Pages

Monday 28 April 2014

உங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்

        உங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள்
            மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள் 
                             
                              

           YOURS WEAKNESS OF CONFIDENT IS
YOU ARE GIVING OTHERS FOR SUCKING OPPORTUNITIES 
                                   
                                          புதுக்கவிதை
                               
                                     மதுரை கங்காதரன்
 
உங்களுக்கு கடவுள் மேல் ஈடுபாடா 
உங்களிடமே  பக்திக்கு காணிக்கையாக பல நூறு பெறுவார்
 
உங்களுக்கு ஜோதிடம் மேல் நம்பிக்கையா 
'உங்களுக்கு கண்டம் இருக்கு' என்பார் 
 
தோஷம் இருக்கு ! அதற்கு பரிகாரம் சொல்வார் 
சிறப்பு பூஜை சொல்லி கண்மூடி காணிக்கை வாங்குவார்  

                              
    
உங்களுக்கு வாஸ்து சாஸ்திரம் பிடிக்குமா
அங்கே  இடி! இங்கே கட்டு! என்பார் கட்டணம் வாங்குவார்
 
உங்களுக்கு பெயரின் மேல் அபார நம்பிக்கையா ?
ஒரேழுத்து சேர்ப்பார் ! ஓராயிரம் கேட்பார் !
 
உனக்கு நிறத்தின் மீது நம்பிக்கையா?
இந்த நிற மோதிரம் போடுவார் ! பல ஆயிரம் கறப்பார்!
 
பசையுள்ள ஒருவர் 'தலைவலி' என்று போனால் 
மருத்துவர் ! அந்த சோதனை இந்த சோதனை செய்துவா 
 
நிரந்தரமாக வருவதற்கு மருந்துகள் கொடுப்பார்
உங்கள் பையில் இருக்கும் ரூபாய் அவர் கைக்கு மாறும் 
            
இல்லாத பெரிய வேலையை வாங்கித் தருவதாக சொல்வார் 
பல லட்சம் முன்பணமாக கேட்பார் 
                        
லட்சங்கள் அவர் கைக்கு மாறியவுடன் 
உங்களுக்கு பட்டை நாமம் போட்டு ஓடிவிடுவார் !
 
இதில் முதலீடு செய்யுங்கள்! பல மடங்கு பெருகும் என்பார் 
நீங்கள் செய்த முதலீடும் செய்த நிறுவனமும் காணாமல் போகும் 
 
ஊக வணிகத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்யுங்கள் 
கூடிய விரைவில் நடுத்தெருவுக்கு வரச்செய்திடுவார்
                         
உங்களுடைய ஓட்டை ஏதாவது ஒரு வழியில் வாங்கிடுவார் 
பின்னர் அவர் பல வழியில் நிம்மிடம் வசூலிப்பார் 
 
உங்களை மனப்பூர்வமாக காதலிக்கிறேன் என்பார் 
உங்களை விட அதிகம் சீர் கொடுப்பவருக்கு தான் பச்சைக்கொடி 
               
உங்களை உயிரையும் மேலாக நம்புகிறேன் என்பார் 
பணம் கொடுத்தால் உங்களையும் காட்டிக் கொடுப்பார் 
 
உங்களின் இரக்க குணம் கண்டு கடன் வாங்கிச் செல்வார் 
திருப்பிக் கேட்டால் 'ஏமாளி' பட்டம் கொடுப்பார் 
 
குறைகளைப் போக்குகிறேன் என்பார் போலி சாமியார்கள் !
கணிசமான ஒரு தொகை வாங்கி அவர் வசதியாக வாழ்வார் !
                              

வாகனத்தை வீட்டை வாங்க கடன் தருறேன் என்பார் வியாபாரிகள் 
உங்கள் சம்பளத்தை  ஆயுள் முழுதும் வட்டியாக வாங்கிடுவார்  
 
பத்து ரூபாய் பொருளை நூறு ரூபாய் என்று விளம்பரம் செய்வார் 
போலி கௌரவத்தால் அதைவிடக் கூடவே வாங்கிடுவார்        
 
உங்களுக்கு பல கோடி லாட்டரி விழுந்திருக்கின்றது என்பார் 
உங்களிடம் சில லட்சங்கள் பெற்று கம்பியை நீட்டிவிடுவார் 
 
விலை குறைவாக தங்கத்தை வாங்கித் தருவதாக சொல்வார் 
பிறகு தான் தெரியும் ! அது தங்கமல்ல பித்தளை என்று ?
 
உங்களின் பலவீனமே ஏமாற்றுபவர்களுக்கு பலம் 
உங்கள் பேராசையே அவர்களுக்குச் சாதகமாகக் கொள்வார் 
 
உங்களிடம் பணமிருக்கும் வரை நீங்கள் தான் ராஜா 
உங்கள் பணம் மற்றவர்களிடம் சென்று  விட்டால்  நீங்கள் கூஜா  தான்.
                                               
பணம் ஆசை வலையில் நீங்கள் சிக்கிவிட்டால் 
காலம் பூராவும் குடும்பத்துடன் கஷ்டப் படவேண்டியிருக்கும் !
 
பணம் சொத்து உள்ளவர்களே மிகவும் உஷாராக இருங்கள்
பலவீனமான நம்பிக்கை காட்டி மோசம் போகாதீர்கள்!

                             
நீங்கள் இதுவரை ஏமாறாது இருந்தால் நல்லது
இனிமேலும் ஏமாறாதிருக்க வாழ்த்துக்கள்  
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ 

No comments:

Post a Comment