Pages

Sunday 27 July 2014

நித்தம் ஏமாறும் நிசங்கள் ! புதுக்கவிதை

  நித்தம் ஏமாறும் நிசங்கள் ! 
   
          புதுக்கவிதை 

     மதுரை கங்காதரன் 

காட்சிகளால் ஏமாறும் கண்கள் 
ஒலிகளால் ஏமாறும் காதுகள் 

நறுமணங்களினால் ஏமாறும் மூக்கு 
சுவைகளினால் ஏமாறும் நாக்கு 

தொடுவதினால் ஏமாறும் உணர்வுகள்
உதவிகளால் ஏமாறும் உறவுகள்  

        

உறுதிமொழிகளால் ஏமாறும் நட்புகள் 
கண்களால் ஏமாறும் காதல்கள் 

போலி கௌரவதினால் ஏமாறும் வாழ்க்கை
சாதிகளால் ஏமாறும் ஒற்றுமை  

விலைவாசிகளால் ஏமாறும் மகிழ்ச்சி 
மழையின்மையால் ஏமாறும் விவசாயி  

உழைப்பினால் ஏமாறும் ஏழைகள் 
பேராசையினால் ஏமாறும் நடுத்தர வர்க்கத்தினர்

          

சட்டங்களினால் ஏமாறும் பணக்காரர்கள் 
பேஸ் புக்கினால் ஏமாறும் இளைஞர்கள் 

லஞ்சம் ஊழலினால் ஏமாறும் நேர்மைகள் 
கருப்புபணத்தினால் ஏமாறும் மக்கள் நலன்கள் 

விபத்துகளால் ஏமாறும் உயிர்கள் 
தீய பழக்கங்களினால் ஏமாறும் நோய்கள் 

இளசுகளால் ஏமாறும் முதுமைகள் 
சூதாட்டத்தினால் ஏமாறும் கௌரவங்கள்

   

அரசியலால் ஏமாறும் மக்கள்
இறப்பினால் ஏமாறும் பிறப்பு  

நித்தம் ஏமாறும் நிசங்கள் 
நிழலாக ஏமாறும் வாழ்கையே 

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


 
   

No comments:

Post a Comment