Happy life secret, An answer for 'Who am I?', மகிழ்ச்சி வாழ்க்கையை, பிரம்மத்தை, ஆன்மீகத்தை, பேரானந்தத்தை, முக்தியை, ஞானத்தை, சொர்க்கத்தை, அடையும் வழி (மற்றும் ‘நான் யார்’? என்ற கேள்விக்கான பதிலும் கூட!)
கட்டுரை
கு.கி.கங்காதரன்
மனித வாழ்க்கை ஒரு வரப்பிரசாதம். அவனது
வாழ்க்கையானது, பற்பல நினைவுகளையும்,
எதிர்ப்பார்ப்புகளையும், கேள்விகளையும், செயல்களையும், மௌனத்தையும் தாங்கி
இருக்கும் பிறவி. குறிப்பாக, 'மனம்' என்கிற ஒன்று ஒட்டியிருக்கும் பிறவி. மனிதப்பிறவிக்கான நோக்கம், பலருக்கு பலவித அபிப்பிராயங்கள்
இருக்கலாம். தர்க்கரீதியாக விசாரணை செய்கின்றபோது,
மனிதப்பிறவியானது நினைத்தபோது, நினைத்தவருக்கு, கேட்கும்போது கேட்கும் நேரத்தில், எளிதாகக் கிடைப்பதில்லை.
அதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளும்
போது மட்டுமே சாத்தியமாகிறது. சிலருக்கு எளிதாகவும்,
சிலருக்கு கடினமாகவும் கிட்டுகிறது.
ஆன்மீகமும், இந்த ரகத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்பது எனது கருத்து.
நாம் நினைக்கலாம் ‘பிரம்மம்’ (இறைவன்), மிக அன்பும் கருணையும் உள்ளவர் என்று. அது தவறு! என்பது எனது அனுபவம். அவர் ஒரு சர்வதிகாரியைவிடக் கொடுமையான எண்ணம் கொண்டவர். அவரித்தில் எந்த அளவுக்கு எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் தெரிந்து கொள்ளலாம். அதேவேளையில், அவரைச் சரணடைந்தவர்களுக்கு, அவர் எந்த அளவில் நம் வாழ்வுக்கு ஒளிவிளக்காகவும், மற்றவர்களின் துன்பத்தைப் போக்கும் அருமருந்தாகவும் இருக்கிறார் என்பதை நாம் அனுபவப்பூர்வமாக உணரலாம். ஒன்று மட்டும் நிச்சயம்! பிரம்மத்தை உணர்ந்து இப்பிறவியிலேயே ஏற்றுக் கொண்டால் பிறவிப்பலன் அடைந்துவிடலாம். இல்லையென்றால் எக்காலத்தில் இவ்வாய்ப்பு கிட்டும் என்பதை எவராலும் கூற இயலாது. அது உங்கள் விருப்பத்தில் உள்ளது. இதைக் கேட்டவுடன் நீங்கள் ஆச்சரியப் படலாம். சில உதாரணங்கள் எடுத்துச் சொல்லும் போது உங்களுக்கேத் தெரியவரும்.
உதாரணம் 1. மனிதப்பிறவியானது எப்போதோ தோன்றியிருந்தாலும் நாம் இன்றைய நிலைக்கு வருவதற்கு கோடிக்கானக் ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அவ்வளவு காலம் எதற்கு கஷ்டப்பட வேண்டும்?
2. இயற்கையின் சீற்றங்களால் மனிதன் படும் துயரம் பயங்கரமானது. அவற்றிலிருந்து மீளுவது அவ்வளவு எளிதா?
3. கோடிக்கான விதைகளில் தரமான விதைகளையே விளைவிக்கிறான். அதில் எவ்வளவு விதைகள்- வீணாகவும், அழிந்தும் போகின்றன. அது மிகப்பெரிய கொடுமையல்லவா! அதனை உருவாக்கிய சக்தியனைத்தும் வீண் தானே!
4. அதே போல் தரமான மனிதனை உருவாக்குவதும் இம்மாதிரி தானே.
5. ‘பசி’ ஒன்றை உருவாக்கி அனைவரையும் பாடாய் படுத்துகிறானே! அது எதற்கு?
6. நோய்களையும், முதுமையும் தந்து நிம்மதியை இழக்கச் செய்கிறானே? அது முறையா ?
7. ஐம்புலன்களையும், அறுசுவையும் கொடுத்து மாயாஜாலம் காட்டுகிறானே, அது கொடுமை தானே!
8. வெவ்வேறு அளவில் அன்பையும், அறிவையும் தந்து பல விதங்களில் (உயர்வு, தாழ்வு) பலருக்குத் தொந்தரவு தருகிறானே, அந்த ஏற்ற தாழ்வு எதற்கு?
9. எவருமே எளிதாகப் புரிந்துகொள்ள முடியாத 'மனம் ' என்ற ஒன்றைப் படைத்து கண்ணாமூச்சி விளயாட்டுகள் காட்டுகிறானே, அந்த நிலை எதற்கு?
10. எல்லாவற்றிலும் நல்லது, கெட்டது கொடுத்து, எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் கொடுத்து, அதில் நம்மை சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை அளித்து, எக்காலத்திலும் மனிதனை குழப்பத்திலே வைத்துக் கொள்ளும் நிலையிலேயே வைத்துள்ளானே, அதனால் மனிதன் படும் வேதனை எதற்கு?
இப்போது நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா! அவர் எப்படிப் பட்டவர் என்று ?
இதற்கான ஆக்கப்பூர்வமாக விளக்கங்கள் பல மகான்கள், பல விதங்களில் தந்தும், போதித்தும் இருந்தாலும், மேலோட்டமாக அவைகள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு உண்மையெனறே தோன்றுகின்றதல்லவா!
பிரம்மத்தின் (இறைவன்) சிருஷ்டியில் மனித வாழ்வானது: மனிதன், மனம், மறுபிறவி என்கிற வரிசையில், நம் கண்ணுக்குப் புலப்படாத ‘மனம்’ என்ற ஒன்றைப் பொக்கிஷமாகக் கொடுத்து இருக்கிறார், அதோடு, ஈடில்லா வலிமையும், அளப்பரிய ஆற்றலையும் அதில் ஏற்றி, மனிதனுக்குள் உலாவவிட்டு இருக்கிறார், அதிலே, மனிதனின் நினைவுகளை அலைகளாக மூளையில் சேமித்து வைக்கும் செயலைக் கொடுத்திருப்பது விந்தையிலும் விந்தை தானே. இந்தக் காலத்தில், உங்களை வியப்பில் ஆழ்த்தும் செயற்கை நுண்ணறிவையும் (A.I - Artificial intelligence) தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு, ‘மனம்’ என்னும் இயற்கை நுண்ணறிவின் (N.I - Natural intelligence) சக்தி மகத்தானது. அதாவது A.I வேலை செய்ய வேண்டுமென்றால் அதற்கான உள்ளீடு ( input) வேண்டும். ஆனால், N.I வேலை செய்ய நினைவுப் பதிவுகள் (memories) மற்றும் கற்பனைகள் போதும்.
