Pages

Showing posts with label வான் மழையே. Show all posts
Showing posts with label வான் மழையே. Show all posts

Thursday, 14 February 2013

வான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது ? RAIN , RAIN WHAT HAPPEN TO YOU?

வான் மழையே ! உனக்கென்ன ஆகிவிட்டது ?
               
RAIN ! RAIN ! WHAT HAPPEN TO YOU?

                

                     புதுக்கவிதை 
               மதுரை கங்காதரன் 

 
நேரத்தை கடைப்பிடிப்பதில் 
மனிதர்களை மிஞ்சி விட்டாய்!
அவர்கள் தான் சொன்ன நேரத்தில் 
சொன்ன இடத்தில் வராதவர்கள்!

உனது கடமை செய்வதில் 
அரசியல்வாதிகளையும் முந்தி விட்டாய்!
அவர்கள் எல்லோரும் தன வேலைகளை 
சரியான நேரத்த்தில் செய்யாதவர்கள்!

வான் மழையே நீ மாறிவிட்டாய் 
உனது கடமையை மறந்துவிட்டாய் 
உனது கொடை குணத்தை இழந்துவிடாதே 
மக்களை துயரத்தில் தள்ளிவிடாதே 

மழையே மழையே வா வா !
காலம் தவறாமல் பெய்து வா !
தண்ணீர் பிரச்சனை தீர்க்க வா !
உலகை காக்க விரைந்து வா !

      

வான்வெளியில் தோன்றும் கருமேகங்கள் 
தேனை உடைய தேன்கூடுகள் 
மழைத் துளிகளோ தேன் துளிகள் 
மக்களுக்கோ அது ஜீவாதாரம்.

மழையில் நனைவது மகா சந்தோசம் 
அதிகமானால் வருவது ஜலதோஷம் 
மரம்,செடி,கொடி செழிப்பது மழையாலே 
'நைட்ரஜன் சுழற்சி' நடப்பது அதனாலே!

சிப்பியில் ஒரு மழைத்துளி 
முத்தாய் மாற்றும் சக்தி கொடுக்கிறாய் 
பூமியில் நீ தரும் பலத் துளி சேர்ந்த மழை 
மனித வாழ்க்கையை  முத்தாய் மாற்ற வா வா! 

  

மழையில்லையேல் பசுமை இல்லை 
பசுமையில்லையேல் உயிர்கள் இல்லை 
உயிரில்லையேல் உலகில்லை 
ஆதலால் மழையே மழையே வா வா!

மக்கள் மனம் குளிர்விக்க 
புவி வெப்பமாவதை தடுக்க 
அனைத்து ஜீவராசிகள் உயிர் வாழ 
காலம் தவறாமல் பெய்து வா வா!

                     நன்றி 
   

                 வணக்கம்.