Pages

Monday, 24 September 2012

மாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா- ARE YOU PREPARED TO CHANGE YOURSELF

மாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா-
ARE YOU PREPARED TO CHANGE YOURSELF




மக்கள் சேவை மற்றும் விழிப்புணர்வு 


இப்போது நடைபெறும் மாற்றம் மனிதனுடைய இயல்பு வாழ்கையே தலைகீழாக புரட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றது என்றே சொல்லலாம். கல்வி, தொழில், சேவை, சட்டம், நடைமுறை , நடை, உடை, பாவனை, இடம், எண்ணங்கள், கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், ஆன்மிகம், வீட்டு நிர்வாகம், நிறுவன நிர்வாகம், அரசியல், போக்குவரத்து, தொடர்பு சாதனங்கள், உணவு பழக்கங்கள்   என்று எதில் தான் மாற்றமில்லை. சொல் வழி கல்வி மறைந்து புத்தக வழி கல்வி உருவாகி இன்று கணினி வழி கல்விக்கு வந்துவிட்டார்கள். ஆட்சியாளர்களும், ஆட்சி முறையும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டு இருக்கின்றன. ஒரு மாற்றம் முழுமையாக தெரியு முன்னே இன்னொரு மாற்றம் வருகின்றது. 


ஆகவே சூழ்நிலைக்குத் தகுந்தாற்ப் போல் காலத்திற்கு தகுந்தாற்ப்போல் எவ்வளவு சிக்கிரம் புரிந்து கொண்டு, அறிந்து கொண்டு நீங்கள் மாறுகின்றீரோ அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்கு வாழ்கையில் நல்லது கிடைக்கும். நல்ல மாற்றத்திற்கு தடை சொல்லாமல் உடனே ஏற்றுக்கொண்டு பின்பற்ற ஆரம்பித்தால் அனாவசியமான பிரச்சனை இல்லாமல் தவிர்க்கலாம். பலவித பிரச்சனை எதிர்கொண்டு கடைசியில் அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வதில் மனஉளைச்சல், கால விரயம் மற்றும் பணவிரயம் தான் மிச்சமாகும். ஒருவேளை நீங்கள் மாறாவிட்டால் அந்த மாற்றமே உங்களது வாழ்கையை அதலபாதாளத்தில் தள்ளிவிடும்.


நேற்று, இன்று , நாளை என்று காலங்கள் மாறுவது எப்படி தவிர்க்க முடியாதோ அதுபோல் உங்களது வாழ்விலும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதே! மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பவர்கள் ஜடங்களுக்கு ஒப்பானவர்களாவார்கள். 


நமது வாழ்கையில் மாற்றம் குழந்தை முதல் பெரியவர் வரை மாறிவருகிறோம். வயதிற்குத் தகுந்தாற்ப்போல் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொருவிதமான எண்ணங்களையும், சூழ்நிலைகளையும் எதிர்கொள்கிறோம். அதற்கு தகுந்தாற்ப்போல் நமது செயல்களும், பழக்க வழக்கங்களும் மாறுகின்றன. குழந்தையில் பிடித்தது இளைஞனான பிறகு பிடிப்பதில்லை. இளம் வயதில் பிடித்தது வயதான பிறகு பிடிப்பதில்லை. காரணம் மாறிவரும் உலகிற்கேற்ப உனது எண்ணங்களும் செயல்களும் மாறுவது தான்.


மாற்றத்தின் விதை 'கற்பனை' என்று சொன்னால் மிகையாகாது. இந்த கற்பனையானது அறிவியல், கலை, தொழிநுட்பம் என்று பல வகைகளின் நுழைந்து இன்று மரங்களாக வளர்ந்து நமக்கு பலவிதத்தில் காய் கனி போல் பலன்களை அள்ளிக் கொடுத்து உதவுகின்றது.

மாற்றங்கள் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. தினம் தினம் சில மாற்றங்களை சந்தித்து கொண்டு வருகின்றோம். கற்கால மனிதன் முதல் இக்கால கம்ப்யூட்டர் மனிதன் வரை மாற்றங்கள் ஒன்றே நம்மை மாறாமல் ஆட்சி செய்துவருகின்றது. 


விட்டில் ரேடியோ மறைந்து தொலைக் காட்சி பெட்டி, விறகு அடுப்பு மறைந்து கேஸ் மற்றும் இண்டக்சன் அடுப்பு, தொலைபேசி மறைந்து மொபைல், கடித தொடர்பு மறைந்து ஒரு நொடியில் அனைத்து தகவல்கள் தரும் கம்ப்யூட்டர், அதன் மூலம் உலகம் முழுவதும் எளிதாக தகவல் பரிமாற்றங்கள், கால்நடை மறைந்து மோட்டார் வாகனம், பாஸ்ட் புட் உணவுவகைகள்,  பல தரப்பட்ட கல்விகள் அதாவது மருத்துவ கல்வியில் பலவகை, கலைக் கல்வியில் பலவகை, பொறியியல் கல்வியில் பலவகை, உடைகளில் தான் எத்தனை மாற்றங்கள்! பாவாடை ரவிக்கை மறைந்து சுடிதார் மற்றும் பல.


மாற்றம் தான் ஒரு மனிதனை உயிருள்ளவனாக காட்டுகின்றது. படைப்பாளியாக்குகின்றது, பெருமை தேடித் தருகின்றது. வாழும் வீடுகளில் தான் எத்தனை மாற்றங்கள்! மண் குடிசை மறைந்து கான்கிரீட் வீடுகள் ! அதுவும் போய் இப்போது நானோ வீடுகள்! 

மாற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும் பொன்னான வாய்ப்புகள். ஓடாமல் ஒரே இடத்தில் அழகான காரை நீங்கள் எத்தனை நிமிடங்கள் வரை பார்த்துகொண்டு இருப்பீர்கள்! ஒரு நிமிடம்.... ஐந்து நிமிடம்... அது மிகவும் கஷ்டமாக தெரிகின்றதா? ஆனால் ஓடிக்கொண்டு விதம் விதமாக சாகசம் செய்யும் காரை நாள் முழுவதும் பார்த்து ரசிக்கலாம். 

வாய்ப்புகள் எப்படி கிடைக்கும்?

