Pages

Monday 10 September 2012

ஆம்புலன்ஸ் ஒலி - பிரார்த்தனை செய்யுங்கள் - PRAY WHEN YOU HEAR AMBULANCE SIREN

அனுபவ பொன்வரிகள் 


மதுரை கங்காதரன் 

'ஆம்புலன்ஸ் ஒலி' கேட்கிறீர்களா? உடனே பிரார்த்தனை செய்யுங்கள் !
PRAY WHEN YOU HEAR AMBULANCE SIREN


நானும் எனது நண்பரும் கடைத்தெருவிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று ஆம்புலன்ஸ் வேன் ஓன்று சைரன் ஒலி அலறல் சப்தத்துடன் வேகமாக கடந்து சென்றது. அந்த ஒலியைக் கேட்டவுடன் அனைத்து தரப்பு மக்களும் ஒதுங்கி வழிவிட்டனர். நானும் அந்த வினாடியே ஒதுங்கி நின்று ஒன்றை நினைத்து முனுமுனுத்தேன். இந்த செயலை பார்த்த என் நண்பர் ஆச்சரியத்துடன் 'எதற்க்காக என்னவோ மனதில் முனுமுனுத்தாயே காரணம் என்ன ?' என்று கேட்டான். 

'அது ஒன்றுமில்லை, இப்போது கடந்து சென்ற ஆம்புலன்ஸ் வேனில் உள்ளவர்கள் யாரோ? எவரோ? தெரியாது. ஆனால் ஆபத்தான அவசர சிகிச்சைக்காக யாரையோ கொண்டு செல்கின்றனர். அவர் நல்லபடியாக குணமடைய வேண்டுமென்று சில வினாடிகள் அவருக்காக பிரார்த்தனை செய்தேன்.  மக்கள் இந்த ஒலியைக் கேட்டவுடன் எவ்வாறு ஒதுங்கி வழி விடுகின்றனரோஅதேபோல் நாம் பிரார்த்தனை செய்வது நல்லது தானே!' என்றேன்.  இதைக்கேட்ட என் நண்பர் 'இந்த காரணம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இப்போது முதல் நாம் இதை பின்பற்றபோகிறேன்' என்று கூறும்போது நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். 

வழிநெடுகிலும் எத்தனையோ பேர்களை ஆம்புலன்ஸ் கடந்து செல்கின்றது. அவர்களெல்லாம் பிரார்த்தனை செய்யும்போது பலன் நிச்சயம் கிடைக்கும்.


இதுவும் ஒருவகை கூட்டுப்பிரார்த்தனை தான்.

நீங்களும் பின்பற்றலாமே!

 இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com      

1 comment: