Pages

Monday 14 July 2014

தமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே !


13.7.14 அன்று உலகத் தமிழாய்வுச் சங்கம் மற்றும் 
மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவியரங்கம்  
தலைப்பு:தமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் 
தமிழ் எழுத்தே !  

எனக்கும் தமிழ் தாய்க்கும் இடையே நிகழ்ந்தது 
புதுக்கவிதை வடிவில்  

மதுரை கங்காதரன் 



என்னருமை தமிழ் தாயே ! தனித்தியங்கும் தமிழ் மொழியே ! 
எம் மொழி பேசும் தமிழனே ! எனை அழைத்தக் காரணம் யாதோ?

ஏன் இவ்வாறு தலைகுனிந்து தரைபார்த்து நடக்கிறாய் ?
உன் இளமை அழகு இனிய மொழி வீரநடை எங்கே?

எம் தமிழ் மொழிபடும் துயரினை துடைக்கமுடியாமல் தலைகுனிகிறேன்!     
என் இளமை குன்ற, இனிமை குறைய , வீரநடை தளரக் காரணம் நீங்களே !

தமிழ் மொழியின் வளர்ச்சி நீ நினைத்தவாறு    இல்லையா?
தமிழை போட்டியின் போது மட்டுமே நினைக்கின்றனர் புது ராகம் பாடுகிறனர் !

தினமும் நான் தமிழை  பார்க்கிறேன்! பலவற்றில் தமிழைக் கேட்கிறேன் !
திரைகளில் பட்டிமன்றங்களில் பேசப்படுகிறதமிழை ரசிக்கிறார்கள் மக்கள் !

நம்  தமிழ் மொழி வளர்ச்சிக்கு வேறு என்ன வேண்டும்? 
நீ பார்க்கும் தமிழ் ! பேசும் தமிழ் ! எழுதும் தமிழ் !  எதிலும் தரமில்லையே ? 
 
பல சொற்களின் உயிரொளியாய் தமிழ் எழுத்தின் கவசமாய் இருந்தாயே!
பல மொழிக்கு மூலமாய் இருந்தும் எனக்கு சோதனை வந்துவிட்டதே!

 

புதிர் போட்டு பேசுகிறாயே ? புரியும்படி தெளிவாய் சொல் ! கேட்கட்டும் இவர்கள்! 
மதி கெட்டு பிறமொழி கலந்து தமிழ்மொழியை நஞ்சாக்குகிறாயே

தமிழை சிதைத்து பேசி அதன் இனிமையினை குழைக்கிறாயே 
தமிழை காலத்திற்கேற்ப வலைதளத்தில் வளர்க்க மறந்தாயே !

தமிழ் தாயே  இப்படியே விட்டால் ஏது நடக்கும்?
தமிழ் மொழி சில ஆண்டுகளில் அழியும் !  தமிழ் நூல்களும் புதையும் .

தமிழ் மொழி அழியுமா ? கூடவே கூடாது ? நம் கண் முன் அழிவதை தடுப்போம்  
தமிழ் மொழியை பிறமொழி சுனாமி சுழலிருந்து காத்திடுவோம்

   

தமிழ்மொழிக்கு பிறமொழி கலவா புத்துயிரொளியைத் தருவோம் 
தமிழ் எழுத்துக்களை போற்றும் கவசமாய் இருந்திடுவோம்    

தமிழை கணினியில் வளர்ப்போம்  ! வலைதளத்தில் வலம் வருவோம்  
தனித்தமிழாய்ப் பேசிடுவோம்  ! தரணியில் தமிழின் புகழ் பரப்புவோம்.  
 
*******************************************************************************************



No comments:

Post a Comment