முட்டாளுக்கு மத்தியில் அறிவாளிக்கு வாய்ப்பு! 
நோயாளிகளுக்கு மத்தியில் மருத்துவனுக்கு வாய்ப்பு!
தொண்டர்களுக்கு மத்தியில் தலைவனுக்கு வாய்ப்பு!
சோம்பேறிகளின் கூட்டத்தில் சுறுசுறுப்பானவனுக்கு வாய்ப்பு!
பலவீனம் உள்ளவர்களுக்கு மத்தியில் பலசாலிக்கு வாய்ப்பு!
கரிக்கட்டைக்கு மத்தியில் வைரத்திற்கு வாய்ப்பு 
வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் வியாபாரிக்கு வாய்ப்பு!
பேச்சை கேட்பவர்களுக்கு மத்தியில் பேச்சாளர்களுக்கு வாய்ப்பு!
கலைகள் ரசிப்பவர்களுக்கு மத்தியில் கலைஞனுக்கு வாய்ப்பு!
பாடல்கள் ரசிப்பவர்களுக்கு மத்தியில் பாடகர்களுக்கு வாய்ப்பு!
கற்க விருப்பமுள்ளவர்களுக்கு மத்தியில் ஆசிரியர்களுக்கு மதிப்பு!

அதாவது நீங்கள் இருக்கும் நிலையிலிருந்து உயர்ந்த நிலையை அடைய வேண்டுமானால் உனது மாற்றங்களால் மட்டுமே முடியும். மாற்றங்களைச் செய்யாமல் கட்டை வண்டி மோட்டார் வண்டியாக மாற்ற முடியாது. உனது வாழ்கையில் வேகம் பெற வேண்டுமானால் உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளவேண்டும். மாறிவரும் உலகில் நம்மை மாற்றிக்கொள்ளாவிட்டால் நம் வாழ்க்கை நிலை மாறாது.

மனித உயிரினம் 'டார்வின்' பரிணாம கொள்கையின்படி ஒரு செல் உயிரினம் முதல் மனித உயிரினம் வரை பலவகை மாற்றங்களுக்கு பிறகே வந்துள்ளது. ஓரறிவு முதல் ஆறறிவு வரைக்கும் காரணம் மாற்றம் தான். இன்றைய மனிதன் வருங்காலத்தில் 'சூப்பர் மனிதன்' ஆக மாறுவதற்கு நிறைய வாய்புகள் இருக்கின்றன.


'கனவு காணுங்கள், விஞ்ஞானி ஆகலாம்' என்று சொல்கிறார் நமது முன்னாள் ஜனாதிபதி டாக்ட்டர் அப்துல் கலாம் அவர்கள். மாற்றங்களுக்கு அடிப்படை எண்ணங்கள்! வளமான எண்ணங்கள் நல்ல செயலுக்கு அடித்தளமாய் அமைகின்றன. அத்தகைய மாற்றங்கள் மக்களுக்கு பல நன்மைகள் தருகின்றன. அறிவியல் மாற்றங்கள் நடைபெற்றிருக்காவிட்டால் பெருகிவரும் மக்கள் தொகையினை சமாளித்திருக்க முடியுமா? இல்லையெனில் மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் உணவுக்கு பஞ்சம் வந்திருக்கும்! உடுத்துகின்ற உடைக்கு பஞ்சம்! ஆரோக்கிய வாழ்வுக்கு பஞ்சம்! வாழுகின்ற இடத்திற்கு பஞ்சம் எற்பட்டு இருக்கும்.

மாற்றங்கள் பல வந்தாலும் சில மாற்றங்கள் மக்கள் தங்கள் அறியாமையினால் ஏற்றுக்கொள்ள தவறிவிடுகின்றனர். அதனால் தினமும் பலவித இன்னல்களுக்கு ஆளாகிவருகின்றனன்ர். தற்போது நமது நாட்டில்  மின்சார பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கின்றன.  தினந்தோறும் மின்வெட்டு பலமணி நேரம் வரை இருக்கின்றனர். உற்பத்தி மிகவும் குறைந்துவிட்டது. விவசாயம் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை. அதற்கு  தீர்வாக சூரிய சக்தி, பயோ டீசல், ஹோபர் கேஸ் முறை போன்றவைகள் இருந்தாலும் அரசாங்கம் அதை ஊக்குவிக்க தவறிவிட்டது. அதற்கு மான்யம் பூஜ்யம் தான். எண்ணெய் இறக்குமதி செய்வதில் இருக்கும் அக்கறை உள்நாட்டு உற்பத்தியில் இல்லை. 

போதிய அளவு மழை பெய்தாலும் அதை முறையாக சேமிக்க வழியில்லை. அணைகள் கட்டுவதில் பிரச்சனை, மழைநீரை தேக்கி வைப்பதில் திட்டமின்மை, நதிநீர் பங்கீடு, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் போன்றவை வெறும் பேச்சளவில் தான் இருகின்றது. நம் நாடு என்ன பாலைவனமா? நதிகள் ஓடவில்லையா? ஆறுகள் இல்லையா? வடக்கு வெள்ளத்தில் மூழ்கின்றன. தெற்கே மழையில்லாமல் பஞ்சத்தில் அடிபடுகின்றது. ஆனால் வெள்ள நீரை பஞ்ச நாட்டிற்க்கு மாற்றும் திட்டம் அரை நூற்றாண்டுகளாக காகிதத்தில் தான் இருக்கின்றது. எதுவும்  முயற்சி செய்தால் தான் பலன் கிடைக்கும். இன்னும் எத்தனை நாட்கள் அயல்நாட்டை எதிர்பார்த்து நிற்ப்பது. இதில் மாற்றம் இல்லையென்றால் எத்தனை பெரிய தலைவர்கள் வந்தாலும் விலைவாசி ஏறுவதை தவிர்க்க முடியாது. 

மருத்துவத்தில் எக்ஸ் - ரே    முதல் ஸ்கேன் வரையிலான மாற்றம் மனிதனின் நோய் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே துல்லியமாக நமக்கு தெரிவிப்பதனால் சரியான சிகிச்சை தகுந்தநேரத்தில் கொடுப்பதற்கு பெரிதும் உதவுகின்றது. இதன் பலனாக இதய நோய்க்கு நிரத்தர தீர்வுகள் பல கிடைத்துள்ளது. பை -பாஸ் சர்ஜரி , பிளாஸ்டிக் சர்ஜரி, உடல் உறுப்பு மாற்றதல, கண்தானம், ரத்த தானம் போன்றவை உதாரணமாக கொடுக்கலாம்.

