இருப்பார்கள் . அதாவது ஆயிரம் பிரச்சனைகள் வந்தாலுமே அதில் வரும் கதாநாயகன் அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி கடைசியில் அனைவருக்கும் திருப்திபடும் வகையில் நல்ல முடிவு கட்டாயம் கொடுத்திருப்பார்கள். அதைத் தான் எல்லோரும் எதிர்பார்த்துச் செல்கின்றனர். இது திரைப்படம்.

ஆனால் நடைமுறையில் ஒவ்வொரு மனிதனின் முடிவும் திருப்தியாக , சுபமாக முடிகின்றதா? எத்தனை கஷ்டங்கள், நஷ்டங்கள்? ஏன் எதற்காக மனிதனின் முடிவு வெற்றிகரமாக இருப்பதில்லை? அனைத்திற்கும் காரணம் சுயநலம், நம்பிக்கையின்மை, பொறாமை, நான் என்கிற அகம்பாவம், விட்டுக்கொடுக்கும் மனப்பன்மையின்மை, உறவுகளை பெரிதாக மதிக்காமை, பேராசை, இன்னும் அடுக்கின்கொண்டே போகலாம். 

இவைகளெல்லாம் இல்லாமல் திரைப்படத்தில் வருவதுபோல் மனிதனின் முடிவின் போது எல்லாப் பிரச்சனைகளும் நன்றாக தீர்த்துவிட்டு சுபமாக முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். அதில் கதாநாயன் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ப்பது போல் நீங்களும் ஏன் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு கதாநாயகனாக மாறக்கூடாது. அனைத்துப் பிரச்சனைகளையும் ஏன் தீர்க்கக் கூடாது?

உங்களாலும் சுமூகமாக தீர்த்து வைக்க முடியும். அதற்குத் தேவை சிறிதளவு தன்னம்பிக்கை, சிறிதளவு முயற்சி, சிறிதளவு தியாகம். ஒவ்வொரு மனிதனும் இந்த பூமியை விட்டுச் செல்லும்போது தன்னுடைய பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் மற்றவர்களுக்குக் கொடுக்காமல் இருந்தால் அதுவே புண்ணியமான காரியமாகும். சொர்கத்திற்கு செல்லும் பாதையும் கூட.

அன்றாட வாழ்விலும் சரி, ஆட்சியிலும் சரி அவர்கள் விட்டு இறங்கும்போது தலை முங்கும் அளவிற்க்கு பிரச்சனைகளை வைத்துச் செல்வதைத் தான் பார்க்கிறோம். ஆட்சியே அப்படியிருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு மனிதனின் முடிவும் நன்றாக இருக்குமா? இதற்குக் காரணம் மிதமிஞ்சிய மாற்றங்கள். அனைத்தும் குறுகிய காலத்தில் நிகழ்கின்றமையால் எல்லோராலும் அதை உடனே பின்பற்ற முடியாத நிலைமை. உற்பத்தியை கண்மூடித்தனமாக பெருக்கிக்கொண்டே போனால் யார் அதை அனைத்தும் வாங்குவது? வாங்கிவிட்டால் அதை வைப்பதற்கு இடமேது? பெரிய பெரிய கட்டங்கள் கட்டிக்கொண்டு போனால் யார் அதை வாங்கி இருப்பது?  ஒரே நாளில் மனிதனின் பொருளாதாரம், நாட்டின் பொருளாதாரம் அவ்வளவு பெரிதாக மாறிவிடவாப் போகிறது? 

ஆனால் மீடியாக்கள் அப்படித்தான் காண்பிக்கிறார்கள். அப்படி பெரிதாகப் திட்டங்கள் போட்ட நாடுகள் அனைத்தும் இன்று திவாலா ஆகி மற்ற நாட்டினிடத்தில் கையேந்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டி யிருக்கிறார்கள். நாடுகள் மட்டுமல்ல. பல முக்கிய தொழில் நிறுவனங்களும் கூட. மாற்றங்களைப் புரிந்துகொள்ளு முன்னமே மீண்டும் அடுத்த மாற்றம்? இப்படி இருப்பதனால் எல்லோரையும் மிக எளிதாக ஏமாற்றிவிடுகிறார்கள். உலகம் முழுவதிலும்  கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பேர்களின் கைகளுக்கு  மாறுகின்றது. அப்படியிருக்கும்போது அது யாருடைய பணம் எப்படி வந்தது என்று யாருக்குத் தெரியும். அத்தனை வேகத்தில் இடம் மாறுகின்றது. உண்மை நிலவரம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை?

ஒரே நாளில் கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் !! ??? என்று பல மீடியாக்கள் விளம்பரப் படுத்துகின்றன. ஆனால் அதன் பின்னணியில் எத்தை பேர் ஆண்டியானார்களோ!? அல்லது பணத்தை இழந்தார்களோ? இன்றைய கால கட்டத்தில் தனக்கு அதிக ஆதாயம் இல்லாமல் யாருமே பணத்தை தூக்கித் தரமாட்டார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் எல்லாமே சரியாகத் தான் தெரியும். ஆனால் மறைவில் நடப்பது யாருக்கும் தெரிய நியாயமில்லை. அதாவது ஒருவருக்காக பல நூறு பேர்கள் ஏமாறுகிறார்கள் என்பது தான் உண்மை. அதுவும் கற்பனை செய்து பார்க்கமுடியாத வகையில் ஏமாற்றுகிறார்கள். அதோடு பிடிபடாமலும் தப்பித்தும் விடுகிறார்கள். இந்த மாதிரி வாழ்க்கை இருந்தால் எப்படி சுமூகமான முடிவு வரும்?? என்றா கேட்கிறீர்கள்!



இப்படியே எல்லோரும் தள்ளிவிட்டால் எப்படி? பகட்டு விளம்பரத்தில் மயங்காமல் முதலில் வீடுகளில் உள்ள பிரச்சனைகளை சுபமாக தீர்ப்போம். தன்னம்பிக்கையோடு செய்வோம். திரைப்படம் போல கட்டாயம் திருப்தியான முடிவு ஒவ்வொர்ருடைய வாழ்விலும் நிகழும் என்று நம்புவோம்.


நன்றி
வணக்கம்.