என் ஆராய்ச்சி படி, நினைவுகள், ஒளி வேகத்தில், அலை வடித்தில் (எக்ஸ்-ரே கதிர்வீச்சு போன்று) சிறு சிறு பகுதிகளாக (Files and folders), Bio-clock கால நேரப்படி, மூளையின் ஒரு பகுதியில் ஓய்வில்லாமல் உடனுக்குடன் பதிவுகள் நடந்தபடி இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பாகும். மேலும், காட்சிகள், கற்பனைகள் மற்றும் சம்பவங்களின் பதிவானது, நாம் சேமித்துக் கொள்ளும் வீரியத்தையும், அடிக்கடி நினைத்துக் கொள்ளும் அளவையும் பொறுத்தது. கவனக்குறைவினால் அல்லது விழிப்புணர்வு இல்லாததால் பல காட்சிகளும், சம்பவங்களும் பதிவாகாமலும் போய்விடலாம். சேமித்த நினைவுகளை மீண்டும் உயிரூட்டம் பெற, சம்பவத்தின் சில காட்சிகள், சில பேச்சுகள் அறிந்து இருந்தாலே போதுமானது. அவ்வப்போது, Bio-clock கால நேரப்படி உருவாகும் கற்பனைக் காட்சிகளும், பேச்சுகளும் அசாத்தியமானச் சக்தியாக மனதுக்குள் இடம் பெறுகிறது. அவ்வாறு அலை வடிவத்தில் சேமித்து வைக்கப்படும் சக்தியானது, அதாவது அவை மனதில், நமது தபால் பின் கோடு (PIN code) போல ஆங்காங்கே சேமித்து வைக்கப்பட்டு இருந்தாலும் (Like location of PIN code – PIN codes are not in the order). அதில் எவ்விதக் கலப்பும் குழப்பமும் இல்லாமல் உயிரூட்டமுடன் இருப்பதிலிருந்து இறைவனின் அபார சக்தியை நாம் உணரலாம். (படம் 1)
அந்த சேமிப்பு அளவின் சக்திபடி தான், நமது வாழ்க்கையில் நல்லது, கெட்டது, உயர்வு தாழ்வு ஏற்படும். ஆனால், நினவுப்பதிவுகளின் நேரம், காலம் அறிந்து கொள்ள மிகவும் கடினமே. அதாவது, நம் புழக்கத்தில் இருக்கும் கடிகாரக் கால நேரம் கிடையாது. இதன் காலநேரம் Bio-clock ஆகும். இது மனிதனுக்கு மனிதன் மாறுபடும். அதன் நேரப்படி தான் உடலும், மனமும் வேலை செய்யும். ஒருவகையில் ஒரு மனிதனின் ஆயுளையும், விதியையும் தீர்மானிக்கும் அமைப்பாகும். நினைவு அலைகள் ஒலியின் வேகத்தில் செல்வதால், நினைவுகளை மீண்டும் உயிரூட்டம் பெற சில வினாடிகளே போதுமானது.
'மனம் தான் எல்லாம்' என்று நாம் முதலில் உணர வேண்டும். இயல்பு நிலையில் உள்ள தன்னிச்சையான மனம் அணுவைவிட வலிமையானது. எவ்வாறு ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகியவை அணுவடிவத்தில் இருக்கும்போது எல்லையற்ற ஆற்றல் கொண்டிருக்கும். ஆனால், இரண்டும் சேர்ந்த நீர் மூலக்கூறுவுக்கு அத்தகைய ஆற்றல் இருப்பதில்லை. அத்தகைய குணம் கொண்டது தான் மனம். அதாவது, மனம் என்ற ஒன்றுடன் நினைவுகள், கற்பனைகள், 'நான்' என்னும் அகங்காரம் போன்ற பிற அணுக்கள் சேரும்போது 'மனம்' தனது சுயத்தை இழப்பதோடு, மனித வாழ்க்கைக்கு அதுவே துன்பத்திற்குக் காரணமாக அமைகிறது. எதுவும் கலவாத மனம் இருந்தால், வாழ்கையானது என்றும் மலர்ந்த வண்ணம் மகிழ்ச்சியானதாக இருக்கும்.
உடல் மூலமாக இறைவனை அல்லது பிரம்மத்தை அடைவது சாத்தியமில்லாத ஒன்று. இறைவன் கூட மனிதகுலத்திற்கு நன்மை செய்வதாக இருந்தால், மனிதனாகப் பிறவி எடுத்தால் மட்டுமே முடியும். அதுபோல, இறைவனை அல்லது பிரம்மத்தை உணர்வது, மனம் என்ற ஒன்றால் மட்டுமே இயலும்.