நானோ டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, கெமிகல் டெக்னாலஜி, திசு கல்சர், க்ளோனிங் ஆகியவை அறிவியல் துறையில் ஏற்ப்பட்ட மாற்றங்களே! மேலும் மக்களின் ஆரோக்கியத்தை காப்பதில் பெரும்  பங்கு வகிக்கின்றது. ஐ.நெட் எனப்படும் வலைதளம் உலகத்தில் நடை பெறும் , நடைபெற்ற நிகழ்ச்சிகளை உடனுக்குடன் நமக்கு தருகின்றது.

பொதிபோல் புத்தகங்களை சுமக்கின்ற மாணவ மாணவிகள் இனிமேல கைக்கு அடக்கமாக உள்ள லேப் -டாப் க்கு மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே சொல்லலாம்.இது மாற்றத்தின் உச்ச கட்டம் எனலாம்.

குழந்தை பெறுவதற்கும், குடும்பத்தை காப்பதற்கும் தான் பெண்கள் என்று மலையேறி புதுமை பெண்களாக பல சாதனைகள் படைக்கின்றனர். நாட்டை ஆளும் திறமையும், விண்வெளியில் வலம் வரும் துணிச்சலையும் அடைந்துள்ளனர். இதற்கு கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் சான்றுகளாவார்கள்.

மனிதனின் 360 கோணங்கள் சுற்றிலும் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அதை அறிந்து கொண்டு தகுந்த அறிவை வளர்த்துக்கொண்டு வந்தால் தான் நாம் வாழ்கையில் முன்னேற முடியும்.

இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. மாற்றங்கள் ஒன்றே நிரந்தரம். 


விதையில் மாற்றம் கனி கொடுக்கும் மரத்தில் இருக்கின்றது!
கம்பளிப் புழுவின் மாற்றம் வண்ணத்துப் பூச்சியில் இருக்கின்றது!
செல்லின் மாற்றம் பல உயிரினங்களை கொடுப்பதில் இருக்கின்றது!
எண்ணங்களின் மாற்றம் செயலில் இருக்கின்றது!     
மனிதனின் மாற்றம் தெய்வமாக மாறுவதில் இருக்கின்றது!

'நான் உலகத்தை மாற்றப் போகிறேன்' என்று புறப்பட்டவர்கள் எல்லாம் முகவரி தெரியாமல் தொலைந்துவிட்டனர். அதற்குக் காரணம் நடைமுறைக்கு ஒத்து வராமை. அதாவது நீங்கள் உலகத்தை மாற்ற விரும்பினால் நாம் முதலில் மாறவேண்டும். அப்படி மாறிவிட்டால் உலகம் தானாக மாறும். இதுதான் உண்மை நிலை. ஆக நாம் மாற்றத்தை கடைபிடிப்போம். வாழ்கையில் தொடர்ந்து முன்னேறுவோம். 


நன்றி!
வணக்கம்!

     

Saturday, 22 September 2012

நீங்கள் சூழ்நிலையை மாற்றுபவர்களா - ARE YOU ABLE TO CHANGE OR ACCEPT THE SURROUNDING

அனுபவ பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 

நீங்கள் சூழ்நிலையை மாற்றுபவர்களா?
 சூழ்நிலைக்கு மாறுவீர்களா- 
ARE YOU ABLE TO CHANGE OR ACCEPT 
THE SURROUNDING  
 

நமது எண்ணங்களை விட சூழ்நிலையின் ஆதிக்கம் தான் நம்மை பாதிக்கிறது என்று அடித்துச் சொல்லலாம்.. அதை நீங்கள் கீழ் காணும் உதாரணங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


* கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர்கள் கூடும்போது ஒவ்வொருவரும் அண்மையில் நடைபெற்ற அல்லது நடைபெறும் கிரிக்கெட் போட்டி பற்றிய பலவித சுவாரஷ்யமான தகவல்களையும், சில வீரர்களின் பயோ டேட்டா வையும், பிடித்த வீரரின் சாதனைகளையும், அவர் அடிக்கும் ஸ்டைலையும் விலாவாரியாக பேசுவார்கள். அதில் கலந்து கொள்ளும் மற்றவர்களும் அந்த விளையாட்டைப் பற்றித்தான் பேசுவார்கள். அதாவது அங்கே கிரிக்கெட் விளையாட்டு பற்றிய சூழ்நிலை இருப்பதால் அனைவரும் அந்த சூழ்நிலைக்கு மாறிவிடுகின்றனர்.


* திருமண விழாவில் அவரவர்கள் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர்களின் நடைபெற்ற அல்லது நடைபெறும் திருமணங்களையும், அதன் மலரும் நினைவுகளையும், மறக்கமுடியாத சம்பவங்களையும் பேசி மகிழ்வார்கள். கிட்டத்தட்ட அனைவருமே அதைப்பற்றி தான் பேசுவார்கள்.


* வேறு வேறு கல்லூரியில் படிக்கும் பழைய நண்பர்கள் தங்கள் கல்லூரியில் நடந்த கேலிக் கூத்துகள், பந்தாக்கள், அலப்பரைகள், கட்டடித்த வகுப்புகள், சேஷ்டைகள், காலேஜ் கட்டடிடுத்து சென்ற சினிமாக்கள், தங்களுடைய புதிய நண்பர்கள் / நண்பிகள் , தோழர்கள் / தோழிகளைப் பற்றிய பேசுக்கள் இருக்கும்.


* ஆஸ்பத்திரியில் பார்க்கும்போது அவர்கள் கேட்ட , பார்த்த நோயாளிகள், அவர்கள் பட்ட கஷ்டங்கள், எடுத்த மருத்துவ சிகிச்சைகள், விபத்துகள், மரணங்கள், மருத்துவ அறிக்கைகளைப் பற்றித் தான் பேசுவார்கள்.

* இதேபோல் மொபைல் போன் பிரியர்கள், மோட்டார் பைக் விரும்புகிறவர்கள், சினிமா, சீரியல் பைத்தியங்கள், புத்தக பிரியர்கள், ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்கள், கோவில் குளம் சுற்றுகிறவர்கள், குழந்தைகள்,  வியாபாரிகள், ஆசிரியர்கள், அலுவலக வேலை பார்ப்பவர்கள், முகவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் இவர்களெல்லாம் கூட்டம் கூடி பேசும்போது அந்த சூழ்நிலைக்கு தகுந்தாற்ப் போல் மாறிக் கொள்வார்கள்.

