Pages

Monday 14 June 2021

INTERNATIONAL MUSEUM DAY - சர்வதேச அருங்காட்சியகம் தினம் - BY K.K.GANGADHARAN

 INTERNATIONAL MUSEUM DAY 

சர்வதேச அருங்காட்சியகம் தினம்  - 

BY K.K.GANGADHARAN   

கு.கி.கங்காதரன் 

       ஒவ்வொரு நாளுக்கும் ஏதாவது ஒரு சிறப்பு இருக்கும் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்தானே அந்த வகையிலே இந்த தினத்தின்  அதாவது மே மாதம் 18ம் நாளின் சிறப்பு என்னான்னா….??? 

    ரொம்ப சரியா ஊகிச்சீங்க!!! ஆமாங்க இன்றைய நாள்சர்வதேச அருங்காட்சியகம் தினம் தாங்க அருங்காட்சியகம் என்கிறது கீழடியில் கிடைத்த தொல்பொருட்களாக இருக்கலாம்!! பழங்கால நாணயங்களாக இருக்கலாம்!! பல நாடுகளோட தபால்தலைகளாக இருக்கலாம்!! பலரோட ஓவியங்களாக இருக்கலாம்!! ஏன் புகைப்படங்களாகக் கூட இருக்கலாம்!! அருங்காட்சியகம் பற்றிய பல சுவையானத் தகவல்களை இப்போ  பார்க்கலாம். 

         அருங்காட்சியகம்ன்னா.. நம்ம மதுரையில் உள்ள மக்களுக்கு.. உடனே நினைவுக்கு வருவது.. காந்தி அருங்காட்சியகம்’! அங்கே.. அண்ணல் காந்தியடிகளைப் பற்றிய.. வாழ்க்கை வரலாற்றுச் சான்றுகளைக் காணலாம்.. உண்மைதானே!.. அருங்காட்சியகங்களாலே.. என்ன நன்மைன்னு.. நீங்க கேட்கலாம்?? சிலருக்கு பல புத்தகங்களைப் படிப்பதிலே ஆர்வமிருக்கலாம்.. சிலருக்கு பலருடைய பேச்சுகளைக் கேட்பதிலே ஆர்வமிருக்கலாம்.. சிலருக்கு பலவற்றைப் பார்ப்பதிலே ஆர்வமிருக்கலாம்.. அம்மாதிரியாக நாம பார்ப்பதற்கு வாய்ப்பு கொடுக்கிறதுதாங்க இந்த அருங்காட்சியகம்.. ஒரு பொருளைப் பார்க்கும்போது.. அப்பொருள் நம்மனதில் ஆழமாய் பதிவது இயல்பு தானே..   அருங்காட்சியகம் என்கிறது வரலாற்றுகளின் பொக்கீஷங்கள்..கலைகளின் சங்கமமங்கள்.. கற்பனைகளின் காட்சிகள்.. ஏன்? விந்தைகளின் வெளிபாடுகளுன்னும் சொல்லலாம்.. இம்மாதிரியான அருங்காட்சியகள் நமது இந்தியாவில் நிறையவே இருக்கு.. அதில் சில அருங்காட்சியகங்களில் சிறப்பை ஒவ்வொன்றாக இப்போது பார்க்கலாம். 


         முதல்லே தெரிஞ்சுக்கப் போகிற அருங்காட்சியகம்.. 

1. பகோரி-கி-ஹவேலி, உதய்பூர்.. 

(Bagore Ki Haveli Museum -Udaipur) 


        

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில்.. இந்த பகோரி-கி-ஹவேலி அருங்காட்சியகம் இருக்கு.. இது ஒரு பெரிய அரன்மனை போன்ற பெரிய மாளிகை.. இந்த பெரிய மாளிகை பிசொலா என்ற கங்கோரி ஏரிக்கு அருகில் இருக்கு.. இது 18ம் நூற்றாண்டில் மேவார் பகுதியை ஆண்ட அமீர் சந்த் பத்வா என்ற மன்னர் கட்டியிருக்கிறார்..

    இந்த அரண்மனையில் நூற்றுக்கும் மேற்பட்ட அறைகள் இருக்கு,. ஒவ்வொரு அறையிலும் உடைகள் மற்றும் நவீன ஓவியக்கலைகளின் காட்சிகள் இங்கே இருக்கு.. உட்புறங்களில் உள்ள கண்ணாடி மற்றும் நுணுக்கமான கண்ணாடி வேலைபாடு கொண்ட மாளிகை இது.. உதாரணமாக இங்குள்ள குயின்ஸ் சேம்பர் சுவர்களில் மேவார் ஓவியம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கு.. வண்ண கண்ணாடிகளின் சிறிய சிறிய துண்டுகளிலிருந்து.. வடிவமைக்கப்பட்ட அழகான இரண்டு மயில்கள் கண்ணாடி வேலைபாடுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.. என்றே சொல்லலாம். 

