Pages

Saturday 31 December 2022

KK Gangadharan in Madurai FM 103 3 interview on 30 11 2022 by P Priyadharshini

KK Gangadharan in Madurai FM 103 3 interview on 30 11 2022 by P Priyadharshini

Click the below link 


https://youtu.be/NqJ9C5UI-UQ



Friday 30 December 2022

25.12.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் - பைந்தமிழ் பாவலர் பாரதி - புதுக்கவிதை - கு.கி.கங்காதரன்

               பைந்தமிழ் பாவலர் பாரதி

                  


 
                          புதுக்கவிதை 

                      கு.கி.கங்காதரன் 

பாரதி பிறந்தது எட்டயபுரம் - இவரின் 
புகழோ எட்டாத உயரம் 
பன்மொழிப் பயின்ற அறிஞர் - இவரின் 
பெருமையைப் போற்றி வணங்குவோம்.

புதுக்கவிதைக்கு பாரதி அடித்தளம் 
புத்தம்புதுச்சிந்தனைக்கு ஓடுதளம் 
மரபுக் கவிஞர்களுக்கு போர்க்களம் 
மழலைக் கவிஞர்களுக்கு ஆடுகளம்.

பாரதி கவிகள் அக்னிப்பிழம்பாய் உமிழும்
பாக்களில் மல்லிகையின் மணமும் கமழும்
எதிரிகளுக்கு சிம்மச் சொப்பனமாய்த் திகழும்
அவரது  சொற்களை உச்சரித்தால் அதிரும்.

சுடர்மிகுக் கவிகளைப் படைத்த கவிஞர் 
இடரோடு இதழ்களை நடத்திய இதழாசிரியர்  
பகுத்தறிவை பரப்பிட்ட சமூக சீர்திருத்தர் 
புதுமைப் பெண்ணைச் செதுக்கிய நவீனச்சித்தர்.

பல்சுவை இலக்கியங்களைப் படைத்திட்டப் பாவலர் 
பற்பல தொண்டுகள் ஆற்றிய சேவகர்
விடுதலை வேட்கையை வித்திட்ட தேசியக்கவி 
வீரத்திற்கு மீசை முறுக்கிய முண்டாசுக்கவி 

எட்டு திசைக்கும் தமிழைப் பரப்பியவர் 
ஏழ்மையிலும் கவி படைக்கச்  சளைக்காதவர் 
தாய்மொழித் தமிழ் என்று முழங்கியவர்
தமிழர் பலருக்கு முன்மாதிரியாய் திகழ்பவர் 

************************************

Friday 9 December 2022

27.11.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் - 5 தலைப்பு - உலகின் முதன்மொழி தமிழே

 

27.11.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்

தலைப்பு  - உலகின் முதன்மொழி தமிழே!

27.11.2022 மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் நடந்த கவியரங்கம். படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம். மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலர் கவிஞர் இரா .இரவி வரவேற்றார். தலைவர் பேராசிரியர் சக்திவேல் கவியரங்கிற்கு தலைமை வகித்தார். புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன் சிறப்புரையாற்றினார். "உலகின் முதல் மொழி தமிழே!" தலைப்பில் கவிஞர்கள் முருகுபாரதி, குறளடியான், இதயத்துல்லா, அஞ்சூரியா க.செயராமன், ஜெய் சங்கர், முனைவர் இரா.வரதராசன், சங்கர நாராயணன், ச.லிங்கம்மாள், கு.ப.நாகராசன், பொன்பாண்டி, இராம பாண்டியன், அ.அழகையா, கு.கி.கங்காதரன், மா.வீரபாகு, இரா.கல்யாணசுந்தரம், சாந்தி திருநாவுக்கரசு, இரா.இரவி ஆகியோர் கவிதை படித்தனர். சாந்தி திருநாவுக்கரசு அவர்களின் புதிய நூல் வெளியிடப்பட்டது. வருகை தந்த அனைவருக்கும் நன்கொடையாக   நூலை வழங்கினார் நூல் ஆசிரியர்.





















                  உலகின் முதன்மொழி தமிழே!
                                புதுக்கவிதை 
                             கு.கி.கங்காதரன் 

மொழிக்கு வேண்டியது ஒலி  
ஒலியை மாற்றுவது எழுத்து 
எழுத்துகளின் பெருமை எளிமை
எளிமைக்கு ஐயமின்றி தமிழே..

