Pages

Monday, 15 October 2012

மன அழுத்தத்தை தடுக்கும் எளிய வழிகள் EASY WAYS TO AVOID DEPRESSION


அனுபவ பொன் வரிகள் 


மதுரை கங்காதரன் 

மன அழுத்தத்தை  தடுக்கும்  எளிய வழிகள் 
EASY WAYS TO AVOID DEPRESSION  

மனிதனுக்கு 'மன அழுத்தம் ' என்னும் வியாதி தான் கொடிய வியாதி. அது சப்தமில்லாமல் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக உயிரை எடுக்கும். அதை மனிதனை அளிக்கும் 'எமன் ' என்று கூட சொல்லலாம். அது எதனால் வருகின்றது மற்றும் அதற்க்கான தீர்வுகளைப் பார்ப்போம். 

வரும் காரணம் : 1


மனதில் 'தாழ்வு மனப்பான்மை ' மேலோங்கி நிர்ப்பது. தான் மற்றவர்களைக் காட்டிலும் எல்லாவிதத்திலும் குறைந்தவன் அல்லது தனக்கு மதிப்பு ஏதுமில்லை என்பது போல் ஒரு உணர்வு. 

அதன் தீர்வு : 1


இப்போது இருக்கும் நிலைமையை மட்டும் வைத்து எண்ணிக்கொண்டு இருக்காதே! உனது வாழ்க்கையைவிட மோசமாக உள்ள, சாவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் கோடிகணக்கான மக்களின் வாழ்கையை ஒருமுறை பார். அவர்களே நம்பிக்கையோடு காலம் தள்ளுகின்றபோது உன்னால் வாழமுடியாதா! தாழ்வு மனப்பான்மையை உன் மனதிலிருந்து அகற்றிவிடு. உன் வாழ்கையை உயர்த்த வரும் உழைப்பு, முயற்சி என்கிற அழகிய தங்க ரதம் உன்பக்கத்தில் நிற்கிறது. உனது தாழ்வு மனப்பன்மையை தூக்கி எறிந்துவிட்டு , அந்த ரத்தத்தில் ஏறிக்கொண்டு வீறுநடை போடு. அதில் உன்னைபோன்று பாதித்தவர்களை ஏற்றிக்கொண்டு அவர்களுக்கு நல்வாழ்வு கொடு. அவர்களுக்கு புது தெம்பு கொடு. இன்றிருக்கும் நிலைமை நிரந்தரமானவை அல்ல. மாறக்கூடியவை. மன மகிழ்ச்சி கொள். அனைத்தும் சரியாகிவிடும்.


வரும் காரணம் : 2


வாழ்வில் எவ்வித பிடிப்புமில்லாமல் வீணான கற்பனைகள், எண்ணங்களை வளர்த்து கொண்டு 'தன்னம்பிக்கை 'இல்லாமல் இருப்பது.

அதன் தீர்வு : 2


அதற்கு காரணம் 'பயம் ' தான். யாரைக்கண்டும் பயப்பட தேவையில்லை! அவர்களும் உன்னைப்போன்ற மனிதர்கள். அவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் கிடையாது. அவர்களுக்கென்று தனிப்பட விதத்தில் 'பலம்' தனியாக இருப்பதில்லை. உன்னாலும் பலம் பெறமுடியும். அதற்கு 'தன்னம்பிக்கை ' கொள். உன் வாழ்வில் பிடிப்பு தானாக வரும்.    


வரும் காரணம் : 3


பிறர் சுட்டெரிக்கும் வார்த்தைகளால் பேசி அவமதிப்பது. கௌரவத்தை குலைப்பது, உண்மைக்குப் புறம்பாக பழிகளை சுமத்துவது போன்றவற்றை பெரிதாக எண்ணி மனதளவில் வருந்திக் கொண்டிருப்பது.

அதன் தீர்வு : 3


வாழ்கையில் முன்னேறும்போது 'விமர்ச்சனங்கள்' வரத் தான் செய்யும். அதைப்பற்றி அதிகம் கவலை படாமல் , உதறிதள்ளி விட்டு உன்னுடைய குறிக்கோளை நோக்கி பயணம் செய்துகொண்டிரு. அப்போது தான் அவைகள் உன் காதில்விழாது. வெற்றி உனதே!  


வரும் காரணம் : 4


தொழில்களில் அல்லது வேலையில்  முடிவு எடுக்கமுடியாமல் திணறுவது, செய்யும் காரியத்தில் முழு ஈடுபாடு செலுத்த முடியாமல் கவனக் குறைவாக செயல படுவது, மறதியின் காரணமாக பல பிரச்சனைகள் உருவாவது. 

அதன் தீர்வு : 4


முடிவு இடிப்பது, வேலையில் கவனக்குறைவு, மறதி  ஆகியவற்றிக்குக் காரணம் மனம் ஒருமுகப் படுத்தமுடியாமல் இருப்பது. அதை களைவதற்கு தியானப் பயிற்சி சிறிதளவு தினமும் மேற்க் கொள்ளுங்கள். நாளடைவில் அனைத்திலும் தேர்ச்சி பெறுவீகள். 


