Pages

Wednesday, 5 September 2012

பாகம் - 9 - ஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள் - NECESSARY STEPS TO IMPLEMENT ISO 9001:2008





பாகம் - 9 நிறுவன வெற்றிக்கு உதவும் 
ஐ . எஸ். ஒ 9001 : 2008 தரச் சான்று - 



புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும், வியாபார அபிவிருத்தி செய்வதற்கும் மிகச்சிறந்த வழிமுறைகள்.

லாபம் தரும் வழிகள் 

ஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள் - NECESSARY STEPS TO IMPLEMENT ISO 9001:2008

பாராட்டுகள் : ((Appreciation)


சிறந்த நிர்வாகம் மேற்கொள்ளும்  அனைவரும் இதை தவறாமல் பின்பற்றி பல அரிய சாதனை செய்துள்ளனர்.எந்த ஒரு துறையிலும் அதில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் தொழிலாளிகள் தங்களுடைய வேலையை சிறப்பாக, முன்பு விட அதிகமாக, தரமாக செய்தால் அவர்களை தட்டிகொடுத்து மேலும் ஊக்கபடுத்தும் விதமாக மனமகிழ்ந்து பாராட்டுங்கள். அது தான் நீங்கள் தரும் ஊட்டச் சத்தும், மரியாதையுமாகும். அதோடு நில்லாமல் சிறிய சான்றோ அல்லது நினைவு பரிசு கொடுத்தால் மற்றவர்களுக்கும் அது ஒரு நம்பிக்கையும் உற்சாகத்தையும் கொடுக்கும்விதமாக அமையும்.

கூட்டு வேலை : (Team work)


தனி ஒரு மனிதனால் நிறுவனத்தின் அனைத்து வேலைகளையும், சரியான நேரத்தில் சரியானபடி செய்ய முடியாது. அதற்கு தேவை கூட்டு வேலை. இதன் மூலம் அனைத்து தொழிலாளருக்கிடையே நல்லுறவு மற்றும் புரிதலை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் திறமை வெளிப்பட்டு உற்பத்தித்திறனும் அதிகரிக்க உதவுகிறது. இதை அனைத்து தொழிலாளர்களின் கூட்டங்களின் மூலம் விருத்தி செய்யலாம்.

தரம் : (Quality)


ஒரு நிறுவனத்தின் உயிர் நாடி தரம். தரம் இல்லையேல் நிறுவனம் தரை மட்டமாகிவிடும். உற்பத்தியின் எல்லா நிலைகளிலும் தரத்தை உறுதி செய்த பின்னரே அடுத்த கட்ட உற்பத்திக்கு அனுமதிக்க வேண்டும். தரத்திற்கு தேவையான சிறந்த ஆய்வுக்கூடமும் தகுதிவாய்ந்தவர்களும் தேவை.

புள்ளிவிவரம் : (Analysis Data)


ஒவ்வொரு துறைகளின் செயல்பாடும் அதன் செயல்திறனும் தெரிந்துகொள்ள வேண்டு மென்றால் கட்டாயம் வேலையின் போது கிடைக்கும் பல்வேறு புள்ளிவிவரங்களை பதிவு செய்து ஆராயவேண்டும். மேலும் திறனை அதிகப்படுத்துவதற்கான முறைகளை பல ஆரோக்கிய மாற்றத்தின் வாயிலாக கொண்டுவரவேண்டும். பல நிறுவனங்கள் கணினி மென்பொருள் உதவியினால் பலவிதமான புள்ளிவிவரங்களை உடனடியாக ஆராந்து தகுந்தளவு தரத்தை, உற்பத்தி திறனை அதிகரிக்கின்றனர். 

அபிவிருத்தி : (Improvement)

ஒரு நிறுவனம் வளர வேண்டுமென்றால் சிறந்த நிர்வாகம் வேண்டும். அதற்கு அனைத்து துறைகளிலும் தகுந்த மாற்றங்களை கொண்டுவரும்போது தரத்திலும், உற்பத்தியிலும், சேவையிலும்  தானாக அபிவிருத்தி உண்டாகிறது.      
                                           
வாய்ப்புகள் (opportunities) :



பலவித பெரிய பிரச்சனைக்குள் வாய்ப்புகள் என்பது சிறு சிறு புள்ளிகள் போல் கட்டாயம் இருக்கும். அதை நாம் நுண்ணிப்பாக கவனித்து பயன் படுத்திக்கொள்ள தவறக்கூடாது.

