Pages

Wednesday 3 October 2018

இன்றைய பள்ளிக்கல்லூரிகளில் புராஜட்களின் (Project) நிலை



இன்றைய பள்ளிக்கல்லூரிகளில் புராஜட்களின் (Project) நிலை
கட்டுரை 
மதுரை கங்காதரன் 

திறமை வளர்பதற்காகவும் புதிய சிந்தனை வளர்க்கவும் புதியன படைக்கவும் இன்றைய பள்ளிக்கல்லூரிகளில் 'புராஜட்' என்கிற ஒரு வேலையை மாணவர்களுக்கு கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக பொறியியல் கல்லூரியில் நான்காண்டு படிப்பில் மூன்றாம் ஆண்டு 'சிறிய புராஜட்'ம், (Mini Project) நான்காம் ஆண்டில் 'பெரிய புராஜட்'ம் (Main Project) செய்ய வேண்டும். அத்தகைய புராஜட் பேராசிரியர் (Professors) வழிகாட்டியுடன் ஒரு குழு (Group) என்று தனியாக (individual) புதியன (New innovation) ஏதாவது செய்யலாம் அல்லது அல்லது ஏதாவது ஒரு நிறுவனத்திற்குச் சென்று அவர்களின் வழிகாட்டுதலுடன் (Guide)  அவர்களுக்குத் தேவையான ஒன்று செய்து தரலாம். எனினும் குழுவோ, தனிமாணவனோ படைத்தது 'புதியதுதான்' (It is new) என்று அவர்களின் அங்கீகாரம் (Recognitionஇருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படும் புராஜட்கள் உண்மையில் வீட்டிற்கும், கல்லூரிக்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் பலன் (useful) தருகின்றதா

அவ்வாறு இருந்திருந்தால் நாடு எப்போதோ முன்னேற்றமடைந்திருக்கும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை. அதாவது மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் தரும்போது எவ்வாறு பெற்றோர்களோ அல்லது மற்றவர்களோ செய்துதருகிறார்களோ அவ்வாறு தான் புராஜட் விஷயத்தில் பெரும்பாலும் நடக்கிறது. எதற்காக புராஜட் செய்கிறோம்? என்று தெரியாமலும், எப்படி செய்ய வேண்டும்? என்று அறிவு இல்லாமலும் எப்படி வேலை செய்கிறது? என்று தெரிந்து கொள்ள ஆர்வமில்லாலும் இருக்கிறார்கள். அதற்கு காரணம், புராஜட் ஐ சம்பந்தபட்ட மாணவர்கள் செய்யாமல் யாரோ செய்து தருகிறார்கள் அல்லது ஆயுத்தமாக (ready made) வைத்திருப்பதை தான் செய்தேன் என்றும் காட்டுகிறார்கள். பலர் கடனுக்காக ஏதோ ஒன்று செய்து காட்டுகிறார்கள். இதில் கூத்து என்னவென்றால் யார் என்ன, எப்படி செய்தாலும் மதிப்பெண் சரமாரியாக பேராசிரியர்கள் போட்டுவிடுகிறார்கள். அப்படிப்போடும் போது உண்மையில் ஆர்வத்துடன் செய்த மாணவர்களுக்கு மதிப்பெண் சற்று குறைவாக போடுவதுதான் மிகக் கொடுமையான விஷயம். பேராசிரியர்கள மற்றும் ஆசிரியர்களில் கையில் மதிப்பெண்கள் இருக்கும்போது எவ்வாறு சிரத்தையுடன் புராஜட் விஷயத்தில் கவனம் செலுத்துவார்கள்.

அதிலும் பொறியியல் கல்லூரியில் புராஜட் வழிகாட்டும் பேராசிரியர்கள் சுத்தம்! அவர்களின் செயல்களை சிரிப்பைதான் வரவழைக்கிறது. சில பேராசியர்கள் உண்மையில் அவர்கள் நடத்தும் பாடத்தை ஒழுங்காக புரியும்படியும் முழுமையாகவும் பொறுமையாகவும் நடத்த திறமை இல்லாதபோது புராஜட் விஷயத்தில் எவ்வாறு ஆக்கப்பூர்வமாக செயல் இருக்கும். சில பேராசிரியர்கள் பாடங்களை சரியாக நடத்தாமல் பொழுதுபோக்காக வந்துபோவது எந்தவகையில் நியாயமோ? மேலும் சில கல்லூரிகளில் சம்பந்த பாடங்களுக்கு பேராசிரியர்களே இல்லாமல் இருப்பது அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாகும். அப்படி இருக்கும்போது புதிய புராஜட்களை எவ்வாறு அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

அதாவது மாணவர்கள் சிலர் பலமாதங்களாக சிரமப்பட்டு புதிய ஒன்றை கண்டுபிடித்து பேராசிரியர்களிடம் சொல்லும்போது அதை சரியாக காதில் வாங்காமல் உதாசீனப்படுத்தியோ மதிக்காமலோ கேவலப்படுத்தியோ அவமானப்படுத்தியோ அவநம்பிக்கை ஏற்படுத்தியோ அனுப்பிவிடுவது தான் அதிகமாக நடக்கிறது. ஏனென்றால் அத்தகைய போராசிரியர்களுக்கு அந்த புராஜட் பற்றிய அறிவு இன்மையாலும் அதை தெரிந்துகொண்டு மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று அக்கறை இல்லாமலும் இருப்பதே மிகப்பெரிய காரணம்.

