Pages

Friday 4 January 2013

நிம்மதியான, அமைதியான தூக்கத்திற்கு ஒரு எளிய வழி A SIMPLE WAY FOR PEACEFUL SLEEP

நிம்மதியான, அமைதியான தூக்கத்திற்கு
 ஒரு எளிய வழி 

A SIMPLE WAY FOR PEACEFUL SLEEP  
அனுபவப் பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 

பெரும்பாலும் கடின உடல் உழைப்பு செய்பவர்களுக்கு தூக்கம் பஞ்சமில்லாமல் வரும். ஆனால் அத்தகைய உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு நிம்மதியான தூக்கம் வருவதில்லை. அவர்கள் தூங்குவதற்கு மிகவும் கஷ்டப்படுவார்கள். அதற்குக் காரணம் தூங்கும் நேரத்தில் தேவையில்லாத, வேண்டாத சிந்தனைகளை மனதில் ஓட விடுவது தான். அதனால் மனம் ஓய்வில்லாமல் குழம்பி தூக்கத்தை கெடுத்துவிடுகிறது.


சரியாக தூங்காததால் மறுநாள் எந்த வேலை செய்தாலும் அதில் கவனம் இருப்பதில்லை. அதனால் உடலும், மனமும் சீக்கிரத்தில் சக்தி இழந்து சோர்வடைந்து விடுகின்றது. தலைவலியும், உடல் வலியும் உண்டாகும்.


அதை தடுப்பதற்கும், சுகமாக தூங்குவதற்கும் எப்போதும் இனிமையான கனவுடனும், பசுமையான் நினைவுகளுடன் தூங்கச் செல்லுங்கள். அதற்கு போதிய நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். கனவு உங்களை ஊஞ்சலில் ஆடசசெய்யும். அதுவே உங்களுக்கு ஆந்த உறக்கத்தை கொடுப்பதோடு நீங்கள் விழிக்கும்போது உடலும், மனமும் புத்துணர்ச்சியும், சுறுசுறுப்பும் பெரும்.


No comments:

Post a Comment