மேற்கூறியவற்றில் அதிசயம் ஏதுமில்லை. ஒன்றை மட்டும் நாம் கவனிக்க வேண்டும். வேறு வேறு சூழ்நிலை நாம் எதிர்கொள்ளும்போது நம்முடைய எண்ணங்கள் நிலையாக இருக்கின்றதா? என்பதை உறுதிகொள்ளவேண்டும். ஏனென்றால் எந்த ஒரு நிலையிலும் நீங்கள் சூழ்நிலைக்கு தகுந்தாற்ப் உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளக்கூடாது. அப்படி மாற்றிக்கொண்டால் நீங்கள் நினைக்கும் குறிக்கோளை அடைய முடியாது.


நான்கைந்து நண்பர்கள் மிகவும் அக்கறையாக அவர்களுடைய எதிகால படிப்புகளை விவாதித்து கொண்டனர். அதற்கான குறிக்கோளையும், திட்டத்தையும் தீட்டினார்கள். வாரம் தவறாமல் அதன் முன்னேற்றத்தை பேச வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள்.


அடுத்தவாரம் கூடினார்கள். ஒருவன் தான் படித்த பாடத்தையும்  , தெரிந்து கொண்ட பல செய்திகளை பேசினான். ஒருவன் தான் பார்த்த படத்தைப் பற்றி விரிவாக பேசினான். மற்றுமொருவன் தான் சென்று வந்த ஊரைப் பற்றிப் பேசினான். வேறொருவனோ தான் புதிதாக வாங்கிய மொபைல் போனைப் பேசினான். கடைசியில் ஒருவன் தான் பார்த்த 'கிரிக்கெட் மேட்ச் ' பற்றியும் , தான் விளையாடிய விளையாட்டு பற்றி பேசினான்.

அதாவது சென்ற வாரம் வரை அவைகளுடைய குறிக்கோள் என்னவாக இருந்தது. இந்த வாரம் என்னவாயிற்று? இந்த ஒரு வாரத்தில் அவரவர்கள் சந்தித்த சூழ்நிலைகள் என்னென்னவென்று அவர்கள் பேசிய பேச்சிலிருந்து நமக்கு தெளிவாக தெரிகின்றது. அவர்கள் எதிர்கொண்ட சூழ்நிலைகள் தான் அவர்களுடைய எண்ணத்தை மாற்றிவிட்டது என்று சொல்லலாம்.

ஆக, உங்கள் எண்ணங்கள் எவ்வளவு உயர்வாக இருந்தாலும் உங்கள் சூழ்நிலையும் உங்கள் எண்ணத்தை ஒத்து செயல்கள் செய்பவர்களாக சூழ்ந்து இருந்தால் உங்கள் குறிக்கோள் எளிதில் நிறைவேறும்.     

எண்ணங்கள் என்ற சூரியன் அல்லது சந்திரன் எவ்வளவு பெரிதாக பிரகாசமாக இருந்தாலும் மிகவும் சாதாரணமான சிறிய மேகங்கள் அதை மறைத்துவிடும். சூழ்நிலை மேகத்தை உனது சாதகமாக்கிக்கொள்.

உதாரணமாக, தியேட்டரில் திரைப்படம் ஓடுகின்றது. காட்சிக்குத் தகுந்தாற்ப் போல் அந்த படத்தை பார்க்கும் அனைவரும் சிரிக்கின்றனர், உணர்ச்சிவசப் படுகின்றனர். அழுகின்றனர், மகிழ்கின்றனர், ரசிக்கின்றனர்.


சிறந்த தலைவர்களின் ஆற்றல் மிக்க பேச்சு கேட்பவர்களை பரவசத்தில் ஆழ்த்துகின்றது. இனிமையான பாடல்கள் ரசிக்க வைக்கின்றது. சாந்தமான ஆன்மிக சொற்ப்பொழிவுகள் மக்களை பக்தியில் மூழ்கச் செய்துவிடுகின்றது. ஒரு நடிகனின் பேச்சு பலரையும் கவருகின்றது. அதாவது இவர்களெல்லாம் தங்களுக்கு தகுந்தாற்போல் சூழ்நிலைகளை மாற்றும் வல்லமை பெற்றவர்கள். அவர்களின் எண்ணங்களுக்கேற்ப தங்கள் சூழ்நிலைகளை அமைத்துக் கொள்வதால் அவர்கள் புகழ் எப்போதும் உச்சத்தில் இருக்கும்.

ஆகவே தான் பள்ளியில் நன்றாக படிப்பவர்கள் தனியாகவும், விளையாடுபவர்கள் , நடனமாடுகின்றவர்கள், பாடுபவர்கள், பேசுபவர்கள், நடிப்பவர்கள் என்று ஒவ்வொருவரும் தனித்தனியாக பிரித்து தினமும் அவர்களை கூட வைத்து அவரவர்களுடைய எண்ணங்களை நிலைநிறுத்திக் கொள்ளச்செய்வார்கள்.

ஆகவே எந்த சூழ்நிலையிலும் உங்கள் எண்ணங்கள் மாறாமல் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். நினைக்கும் குறிக்கோளை அடையுங்கள்.


எவ்வாறு ஆழ்நிலை தியானத்தில் இருப்பவர்கள் தங்கள் சூழ்நிலைகளை மறந்து ஆழ்ந்து இருப்பது போல் எண்ணத்தில் ஆழ்ந்து இருங்கள். உங்கள் செயல் வெற்றி இலக்கை எளிதில் அடைய வழி வகை செய்யும்.

   

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

Friday, 21 September 2012

திரைப்படம் , சீரியலுக்கு அடிமையானவர்களா- ARE YOU AN ADDICT OF CINEMA OR TV SERIALS

அனுபவ பொன்வரிகள் 


மதுரை கங்காதரன் 

திரைப்படம் , சீரியலுக்கு அடிமையானவர்களா- 
ARE YOU AN ADDICT OF CINEMA OR TV SERIALS 


திரைப்படம் மற்றும் சீரியல் இரண்டும் மனிதர்களை வைத்துக்கொண்டு மனித வாழ்க்கைக்கு சற்றும் பொருந்தாத நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் காட்டி மக்களை பழக்கப்படுத்தி, பார்ப்பதை வழக்கமாக்கி அடிமை படுத்திவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். அவர்கள் மக்களை சோம்பேறியாக்க , மூளைய மழுங்க வைக்க போட்டி போட்டு கொண்டு இராப்  பகலாக உழைத்து வருகின்றனர். இந்த இரண்டிலும் திட்டமிட்டபடி (கதைப்படி)  முதலும் முடிவும் இருக்கும். அதில் நடிக்கும் பாத்திரங்கள் அனைத்தும் 'டைரக்டர்' என்ன எப்படி செய்யச் சொல்கிறாரோ அதன்படி தான் கதை நகரும். 