அத்தகைய பேராசிரியர்கள் யோசிக்க சோம்பேறித்தனப்பட்டு முதலில் மாணவர்களிடம் கேட்டும் கேள்வி " இந்த புராஜட்' கூகுளில் இருக்கின்றதா? அப்படி இருந்தால் தான் நம்புவார்கள். அதில் உள்ள புராஜட் தான் செய்யவேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். ஏனென்றால் கூகுளில் இருந்தால் பேராசிரியர்கள் புதிதாக யோசிக்கத் தேவையில்லையே. ஆனால் புதிய புராஜட் என்பது கூகுளில் இருக்கக் கூடாது என்கிற பொதஅறிவு கூட இல்லாமல் இருப்பது ஆச்சரியமான விஷயமாகும். எனக்கு ஒரு சந்தேகம்! அவர்கள் எல்லோரும் பழைய புராஜட் செய்து பேராசியர்களாக ஆகியிருப்பார்களோ? அதனால் புதிதாக கண்டுபிடிக்கும் ஒரு சில மாணவர்களின் அறிவையும் வெற்றிகரமாக மழுங்கடிக்கும் வேலையை நன்றாக செய்கிறார்கள் என்பதே உண்மை.

இன்றைய பேராசிரியர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளுக்கு மதிப்பீடு செய்யும் அளவிற்கு அவர்களுக்கு அறிவும் திறமையும் இருக்கின்றதா? என்கிற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. ஏனென்றால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவில்தான் முனைவர் பட்டம் பெற்றிருப்பார்கள். அல்லது அவர்கள் புராஜட் செய்திருப்பார்கள். அதில்லாமல் முனைவர் பட்டம் பெறாமலும் பேராசிரியர்களாக இருகிறார்கள். அப்படி இருக்கும்போது எப்படி அவர்களால் புதிய கண்டுபிடிப்புக்கு மதிப்பீடு செய்ய இயலும். என்னதான் மாணவர்கள் படிப்படியாக புராஜட் பற்றி ஒவ்வொரு நிலையினை விளக்கினாலும் பெரும்பாலான பேராசிரியர்கள் காதில் வாங்கிக்கொள்வதில்லை. அப்போதெல்லாம் மாணவர்களின் சந்தேகங்களைப் போக்காமல், சரியான வழி காட்டாமல் தேர்வு நெருங்க நெருங்க புராஜட் ஐ நல்ல முறையில் வழிவகை செய்யாமல் புராஜட்கு சம்பந்தமில்லாத பல கேள்விகளைக் கேட்டு மாணவர்களை நோகடிப்பதே சில பேராசிரியர்கள் செய்வது கொடுமையான விஷயம்

மேலும் எந்த ஒரு கல்லூரியிலும் புராஜட் செய்வதற்கான சாதனங்கள், கட்டமைப்பு வசதிகள், நல்ல நிலையில் உள்ள ஆய்வகம், இயந்திரங்கள் போன்றவை இருப்பதில்லை. பின் எவ்வாறு மாணவர்களால் புதிய புராஜட் செய்ய முடியும். அதனால் வெளியில் கிடைக்கும் ஏற்கனவே செய்த ரெடிமேட் புராஜட் தான் சமர்பிக்க வேண்டிய நிர்பந்ததிற்கு ஆளாகிறார்கள். மீறியும் புதிய புராஜட் செய்துவிட்டால் அதை மெருகேற்றச் செய்யாமல் ஏளனமாக பார்ப்பது சில சமயம் நடப்பதுண்டு. இந்த வேளையில் 'ஏண்டா புதிய புராஜட் பண்ணினோம். பேசாமல் பழைய புராஜட் ஐயே எடுத்து பண்ணிருக்கலாம்' என்கிற நிலமைக்கு பேராசிரியர்கள் தள்ளிவிடுகிறார்கள்.

அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்னரே வளர்ச்சி காண ஆரம்பித்தது எனலாம். ஆனால் இன்றோ அறிவியல் நுணுக்கம், தொழில்நுட்பம் பன்மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது. அதை ஏற்றுக்கொண்டுதான் தீரவேண்டும். அப்படி இருக்கும் பழைய கண்டுபிடிப்புகளை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அது நூறு சதவீதம் உண்மை என்று கொள்ள முடியுமா? அப்படி அதை வைத்துக்கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை நிராகரிக்கும் செயல் அதிகமாக நடந்துவருகிறது. மேலும் கண்டுபிடிப்புகளின் முடிவுகள் எல்லாம் வெற்றிபெற்றே தீரவேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். ஏன் இவ்வாறு செய்தால் தவறான முடிவு வரும் என்று சொல்லக்கூடாதா? பல விண்வெளிக்கலன்கள், ராக்கெட்டுகள், தொழிற்சாலைகள், ஆராய்ச்சிகள் தோல்வி பெறவில்லையா? அதுவும் தானே வலைதளத்தில் இருக்கின்றது. அப்படி இருந்தால் தான் புதிய கண்டுபிடிப்பாளர்கள் விழிப்புணர்வோடு கூடுதல் கவனம் செலுத்து வேறொரு முறையில் செய்வதற்கு உதவுமல்லவா! அவற்றிற்கெல்லாம் அசிரியர், பேராசிரியர்களுக்கு உண்மையான திறமையும் அறிவும் புதியவைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் பொறுமையும் நிறைய வேண்டும்.  

