Pages

Friday 19 October 2018

18.10.18 கவியரங்கம் - தமிழும் மலேசியத்தமிழரும்' - மதுரை காமராசர் பல்கலைக்கழகம்



          18.10.18 கவியரங்கம் - தமிழும் மலேசியத்தமிழரும்' 
                          மதுரை காமராசர் பல்கலைக்கழகம்  

நேற்று  (வியாழக்கிழமை) 18.10.18 அன்று காலை 10.30 மணி அளவில் 
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உள்ள சேதுபதி அரங்கத்தில் 
'தமிழும் மலேசியத்தமிழரும்' என்ற தலைப்பில் கவியரங்கம் தொடங்கி 
மதியம் 2.30 மணி அளவில் முடிந்தது. 

தலைமை: கவிதைக் கலைமாமணி திரு வீரபாண்டியத் தென்னவன் 
(தலைவர், மாமதுரைக் கவிஞர் பேரவை)
(குறிப்பு: இது இவரது 5040வது கவியரங்கம்)

மேலும் மலேசிய நாட்டைச் சேர்ந்தவர்களும், அண்டை மாநிலத்தவரும் 
கலந்து கொண்டனர்.  

கவிதை  எழுதி அனுப்பிய அனைத்து கவிஞர்களும் தவறாது கலந்து 
கொண்டு கவிதையினை தந்து சிறப்பித்தனர்.  

அனைவருக்கும் மதிய உணவு, தேநீர் வழங்கப்பட்டது.

         தமிழும் மலேசியத்தமிழரும்
       அன்று நான் வாசித்தக் கவிதை 
                 புதுக்கவிதை
            மதுரை கங்காதரன் 

மலேசிய நாட்டை மலைக்க வைக்கும் தமிழர்கள்
மங்காதப் புகழுக்கு நீங்காது பதித்த முத்திரைகள்
ஓயாத உழைப்பால் தேய்ந்து மாய்ந்த தமிழர்கள்
இறந்த பின்னும் மறக்க முடியாத வரலாறுகள்.

வலியோடு வழிதேடிய தமிழர்கள்
விழிபோல் மொழிகாத்தத் தமிழர்கள்
வளம் பெருக்கப் புலம் பெயர்ந்தத் தமிழர்கள்
வளர் கனவுகளை நனவாக்கச் சென்றவர்கள்.

காடுகளை அழிக்க மாடுகளாய் உழைத்து 
மேடுகளை சமனாக்க ஓடுகளாய் தேய்ந்து 
தோட்ட வேலையில் பாட்டாளிகளாய் ஆகி   
உறவுகளை மறந்து துறவியாய் வாழ்ந்தார்கள். 

விடுதலைக்குப் பல விடியல்களைத் தொலைத்து 
நித்திரை இல்லாது சித்திரவதைக்கு ஆளாகி 
உயிர் பிழைக்க உடல் உழைப்பு கொடுத்து  
எறும்புகளாய் செத்து மடிந்தார் தமிழர்கள்.

தமிழ் காக்க இலக்கியங்கள் படைத்து  
தமிழ் வாழ கல்விக்கூடங்கள் அமைத்து 
தொப்புள்கொடி உறவுவை மறவாது மதித்து 
தியாகிகளாய் மாறிய எண்ணற்றத் தமிழர்கள்.  

தாய்மண் பிரிந்தும் தமிழை மறவாதவர்களாய்  
வேற்றுமையில் ஒற்றுமையாய்  வாழ்பவர்களாய் 
அருந்தமிழை ஆட்சிமொழியாக ஆக்கியவர்களாய்
வியப்பில் ஆழ்த்தும் விந்தையான மலேசியத்தமிழர்கள்.



                                  &&&&&&&&&&&&&&&&&&&&&

       நல்லாசிரியர்    கவிஞர்    பேராசிரியர்.மு.க.பரமசிவம்
               (அன்று வாசித்தக் கவிதை) 
             1-1-921  கருப்பணசாமி  கோவில்தெரு
       பேரையூர்  நகர் பேரையூர்  அஞ்சல்,
       பேரையூர்  வட்டம்மதுரை  மாவட்டம்
       தமிழ்நாடு  -  625703 
       அலைப்பேசி  எண்  :  9786519558

        தமிழும் மலேசியத் தமிழரும்

உலகமக்கள் போற்றிடவே உயர்வான தமிழ்மொழியை
நிலமெங்கும் பரப்புகிற நிறைவான தமிழ்த்தொன்டை
நலமாகச் செய்கின்ற நடையினிலே உயர்கின்ற
மலர்களாக இருப்பவர்கள் மலேசியாவின் தமிழினமே.