அடுத்த அருங்காட்சியகம்.....

2. விக்டோரியா மெமோரியல்  

Victoria Memorial Hall and Museum 




    அடுத்த அருங்காட்சியகம்.. விக்டோரியா மெமோரியல் - Victoria Memorial Hall and Museum .. விக்டோரியா மெமோரியல் என்பது கொல்கத்தாவில் உள்ள ஒரு பெரிய பளிங்கு கட்டிடம்.. இது 1906 மற்றும் 1921 க்கு இடையில் கட்டப்பட்டது. இது விக்டோரியா பேரரசின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும் எடுத்துக்கொள்ளலாம்., இப்போது கலாச்சார அமைச்சரகத்தின் கீழ் இது ஒரு அருங்காட்சியகமாக இருந்து வருகிறது. இந்த அருங்காட்சியகம் மைதான் இடத்தில் அமைந்துள்ளது மேலும் இது  கொல்கத்தாவின் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும்.

    விக்டோரியா மெமோரியலில் 25 காட்சியகங்கள் உள்ளன. ராயல் கேலரி, தேசிய தலைவர்கள் கேலரி, உருவப்படம் கேலரி, சென்ட்ரல் ஹால், சிற்ப கேலரி, ஆயுதங்கள் மற்றும் ஆயுதக் கேலரி மற்றும் புதிய, கொல்கத்தா கேலரி ஆகியவை இதில் அடங்கும். விக்டோரியா மெமோரியல் தாமஸ் டேனியல் (1749-1840) மற்றும் அவரது மருமகன் வில்லியம் டேனியல் (1769-1837) ஆகியோரின் படைப்புகளின் மிகப்பெரிய ஒற்றை தொகுப்பைக் கொண்டுள்ளது. வில்லியம் ஷேக்ஸ்பியரின் விளக்கப்பட படைப்புகள், அரேபிய இரவுகள் மற்றும் ரூபாயத் எழுதிய உமர் கயாமின் புத்தகங்கள்  போன்ற அரிய மற்றும் பழங்கால புத்தகங்களின் தொகுப்பும், நவாப் வாஜித் அலி ஷாவின் கதக் நடனம் மற்றும் தும்ரி இசை பற்றிய புத்தகங்களும் இதில் உள்ளன. அடுத்த அருங்காட்சியகம் பற்றியத் தகவலை  இந்தப் பாடலைக் கேட்ட பின்னே தெரிஞ்சுக்கலாம்..

அடுத்த அருங்காட்சியகம்.. 

3. சலார் ஜங் அருங்காட்சியகம், ஐதராபாத்.. 

Salar Jung Museum, Hyderabad, Andhra



        இந்த சலார் ஜங் அருங்காட்சியகம் ஓவியங்களின் கண்காட்சியாக திகழ்கிறது.
. இது தேசிய அருங்காட்சியகத்தில் ஒன்றாக உள்ளது..

   சாலார் ஜங் மியூசியம் என்பது இந்தியாவின் தெலுங்கானா, ஹைதராபாத் நகரில்.. மூசி ஆற்றின்.. தென் கரையில் உள்ள.. தார்-உல்-ஷிஃபாவில் அமைந்துள்ள.. ஒரு கலை அருங்காட்சியகமாகும்.. இது இந்தியாவின் மூன்று தேசிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். உண்மையில் இந்த அருங்காட்சியகம் சலார் ஜங் குடும்பத்தினருக்குச் சொந்தமான ஒரு தனிப்பட்ட கலைத் தொகுப்பாகும், இது மூன்றாம் சலார் ஜங்  இன் மரணத்திற்குப் பிறகு இந்தியதேசத்திற்கு வழங்கப்பட்டது.

      இது டிசம்பர் 16, 1951 அன்று திறக்கப்பட்டது.. இங்கே ஜப்பான், சீனா, பர்மா, நேபாளம், இந்தியா, பெர்சியா, எகிப்து, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய நாடுகளின் சிற்பங்கள், ஓவியங்கள், செதுக்கல்கள், ஜவுளி, கையெழுத்துப் பிரதிகள், மட்பாண்டங்கள், உலோகக் கலைப்பொருட்கள், தரைவிரிப்புகள், கடிகாரங்கள் மற்றும் தளபாடங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ,. இது உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். 