ஒரே நொடியில் மண் குடிசை மாளிகையாகிவிடும், பிறந்த குழந்தை இளைஞன் ஆவான். பெரிய பெரிய பிரச்சனைகள் இலகுவாக தீர்க்கப்படும், ஒரே வார்த்தையில் தவறை உணருவார்கள். தொண்டன் தலைவனாவான், முட்டாள் படிப்பில் கெட்டிக்காரனாவான்,ஏழை பணக்காரனாவான், வேலைக்காரன் முதலாளியாவான், சாதாரண பிரஜை முதலமைச்சராவான், 50 எதிரிகளை பந்தாடுவான், உண்மையில் கரகர குரல் இருப்பவன், பின்னணி குரல் கொடுத்து மேக் அப் செய்வார்கள். கவர்ச்சியைப் பற்றி சொல்லவே வேண்டாம். சில சமயங்களில் கஷ்டமான காட்சிகளில் பிறரைக் கொண்டு டூப் போட்டு நடிக்கவும்  வைப்பார்கள். இப்போது அனிமேஷன் கொண்டு 'அட்ஜஸ்ட் ' செய்கிறார்கள்.நினைத்த நேரத்தில் மழை என்று கணக்கற்ற வகையில் மக்களை மயக்கி அது உண்மையென காட்டி நம்ப வைக்கிறார்கள். 


உண்மையில் வாழ்க்கை அப்படியா இருக்கின்றது. நாம் நினைப்பது ஓன்று! சம்பந்தமே இல்லாமல் நடப்பது இன்னொன்று! நம்மை சுற்றியிருக்கும் பாத்திரங்கள் எப்போதெல்லாம் மாறுவார்கள் என்று சொல்லவா முடிகிறது? நேற்று வரை சகோதரனாக இருந்தவன் இன்று அந்நியனாக மாறுகிறான்! நேற்று கூட்டு குடும்பம் இன்று தனிக்குடித்தனம், நேற்று நண்பன் இன்று எதிரி, நேற்று அன்பானவன் இன்று அரக்கனாகிறான், நேற்று நம்பிக்கையானவன் இன்று அவனம்ப்பிக்கைக்கு ஆளாகிறான், நேற்று நல்லவன் இன்று திருடனாகிறான்.


நம்மைச் சுற்றிலும் எளிதில் கணிக்கமுடியாத சதி வேலைகள், நம்பிக்கை துரோகங்கள், ஏமாற்றுக்காரர்கள் என்று பல உருவங்களில் நடமாடுகிறார்கள். '"அந்த பிரச்சனையா? நான் பார்த்துக் கொள்கிறேன் " என்றவர்கள் ஆபத்து வரும் சமயத்தில் பறந்து விடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.

இன்னும் சிலர் ஆசை வார்த்தை பேசி நம்மை நம்ப வைத்து நட்ட நடுகாட்டில் விட்டு விட்டு அவர்கள் தப்பித்துவிடுவதை கேள்விபட்டியிருக்கிறோம். 'அய்யோ அய்யோ 'என்று கதறினாலும் விட்டு விட்டு செல்ல தயங்காதவர்கள் பலர் இருக்கத் தான் செய்கிறார்கள். நாம் உத்தமனாக இருந்தாலும் உன்னைச் சுற்று இருப்பவர்கள் அவ்வாறு வாழவிடாது! 'பொய் ' பேசச் சொல்லும், பொறாமை பட செய்யும், கோபம் வரவழைக்கும் !

நாம் நடை பாதையில் விழிப்பாக நடந்தாலும், குடித்து ஓட்டும் வாகனங்கள் நம்மை நோக்கி வந்தால் என்ன செய்வது? அன்புடன் நடந்து கொண்டாலும் உன்னிடத்தில் கடினமாக நடந்துகொள்வார்கள். நீ கட்டுப்பாட்டுடன் இருந்தால் துப்பாக்கி கொண்டு சுடவரும், கத்தியை காட்டி மிரட்டும், பொருட்களை அபகரிக்க நினைக்கும்!நீ சாந்தமாக , அமைதியாக , இனிமையாக பேசினாலும் காதில் கேட்கமுடியாத பதில் வரும். அப்போதெல்லாம் உன்னைக் காப்பாற்ற திரைப்படம் / சீரியலில் வருவது  போல்  கதாநாயகன் / கதாநாயகி வருவார்களா?      

நீ துன்பப்பட்டாலும் துயரப்பட்டலும் உன்னை நீ தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். என்ன செய்வது நீ  பார்த்தது திரைப்படம். நீ இருப்பது வாழ்க்கை படம் . அது நிழல் படம். நீ வாழ்வது உண்மை படம். அதில் யாருக்கும் பாதிப்பில்லை. அனால் வாழ்கையில் நீ செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் மற்றவர்களுக்கு பாதிப்பு உண்டு. நல்லதை செய்தால் நன்மை அடைவர். தீமை செய்தால் தீங்கு அனுபவிப்பர். ஆகவே உன்னை நீ நம்பு! சத்தியத்தை கடைபிடி! கை மேல் பலன் கிடைக்கும். அப்படி நடந்துகொல்வீர்களானால் வாழ்கையில் நீங்கள் கட்டாயம் கதாநாயகன் அல்லது கதாநாயகி தான்.

ஆகவே 


பிறர் நிழலை நீ நம்பாதே!

உன் நிஜ உருவத்தை நம்பு !


கட்டாயம் நீ வாழ்கையில் முன்னேறுவாய்!  


இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

கொசு விடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள் - GET A LESSON FROM MOSQUITO

அனுபவ பொன்வரிகள் 


மதுரை கங்காதரன் 


'கொசு 'விடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்!
GET A LESSON FROM MOSQUITO 


மனிதன் அறிவுள்ளவன்! ஆற்றல் மிக்கவன்! மிகவும் பலசாலி! என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் கொசுவின் பலம் எப்படி? நம்மை விட பலமடங்கு குறைவு! அப்படித்தானே! கொசு தான் உயிர் வாழவேண்டுமென்றால் மனிதனின் இரத்தம் தேவை. அந்த இரத்தம் மனித உடலிலிருந்து கொசு எடுத்துக் கொள்வதற்காகவே  ஆங்காங்கே அதற்கென்று பல ஓட்டைகள் நமது உடலில் இருக்கின்றதா? இல்லை , நாம் தாம் 'பாவம் கொசு' என்று நமது உடலிலிருந்து இரத்தத்தை உறிஞ்ச நாம் அனுமதிகின்றோமா? கட்டாயம் இல்லை. பின் எப்படி எடுத்துக் கொள்கிறது?