வெற்றி (Success) :



பலர் வெற்றியை தூங்கிக்கொண்டு கனவில் அனுபவிக்கும்போது வெகு சிலரால் தான் விழித்துக்கொண்டும், முயற்சியுடன் உழைத்துக்கொண்டும் தங்கள் கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கிறனர்.


உந்துசக்தி  (motivation):



உழைப்பின் ஓட்டத்தை சரியான திசையில் தன்னம்பிக்கையுடன் தூண்டிவிடும்போது அபரிவிதமான சக்தி கிடைக்கின்றது.


ஊக்கப்படுத்துதல் :


ஒரேநாளில் ஒருவனை ஊக்கப்படுத்திவிட முடியாது. அது மூளையை  சிறிது சிறிதாக செதுக்குவது போன்றதாகும். அழகான அதிசயமான சிற்ப்பங்கள் ஒரே நாளில் செதுக்கிவிட முடியாது.அதாவது உடம்பிற்கு சிறிது சிறிதாக ஊட்டச்சத்து அளிப்பது போன்றதாகும். ஒரே சமயத்தில் அதிகப் படியான ஊட்டச்சத்துகளை உட்கொண்டால் உடம்பால் ஏற்றுக்கொள்ள முடியுமா? முறைப்படி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே தெலுத்தினால் தான் ஊக்கம் வேலை செய்யும். ஒரேதடவை அதிகமாக ஊக்கப் பயிற்சி கொடுத்தால் அதிகப் படியான சோர்வு ஏற்ப்பட்டு கடைசியில் எழும்ப முடியாதபடி செய்துவிடும் 

மனப்பான்மை அல்லது  மனப்பாங்கு (attitude) :


உனது முகத்தை எப்போதும் சூரியனை நோக்கி ஓர் வெளிச்சத்தை நோக்கி இருந்தால் உன்னால் உன் நிழலை பார்க்கமுடியாது.
அதுபோல் உனது எண்ணத்தை வெற்றியை நோக்கி குவிக்கப்படும் போது தோல்வி என்பது உனக்குத் தெரியாது (வராது).

உன் எதிரே இருக்கும் எல்லாப் பிரச்சனைகளையும் உத்வேகத்துடன் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெறுங்கள். ஏனென்றால் அதில் தான் உனது வாழ்க்கை அடங்கியிருக்கின்றது.


மாற்றங்கள் (Changes):

  

உனது தொழில் மற்றும் வாழ்கையின் பயணத்தின்போது வளைவான பாதையின் கடைசியில் உன்னால் பாதை தெரிய முடியாததைப்  பார்த்து அதுவே பாதை முடிந்துவிட்டது என்று எண்ணி அங்கேயே நின்று விடாதே !   நீ வளையாமல் அடம்பிடித்து இருக்காதே! அது உண்மையில் முடிவல்ல! சற்றே வளைத்து பயணித்துப் பார். மேலும் பாதையின் விரிவை பயணித்து மேலும் அனுபவிக்கலாம்.

அதுபோல் மாற்றத்திற்கு பயந்து உனது கடின உழைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தால் முன்னேற்றம் என்பது கேள்விக்குறியே? 

அதாவது கடலில் ஏற்ப்படும் காற்று மற்றும் அலைகளை அனுசரித்து பயணம் செய்தால் தான் உன் இலக்கை அடைய முடியும்.

ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்றுக்கொள் !

முன்னேற்றம் தானாகத் தேடி வரும்!


பந்தயம் (Challenge ) :

 

அமைதியான கடலில் யார் வேண்டுமானாலும் எந்தவித கஷ்டமில்லாமல் அழகாக பயணம் செய்யலாம். ஆனால் உனது திறமை கடலில் ஏற்ப்படும் சூறாவளி காற்றை சமாளித்து பாதுகாப்புடன் பயணம் செய்வதில் தான் இருக்கின்றது.


துணிச்சல் (Risk) :


புதிய கடல் நாடுகளை காணவேண்டுமென்றால் இப்போது உனக்குத் தெரியும் கடற்கரையை காணாதவாறு தாண்டி பயணம் செய்ய வேண்டும்.