உங்கள் மனதின் சக்தியை, நீங்களாகவோ அல்லது ஒரு வழிகாட்டியின் மூலமாக (Guru or Teacher) உணரலாம். அவ்வாறு நீங்கள் உணர்ந்துவிட்டால், உங்களின் ஆன்மீக வாழ்க்கையை எவ்வித இடர்பாடும் இல்லாமல் மிக இலகுவாகப் பயணிக்கலாம். ‘மனம்’ மகிழ்ச்சியாக இருந்தால் தான், உடல், உள்ளம், உயிர், இம்மூன்றும் ஆரோக்கியமாக இருக்கும். ஒவ்வோரு மனிதனும் இரு வாழ்க்கையினை வாழ்கிறான். அதாவது, ஒன்று ‘புறவாழ்க்கை’.(outer life) அதனைப் பார்த்தல், கேட்டல், தொடுதல், படித்தல், சுற்றியிருக்கும் சூழ்நிலை, மனித சமூகம், மற்றும் ஐம்புலன்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. மற்றொன்று, ‘மனவாழ்க்கை’ அல்லது ‘இரகசிய வாழ்க்கை’ அல்லது ‘மௌன வாழ்க்கை’ அதனைச் சுய சிந்தனையும், மனதில் உணர்வுப்பூர்வமானச் சேமிப்புகளின் மூலம் கட்டுப்படுத்துகிறது. (படம் 2 & படம் 3)
புறவாழ்க்கையினால் மனிதனுக்கு அவ்வளவாகத் தொந்தரவுகள் இல்லை.
ஏனென்றால், அதன் செயல்கள், வெளி உலகத்திற்கு வெட்ட வெளிச்சமாக அனைவருக்கும் நன்றாகத்
தெரியப்படுத்தப்படுகிறது. மேலும், அவற்றுக்கெல்லாம் எளிதாக ஆதாரமோ,
சாட்சியையோத் திரட்டலாம். கை மேல்
பலனும் கிடைக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால்,
மனவாழ்க்கை மிகவும் ஆபத்தானது. அதற்கு, எவ்வித ஆதாரமோ,
சாட்சியையோக்
காட்ட முடியாது. மேலும், மனமானது ஒளி வேகத்தில் இயங்குவதால் பச்சோந்தி போல் நொடிக்கு
நொடி நேரத்தில் கூட மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. அதனை மந்திர, தந்திர மனம் என்றும்
கூறலாம். அதே வேளையில், மிகவும் உயர்வான தன்மையும்,
எந்த சூழ்நிலையிலும், நினைத்துப்
பார்க்கவும், கற்பனையும் செய்ய முடியாத அளவுக்கு அரிய பெரிய சாதனையும்
படைக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றுள்ளது. உதாரணமாக,
கற்களையும் வைரமாகவும், முட்டாளை
அறிவாளியாகவும், கோழையை வீரனாகவும்,
பிச்சைக்காரனை கோடீஸ்வரனாகவும் , பாலைவனத்தைச்
சோலைவனமாகவும், மாற்றும் வள்ளமை பெற்றுள்ளது. அதேபோல் மேற்சொன்னவற்றுக்கு
எதிர்வினையாகவும் செயலாற்றும் சக்தியும் படைத்தது. சொல்லப் போனால், நமது புறவாழ்க்கையின் தரமானது,
இந்த ‘மனவாழ்க்கை’ தான் நிர்ணயம் செய்யும் அளவுக்கு ஆற்றல் படைத்தது. மேலும், மனவாழ்க்கை
பொருத்து தான், பிரம்மத்தில் ஐக்கியமாகும்
நிலையையும் அறியலாம். அதோடு, நான் யார்? என்ற
கடினமானக் கேள்விக்கான பதிலையும் தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, நீங்கள் எந்த அளவுக்கு பிரம்மத்தை , ஆன்மீகத்தை, பேரானந்தத்தை, சொர்க்கத்தை அடையும் வழியை கடந்திருக்கிறீர்கள் என்பதற்கான சுயபரிசோதனையும் அதன் விவரங்களையும் இப்போது பார்ப்போம். இதில் நான் யார்? என்றக் கேள்விக்கான பதிலும் உங்களுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். இதன் முடிவு, நீங்கள் எந்த அளவுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் மதிப்பெண்கள் தருகிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கும். உங்களுக்கு கிடைக்கும் மதிப்பெண்கள் நீங்கள் இரகசியமாக வைத்துக் கொள்ளலாம். இதனை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு கால இடைவெளியில் சுயபரிசோதனை செய்து கொள்ளலாம். உங்கள் சுயசோதனையில் இன்றைக்கு கிடைக்கும் மதிப்பெண் இறுதியானதல்ல. ஒவ்வொரு சமயத்தில் உங்களின் விழிப்புணர்வு பொறுத்துக் கூடலாம். ஏன்? குறையவும் செய்யலாம். அது உங்களின் மனோநிலையும் மற்றும் மனப்பான்மையும் பொறுத்துள்ளது.