அதற்குத் தெரியம் நமது உடலெங்கும் அதற்கு வேண்டிய இரத்தம் இருக்கின்றது என்று! அது நமது உடலில் அதுவாகவே பலத்துடன் போராடி ஓட்டைபோட்டு உறிஞ்சி எடுத்துக்கொள்கின்றது. அது நமது உடம்பில் உட்காரும் போது அடிககிறோம்! விரட்டுகிறோம்! கொல்ல துடிக்கிறோம்! ஏன் பலவித கிரீம் மற்றும் கொசு விரட்டிகளால் துரத்த பார்க்கிறோம்! ஆனால் அனைத்திற்கும் தப்பித்து மேலும் மேலும் போராடி நாம் ஓய்ந்தாலும் அது ஓயாது இரவு முழுதும் கூட போராடி நமது உடம்பிலிருந்து இரத்தத்தை உறிஞ்சிய பிறகே அது நம்மை விட்டு போகின்றன.


அது கையில் உட்காருவதை நாம் பார்த்துவிட்டோமானால் அது பறந்து காலில் உட்காருகிறது. அப்போதும் நாம் அடிக்கமுனைந்தால் கன்னத்தில் ... நெற்றியில்... முதுகில்... நெஞ்சில் ... இப்படி போராடித் தான் தனக்கு தேவையான மனித இரத்தத்தை பெறுகின்றன. அது அசறுகின்றதா? தன்னுடைய காரியம் முடியும் வரை பலவகைகளில் முயற்சி செய்தல்லவா வெற்றி பெறுகின்றது! 


மனிதன் அப்படியா? இந்த உலகம் சிறியதல்ல! அவனைவிட கோடிக்கணக்கான மடங்கு பெரியது. எங்கும் அவனுக்கு வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் அவன் நான்கு இடங்களில் தோல்வி கண்டவுடன், நாலு இடத்தில் முயற்சி செய்து கிடைக்காமல் போனவுடன், நான்குபேர் விரட்டியவுடன் உடனே சோர்ந்து மேலும் முயற்சி செய்யாமல் விட்டு விடுகின்றான். ஆனால் அவனுக்கு எதிரில் நாற்பது வாய்ப்புகள் , அதற்குமேல் நானூறு வாய்ப்புகள் இருப்பதை கண்டுகொள்ளாமல் மேலும்  முயற்சிக்காமல் விட்டுவிடுகிறான். அதற்கு அவனின் இயலாமை, முயலாமை மற்றும் சோம்பேறித்தனம் தான் காரணம். தேடுவதற்கு ஆசைபடாமல் அதை அடையாமல் அவன் தினமும் கஷ்டப்படுவதற்கு யார் காரணம்.?


தேடு! ஓடு ! அடை ! முன்னேறும் வாய்ப்புகள் இந்த உலகெங்கிலும் கொட்டிக் கிடக்கின்றன. முயற்சி செய்! ஓன்று இல்லாவிட்டால் மற்றொன்று! இது இல்லாவிட்டால் அது! இவன் இல்லாவிட்டால் அவன்! இங்கு இல்லாவிட்டால் அங்கு! என்று உனது அறிவைக்கொண்டு தன்னம்பிக்கையுடன் முயற்சி செய் ! நீ விரும்பும் இலக்கை அடைவாய்! வாழ்கையில் பல வெற்றிகளை குவிப்பாய்!  

 

    

 இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

நீங்கள் சாதாரணமான கரியா? அல்லது பிரகாசிக்கும் வைரமா? ARE YOU A CHARCOAL OR DIAMOND

அனுபவ பொன் வரிகள் 

மதுரை கங்காதரன் 

நீங்கள் சாதாரணமான கரியா? அல்லது பிரகாசிக்கும் வைரமா?
ARE YOU A CHARCOAL OR DIAMOND 

மனிதனை கரிக்கு (அடுப்பு எரிக்கும்) ஒப்பிடலாம். இரண்டும் எரிந்த பிறகு மீதம் இருப்பது சாம்பல் மட்டுமே . அதேபோல் கரியை தொடர்ந்து காற்று புகாதவாறு பலவித அழுத்தங்களுக்கு உட்படுத்தினால் வைரக்கற்களாக மாறிவிடுகின்றது. அதை பட்டை தீட்டி மெருகு ஊட்ட மெருகு ஊட்ட பளிச்சென்று பல வண்ணங்களுடன் பிரகாசிக்கும் வைரமாக ஒளி வீசிம்  அதிசயத்தை நான் பார்த்திருக்கிறோம்.   


அதுபோல சாதாரண மனிதன் தன்னுடைய தொடர் முயற்சி, கடின உழைப்பு , கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பின்பற்றும் போது  அவன் தன்னம்பிக்கை கொண்ட மனிதனாக மாறிவிடுகின்றான். மேலும் அவனது ஆற்றலையும், திறமையையும் அறிவைக்கொண்டு மூளையை தீட்ட தீட்ட 'வெற்றி மனிதனாக ' ஜொலிக்க ஆரம்பிக்கிறான்.


வைரம்  எப்போதும்  தான் ஒரு சாதாரண கரியாகவே நினைக்கும். அதன் மதிப்பு அதற்கு தெரியாது. ஆனால் மற்றவர்களுக்கு அது ஒரு விலை மதிக்கமுடியாத பொக்கிஷமாகத்  தெரியும். 


அதுபோல வெற்றி பெற்ற எந்த ஒரு மனிதனும் எத்தகைய பெரிய வெற்றி பெற்றாலும் அதன் பெருமை அவனுக்குத் தெரியாது. எப்போதும் போல் அமைதியும் சாந்தமாகவே இருப்பான். ஏனென்றால் அவன் எப்போதும் தான் ஒரு சாதாரண மனிதாகவே நினைத்துக்கொள்வான் . ஆனால் அவனைச்சுற்றி இருப்பவர்களுக்குத் தான் அவனின் பெருமையும் திறமையும் தெரிந்து கொண்டு அவனை பாராட்டி பேசுவார்கள். வெற்றி மனிதனின் மதிப்பு , அவனை விட மற்றவர்களுக்குத் தான் அதிகம் தெரியும். ஏனென்றால் அவர்கள் அனைவரும் முயற்சி செய்து தோற்றவர்கள்.