திட்டமிடுதல் (Plan):



எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருக்கலாம். திட்டமிடுதல் முதலில் தானே வரவேண்டும். ஏன் கடைசியில் வருகின்றது என்று? ஏனெனில் மேற் கூரியவைகள் அனைத்தும் இருந்தால் தாள் தெளிவான திட்டம். தீட்ட முடியும். அவைகள் இல்லாமல் திட்டம் தீட்டுவது வெறும் பேப்பர் அளவிலே காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கும்.

எப்படி திட்டமிடுவது?

* முதலில் தன்னால் அடைய முடிந்த இலக்குவை குறித்துக் கொள்ளுங்கள்.

* எந்தெந்த வழிகளில் அடையலாம் என்பதை தெளிவாக எழுதிக் கொள்ளுங்கள்.

* அவற்றினால் ஏற்படும் பிரச்சனைகளையும் அதை தீர்வு காணும் முறையினையும் விவரமாக எழுதுங்கள்.  

* இலக்கை அடைவதற்கு தகுதியான நேர் சிந்தனை உடைய ஆட்களை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

* எப்போது இலக்கை பற்றிய சிந்தனையிலே இருங்கள்.

* செயல்களை செய்யத்தொடங்குகள்.  

* செயல்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் திசை அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளுங்கள். 

* தோல்வி ஏற்ப்பட்டால் மாற்றுப் பாதையில் உடனே செல்வதற்கு தயாராக வைத்திருங்கள்.

* இப்போது உங்கள் திட்டம் வெற்றி தான்.

* மீண்டும் அடுத்த திட்டத்திற்கு தயாராகிக் கொள்ளுங்கள்.

வெற்றிக்கு வாழ்த்துக்கள் .

******************************************************************************  


 தொடரும் ...     

************************************************
             
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                      அல்லது 

நன்று                             அல்லது 

பரவாயில்லை           அல்லது 

இன்னும் தெளிவு       தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 



கையும் , சுடுநீர் உணர்த்தும் வாழ்க்கை தத்துவம் - HAND AND HOT WATER PRINCIPLE


அனுபவ பொன் வரிகள்


மதுரை கங்காதரன் 

கையும் , சுடுநீர் உணர்த்தும் வாழ்க்கை தத்துவம் -

HAND AND HOT WATER PRINCIPLE

தத்துவம் எண் : 1 சோதனை :1

ஒரு எளிதான சோதனை செய்து பாருங்கள். உங்களுக்கு பலவிதமான உண்மைகள் புலப்படும். 


அதாவது ஒரு சட்டியில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அது ஆவியாக ஆரம்பிக்கும் வரை  நன்றாக சூடுபடுத்துங்கள். அந்த சுடுதண்ணீரில் உங்களால் ஒரு கையை முழுவதும் உள்ளேவிட்டு சில நிமிடங்கள் வைத்துக்கொள்ள இயலுமா? அல்லது  குறைந்தது ஒரு விரல் நுனியையாவது தொடமுடியுமா? (குறிப்பு : அதை தொட்டுவிட்டு அவதிபட்டால் நான் பொறுப்பல்ல!) கண்டிப்பாக தொடமுடியாது.  அப்படி தொட்டுவிட்டலும் மிகக்குறுகிய நேரத்தில் (வினாடி கணக்கில்) அதன் தன்மையை உணர்ந்து விரலை வெடுக்கென்று எடுத்துவிடுவீர்கள்! அப்படித்தானே. ஏனென்றால் அதன் கடினமான தன்மை உங்களுக்கு நன்றாக தெரியும். அதன் பாதிப்பு உங்கள் விரல்களுக்கு (கைகளுக்கு) எப்படியிருக்கும்? அதன் விளைவு நன்றாக பார்த்திருப்பீர்கள். கேள்வியும் பட்டியிருப்பீர்கள் !  உங்களுக்கு அது பற்றி நன்றாக தெரியும். அந்த சூழ்நிலை உங்கள் கைகளால் தாங்கமுடியாது என்று, ஆகையால் அத்தகைய பலப்பரீட்சையில் மீண்டும் ஈடுபடமாட்டீர்கள்.

திடீரென்று நிகழும் பாதிப்பு மூலம்  நீங்கள்  பாடத்தை உடனே கற்றுகொண்டுவிடுகிறீர்கள்.

இதற்கு  ஒரு உதாரணம் : 'ஹிரோசீமா & நாகாசாகி ' அணுகுண்டுகளால் எதிர்பாராத தாக்கத்தின் விளைவுகளால் இன்று 'குட்டி ஜப்பான்' பெரிய நாடுகளில் இல்லாத சாதனை செய்து வருகின்றது. 