என்னைப் பொருத்தவரையில், மனதைக் ‘கை’ கொண்டவர்களுக்கு அல்லது மனதை சுத்தமாக உள்ளவர்களுக்கு அல்லது மனதை நன்கு புரிந்தவர்களுக்குப் ‘பிரம்மம்’ எளிதாகக் கை கூடும். அதாவது, தலைமை (Head) மனதிலே பல்வேறு மனது கிளைகள் (branches) இருக்கின்றது. ஒவ்வொரு கிளைக்கும் ஒவ்வொரு மதிப்பெண் கொடுங்கள். அதனை, பிரம்மத்தின் மதிப்பெனண்னோடு ஒத்துப் பாருங்கள். பிரம்மத்தின் மதிப்பெண்னும், மனது கிளைகளின் மதிப்பெண்களின் கூட்டுத்தொகையும் ஒன்றாக இருந்தால் நீங்கள் பிரம்மத்தை அடையும் தகுதி பெற்றிருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். .
பிரம்மம், முக்தி, ஞானம் பூர்த்தி மனம் = 100 மதிப்பெண்
அன்பு பூர்த்தி மனம் ? /10
0/10
மதிப்பெண் என்பது, நீங்கள் உங்கள் மனைவி,
மக்கள்,
நண்பர்கள், உறவுகளுக்கு வேண்டிய
அன்பைக் கொடுத்துவிட்டீர்கள். இனி
உங்கள் அன்பு தேவையில்லாத அல்லது குறைவாகவே எதிர்பார்க்கும் நிலை.
6/10
மதிப்பெண் கொடுத்தால், இன்னும் உங்கள் அன்பு அவர்களுக்குத் தேவைபடுகிறது என்று
அர்த்தம்.
0/10 அன்பு தேவையில்லா மனம் 2/10 நினைக்கின்ற போது மட்டும் 4/10 அவ்வப்போது 6/10 அடிக்கடி 8/10 பெரும்பாலும் 10/10 எப்போதும் வேண்டும் நிலை
கடமை பூர்த்தி மனம் ? /10
0/10
மதிப்பெண் என்பது, நீங்கள் உங்கள் மனைவி,
மக்கள்,
நண்பர்கள், உறவுகளுக்கு வேண்டிய
கடமைகளைச் செய்துவிட்டீர்கள். இனி
உங்கள் கடமை அவர்களுக்குத் தேவையில்லாத அல்லது குறைவாகவே எதிர்பார்க்கும் நிலை
7/10
மதிப்பெண் கொடுத்தால், இன்னும் உங்கள் கடமை அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்று
அர்த்தம்.
0/10 கடமை தேவையில்லா மனம் 2/10 நினைக்கின்ற போது மட்டும் 4/10 அவ்வப்போது 6/10 அடிக்கடி 8/10 பெரும்பாலும் 10/10 எப்போதும் வேண்டும் நிலை
அன்றாட வேலைப் பூர்த்தி மனம் ? /10
0/10
மதிப்பெண் என்பது, நீங்கள் அன்றாடம் மனைவி,மக்கள்,
நண்பர்கள், உறவுகளுக்குச் செய்ய
வேண்டிய வேலைகளைத் தடையில்லாமல் செய்து வருகிறீர்கள். அந்த வேலைகளுக்கு இனி கடின உழைப்பும் முயற்சியும் தேவையில்லாத
நிலை.(உணவு,உடை,உறைவிடம் பற்றிக் கவலை இல்லை)
5/10
மதிப்பெண் கொடுத்தால், இன்னும் உங்கள் அன்றாடத் தேவைக்கு உழைப்பும் முயற்சியும் தேவைபடுகிறது என்று அர்த்தம்.