                           அடுத்த அருங்காட்சியகம் 

     4. ஜெய்சால்மர் போர் அருங்காட்சியகம்

Jaisalmer War Museum, Jaisalmer





ஜெய்சல்மர் போர் அருங்காட்சியகம்

    இது ஜெய்சால்மர் - ஜோத்பூர் நெடுஞ்சாலையில் ஜெய்சால்மேரிலிருந்து 10 கி.மீ தொலைவில் ஜெய்சால்மர் போர் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் துவக்கம் 1965.. அதாவது இந்தியா பாகிஸ்தான் போரின் பொன்விழா நினைவு ஆண்டில் தொடங்கப்பட்டது.. 

        ஜெய்சால்மர் போர் அருங்காட்சியகம் இந்தியாவின் வளமான இராணுவ வரலாற்றைக் காண்பிப்பதற்கும், கடந்த காலங்களில் நிகழ்ந்ததைப் போல உண்மையான போர் முயற்சிகளைக் காண்பிப்பதற்கும் கருத்துருவாக்கப்பட்டது. ஜெய்சால்மர் போர் அருங்காட்சியகம் இந்திய இராணுவத்தின் வீராங்கனைகள், குறிப்பாக இந்திய ஆயுதப்படைகள் செய்யும் தியாகம் குறித்த அதிக விழிப்புணர்வை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அடுத்த அருங்காட்சியகம் பற்றியத் தகவலை  இனி தெரிஞ்சுக்கலாம்..

அடுத்த அருங்காட்சியகம்.. 

ஹெரிடேஜ் டிரான்ஸ்போர்ட் மியூசியம்.. 

Heritage Transport Museum, Gurgaon 





    ஹெரிடேஜ் டிரான்ஸ்போர்ட் மியூசியம்.. இது மனிதர்களுடைய போக்குவரத்தின் வரலாற்றைப் பறைசாற்றும்.. இந்தியாவின்.. முக்கியமான.. போக்குவரத்து வண்டிகளின் அருங்காட்சியகமாக இருந்து வருதுங்க.. இது ஹரியானா மாநிலத்தின்.. குர்கான் மாவட்டத்தில்.. டரு இல் இருக்கு.. இங்குள்ள வண்டிகளின் தொகுப்பு இந்தியாவில் போக்குவரத்து வளர்ச்சியில் கவனத்தை ஈர்க்கிறதுன்னே சொல்லலாம்.. இது 3.01 ஏக்கரில் அமைந்துள்ளது.. அதிலே 95,000 சதுர அடி அளவுக்கு.. கண்காட்சி காட்சியகங்களைக் கொண்டு இருக்கு.. இது 2013 இல் திறக்கப்பட்டபோது.. இது இந்தியாவின் மிகப்பெரிய தனியாருக்குச் சொந்தமான அருங்காட்சியகமாக இருந்து வருது.. அடுத்த அருங்காட்சியகம் பற்றியத் தகவலை  தெரிஞ்சுக்கலாம்..

அடுத்த அருங்காட்சியகம்.. 

சித்தகிரி கிராம்ஜிவன் மெழுகு சிலைகள் அருங்காட்சியகம்..

Siddhagiri Gramjivan Wax Museum







      இந்த சித்தகிரி கிராம்ஜிவன் மெழுகு சிலைகள்.. அருங்காட்சியகம்.. அதாவது கெனாரி மடம் மகாராஷ்டிராவின் கோலாப்பூருக்கு அருகிலுள்ள கெனாரியில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம்.. குறைந்த அளவே அறியப்பட்ட ஒன்று.. ஆனால் இங்கு நாம் கட்டாயமாக செல்ல வேண்டிய அருங்காட்சியகமாகும்.. இங்கு மகாராஷ்டிராவில் முகலாயர்கள் நுழைவதற்கு முன்பு.. பண்டைய கிராம வாழ்க்கையை அறிந்துகொள்ள உதவுகிறது..  மகாத்மா காந்தியின் கனவு கிராமத்தை.. இந்த அருங்காட்சியகம் கொண்டுள்ளது - தன்னிறைவு, பண்டைய காலத்தின் பண்டமாற்று முறை, ஒரு கிராமத்தில் உள்ள மக்களின் ஒரு பெரிய குடும்ப உணர்வு போன்றவைகளை பிரதிபலிக்கிறதென்னே சொல்லலாம்.. ஏன்னா அன்றைய சூழ்நிலைகளை.. 80 வெவ்வேறு வாழ்க்கை காட்சிகளாக.. சுமார் 300 மெழுகு சிலைகளால் உண்மையான மனிதர்களைப்போல இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.. ராமாயணம் மற்றும் மகாபாரதம், 7 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது.. இந்த மெழுகு சிலைகள் மகத்தான மற்றும் பல பரிமாண விளைவுகளைக் கொண்டுள்ளன,. அவை உயிருடன் இருப்பது போன்று தோற்றத்தை தருவதாக இருக்கு. இந்த அருங்காட்சியகம் 27 வது மடாதிபதி எச்.எச். அட்ருஷ்ய காடிசிதேஷ்வர் சுவாமிஜியின் பெரும் முயற்சியால் இவையனைத்தையும் கற்பனை செய்து.உருவாக்கப்பட்டது, நமது பண்டைய கலாச்சாரம் மற்றும் சமுதாயத்தின் செழுமையை வரவிருக்கும் இந்திய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.. அடுத்த அருங்காட்சியகம் பற்றியத் தகவலை  தெரிஞ்சுக்கலாம்..