 

தத்துவம் 2 :  சோதனை : 2


ஒரு சட்டியில் நீங்கள் எப்போதும் உபயோகிக்கும் சாதாரணமான குளிர்ந்த தண்ணியை எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது உங்கள் கையை முழுவதும் உள்ளேவிடுங்கள் . இந்த முறை மகிழ்ச்சியோடு கையென்ன ? உடல் முழுவதும் கூட மணிக்கணக்கில் உள்ளே நுழைக்க தயாராக இருப்பீர்கள். ஏனென்றால் தினமும் அதை தான் உபயோகிக்கிறீர்கள். அதில் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்று நன்றாக தெரியும். 

இப்போது அந்த சட்டியில் கீழ் ஒரு சூடடடுப்பு மூலம் மிகவும் மெல்ல மெல்ல அந்த குளிர்ந்த தண்ணீரை சூடுபடுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். எப்படி உணருகிறீர்கள். இளஞ்சூட்டில் உங்கள் கைகள் இதமான இன்பத்தை உணரும். இப்போது உங்களால் மணிக்கணக்கில் கைகளை உள்ளேயே வைத்திருக்க முடியும். ஏனெனில் அந்த சூடு உங்களால் தாங்கிக்கொள்ள முடியும். அதனால் கைகளுக்கு பாதிப்பு என்பது இம்மி கூட இருக்காது.

இப்போது தண்ணீரின் சூடு சற்று அதிகமாகிறது. இப்போது அந்த சூட்டை கஷ்டப்பட்டு தாங்கிக் கொள்வீர்கள். இம்முறை குறைந்த அளவு நேரமே உங்களால் தாங்கி கொள்ளமுடியும்.

மறுபடியும் அந்த தண்ணீரை அதிகளவு சூடு படுத்துகிறீர்கள். இப்போது உங்களால் அந்த சூடு தாங்கமுடிவதில்ல. பழக்கப் பட்டதால் அதைவிட்டு வெளியே வரமுடியாமல் அவதிப் பட்டு / அவஸ்தை படும் நிலைமை உங்களுக்கு வந்து நிலைத்து விடுகின்றது.

விழிப்புணர்வு தேவை: 

உங்களுக்கு தெரிகின்றது. உங்கள் சூழ்நிலை மாறிக்கொண்டிருக்கின்றது என்று. அப்போதே சுதாரித்து கொண்டு உங்களுக்குள்  'ஏன் சூழ்நிலை மாறுகின்றது?என்று கேட்டதுண்டா? இளம்சூடு ஆரம்பிக்கும்போதே நீங்கள் இந்த சூழ்நிலையில்  இப்படியே இங்கேயே இருந்தால் அதிக சூடு நம்மை பாதித்துவிடும் என்கிற விழிப்புணர்வு கொஞ்சம்கூட இல்லாமல், அப்படி விழிப்புணர்வை ஏற்படுத்தும் உதவிகளை மதிக்காமல் காலம் கடந்து விளித்துகொண்டால் எந்த பயனுமில்லை. கடைசி வரையில் நீங்கள சூடான தண்ணீரில் இருந்து கொண்டு காலம் பூராவும் கஷ்டப்படுவீர்கள்.

சரி ஏன் இந்த உதாரணம்.

சிறிதளவு மக்களே விழித்துக்கொண்டு தங்களை காத்துக்கொள்கிறனர்.

பலர் இரண்டாவது தத்துவத்தில் தான் இருந்துகொண்டு அவதிபட்டு கொண்டிருக்கின்றனர்.

சில 'காலம் கடந்து உணரும்' எடுத்துக்காட்டுகள்:

1. 'லிவர் ' சேதமடைந்த பிறகு தான் ஒருவன் குடிப்பதை நிறுத்துகிறான்.

2. 'நுரையீரல் ' பழுதடைந்த பின்பு தான் ஒருவன் சிகரெட் குடிப்பதை குறைத்துக் கொள்கிறான்.

3. 'உடல் ஊதி பருமனான' பின்பு தான் உணவு கட்டுப்பாடு பின்பற்றுகிறான்.  

4.  'சர்க்கரை மற்றும் உப்பு' அதிகம்மகும்போது தான் அதனை கட்டுப் படுத்த படாதபாடு படுகிறான்.