0/10 அன்றாட வேலைத் தேவையில்லாத மனம் 2/10 நினைக்கின்ற போது மட்டும் 4/10 அவ்வப்போது 6/10 அடிக்கடி 8/10 பெரும்பாலும் 10/10 எப்போதும் வேண்டும்
பிரம்மம் நினைவு மனம் ? /10
0/10
மதிப்பெண் என்பது, நீங்கள் நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் சர்வம் பிரம்மம்
(அல்லது இறைவனை) என்று எண்ணுவது.
6/10
மதிப்பெண் கொடுத்தால், உங்களுக்கு ஞாபகம் அல்லது
கஷ்டம் வரும்போது மட்டும் நினைப்பது.
0/10 அன்றாடம் பிரம்மத்தை நினைப்பது 2/10 நினைக்கின்ற போது மட்டும் 4/10 அவ்வப்போது 6/10 அடிக்கடி 8/10 பெரும்பாலும் 10/10 எப்போதும் நினைக்காமல் இருப்பது
தியானம் செய்யும் மனம் ? /10
0/10
மதிப்பெண் என்பது, உங்களுக்கு நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் பிரம்மம் (அல்லது
இறைவனை) பற்றிப் படித்தல், பார்த்தல், கேட்டல்,
உணர்தல், பேசுதல், தியானம்,
யோகத்தில் இருப்பது.
7/10
மதிப்பெண் கொடுத்தால், அவ்வப்போது உங்களுக்கு ஞாபகம் அல்லது வம்படியாக தியானம், யோகத்தில் ஈடுபடுவது.
0/10 அன்றாடம் தியானம் யோகம் செய்வது 2/10 நினைக்கின்ற போது மட்டும் 4/10 அவ்வப்போது 6/10 அடிக்கடி 8/10 பெரும்பாலும் 10/10 எப்போதும் தியானம் யோகம் செய்யாமல் இருப்பது
ஆசை எண்ணம் நீக்கிய மனம் ? / 5
0/5
மதிப்பெண் கொடுத்தால், உங்களுக்கு ஆசை எண்ணம் இல்லை என்றும், எளிமையாக வாழ்கிறீர்கள் என்றும், உங்கள் வாழ்வாதாரத்திற்குத் தேவையானதை மட்டும் பயன்படுத்தி வருகிறீர்கள் என்று அர்த்தம்.
3/5 மதிப்பெண்
கொடுத்தால், நீங்கள் வாழ்வாதாரத்திற்கு மேலானவற்றை உங்கள் தகுதிக்கு மீறி
அனுபவிப்பது அல்லது அனுபவிக்க ஆசைபடுவது.
0/5 ஆசை எண்ணம் இல்லாத மனம் 1/5 நினைக்கின்ற போது மட்டும் 2/5 அவ்வப்போது 3/5 அடிக்கடி 4/5 பெரும்பாலும் 5/5 எப்போதும் ஆசைபடுவது
பொறாமை எண்ணம் நீக்கிய மனம் ? / 5
0/5
மதிப்பெண் கொடுத்தால், நீங்கள் மற்றவர்களைக் கண்டு பொறாமைபடவில்லை என்றும், எப்போதும் தங்களைப் பற்றியே எண்ணுகிறீர்கள் என்று அர்த்தம்.
5/5
மதிப்பெண் கொடுத்தால், நீங்கள் மற்றவர்களைக் கண்டு பொறாமைபடுகிறீர்கள் என்றும், எப்போதும் பிறரைப் பற்றியே எண்ணுகிறீர்கள் என்று அர்த்தம்.