கரியை வெப்பபடுத்தினால் கறுப்பு நீங்கி சிவப்பாக ஒளி  தரும். அதே போல் மனிதனின் முயற்சி அவனை வெற்றி மனிதனாக மாற்றிவிடுகின்றது . சூடு பெறாத கரி எப்போதும் மங்கிதான் இருக்கும். முயற்சி இல்லாதவன் திறமை எப்போதும் மங்கித்தான் இருக்கும்.

      

ஒருநாள் கரிக்கட்டைகள் எல்லாம் கூடி தன்னுடைய தலைவனை தேந்தெடுக்க கூடினார்கள். அப்போது சம்பந்தமே இல்லாத 'வைரம்' ஒன்றும் அவர்களுடன் சேர்ந்திருந்தது. அதனை சுற்றியிருந்தவர்கள் "இது கரிகட்டைகளின் கூட்டம் . இங்கு உனக்கு இடமில்லை " என்று அந்த வைரத்தை விரட்டிகொண்டிருந்தார்கள். ஆனால் அதுவோ  "ஐயா, நானும் கரிகட்டை தான்" என்று மன்றாடியது. அப்போது அங்கு விவரம் தெரிந்த ஒரு கரிக்கட்டை அந்த கூட்டத்தைப் பார்த்து  , "கரிக்கட்டைகளே, நாங்கள் இங்கு கூடியிருப்பது எதற்கு என்றால் ... நாம் எப்படி வைரமாக் ஜொலிப்பது என்று தான். அதாவது இதைப்போல.. என்று அந்த வைரத்தைப் பார்த்துச் சொன்னார். இதுவும் இதற்கு முன் நம்மைப் போல ஒரு கரிக்கட்டையாகத் தான் இருந்தது   " என்று சொல்ல அனைவரும் ஆச்சரியமாக அதனைப் பார்த்தனர் . அவரே," இன்று நம் அதிர்ஷ்டம் . இப்படிப்பட்ட வைரம் நமக்கு உதாரணமாகக் கிடைத்திருப்பது ! இந்த வைரத்தையே நம்முடைய தலைவனாக்கி , அதன் வழியில்  பின்பற்றி நாம் எல்லோரும்  இந்த சாதாரண கரிக்கட்டையிலிருந்து வைரமாக மாற முயற்சிப்போம் " என்று கூறியது.

இது தான் மனித வாழ்கையின்  கொள்கை. அழுத்ததிற்கு உட்பட்ட கரியானது ஜொலிக்கும்  வைரமாக மாறுவது போல மனிதனே! நீயும் முயற்சி, உழைப்பு கொண்டு அனைவரும் போற்றும் வெற்றி மனிதனாக மாறமுடியும். உன்னால் அது முடியும். 

நீங்கள் சாதாரண கரிக்கட்டைகள் அல்ல!


எப்போதும் உறுதியாக ஒளிவீசும் வைரக்கல் !

இடைவிடாது உழையுங்கள்!

முயற்சியை கைவிடாதீர்கள்!


பிறகென்ன நீங்கள் ஒரு வெற்றி மனிதர் தான்! 

                               இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

Tuesday, 18 September 2012

உங்களது ஆசையின் அளவு எவ்வளவு- THE LIMIT OF YOUR DESIRE

அனுபவ பொன்வரிகள் 



மதுரை கங்காதரன் 

உங்களது ஆசையின் அளவு எவ்வளவு-
THE LIMIT OF YOUR DESIRE


பார்ப்பது கண்ணளவு 
கேட்பது காதளவு 
பேசுவது வாயளவு 
வாசனை மூக்களவு 
ருசி நாக்களவு 
சாப்பிடுவது வயிரளவு 
கற்றது கை மண்ணளவு 
கல்லாதது உலகளவு
ஆசை எவ்வளவு?


ஆசைபடுவது தவறில்லை. ஆனால் அந்த ஆசையே உங்களுக்கு பாரமாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். ஆசை உதயமாகும் விதம் அதிசயம் தான். மனிதன் பிறக்கும் போது ஆசை இல்லை. வளரும் போதும் ஆசை சிறிய அளவில் வருகிறது. அறிவு வளர, திறமை கூட கூட ஆசையும் பெரிய அளவில் வளர ஆரம்பிகின்றது. அதை அடைவதே தன்  வாழ்நாள் இலட்சியம் என்று முயற்சி செய்கிறான். வெற்றி அடைகிறான். அதோடு நிற்கின்றானா? மேலும் அதிக ஆசைபடுகின்றான். அடைகிறான். இப்படி ஒவ்வொரு நாளும் தான் ஆசைப்பட்டதை அடைய நினைக்கிறான். அதற்காக பலவற்றை துறக்கிறான். தேவைபட்டால் பலரின் நட்பை, உறவைக்  கூட இழக்கிறான். 

ஆசையை  அடையும் ஒவ்வொரு முறையும் தன்னைச் சுற்றி புது உறவு, புது சூழ்நிலை, புது பழக்கம், புது புது எண்ணங்கள் இப்படி புது புது அனுபவங்கள் அவனுக்கு கிடைக்கின்றது . மீண்டும் புதிய ஆசை ! புது அனுபவம். இப்படி இருக்கும் போது தன்னுடைய அசல் முகத்தை தொலைத்து போய் போலி முகம் அவனுக்கு நிரந்தரமாக அமைந்து விடுகின்றது. போலியாகவே வாழ்கிறான். பழைய உறவையும் , நட்பும், சூழ்நிலையும் அவன் மறந்தே போய்விடுகின்றான். முடிவில் தான் எதற்காக ஆசைபட்டானோ அந்த எண்ணம் ஈடேறாமல் இந்த உலகத்தைவிட்டு போலியாகவே வாழ்ந்து, நிராசையுடன் பிரிந்து செல்கிறான்.