வரும் காரணம் : 5


சில நேரத்தில் வழக்கமாக இருக்கும் சூழ்நிலைகள் பதிலாக புதிய சூழ்நிலைக்கு மாறும் போது , அதை சமாளிக்க வழி தெரியாமல் திணறுவது, புதிய உணவு மற்றும் உறவுகளில் மாற்றங்கள், தூங்கும் நேரத்தில் பெரிய மாறுதல்களை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடுவது.  

அதன் தீர்வு : 5


எவருக்குமே சூழ்நிலைகள் மாறும்போது அனைத்துமே புதியதாயும், கூச்சமாகவும், யாரிடத்தில் என்ன கேட்பது என்று குழம்புவதும் , தான் மட்டும் தனியாக இருப்பது போன்ற பிரமையும் உண்டாகும். அந்த சமயங்களில், தான் மட்டுமே அதிகமாக கஷ்டப்படுவது போலவும் ஒரு உணர்வு உண்டாகும். ஆனால் பழகப் பழக அந்த சூழ்நிலைகள் உங்களுக்கு பிடிக்கத் துவங்கிவிடும். அதுவரை பொறுமையுடன் மாற்றத்திற்கேற்ப அனுசரித்து நடந்து கொண்டால் அந்த சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறிவிடும். ஆத்திரப்பட்டு அப்போது சட்டுபுட்டென்று முடிவு எடுத்துவிடக்கூடாது. அப்படி எடுக்கும் முடிவு சரியாக இருக்காது. பொறுமை கொள். உனக்கேற்றவாறு சூழ்நிலைகள் மாறும்.    

வரும் காரணம் : 6


வேலை, வேலை என்று ஓய்வில்லாமல் , மனதிற்கு சிறிதளவு கூட ஓய்வு கொடுக்காமல் இருப்பதும், பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் கலங்கி நிற்பது.

அதன் தீர்வு : 6


'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' என்பது சரிதான். ஆனால் உடலை, மனதை வருத்திக்கொண்டு உடல் ஆரோக்கியம் இழந்துவிடக்கூடாது. வேலைக்கு நேரம் ஒதுக்க வேண்டும். அதில் தவறில்லை. ஆனால் அதுவே பல புது பிரச்சனைக்கு வழிவகுக்கக் கூடாது. உடல், மனதிற்கு கட்டாயம் நிம்மதியான ஓய்வு தேவை. அது தூங்குவதால் மட்டுமே சாத்தியமாகும். அதற்காக ஒரு நாள் பிக்னிக், வெளி, உள்நாடு சுற்றுப் பயணம் மேற்கொள்வதால் மனதில் உற்சாகமும், உடலில் புத்துணர்ச்சியும் உண்டாகும். பிரச்சனையினால் ஏற்படும் கலக்கம் மறைந்து அதை எதிர்கொள்ளும் மனவலிமை கிடைக்கின்றது. 

வரும் காரணம் : 7


தோல்விகளையே நினைத்துக்கொண்டு மனச்சோர்வையும், மன உறுதியையும் இழத்தல். 

அதன் தீர்வு : 7


'தோல்வி' என்பது ஒரு பனிப்பாறை. வெப்பம் தாக்காத வரையில் அதன் உறுதி 'டைட்டானிக்' போன்ற மிகப்பெரிய கப்பலையே கவிழ்த்து விடுமளவிற்கு வல்லமை கொண்டது. ஆனால் முயற்சி மற்றும் கடின உழைப்பு என்னும் வெப்பம் அதன்மீது படும்போது , அந்த மலை போன்ற பனிப்பாறை உருகி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். ஆகையால் தோல்வி ஏற்படும் போது உழைப்பையும், முயற்சியையும் விட்டுவிடக் கூடாது.   

வரும் காரணம் : 8



அன்பு உள்ளங்களை எதிர்பாராமல் இழக்கும்போது அதனால் தற்கொலை பற்றிய எண்ணங்களை வளர்த்துக்கொள்ளும் போதும் .... 

அதன் தீர்வு : 8


எதிர்பாராமல் அன்புள்ளங்களை இழக்கும்போது மாமதில் பூகம்பங்கள், எரிமலை மற்றும் சுனாமி போன்ற ஆபத்தான உணர்வுகள் ஓங்கி வரும். உன் மனஉறுதி கொண்டு பூகம்பத்தை நிறுத்து! அன்பு , சாந்தம், இரக்க குணத்தை அதிகரித்து எரிமலையை குளிரச் செய். தன்னம்பிக்கை கொண்டு சுனாமி அலைகளை கட்டுப்படுத்து. நீ நினைப்பது இனி நடக்கும்.

வரும் காரணம் : 9


பிறர் உதவியால் எளிதாக தீர்க்கும் பிரச்சனைகளை மனதிலே அடக்கிக் கொண்டு , பிறரிடம் அந்த பிரச்சனை மற்றும் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது....