நாட்டுமொழி இரண்டுடனே நமதுமொழி தமிழினையும்
ஆட்சிமொழி ஆக்கிவைத்த அறிவினிலே சிறந்தவராய்
கூட்டாக இணைந்திருந்து கொடியேற்றி உள்ளாரே
மாட்சிமிக்க எழுச்சியாளர் மலேசியாவின் தமிழினமே.

கடல்தாண்டிச் சென்றாலும் கடினமாக உழைத்தாலும்
இடம்மாறி இருந்தாலும் இனியதமிழ் மறவாமல்
படிக்கின்ற மழழைக்கும் பள்ளிதனில் ஊட்டுகின்றார்
முடியாது என்றுரைக்கார் மலேசியாவின் தமிழினமே.

கல்லூரி வரையினிலே கல்விதனில் தமிழைவைத்து
எல்லோரும் தமிழ்வழியில் இனிதாகப் படிக்கின்றார்
நல்லபடி பிறமொழியின் நினைந்தங்கே கற்கின்றார்
பல்லாண்டு வாழ்கவாழ்க மலேசியாவின் தமிழினமே.

மெய்யான தமிழனென்றால் மானமுள்ள தமிழனென்றால்
வெய்யோனாய் உயர்ந்துநிற்கும் வாழ்தமிழைக் காத்துநிற்கும்
ஒய்யாரத்தமிழ் காக்க உள்நாட்டில் புறப்படுநீ
மெய்யான மலேசியா மக்களைப்போல் எழுகஇன்றே!
                                                       **************


         கவிஞர் மு.க.ப.சீவராசா.
         கணிதம்பேராசிரியர் 3286.து.சாணார்பட்டி.
         ம.கல்லுப்பட்டி அஞ்சல் பேரையூர் வட்டம்
         மதுரை மாவட்டம்தமிழ்நாடு 625535 
         அலைப்பேசி எண்: 9600567273
  
   தமிழும் மலேசியத்தமிழரும்
  
அரும்தமிழாம் நம்தாயை அரியணையில் ஏற்றுகிறார்
பெருவாரித் தமிழினமாய் பிறப்பினிலே பொருந்திருப்பார்
உருவாகிச் சிறந்திருப்பார் உருப்படியாய் உயர்ந்திருப்பார்
மருவற்ற தனித்தமிழாய் மதிக்கிறவர் மலேசியத்தமிழர்களே.

பிறநாட்டார் போற்றுகிறார் பழகுதமிழ்க் காப்பியங்கள்
சிறப்பாலே சிறந்திருக்கும் செம்மொழியாய் நிறைந்திருக்கும் 
உறவாகும் தமிழ்மொழியாய் உயர்வாகும் தமிழ்த்தாயாய்
மறபாகவும் மதிக்கிறவர் மலேசியத் தமிழன்குணமே.

கடல்தாண்டிக் கடந்தாலும் கடினமாய் உழைத்தாலும்
கடமைதனை மறவாமல் நடனமாய்க்கல்வியில் புகுத்துகிறார் 
இடம்மாறி இருந்தாலும் இனியதமிழாய் ஏற்கின்றார்
மடம்மாறாத மாண்புடையோர் மலேசியத் தமிழினமே.

செழுமைதரும் செம்மொழியாய் செந்தமிழாம் நம்மொழியை 
பழுதடைய விடாமலே பாங்காய்ப் போற்றுகிறார்;
எழுதுகின்ற எழுத்துக்களில் இருந்தமொழி கிரந்தெழுத்தை 
முழுமையாய் மடக்குகிறவர் மலேசியத் தமிழினமே.

எல்லோரும் தமிழ்மொழியாய் ஏற்புடையதாய் படிக்கின்றார்
கல்லூரிக் கல்விதனில்; கனிவாகத் தமிழைக்காத்தே
நல்லபடி பிறமொழியை நினைத்தங்கே கற்கின்றார்
பல்லாண்டும் ஏற்றமுறப்போற்றுகிறவர் மலேசியத் தமிழினமே.
                                %%%%%%%%%%%%%%%


           மின்படங்கள்
  








  

   







































  















  

 









   
  
  


  

  





 
  
  

  

  

 



 
  


  

  

 
  

  








  





                                                                              நன்றி 



No comments:

Post a Comment