5. 'இதய தடிப்பு ' அதிகமான பின்பு தான் 'கொழுப்பு ' உள்ள உணவுப்பதார்த்தங்களை உண்பதை அறவே குறைத்துக் கொள்கிறான்.

6. வயதான பின்பு தான் இளமையின் சுறுசுறுப்பை உணருகிறான்.

7. 'டைவேர்ஸ் ' ஆனா பிறகுதான் குடும்பத்தின் அருமையை உணருகிறான்.

8. வேலை தேடி அலையும்போது தான் பரீட்சையில் வாங்கிய குறைவான் மதிப்பெண்ணை பற்றி யோசிக்கிறான்.

9. நஷ்டமடைந்த பிறகுதான் 'வியாபாரத்தில் லாபம் தரும் வழி 'களை படிக்கிறான்.

10. அனைத்து பணமும் செலவான பின்னே 'சேமிப்பது 'எப்படி என்று தெரிந்து கொள்கிறான்.

11. கஷ்டங்கள் சூழ்நத பிறகு தான் பிரார்த்தனை செய்ய ஆரம்பிக்கிறான்.

12. விபத்து நடந்த பிறகு தான் 'பாதுகாப்பான பயணம் ' பற்றி படிக்கிறான்.

இப்படி பல ...

இப்போது உலகை இளஞ்சூட்டில் இருந்து வருங்காலத்தில் அதிகமாய் சூடாக்கிவிடும்  நிகழ்வுகள் :

1. 'பட்டினி ' தலை விரித்தாடும் போது  தான் விவசாயம் எப்படியெல்லாம் சிறப்பாக செய்ய வேண்டும் என்று மக்களுக்கு தெரிவிப்பார்கள் அரசியல்வாதிகள்.

2. 'பஞ்சம் ' நாட்டு மக்களை அதிகம் வாட்டும்போது தான் மழைநீர் சேர்க்க வேண்டும் என்று வாய்கிழிய பேசுவார்கள்.

3. 'சுற்று சூழல் ' மிக மோசமாகும் போது தான் பாலிதீன் பைகள் உபயோகம் செய்வதை தடுப்பார்கள்.

4. 'புவி வெப்பமமயமாதல் ' அதிகரிக்கும்போது தான்  கரும்புகை விடும் வாகனம் மற்றும் தொழில்சாலைகளை ஓட்ட தடை செய்வார்கள்.

5. 'குடிநீர்' பற்றாக்குறை ஏற்ப்படும்போது தான் நதிநீர் இணைப்பது குறித்து விவாதிப்பார்கள்.

6. 'புரட்சி' வெடிக்கும்போது தான் விலைவாசியை பற்றி சிந்தனை செய்வார்கள்.

7. 'தீவிரவாதம்' அதிகமாக மாறும்போது தான் அமைதியை பற்றி விரிவாக பேசுவார்கள்...

நீங்களே சொல்லுங்கள் 'கண் கெட்ட பிறகு படிக்க நினைப்பதில் ' பயனேதுமுண்டா ?

   
 இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 


நீங்கள் எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக கையாள்பவரா ? - ARE YOU FOLLOWING SAME METHOD FOR ALL HANDLING ?

அனுபவ பொன் வரிகள்


மதுரை கங்காதரன்

நீங்கள் எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக கையாள்பவரா ? - 
ARE YOU FOLLOWING SAME METHOD FOR ALL HANDLING ?



வெட்டுவதற்கு நிறைய ஆயுதங்கள் இருக்கின்றன. கத்திரிக்கோல், சுத்தியல், கோடாளி, கத்தி, இரம்பம், அரிவாள் மற்றும் பல. ஒவ்வொன்றும் ஒவ்வொரு    வடிவமைப்பில் பலவித அளவில் இருகின்றது. நமது தேவைக்கேற்ப ஆயுதத்தை தேர்தெடுக்க தெரியவேண்டும். அதற்குமுன் ஒவ்வொன்றின் வேலை செய்யும் விதத்தையும், அதை கையாளும் முறையும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியது  அவசியம். 

பேப்பரை நறுக்குவதற்கு அல்லது வெட்டுவதற்கு கத்திரிக்கோல் பதிலாக கொடாளியை பயன்படுத்தினால் பயன்தருமா? அதனுடைய நோக்கமே பாழாய்ப்   போய்விடும்.