இன்னொரு கூத்து என்னவென்றால் மாணவர்கள் மாங்கு மாங்கு என்று ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் புராஜட் செய்தால் அதனை சில நிமிடத்தில் விளக்க வேண்டுமாம். அந்த குறுகிய நேரத்தில் பேராசிரியர்களால் புரிந்து இயலுமா? பேராசிரியர்கள் அவ்வளவு பெரிய அறிவாளிகளா என்ன? இந்த கூத்து பொறியியல் தொழில்நுட்ப போட்டிகளிலும் நடக்கிறது. அப்போட்டிகளில் பெரும்பாலும் கூகுளில் இருக்கின்ற புராஜட் களுக்குதான் பரிசுகள் கிடைக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம். எங்கே பொறியியல் கல்லாரி தொடங்கி பல ஆண்டுகள் ஆகியும் எந்தனை கல்லூரிகளில் உள்ள பேராசிரியர்கள், மாணவர்கள் தங்களின் புராஜட் களுக்கு 'காப்புரிமை' கிடைத்துள்ளது. மிக சொற்பமாகத்தான் இருக்கும். ஏனெனில் 'காப்புரிமை' பற்றிய விழிப்புணர்வு, விவரங்கள் பேராசிரியர்களுக்கே தெரியாதபோது பின் எவ்வாறு மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு 'காப்புரிமை' பெற உதவி செய்வார்கள்.

முடிவாக பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உண்மையில் மாணவர்களின் புராஜட்களுக்கு சரியான வழி காட்டுபர்களாக இருந்தால் அம்மாணவர்களின் புராஜட் பேசக்கூடியதாகவும், சமுதாயத்திற்கு உடனடி பலன் தருவதாகவும், மின்னணு ஆய்விதழில் வெளியிடக்கூடியதாகவும், காப்புரிமை பெற தகுதியுடையதாகவும் இருக்கச் செய்திடல் வேண்டும். இது ஐ..டி மாணவர்களுக்கும் பொருந்தும். எங்கே ஐ..டியில் படித்த மாணவர்கள் எவ்வளவு பேர் நாடு சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் புதிய கண்டுபிடிப்புகள் கொடுத்துள்ளார்கள். பெரும்பாலான மாணவர்கள் பாடங்களை படித்து மனப்பாடம் செய்து நல்ல மதிப்பெண்கள் வாங்கி எங்கேயாவது ஒரு இடத்தில் வேலை பெற்று காலம் தள்ளுவதே குறியாக இருகிறார்கள். ஒருவேளை காப்பரிமை பெற்ற புராஜட்க்கு அரசு நல்ல ஊக்கத்தொகையும் மேல்படிப்புக்கான பல சலுகையும் வழங்கினால் ஒழிய புராஜட்களுக்கு மரியாதை இருக்காது. இல்லாவிட்டால் பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரி பேரளவில் தான் இயங்கும். பலதுறைகளில் மாற்றங்கள் நடைபெறும் இக்காலகட்டத்தில் ஆசிரியர்களும் பேராசிரியர்களும் தங்கள் திறமைகளையும் அறிவையும் அளவீடு செய்வதற்கு அவர்கள் ஒவ்வொரு வருடமும் அவர்கள் தனியாக அல்லது வழிகாட்டியாக செயல்பட்ட புராஜட்கள் மின்னணு ஆய்விதழில் வெளிவரவேண்டும். பேலும் மூன்றாண்டுக்கு ஒரு புராஜட் காப்புரிமை பெறும் அளவிற்குத் தகுதி பெறச் செய்யவேண்டும். அவர்களுத்தான் பதவி உயர்வு தரவேண்டும். அவ்வாறு செய்தால்தான் கல்வித்துறை வளர்ச்சி பெறும். நாடும் வளர்ச்சி காணும். அப்படியில்லையென்றால் எந்த காலத்திலும் கல்வித்துறை வளர்ச்சி காணாது. மேலும் பிறநாட்டு 'காப்புரிமை' பெற்ற பொருட்கள், இயந்திரங்கள் அதிக விலைகொடுத்து வாங்கி உற்பத்தி செய்யும் நிலையே ஏற்படும். நம்நாட்டில் எத்தனைபேர் காப்புரிமை பெற்றிருக்கிறார்கள்? எதில் பெற்றிருக்கிறார்கள்? என்று அவர்களின் துணையையும் நாடினால் ஓரளவுக்கு நல்லது. இது கலித்துறைக்கு எச்சரிக்கை மணியல்ல. விழிப்புணர்வு மணியே! 
***************************   

No comments:

Post a Comment