அதன் தீர்வு : 9


நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை உங்களுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் அதே பிரச்சனையை எதிர்கொண்டு சிலர் எளிதாக தீர்த்து வெற்றி கண்டிருப்பார்கள். அவர்களிடம் பிரச்னையை பகிர்ந்துகொண்டு அதன்படி நடந்தால் கை மேல் பலன் கிடைக்கும். அப்படிப்பட்ட நபர்களின் நன்பகத்தன்மையை கண்டிப்பாக உறுதி செய்துகொள்ளவேண்டும்.  

வரும் காரணம் : 10


உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படும் தொந்தரவினால் எப்போதும் அழுவது.  

அதன் தீர்வு : 10


தகுந்த மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையினை உடனடியாக மேற்கொண்டு அதன்படி நடப்பது. உடற்ப்பயிற்சி, தியானம், யோகா மற்றும் உங்களுக்கு பிடித்த விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்றவற்றில் கவனம் செலுத்தும்போது  உங்கள் உடல் மற்றும் மனம் புதிய பலம் பெரும். 

வரும் காரணம் : 11


தான் நினைத்தது நடக்காமல் இருக்கும் சமயத்தில் ஆவேசமும், எரிச்சலும் அதிகரிக்கும் போது....

அதன் தீர்வு : 11


எந்த ஒரு காரியம் நடக்கவேண்டுமென்றால் காலமும், நேரமும் கை கூடும் வரை காத்திருக்க வேண்டும். பொறுமையை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கொண்டிருக்கும் குறிக்கோளை அடைவீர்கள்.

வரும் காரணம் : 12


நேரம் காலம் தெரியாமல் செல்போன் அழைப்புகள் வருவது..

அதன் தீர்வு : 12


செல்போன் அழைப்புகளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஏற்றுக்கொண்டு பதிலளியுங்கள். மற்ற நேரத்தில் 'சைலன்ட் மோட் ' இல் வைத்துக்கொள்ள முயலுங்கள். 'தலை போகும் காரியத்திற்கு ' மட்டும் மதிப்பு கொடுங்கள். நல்லதே நடக்கும் என்று எப்போதும் நம்பிக்கை கொள்ளுங்கள்.


மன அழுத்தம் என்பது மனதில் ஏற்பட்ட காயங்களை  அடிக்கடி நினைவுகளின் மூலம் வெளிக்கொண்டு வந்து, அதன் மூலம் வீணான கற்பனைகளை வளர்த்து, விபரீத எண்ணங்களை உருவாக்கி, ஆபத்தான செயலில் முடிவது.

மன அழுத்தத்தின் வேகம் அசுர வேகம். எதையும் சிந்திக்காமல் , சூழ்நிலைகளை மறக்கச் செய்து ஆபத்தான முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டது. 

பொதுவாக மன அழுத்தத்தை தடுக்க , எதையுமே திட்டமிட்டுச் செய்யுங்கள். அதனால் செயல்களை செய்வதற்கு அதிக நேரம் கிடைக்கும் . நிதானமாக , நினைத்த நேரத்தில் வெற்றிகரமாக செய்துவிடலாம்.

திட்டமிடுவோம்!


மன அழுத்தம் ஏற்படுவதை தடுப்போம் !


  

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com   

Saturday, 13 October 2012

உள்விதி மனிதன் பாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் இதோ - KNOW YOUR PREVIOUS GENERATION SIN / VIRTUE


உள்விதி மனிதன் 
 சம மனிதக் கொள்கை 

பாகம் : 16  உனது பூர்வ ஜென்ம
 புண்ணியம் / பாவம் இதோ -
KNOW YOUR PREVIOUS GENERATION SIN / VIRTUE 


இனிய மனிதா! நீ இந்த உள்விதி மனிதனைப் பெருமையாக வைத்துக் கொண்டதற்கு மிகவும் நன்றி! பூர்வ ஜென்ம புண்ணியம் பொறுத்து தான் உன்வாழ்க்கை அமைகிறது என்றெல்லாம் மகான்கள், பெரியோர்கள், அறிஞர்கள் சொல்லக் கேள்விபட்டிருக்கிறோம். அந்த பூர்வ ஜென்ம புண்ணியம் என்றால் என்ன? என்று உன்னிடத்தில் கேட்டால் நீ முன்பு செய்த பாவபுண்ணியம் பொறுத்து தான் இந்த வாழ்க்கை கிடைத்துள்ளது என்று நீ சொல்லுவாய்! சரி தானே.