0/5 பொறாமை எண்ணம் இல்லாத மனம் 1/5 நினைக்கின்ற போது மட்டும் 2/5 அவ்வப்போது 3/5 அடிக்கடி 4/5 பெரும்பாலும் 5/5 எப்போதும் பொறாமை படுவது
கோபம் எண்ணம் நீக்கிய மனம் ? / 5
0/5
கோபமே வராத மனம் 1/5
நினைக்கின்ற போது மட்டும் 2/5 அவ்வப்போது 3/5
அடிக்கடி 4/5
பெரும்பாலும் 5/5 எப்போதும் கோபப்படுவது
கர்மவினை பூர்த்தி மனம் ? / 5
0/5 ஆன்மாவுக்கு எவ்வித கஷ்டமும் கொடுக்காத மனம் 1/5 நினைக்கின்ற போது மட்டும் கஷ்டம் உணரும் மனம் 2/5
அவ்வப்போது 3/5
அடிக்கடி 4/5
பெரும்பாலும் 5/5
எப்போதும் ஆன்மாவுக்கு கஷ்டம்
கொடுக்கும் மனம்
இரகசியம் நீக்கிய மனம் ? / 5
0/5
இரகசியம் இல்லாத மனம் 1/5
நினைக்கின்ற போது மட்டும் இரகசியமாய்
வைத்திருப்பது 2/5 அவ்வப்போது 3/5
அடிக்கடி 4/5
பெரும்பாலும் 5/5 எப்போதும்
எல்லாவற்றிலும் இரகசியம் காப்பது
'நான்' எண்ணம் (நிகழ், இறந்த காலம்) நீக்கிய மனம் ? / 5
0/5
‘நான் எண்ணம் இல்லாத மனம்’
1/5 நினைக்கின்ற போது
மட்டும் ‘நான்’ என்னும் அகந்தையை வெளிப்படுத்துவது 2/5
அவ்வப்போது 3/5
அடிக்கடி 4/5
பெரும்பாலும் 5/5 எப்போதும்
எதிலும் ‘நான்’ என்னும் அகந்தையுடன் இருப்பது
சந்தேகம் எண்ணம் நீக்கிய மனம் ? / 5
0/5
சந்தேக எண்ணம் இல்லாத மனம் 1/5
நினைக்கின்ற போது மட்டும் தனக்குத் தானே
சந்தேகம் கொள்வது 2/5 அவ்வப்போது 3/5
அடிக்கடி 4/5
பெரும்பாலும் 5/5 எப்போதும்
தனக்குத் தானே சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பது
இம்சை எண்ணம் நீக்கிய மனம் ? / 5
0/5
இம்சை எண்ணம் இல்லாத மனம் 1/5
நினைக்கின்ற போது மட்டும் தனக்குத் தானே
இம்சித்துக் கொள்வது 2/5 அவ்வப்போது 3/5
அடிக்கடி 4/5
பெரும்பாலும் 5/5 எப்போதும்
தனக்குத் தானே இம்சித்துக் கொள்வது
எதிர்பார்ப்பு மனம் ? / 5
0/5
எதிர்பார்ப்பு இல்லாத மனம் 1/5
நினைக்கின்ற போது மட்டும்
எதிர்பார்ப்பது 2/5
அவ்வப்போது 3/5
அடிக்கடி 4/5
பெரும்பாலும் 5/5 எப்போதும்
எதையாவது எதிர்பார்த்துக் கொண்டே இருப்பது
கற்பனை மனம் ? / 5
0/5
கற்பனை செய்யாத மனம் 1/5
நினைக்கின்ற போது மட்டும் 2/5
அவ்வப்போது 3/5
அடிக்கடி 4/5
பெரும்பாலும் 5/5 எப்போதும்
கற்பனை உலகில் மிதந்து கொண்டிருப்பது.
ஒவ்வொரு மனது செயலுக்கும் நேர்மையாகவும், உண்மையாகவும் மதிப்பெண் கொடுக்க வேண்டும்.
100/100 எடுத்தால்
மகிழ்ச்சி வாழ்க்கைக்கு, பிரம்மத்தை, ஆன்மீகத்தை, பேரானந்தத்தை, முக்தியை, ஞானத்தை, சொர்க்கத்தை, அடைந்துவிட்டீர்கள் என்று உறுதியாகக் கூறமுடியும்.