அடுத்த அருங்காட்சியகம்.. 

காந்தி டெல்லி அருங்காட்சியகம்

National Gandhi Museum in Delhi





   டெல்லியின் சிறந்த அருங்காட்சியகங்களில் ஒன்று காந்தி அருங்காட்சியகம் என்பதில் சந்தேகமில்லை. காந்தி அருங்காட்சியகம் ராஜ் காட்டிற்கு எதிரே அமைந்துள்ளது.

மியூசியத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்

* மகாத்மா காந்தியின் தாயத்து

* நூற்பு சக்கரங்கள்

* மகாத்மா காந்தியின் பழைய புகைப்படங்கள்; அவரது இளம் நாள் முதல் 1947 இல் டெல்லிக்கு இறுதி வருகை வரை.

* மகாத்மா காந்தியின் ஆசிரமங்கள் மாதிரிகள்

* மகாத்மா காந்தி படுகொலையின் போது உடுத்திக் கொண்டிருந்த ஆடையில் இருந்த இரத்தக் கறை உடைகள் மற்றும் புல்லட்

* மகாத்மா காந்தியின் உருவத்தைக் காட்டும் நாணயங்கள் மற்றும் குறிப்புகள்

 அடுத்த அருங்காட்சியகம் பற்றியத் தகவலை தெரிஞ்சுக்கலாம்..

 


அடுத்த அருங்காட்சியகம்

டான் பாஸ்கோ அருங்காட்சியம், ஷில்லாங் 

Don Bosco Museum, Shillong 


   இந்த டான் பாஸ்கோ.. அருங்காட்சியகத்தை விவரிக்க வேண்டுமென்றால்.. இங்குள்ள ஏழு மாடிகளில் இருக்கும்.. கண்கவர் காட்சிகள், வண்ணங்கள் மற்றும் புதையல்களின் தொகுப்பாகும்..  இந்த அருங்காட்சியகத்திற்குள் நுழையும் போது முதலில் வரவேற்பது.. அண்டை நாடுகளான பூட்டான், மியான்மர் மற்றும் நேபாளம் என்று பல்வேறு வடகிழக்கு சமூகங்களின் பாரம்பரிய உடைகள் தாங்க.. புகைப்படப் பிரிவில் பழங்குடி வாழ்க்கையின் பல அரிய புகைப்படங்களைக் காணலாம்..

       அருங்காட்சியகத்தின் பிற சிறப்பம்சங்கள் என்னவென்றால் இங்கு பழங்குடியினரின் தோற்றம் நிலப்பரப்பு பற்றியும் பழங்குடியினரின் நடைமுறைகள் வாழ்க்கை முறைகளை மற்றும் இடம்பெயர்வு குறித்து சிற்பங்கள் மற்றும் அலங்கரிக்கப்பட்டுள்ள உருவப்படங்களின் மூலம் மேலும் அறியலாம்..

     இங்குள்ள ஒரு கேலரியில் பல்வேறுவிதமான பழங்குடியினர்களின் வேட்டைகள், அவர்களின் கூடுதல்கள் விவசாயம் மற்றும் மீன்பிடி நடைமுறைகளுக்காகவே  அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாகும்..

   பல பார்வையாளர்கள் பாரம்பரிய தொழில்நுட்ப கண்காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமானவை. கலை, இசை, வீட்டுவசதி மற்றும் ஆயுதங்கள் பற்றிய காட்சியகங்கள் நம்மைக் கவர்ந்திழுக்கும் அளவுக்கு உள்ளன. உணவு கேலரியில், சில சுவையான உணவுகளை சுவைத்து மகிழலாம்..








நன்றி