அன்பு மனிதா! அதன் விளக்கத்தைக் கேள். பூர்வஜென்ம புண்ணியம் என்பது நீ முன் ஜென்மத்தில் செய்தது கிடையாது! 'பூர்வ' என்பது 'முன்' என்பது அர்த்தம். அதாவது உனக்கு முன் இந்த உலகில் யார் இருந்தார்கள். உன்னைப் பொறுத்தவற்றில் சந்தேகம் இல்லாமல் உன் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, சகோதர சகோதரிகள், உறவினர்கள் என்று இவற்றில் ஏதாவது ஒருவரோ அல்லது பலரோ தான் இருந்திருப்பார்கள். அவர்களின் நல்ல (புண்ணிய), கெட்ட (பாவ) செயல்களைப் பொறுத்து தான் உனது வாழ்வு அமைகிறது. கோடீஸ்வரன் மகன், ஒரு கோடீஸ்வரன் தான். அது போல் ஆண்டியின் மகன் ஆண்டி தான். இதில் கோடீஸ்வரன் அல்லது ஆண்டியாவது அவரவர் வாழும் வாழ்கையை பொறுத்துத் தான். உன்னுடைய இந்த ஜென்மம் சிறப்பாக இருந்தால் தான் உனது வாரிசு ஜென்மங்கள் சிறப்பாக இருக்கும். அவர்கள் செழுமையாக இருப்பதற்காக இப்போதுள்ள உனது நிலைமையை நல்ல நிலையில் உயர்த்திக் கொள். அதை செய்யத்தான் நான் உன்னுள் இருந்து ஓடிக்கொண்டு இருக்கிறேன். அதைவிட்டுவிட்டு நீ போன ஜென்மத்தில் கர்ணன், அந்த ராஜா, இந்த ராஜா என்று யாராவது சொல்லி உன்னிடமிருந்து பணம் பறிக்க நினைத்தால் அதற்கு  ஒருபோதும் ஒத்துழைக்க மாட்டேன். அப்படி உனது செல்வத்தை அவர்களுக்கு கொடுத்தால் இப்போது உள்ள உனது நிலைமையும் மோசமாகிவிடும் ஜாக்கிரதை! அப்படி காது குளிர கேட்டு நீ மயங்கிவிடாமல் நான் பார்த்துக் கொள்ளவே வந்திருக்கிறேன்.

மதிப்பு மிக்க மனிதா! நான் உனக்கு ஆரம்பத்தில் கொடுத்த செல்வங்கள் உன்னிடத்தில் சேர்க்கும் வரை நான் ஓயமாட்டேன். அதற்கு உனது ஒத்துழைப்பு எனக்குத் தேவை. அதற்குத் தேவையான அறிவும், ஆற்றலும் உனக்கு நான் தருகிறேன்.  உன் அப்பா, அம்மாவின் சொத்து  அல்லது அவர்களின் வாரிசு சொத்து, அவர்களின் நல்ல பெயர்கள், அவர்கள் செய்த நல்ல காரியங்கள் அனைத்தும் உன்னை வந்து சேர்வதால் நீ புண்ணியவானாகிறாய். உனது வாழ்வும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஆனால் அதை நிலைக்க வேண்டுமென்றால் நீயும் அவர்களைப்போல தவறாது நல்ல விதத்தில் சொத்துக்களையும், நல்ல பெயர்களையும் சம்பாதித்து கொடுத்தால் உனது அடுத்த வாரிசுகள் (ஜென்மம்) நன்றாக இருப்பார்கள். அதேபோல் அனைவரிடத்தில் கடன் வாங்கியோ அல்லது இருந்த செல்வங்களை இழந்தோ ஒன்றுமில்லாமல் ஆண்டியாய் இருந்தால் உனது வாரிசுக்கு எந்தவிதாமான சுகம் இல்லாமல் போய்விடும். அதற்கு இப்போதிலிருந்து உனது செல்வத்தை பெருக்கிக் கொள். அதற்கு உனக்கு முழு ஆதரவு தருகிறேன். மேலும் திருடன், கொலைகாரன், அயோக்கியன், கொள்ளைக்காரன் என்று பெயரை சம்பாதித்து கொடுத்தால் உனது வாரிசுகள் அதனால் பெரும் துயரை அடைவார்கள். இருப்பினும் அவர்களுக்கு என்னுடைய அன்பும் ஆதரவும் தந்து அவர்களை நல்ல மனிதர்களாக மாற்றும் பொறுப்பு என்னைச் சேர்ந்தது. அதைப் பற்றி கவலை கொள்ளாதே! ஏனென்றால் என்னிடத்தில் கல்வி பொருள், சுபிட்சம் கடல் போல இருக்கின்றது.

பெருமையுள்ள மனிதா! இப்போதுள்ள உன் சொத்தோ அல்லது பூர்வீகச் சொத்தோ உனக்குள்ள வாரிசுகளுக்குக் கொடுப்பதன் மூலம் அவர்கள் இல்லாதவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதன் மூலம் நல்ல பெயர் கிடைக்கின்றது. அதைவிட்டு விட்டு பேராசை கொண்டு தீய வழியிலோ அல்லது குறுக்கு வழியிலோ செல்வங்களை சேர்க்க நினைத்தால் அது உன் வாரிசுகளுக்குப் பாவமாய் அமைந்து நிம்மதியையும், சந்தோஷத்தையும் கெடுப்பதோடு உனக்கு வாழ்க்கை முழுவதிற்கும் அவபெயரை வாங்கித்தந்து விடும். நல்ல வழியில் சென்றால் நான் உனக்குத் துணையாய் இருப்பேன். கெட்ட வழியில் சென்றால் நானே உனக்கு முதல் எதிரி. ஜாக்கிரதை!