அடைந்த ஆசையை முழுதாக அனுபவிக்குமுன்னே புதிதாக ஆசை கொள்கிறான். எப்படியென்றால் தன்னிடத்தில் இருக்கும் மொபைல் போனில் உள்ள அனைத்து வசதிகளும் உபயோக்குமுன்னமே மேலும் ஒரு புதிதாக மொபைல் வாங்குவது போல. அதாவது அவனிடத்தில் எவ்வளவு வசதி கொண்ட மொபைல் போன் இருந்தாலும் அவனால் அவனுக்கு தேவைப்படும் முக்கியமான வசதியை மட்டுமே பயன்படுத்த முடியும். அதாவது உன்னிடத்தில் நூறு கோடி பணமிருந்தாலும் உன்னால் அனைத்து பணத்தையும் ஒரே நேரத்தில் உனக்காக பயன்படுத்திக்கொள்ள முடியுமா? 


அரண்மனை போல வீடு இருந்தாலும் நீ தூங்குவது ஆறடி அளவு தான். மற்ற இடம் உனக்கு சொந்தமானாலும் அது உன்னால் அனுபவிக்க முடியாது. சரி 'அனைத்து இடத்திலும் புரண்டு புரண்டு படுப்பேன்' என்று புரண்டு கொண்டிருந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்குமா? 


எவ்வளவு வித விதமான உணவுகள் உன்முன்னே குவிந்து இருந்தாலும் ஒரு சாண் அளவே தான் சாப்பிட முடியும். மற்ற உணவுகள் இருந்தும் வீண் தான். அளவுக்கு மேல் ஒரு கவளம் கூட சாப்பிட்டாலும் நீ கட்டாயம் கஷ்டப் படுவாய்.


எவ்வளவு உடைகள் இருந்தாலும் ஒரே ஒரு உடை தான் போட்டுக்கொள்ள முடியும். மீறி பத்து உடை போட்டுகொண்டால் அந்த உடையே உனக்கு பாரமாகும்.


மாவீரன் அலெஸ்சாண்டர் இந்த உலகை வெல்ல புறப்பட்டான். சிறிய வெற்றி அடைந்தில் உள்ள மகிழ்ச்சி அவருக்கு பல நாடுகளை வென்றபிறகு கிடைக்கவில்லை. நாட்டை வெல்ல வெல்ல அவனுடைய சொந்த நாட்டில் ஒரு சில காலங்கள் கூட மன்னனாக இருந்தது அனுபவித்து ஆட்சி செய்தது கிடையாது. அதேபோல தான் மாவீரன் நெப்போலியனின் வரலாறு. 

பெரிய பெரிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பெரிய பதவியில் இருப்பவர்கள் ஒருநாளாவது தங்களுடைய வீட்டில் முழுமனதாக அனைவரிடத்தில் உண்டும், பேசி மகிழ்ந்து , சந்தோஷமாக பொழுதை கழித்திருப்பார்களா? பின் அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன? அடைந்த வெற்றியின் பயன் தான் என்ன? அவர்கள் மேலே உயர உயர அவர்களின் வெற்றியே பாரமாக அமைந்து மன அழுத்தம் உண்டாகி கடைசியில் அரைகுறையாக அனுபவித்து அவைகளுடைய ஆவி நிராசையாகவே பிரிகின்றது. அதை அவர்கள்  மரண கட்டிலில் இருக்கும்போது உணருகின்றார்கள் என்பது தான் ஆச்சரியம்.


ஒரு மரத்தில் வேர்கள் எந்த அளவிற்கு இருக்கும். அதன் உயரம் அல்லது பரப்பு எந்த அளவிற்கு இருக்குமென்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது கிளைகள் எவ்வளவு பரந்து இருக்கின்றதோ அந்த அளவிற்கு வேர்கள் பரவியிருக்கும். அதேபோல் மரத்தின் தண்டு எவ்வளவு பலம் உள்ளதோ அந்த அளவு தான் கிளைகளைத் தாங்கும். கிளைகள் வேருக்கு வேண்டிய தண்ணீரை பாதுகாப்பாக வைக்க உதவுகின்றது. 


அதிகமாக ஆசைபடும் ஒருவருக்கு பாடம் கற்பிக்கவேண்டுமென்று ஒரு பெரியவர் நினைத்தார். அவரிடத்தில் ஒரு பறக்கின்ற 'பட்டம்' கொடுத்து 'இந்த பட்டம் தான் உனது ஆசை. அதை பறக்கவிடு. எவ்வளவு வேண்டுமானாலும் நூலை எடுத்துக்கொள். நீ போதும் என்கிற நிலை வரும்போது பட்டம் கடைசியாக பறக்கும் இடம் வரை முழுவதும் உனக்குத் தான் சொந்தம் ' என்று இரண்டையும் அவரிடத்தில் கொடுத்தார். அவரும் ஆசையாக, தான் நினைத்த ஆசையை அடையப்போகிறோம் என்கிற மகிழ்ச்சியில் பட்டத்தை பறக்க விட்டார். கொஞ்ச தூரம் பறந்திருக்கும். இந்த அளவு போதுமா? என்று யோசித்தார். இன்னும் கொஞ்ச தூரம்... இன்னும் கொஞ்ச தூரம் என்று பறக்க பட்டம் ஒரு புள்ளி அளவே தெரிந்தது. மேலும் நூலின் பாரம் பட்டம் பறப்பதற்க்கு தடையாய் இருக்க ஆரம்பித்தது. கடைசியில் நூலே பாரமாக மாறி பட்டம் அறுந்து விழுந்த இடம் தெரியாமல் போனது. பட்டத்தை தேடித் புறப்பட்டவர் வெறும் கையுடன் திரும்பி பெரியவரை சந்தித்தார். 

"பட்டம் எங்கே?" என்று கேட்டார் பெரியவர்.

"தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. என் அதிகமான ஆசை , பொன்னான வாய்ப்பு கிடைத்தும் என் பேராசையினால் இழந்தேன். இப்போது புத்தி வந்தது" என்று வருத்தப்பட்டார். அதேபோல் தான் 'மைதாஸ் ' யின் ஆசை. தொட்டதெல்லாம் பொன்னாகவேண்டும் என்று வரம் கேட்டு சாப்பிடும் உணவை தொட, அதுவும் பொன்னாக மாற கடைசியில் சாதாரண மனிதனைவிட கஷ்டப் பட்ட நிலை வந்த பிறகு தான் திருந்துகிறான். ஆகவே ஆசையின் அதிகபட்ச அளவு உங்கள் கண்களுக்குத் தெரியும் தூரம். அதைத் தாண்டினால் , உங்களுக்கு மிஞ்சுவது பூஜ்யம் தான்.       



ஆசை அதிகம் கொள்ளாதே !


அதனால் வாழ்கையில் அவதிபடாதே !

இன்னும் வரும் .... 


இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com