Pages

Showing posts with label கனவுகள் - நிழல்கள் புது கவிதை - DREAM - SHADOW A MODERN POEM BY MADURAI GANGADHARAN. Show all posts
Showing posts with label கனவுகள் - நிழல்கள் புது கவிதை - DREAM - SHADOW A MODERN POEM BY MADURAI GANGADHARAN. Show all posts

Thursday, 6 September 2012

கனவுகள் - நிழல்கள் புது கவிதை - DREAM - SHADOW A MODERN POEM BY MADURAI GANGADHARAN

கனவுகள் - நிழல்கள் 
புது கவிதை 
மதுரை கங்காதரன் 



DREAM - SHADOW 
A MODERN POEM
BY MADURAI GANGADHARAN



எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் 
ஆனால் 
நிழல் கனவில்.!

உருவம் தெரியவில்லை 
ஆனால் 
அதை உணருகிறோம் 

குரல்கள் கேட்கவில்லை  
ஆனால் 
வார்த்தைகளையும் உணருகிறோம்.

திரைகள் இல்லை 
ஆனால் 
காட்சிகள் அசைகின்றன.

கனவுகள் 
உள்மன வெளிபாடுகளா?
உண்மை வெளிபாடுகளா? 

நடக்கக் கூடாதவை நடக்கின்றன 
நடக்கப் போவதை உணர்த்துகின்றன 
நடந்தவைகளை காட்டுகின்றன.



நிழலுக்கும் உருவம் உண்டு 
அது 
வெளிச்சம் கிடைக்கும்போது மட்டும்.

கனவுக்கும் எல்லாமுண்டு 
அது 
தூக்கம் வரும்போது மட்டும்.

நிழல்கள் உன்னை 
தொடர்ந்து வரும்.

கனவுகளை தொடர்வது 
நிழலை பிடிப்பது போல.

ஓன்று மட்டும் உண்மை 
கனவுகள் 
எப்போதும் கேள்விக்குறியே ?




இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com