மதிப்பு மிக்க மனிதா! எதெற்கெடுத்தாலும் மாயை, விதி என்ற இருவகைகளை பேசுவதை கேட்டிருக்கிறோம். அதாவது மகான்கள் மாயை எனவும், மனிதர்கள் விதி எனவும், நேரம், காலம் எனவும் பேசுவார்கள். அது புரிந்தோ அல்லது புரியாமலோ தலையை ஆட்டுகிறாய். அதைப்பற்றி விரிவாகவும், தெளிவாகவும் பேசுகிறேன். சற்று பொறுமையுடன் கேள்! அவைகளெல்லாம் ஒருவகையில் நல்ல தீய செயல்களே. அவைகளெல்லாம் நிலைத்தன்மை அற்றவை. நொடியில் மாறுபவை...

உள் மனிதனின் ஓட்டம் தொடரும்.   

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

வாழ்க்கை ஒரு வினோதமான கிரிக்கெட் விளையாட்டு LIFE IS A PECULIAR CRICKET GAME

அனுபவ பொன் வரிகள் 


மதுரை கங்காதரன் 
வாழ்க்கை ஒரு வினோதமான 
கிரிக்கெட் விளையாட்டு 
LIFE IS A PECULIAR CRICKET GAME


பிறக்கும்போதே நம் அனைவரிடத்திலும் ஒரு கிரிக்கெட் மட்டையும் , பின்புறம் மூன்று ஸ்டெம்புகளுடன் தான் பிறக்கிறோம். வாழ்கையில் முன்னேறுவதற்கு நாம் விளையாடியே தீரவேண்டும். வாழ்கையில் நாம் அடையும் வெற்றிகளைப் பொறுத்து பாராட்டுவார்கள். அதேபோல் நாம் தோல்வி அடைந்தால் தூக்கி எறியவும் தயங்கமாட்டார்கள். இந்த வாழ்கை கிரிக்கெட் விளையாட்டில் மூன்றே விதமான முடிவுகள் மட்டுமே உண்டு. 


1. நீங்கள் சிக்ஸர் அடித்தால் அது வெற்றியின் அடையாளம் 

2. நீங்கள் பந்தை எதிர்கொள்ள தவறிவிட்டால் அது நேரே ஸ்டம்பில் பட்டு தோல்வியை கொடுக்கும்.

3. நீங்கள் பந்தை தடுக்கலாம். அதாவது வெற்றி இல்லை. தோல்வி இல்லை.


* இங்கு பந்து என்பது பிரச்சனைகளை குறிக்கும். அதாவது சுழல் பந்து போல பிரச்சனை சுழன்று வந்து தாக்கும்.

* அல்லது பிரச்சனை வேகப்பந்து போல கண் இமைக்கும் நொடியில் தாக்க வரும்.

* ஒரு சில வேலையில் நல்ல வாய்ப்புகளாக அதாவது புல்-டாஸ் ஆக லட்டு போல இலகுவாக சிக்ஸர் அடித்து வெற்றி பெறுவது போல் வரும்.

இந்த விளையாட்டில் 1, 2, 3 அல்லது 4 என்ற பேச்சுக்கே இடமில்லை. அதாவது 'கால்' (1/4) வெற்றி, 'அரை' (1/2) வெற்றி, 'முக்கால்' (3/4) வெற்றி என்பதே இல்லை. அடைந்தால் முழுவெற்றி. இல்லையேல் தோல்வி தான்.

இந்த வாழ்கை கிரிக்கெட் விளையாட்டில் முக்கியமான கவனம் கொள்ள வேண்டியவைகள் :


1. எப்போதும் பிரச்சனை அல்லது வாய்ப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு தேவை.

2. அதை எதிர்கொள்வதற்கு ஒரு முக சிந்தனை வேண்டும்.

3. பிரச்சனை சுழலாக அல்லது வேகமாக தாக்க வரும்போது நமக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அதை எதிர்கொண்டு தடுத்தோ அல்லது முழு அறிவு, ஆற்றல் மற்றும் திறமை கொண்டு சிக்ஸர் அடித்து வெற்றிபெற கடுமையான முயற்சி மேற்கொள்ள் வேண்டும்.

4. நாம் முன்னேற , முன்னேற பின்னால் உள்ள ஸ்டெம்புகளின் எண்ணிகையும் கூடுகின்றது. (தோல்வி பெறுவதற்கான வாய்புகள் கூடுகின்றது) அதேநேரத்தில் அடுத்தடுத்து பிரச்சனைகள் ஒரே நேரத்தில் தாக்கும்போது நமது திறமையும், ஆற்றலையும் வேகமாக உபயோகித்து வெற்றி பெற வேண்டும்.

