Pages

Wednesday 14 August 2024

28.7.2024.. மாமதுரைக் கவிஞர் பேரவை- "அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்?- இரா .வரதராசன்- "இலக்கிய சிந்தனைகள்" நூல் வெளியீடு

 

28.7.2024.. மாமதுரைக் கவிஞர் பேரவை- 

"அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்?- 

இரா .வரதராசன்-  "இலக்கிய சிந்தனைகள்" நூல் வெளியீடு 


28.7.2024.. மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் "அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்?" என்ற தலைப்பில் சிந்தனைக் கவியரங்கம் நடந்தது. பேராசிரியர் தலைவர் சக்திவேல் தலைமையில்  கவியரங்கம் நடந்தது,


மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம், மதுரை, வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. செயலர் கவிஞர் இரா.இரவி  வரவேற்றார். பேராசிரியர் தலைவர் சக்திவேல் தலைமையில்  கவியரங்கம் நடந்தது, பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைச் செயலர் கங்காதரன் ஆகியோர் முன்னனிலை வகித்தனர் . 
 

கவிஞர் முனைவர் இரா .வரதராசன் எழுதிய "இலக்கிய சிந்தனைகள்"  கவிதை நூல் வெளியிட்டனர்  .

கவிஞர்கள் முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம்,  இரா .இரவி , கு .கி .கங்காதரன்,  புலவர் மகா .முருகபாரதி, பா .பொன் பாண்டி, ச. லிங்கம்மாள், மு .இதயத்துல்லா ( இளையாங்குடி ), அழகையா, ஆறுமுகம் , அஞ்சூரியா க .செயராமன், முன்னாள் இராணுவ வீரர்  சமயக்கண்ணு, முனைவர் நாகவள்ளி, பா.பழனி,  முனியாண்டி,  இந்தி ஆசிரியர் வேல் பாண்டி , பறம்பு நடராஜன், சாந்தி திருநாவுக்கரசு   ஆகியோர் கவிதை பாடினார்கள் .


மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர், மறைந்தும் மறையாத கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில், அவரது மகன் ஆதி சிவம் தென்னவன் வழங்கிய விருதுகள். சிறப்பாக கவிதை பாடிய கவிஞர்கள் கங்காதரன்,  அழகையா, இதயத்துல்லா ஆகியோர் விருது பெற்றனர்.

பார்வையாளர்களாக அதி வீர பாண்டியன், செல்லத்துரை, சண்முகம், ஜெகதீசன் சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கவியரங்கம் நடத்த மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் இப்பள்ளியின் தாளாளர், புரட்சிக்கவிஞர் மன்றத்தின் தலைவர்   பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள்.

துணைத்தலைவர் முனைவர் வரதராஜன்  நன்றி கூறினார்.  

படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்





           









அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்!

-    கவிஞர் இரா. இரவி

***

உயர்அறமன்றத்தில் உயர் தனிச்செம்மொழி வேண்டும்

வழக்கறிஞர்கள் மட்டுமே வாதாட உரிமை உண்டு

வாதி பிரதிவாதி வாதிட வழியே இல்லை

வழக்கறிஞர்கள் பேசுவது புரிய வேண்டாமா?


மக்கள் மொழியில் வாதாட தடை எதற்கு

மன்றாடி கேட்டு விட்டோம் மறுக்கின்றீர்?

உலகின் முதல்மொழி பெருமை பேசிவிட்டு

உரிய உரிமை வழங்கிட மறுப்பது ஏனோ?


புரியாத ஆங்கில மொழியில் பேசுவது

புரிவதே இல்லை தொடர்புடையவர்களுக்கு

சரியான நீதி கிடைக்க தமிழே வேண்டும்

சரியே தமிழில் வாதாடுவது சட்டமாக்குங்கள்


வழக்கறிஞர்கள் பலமுறை போராடி விட்டனர்

வழக்குமன்றம் செவி சாய்ப்பதே இல்லை

பிறமொழிக்கு உள்ள உரிமையை நம்

பைந்தமிழ் மொழிக்கு தருவதில் தடை ஏன்?


மாவட்ட நீதிமன்றங்களில் ஒலிக்கும் தமிழ்

மாபெரும் உயர்நீதிமன்றத்திலும் ஒலிக்க வேண்டும்

என்ன வளம் இல்லை எம் தமிழ்மொழியில்

என்ன குறை கண்டீர் எம் தமிழ்மொழியில்


சொற்களின் சொக்கத்தங்கம் தமிழ்மொழி

சொன்னால் புரியாதோ நீதிமான்களுக்கு

உயர்நீதிமன்றத்தில் ஓங்கி ஒலிக்கட்டும் தமிழ்

உடனடியாக அதற்கான ஆணையை வெளியிடுங்கள்.

****************


















அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்
புதுக்கவிதை 
கு.கி.கங்காதரன் 

அறத்தைப்‌ பேணுவது மக்களின் கடமை 
அறத்தைக் காப்பது மன்னனின் கடமை 
அறமன்றத்தில் அன்னைத் தமிழை ஒலிப்பது 
அனைத்துத் தமிழரின் தலையாயக் கடமை 

கண்ணகிச் சிலம்பு மதுரையில் ஒலித்தது
குமரகுருபரர் பாக்கள் கோவிலில் ஒலித்தது 
ஈசனின் தமிழ்விளையாட்டு இங்கே நடந்தது 
செல்லும் திசையெங்கும் தமிழாட்சி நடந்தது 

அறத்தையே சிரத்தையாய்க் கொண்ட தமிழ்
அறமன்றத்தில் ஒலிக்காமல் அமைதி காப்பதா?
யாவரும் அறிவார் அமுதத்தமிழின் சிறப்புகள்
யாசிக்கும் நிலைக்குத் தள்ளுதல் நியாயமா?

அந்நியரின் பிடியில் சிக்குண்ட தமிழை 
அடையாளம் தெரியாமல் அழிய விடலாமா?
உரத்தால் பயிர் செழிப்பது போல
அறமன்றத்தில் தமிழை ஒலிக்கச் செய்வோம் 
*******







































**********************