அதேபோல் டாக்டர் ஆபரேஷன் செய்வதற்கு சிறிய கத்தி, சிறிய கத்திரிக்கோல் உபயோகபடுத்துவதற்கு பதிலாக பெரிய கத்தி , கத்திரிக்கோல்  பயன்படுத்தினால் நோயாளி பிழைப்பாரா? அல்லது ஆபரேஷன் தான் வெற்றியடையுமா?   

அதுபோல ஒவ்வொரு வேலைக்கும் குறிப்பிட்டவிதமான ஆட்களால் தான் செய்து முடிக்க முடியும். சிறிய வேலைக்கு அதிகம் தகுதியுள்ளவர்களையும், கடினமான வேலைக்கு குறைந்த தகுதியுள்ளவர்களை ஈடுபடுத்தினால் கட்டாயம் வெற்றி கிடைக்காது.

ஆகவே உங்களுடைய இலக்கை அடைய தகுதி , திறமை, அனுபவம் ஆகியோர்களை எங்கெங்கு எப்படி கையாளுகின்றோமோ அதைபொறுத்து தான் நம்முடைய வெற்றி இருக்கும்.


ஆகவே மனிதர்களை திறம் பட நிர்வாகம் செய்தால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் வெற்றி பரிசு நிச்சயம்.




இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

   

Tuesday, 4 September 2012

நீங்கள் பிரச்சனை இல்லாத மனிதன் ஆகலாம் - YOU CAN ALSO LIVE FREE FROM PROBLEMS

அனுபவ பொன் வரிகள்


மதுரை கங்காதரன்

நீங்கள் பிரச்சனை இல்லாத மனிதன் ஆகலாம் !- 
YOU CAN ALSO LIVE FREE FROM PROBLEMS !


பிரச்சனை இல்லாத மனிதன் யார் தான் உலகத்தில் இருக்கிறார்கள்?  ஒருவேளை 'எனக்கு பிரச்சனை ஒன்றுமில்லை ' என்று யாராவது சொன்னால் அது சுத்த பொய் தான் என்பதில்லை. அவர் உண்மையைத் தான் சொல்கிறார். ஏனென்றால் அவர் தனக்கு வரும் எல்லாவித பிரச்சனைகளையும் தைரியமாக எதிர்கொண்டு அவ்வப்போது தாமதமில்லாமல் தீர்த்துவருவதால் அவர் பிரச்சனை இல்லாத மனிதராகிறார். அதேபோல் தன்னால் முடியாத பிரச்சனைகளை தகுந்த நபரிடம் தகுந்த நேரத்தில் ஒப்படைத்து அதன் மூலம் தீர்வு காணும் திறமை பெற்றவர். அப்படி நடந்து கொண்டால் உங்கள் பிரச்சனைகளை எளிதாக தீர்த்துவிடலாம். 


அதைவிட்டு விட்டு பிரச்சனை நபர்கள் அனைவரிடமிருந்து நீங்கள் விலகிவிட்டால் உலகில் அனைவருமே தனித்தனி மனிதனாகி விடுவார்கள். ஆகவே நீங்கள் பிரச்சனைகளிருந்து மட்டும் விலகப்பாருங்கள். பிரச்சனைக்குரியவரிடமிருந்து விலக்காதீர்கள் .


அதுபோல பிரச்சினையை எதிர்த்து போராடுபவர்களையும், அதை வாதாடுபவர்களையும் எதிர் கொள்ளுங்கள். ஏனென்றால் அதன் தீர்வு அவர்களிடமிருந்து கூட  கிடைக்கும் வாய்ப்பு இருக்கின்றது. அவர்களே உங்களது வெற்றிக்கு உதவுபவர்களாகவும்  இருப்பார்கள்.

வாழ்கையே ஒரு பிரச்சனை கடல் தான் 


அதில் நீச்சல் தெரிந்தவர்கள் கஷ்டப்பட்டு நீந்தி கரையேறுகிறார்கள்.

சிலர் சிரமமில்லாமல் படகில் ஏறி கரை சேருகிறார்கள்.


பலர் நீந்த தெரியாமல் மூழ்கி கொண்டிருக்கிறார்கள்.  


மிகப்பலர் நீந்துவதற்கு முயற்சி செய்யாமலே மூழ்கிவிடுகின்றனர்.

ஏராளம் பேர் கடலுக்கு பயந்து கரையிலேயே இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்  


ஆகவே நீந்துங்கள் !


வெற்றி காணுங்கள்!

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com