5. பிரச்சனைகள் நேரடியாக வரலாம் அல்லது மறைமுகமாகவும் தாக்க வரலாம். அனைத்திற்கும் எதிர்கொள்ளும் துணிச்சலையும், நானோ தைரியமும் நம்மிடம் இருக்கவேண்டும்.

6. தோல்வியை கண்டு துவண்டு விடாமல் வெற்றி பெறுவதற்கு அனைத்துவிதமான முயற்சியையும், பயிற்சியினையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

7. எதிராளியின் திறமையைப் பொறுத்து நமது பலத்தை அதிகபடுத்திக் கொள்ளவேண்டும்.

8. பிரச்சனைகளை சரியான நேரத்தில், சரியான திசையில் எதிர்கொண்டு வெற்றி கொள்ளவேண்டும்.

9. நியாயத்திற்கு புறம்பான பிரச்சனைகளையும் நாம் எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும்.

வாழ்கையே ஒரு விளையாட்டு தான் !


அதில் வெற்றி பெறுவதில் தான் சிறப்பு!


இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com   

Friday, 12 October 2012

உள்விதி மனிதன் பாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன் - I CAN CHANGE YOUR WEAKNESS TO BIG STRENGTH


உள்விதி மனிதன் 
 சம மனிதக் கொள்கை 



பாகம்: 15 நான் உன் பலவீனத்தை 
பலமாக மாற்றுகிறேன் - 
I CAN CHANGE YOUR WEAKNESS TO BIG STRENGTH 



பிரியமுள்ள மனிதா! மீண்டும் நான் உள்விதி மனிதன் வந்திருக்கிறேன்! நீ பிறர்க்கு நன்மை தரும் காரியங்களைச் செய்தால் அதற்கு நான் ஆயிரம் மடங்கு உதவி செய்வேன். ஆனால் தீய காரியங்களைச் செய்தால் நானே உன்னைக் காட்டிக்கொடுப்பேன் அல்லது அதற்குண்டான வேலையில் இறங்குவேன். நான் அனைவருக்கும் கொடுத்த  செல்வம், மகிழ்ச்சியை நீ ஏமாற்றி குறுக்குவழியில் அபகரிக்க நினைப்பது நான் அனுமதிக்க மாட்டேன். அதைப்பார்த்து சும்மாவும் இருக்கமாட்டேன்.



இனிமையான மனிதா! உன்னைப் படைக்கப்பட்டதன் நோக்கம், உனக்கென்று இந்த பூமியில் பல கடமைகள் இருக்கின்றன. உன்னையும் உன்னைச் சேர்ந்தவர்களையும், உன்னைச் சுற்றியுள்ளவர்களையும் காத்தும், அவர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியை கொடுப்பதே உனது கடமை. மறைமுகமான அந்த கடமைகளை உன் மூலம் நிறைவேற்ற விரும்புகிறேன். எக்காலத்திலும் என் பெயர் கெடாவண்ணம் இருப்பதற்கும் , இந்த பூமி சுபிட்சம் அடைவதற்குமான அத்தனை வழிகளையும் உன் மூலம் உண்டாக்கப்போகிறேன். எனது ஓட்டம் உனது அறிவை கூர்மையாக்கி அதை செயல்படுத்தும்போது எல்லாமே வியக்கத்தக்க விதத்தில் எல்லோருக்கும் நன்மை தரும் மாற்றங்கள் நீ காண்பாய்!


அன்பு மனிதா! இந்த உள்விதி மனிதனின் பேச்சை கேட்காததால் உனக்கு எல்லாவிதமான சிக்கல்கள் வருகின்றது. அதைச் சரிபடுத்த வேண்டு மென்றால் நான் ஒரு டாக்டராக மாறவேண்டும். அதாவது ஒரு டாக்டர் எப்படி ஒருவரது உடம்பை நன்றாக சோதனை செய்து, ஸ்கேன் , இ.சி.ஜி போன்ற ரிபோர்ட்டை வைத்து நோயை கண்டுபிடித்து அதற்கான மருத்துவ உதவியை அல்லது சிகிச்சையை எவ்வாறு துல்லியமாக தந்து நோயை குணப்படுத்துகிறாரோ, அதுபோல உனக்கும் நான் உனக்குள்ளிருந்து கொண்டு  இப்போது உடனே செய்யவேண்டிய அவசர சிகிச்சையை காலதாமதம் செய்யாது செய்யப்போகிறேன். இந்த நொடி முதல் எனது அருள்மொழியை செவிசாய்த்து கேட்பாயானால் நான் உனக்கு எவ்வளவு நன்மை செய்கிறேன் என்பதை உணரமுடியும்.