கீழ்க்கண்ட படத்தைப் பாருங்கள் (படம் 4). மதிப்பெண்களை பூர்த்தி செய்யுங்கள். . கிடைக்கும் மதிப்பெண்னே.. உங்களின் உண்மையான நிலையும், நீங்கள் யார்? என்பதற்கான பதிலும் ஆகும். .
உதாரணமாக, ஒருவர் தான் சுயசோதனை செய்து பார்க்கும் போது, கீழ்கண்டவாறு மதிப்பெண் கொடுத்திருக்கிறார். அவரது கூட்டு மதிப்பெண்னும், அவர் பிரம்மத்தை அடைவதற்கு எவ்வளவு தூரத்தைக் கடந்திருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
முழு பூர்த்திக்கு 0 மதிப்பெண்
முழு பூர்த்தி அடையாமலுக்கு 10 மதிப்பெண்
அன்பு பூர்த்தி மனம் ? /10 - 4 மதிப்பெண்
கடமை பூர்த்தி மனம்
? /10 - 3
அன்றாட பூர்த்தி மனம்
? /10 - 4
பிரம்மம் நினைவு மனம்
? /10 - 3
தியானம் செய்யும் மனம்
? /10 - 3
முழு நீக்கிய மனம் 0 மதிப்பெண்
முழு நீக்கம் அடையாமலுக்கு 5 மதிப்பெண்
ஆசை நீக்கிய மனம் ? / 5 - 1 மதிப்பெண்
பொறாமை நீக்கிய மனம் ? / 5 - 1
கோபம் நீக்கிய மனம்
? / 5 - 1
கர்மவினை பூர்த்தி மனம்
? / 5 - 1
ரகசிய நீக்கிய மனம் ? / 5 - 2
நான்(நிகழ், இறந்த காலம்)
நீக்கிய மனம் ? / 5 - 2
சந்தேகம் நீக்கிய மனம் ? / 5 - 1
இம்சை நீக்கிய மனம் ? / 5 - 1
எதிர்பார்ப்பு மனம் ?
/ 5 - 2
கற்பனை மனம் ?
/ 5 – 2
பிரம்ம பூர்த்தி நிலை 100
- கூட்டு மதிப்பெண் 31
பிரம்மம் நோக்கி இவர் கடந்த தூரம் = 100 – 31 = 69
இவரின் இப்போதைய நிலை
பிரம்ம பூர்த்தி நிலை 100
பிரம்ம நிலை மனம் 91 to
99
ஆன்மீக மனம் 81 to 90
தெளிவு நிலை 71 to 80
பொதுநல மனம் 61 to 70
குழப்பமான மனம் 51 to 60
அமைதி இல்லா நிலை 41
to 50
எல்லாம் விதி எண்ணும் நிலை 0
to 40
இவரின் இப்போதைய நிலையானது பொதுநல மனம் கொண்டவர்.
குறிப்பு 1: இந்த சுயபரிசோதனையானது, வயது வந்தவர்களுக்கு, ஆன்மீகத்தில் மற்றும் லௌகீக வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மட்டும் பொருந்தும்.
குறிப்பு 2: இங்கு 'பூர்த்தி' என்பது ஒருவன் தன்னால் முடிந்தவரைத் தேவைப்படும் அளவுக்கு செய்து முடிப்பதாகவும், இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிற பாவனை அடைந்து விட்டதாகவும் (தோரனை அல்லது வெளிப்படுத்தும் தன்மை) அடைவது. 'நீக்கிய' என்பது ஒருவன் தனது நினைவு தெரிந்தவரை எல்லாவற்றையும் அறவே மறந்து விட்டதாகவும் அல்லது அழித்துவிட்டதான நிலையை அடைவது குறிக்கும்.
இதன் மூலம் நீங்கள் யார்? என்று தெரிந்துகொள்ளுங்கள். பிரம்மத்தை (இறைவனை) நோக்கிப் பயணம் செய்யுங்கள்!
நன்றி
********