பறவைகள் எழுப்புகின்ற ஒலிகள் 
விலங்குகள் கத்துகின்ற ஒலிகள் 
உணர்வுகளில் உருவாகும் ஒலிகள் 
அனைத்தும் சொற்களானது தமிழில்.

இயற்கையின் ஒலிகளுள்ள மொழி 
இயல்பாய் ஒலிக்கும் இன்மொழி 
வளமான சொற்களுள்ள செம்மொழி 
பன்மொழிகளுக்கு  வள்ளலான தமிழ்

தமிழ் மொழி தோன்றியது எப்போது?
தொன்மையென தொல்லியல் சொல்கிறது
தோண்டத் தோண்ட வயது நீளுகிறது
தக்கவிடை காட்டாமல் விளையாடுது 

முத்தமிழ் காலத்தைக் கணக்கிட்டாலும்
இயலிசை நாடகத்தை ஆராய்ந்தாலும்
இலக்கண இலக்கியங்களைப் படித்தாலும்
மொழிகளில் முதன்மையானது தமிழே..

********************************************

--

Tuesday 8 November 2022

30.10.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் 4 - தலைப்பு : கற்பனையும் கவிதையும்


30.10.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் 4 - கற்பனையும் கவிதையும் 



மதுரை, மணியம்மை பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 அளவில்  நடந்த கவியரங்கம். 

பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலர் கவிஞர் இரா.இரவி முன்னிலை வகித்தார்.

கவிதாயினி சாந்தி திருநாவுக்கரசு அவர்களின் "பார்வைத் தீண்டல்கள்"நூல் வெளியிடப்பபட்டது.

புரட்சிக்கவிஞர் அறத்தின் தலைவர் பி .வரதராசன் வாழ்த்துரை வழங்கினார். கற்பனையும் கவிதையும் என்ற தலைப்பில் கவிஞர்கள் இரா இரவி, முனைவர் இரா.வரதராசன்கு.கி.கங்காதரன்கல்யாண சுந்தரம், சங்கர நாராயணன்அஞ்சூரியா க.செயராமன்மா.வீரபாகுபொன் பாண்டிஇராம.பாண்டியன், ச.லிங்கம்ம்மாள்சாந்தி திருநாவுக்கரசுகுறளடியான்புலவர் முருகுபாரதிபால கிருட்டிணன்சசி முத்துஅனுராதா, பால் பேரின்பநாதன்  ஆகியோர் கவிதை வாசித்தனர். 

படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் சம்பத் கை வண்ணம்.ஏற்பாடு இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன். 30.10.2022

















       கற்பனையும் கவிதையும்
                 புதுக்கவிதை
             கு.கி.கங்காதரன்

நிகழ்வுகள் நினைவுகளாகத் தங்கும்
நினைவுகள் எண்ணங்களாக மாற்றும்
எண்ணங்கள் கற்பனைகளாக மலரும்
கற்பனைகள் கவிதைகளாகப் பிறக்கும்

கற்பனைகள் செய்திடாத மனிதன்
கானங்கள் கேட்டிடாதச் செவிகள்
சிலைகள் வடித்திடாதப் பாறைகள்
மாலைகள் தொடுத்திடாதப் பூக்கள்

எளிமையாய் எடுத்துரைப்பது கவிதை
ஏக்கங்களைத் தீர்ப்பது கவிதை
காதல்நோய்கு மருந்தாவது கவிதை
கேட்போரை வீரமூட்டுவது கவிதை

அரசனை ஆண்டியாக்கும் கற்பனை
ஆண்டியை அரசனாக்கும் கற்பனை
நிலவினைக் கரங்களில் காட்டும் 
உலகினைப் பையில் போட்டிடும்

இருப்பதை இல்லாமல் செய்யும்
இல்லாததை இருப்பதாகச் சொல்லும்
உண்மையை பொய்யென உரைக்கும்
பொய்யை உண்மையென சாதிக்கும்

கற்பனை... கவிஞர்களை உருவாக்கும் 
கற்பனை... விஞ்ஞானிகளைக் கொடுக்கும்
கற்பனை... புதுமைகளுக்கு வித்திடும்
கற்பனை... படைப்பாளர்களைத் தந்திடும்

*******************************************

*******************