பிரியமுள்ள மனிதா! உன்னைச் சுற்றிலும் பலர் உன்னுடைய பொருட்களை பணத்தை அபகரித்தோ, ஏமாற்றியோ, எதேச்சையாக கொடுத்தோ ஒருவனிடத்தில் இழப்பாயானால் அவன் ஒருபோதும் அவற்றை திருப்பித் தர மாட்டான். மீண்டும் அவனிடத்திலோ அல்லது அவனைப் போன்றவர்களிடத்தில் உனது பொருட்களை இழந்துவிடாதே! நான் உனக்கு கொடுத்திருக்கும் பொருட்களை போல எல்லோருக்கும் கொடுத்திருக்கிறேன். அதற்கு மேலும் பிறரின் பொருட்களை அபகரிக்க நினைப்பது பேராசை தான். எல்லோரும் எனது படைப்புகளை சரிசமமாக அனுபவிக்கவேண்டுமென்பதே எனது விருப்பம். இனிமேல் நீ உழைத்து தேடிய சொத்துகளை உன்னை விட்டு பிரிய அனுமதிக்கமாட்டேன். அப்படி உன்னிடத்திலிருந்து எடுப்பவர்கள் நிச்சயம் என்னைப்போல ஆன்ம ஓட்டம் கொண்ட மனிதர்கள் அல்ல என்பதை உனக்கு எச்சரிக்கை செய்கிறேன்.

பாசமுள்ள மனிதா! நீ எப்போதும் நேர்மையாக இருக்கவேண்டுமென்பதே எனது இலட்சியம். தனிப்பட்ட உறவினாலோ அல்லது நட்புக்காகவோ அல்லது பணத்திற்காகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக நீ நியாயத்தின் பாதையிலிருந்து விலகிவிடாமல் நான் இனிமேல் உன்னை கவனித்துக்கொள்கிறேன். அப்படி பாதையிலிருந்து விலகுபவர்கள், தவறு செய்பவைகள், தீமை விளைவிப்பவர்களை அதிலிருந்து விடுவித்து  உன்னாலான உதவி செய்தும், உன்மூலமாக அவர்களுக்கு வாழ்க்கையில் புத்துயிர் கொடுக்கப் போகிறேன். அது நிச்சயம் நல்ல பலன் தரும்.



மரியாதையுள்ள மனிதா! அனைத்து விதத்திலும் என்னைப்போன்று உன்னை தகுதிபெறச் செய்வதே எனது நோக்கம். அதைவிட்டு உனது அற்ப செயலுக்காவும், அற்ப சந்தோஷம் கொடுக்கும் செயலிலும் ஒருபோதும் நான் திருப்தி அடையமாட்டேன். ஏனெனில் அப்படி செய்வது நம் இருவருக்கும் நல்லதல்ல. மேலும் இந்த மனித ஜென்மத்தில், நான் படைத்த அனைத்தையும் நீ அனுபவிப்பதற்காக பல உயிரினங்களை, பல பொருட்களைப் படைத்துள்ளேன் . கேவலம் உன் பேராசையினால் நான் பிரயாசைப்பட்டு தந்ததை மற்றவர்களிடத்தில் குறுக்குவழியில் ஏமாந்ததால் இன்று நீ மற்றவர்களிடத்தில் கையேந்தி நிற்கிறாய். அதைப் பார்க்கும்போது  எனக்கே சற்றுக்  கடினமாக இருக்கின்றது. அதை தடுக்கவே உன்னுள் புகுந்து உள்விதி மனிதனாக இருக்கிறேன்.

மதிப்புமிக்க மனிதா! நான் உன்னுடன் இருப்பதால் நீ எதற்கும் பயப்படத் தேவையில்லை. எதையும் சாதிக்கும் மனத்துணிவை தருகிறேன். அதைக்கொண்டு அச்சத்தை அகற்று. மற்றவர்களை அன்புகொண்டு, அரவணைத்துகொண்டு நல்ல வழியில் நடத்து. இந்த உலகம் செழிக்க புது மாதிரியான நல்ல செயல்களைச் செய்வதற்கு தயாராகும் மனப்பக்குவம் நான் தருகிறேன். அந்த பக்குவம் உனக்கு இப்போது வந்தாயிற்று. இன்று முதல் இந்த உலகம் உன்னைப்போன்ற பலருடைய நல்ல உள்ளங்கள்  அந்த செயல்களைச் செய்வதற்கு ஆயுத்தமாகிக் கொண்டு வருகின்றது. இனி கவலை வேண்டாம். ஆபத்து வருவது தெரிந்தால் அதை உனக்கு சொல்வதோடு அதை வெல்வதற்கான வழிவகைகளைச் செய்து தருகிறேன்.



இனிய நெஞ்சமுள்ள மனிதா! என் ஜீவ ஓட்டம் உள்ள உனது உடல் மிக மிக அற்புதமானது. ஐந்து அறிவு கொண்ட ஜீவராசிகளைவிட பன்மடங்கு ஆற்றல் வாய்ந்தது. அதை எக்காரணத்தை கொண்டும் வீணாக்காமல் உலகுக்கு நன்மைதரும் பொருட்டு பலசெயல்களை உன் மூலம் நடைமுறை படுத்தப் போகிறேன். மேலும் அதைக்கொண்டு பல உயிர்களை வாழ வழிவகை செய்து என் பாரத்தை - என் வேலையை - என் கடமைகளை  உனக்கும் கொஞ்சம் பகிர்ந்தளிக்கப் போகிறேன். அப்படி செய்வதால் அதன் மூலம் உனக்கு அதிக அளவு மகிழ்ச்சி கிடைக்கும்.

இரக்க குணம் கொண்ட மனிதா! இந்த உலகில் பலர் உள்ளே ஒன்றும், அதாவது நஞ்சும், வெளியில் ஒன்றும் , அதாவது தேனுமாய்ப்  பேசுகிறார்கள். அவர்களை நான் இனம்கண்டு அவர்களின் என்ன ஓட்டத்தை எனது ஜீவா ஓட்டத்தின் மூலம் தெரியப் படுத்துகிறேன். நீ அந்த கொடிய நஞ்சை தீயிலிட்டு பொசுக்கி அதனை அழிக்க ஏற்பாடு செய்கிறேன். நான் உனக்குள் இருக்கும்வரை இந்த தீய சக்தியை அணுக விடாமல் தடுத்துவிடுகிறேன். அதனால் உனக்கு எப்போதும் நிம்மதி கிடைக்கும். உன்னுடைய பலமும், பலவீனமும் நான் அறிவேன். அந்த பலவீனத்தை பலமாக மாற்றும்  இரசவாத வித்தையை உனக்கு கற்றுத் தருகிறேன். அதைகொண்டு நீ நினைக்கும் நல்ல காரியங்களை செய்து முடிப்பாயாக!


இனிய மனிதா! நான் உனக்குள்ளிருந்து கொண்டு ஒரு நல்ல செயலை முடிப்பதற்குத் துணிச்சலையும், திறமையாக செயல்படும் ஆற்றலையும் , உனது நல்ல குறிக்கோளை அடைவதற்கான தொடர் முயற்சியையும் நான் தருகிறேன். அதை தட்டாமல் பயன்படுத்திக் கொள். நீ சோர்வடையும்போதெல்லாம் நான் உனக்கு சோலைவனமாக காட்சியளிப்பேன். அதில் இருந்துகொண்டு களைப்பை போக்கிக்கொள். அதே நேரத்தில் அதிலேயே மயங்கி உன் குறிக்கோளிருந்து எப்போதும் பின்வாங்கி விடாதே! அதை வெற்றிகொள்வது எப்படி என்று நான் அவ்வப்போது உனக்கு பயிற்சியளிக்கிறேன். அதை தினமும் செய். நிச்சயம் நீ பெரிய சாதனை மனிதனாக உருவெடுப்பாய் . 

அன்பு உள்ளம் கொண்ட மனிதா! நீ பல சமயங்களில் முடிவெடுப்பதில் தடுமாறுவதை கவனிக்கிறேன். அப்படிப்பட்ட சமயங்களில் நான் உனக்கு தக்க வழி காட்டுகிறேன். அந்தமாதிரியான முடிவை என்னிடத்தில் விட்டுவிடு. காலம், நேரம் பார்த்து அந்த காரியத்தை செய்யச் சொல்கிறேன். அதன் படி செய். உனக்கு வெற்றி நிச்சயம். உனக்கு அரிய பெரிய கற்பனைவளத்தை அள்ளித்தருகிறேன். அதன்படி உனது செயலில் ஆர்வம் உண்டாக்குவது எனது கடமை. உனக்குள் சுயகட்டுப் பாட்டை வளர்த்து, சரியான பலமிக்க நுட்ப சிந்தனைகளை கொடுத்து, உள் மனத்தை ஒருமுகப்படுத்தி எதையும் தாங்கும் இதயத்தையும், சகிப்புத் தன்மையும் கொடுத்து உனக்கு இனிமையான மகிழ்ச்சியையும், அனைவரையும் அன்போடு வழிகாட்டும் ஆளுமை மனப்பான்மையும் கொடுத்து உன்னைப்போற்றி வழங்கும் அளவிற்கு உயர்தப்போகிறேன்.



அரவணைக்கும் குணம்கொண்ட மனிதா! இப்போது நீ இறப்பின் விளிம்பில் இருந்தாலும் சரி, வாழ்வின் துவக்கத்தில் இருந்தாலும் சரி, மற்றவர்களால் தூக்கியெறியப்பட்டவனாலும் சரி, மற்றவர்கள் உன்னை கேலிசெய்தாலும் சரி, அடித்தாலும், திட்டினாலும், சரி, இகழ்தாலும் சரி, ஒதுக்கினாலும் சரி அவற்றையெல்லாம் உதறி தள்ளிவிட்டு இந்த நொடி முதல் நான் சொல்லும் இனிய சொற்களை கேள். முன்பு நீ இருந்த நிலை இப்போது முதல் மாறத் தொடங்கும். உன் வாழ்வில் இன்பக் கனியை சுவைக்க ஆரம்பிக்கப் போகிறாய். அதை பறித்து உனக்கு கொடுக்கிறேன். அதை சுவைத்துப் பார். அந்த சுவையின் இன்பத்தை வேறெந்த இன்பமும் ஈடுகட்டமுடியாத ஒன்றாகும்.



இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com