Pages

Tuesday, 23 October 2012

உள்விதி மனிதன் பாகம்: 23 உள் உடலைத் தினமும் சுத்தம் செய்வது யார்? WHO IS CLEANING YOUR INNER BODY?



உள்விதி மனிதன் 
 சம மனிதக்  கொள்கை 

பாகம்: 23 உன் உள் உடலைத்  தினமும் 
சுத்தம் செய்வது யார்?
WHO IS CLEANING YOUR INNER BODY?



என் இனிய மனிதா! எனக்கு இருக்கும் ஆதங்கம், அவசரம், ஆசை என்னவென்றால் உனது ஜீவ ஓட்டம் நிற்ப்பதற்கு முன்னே நான் உனக்களித்தச் செல்வங்களை பத்திரமாக மீட்டு உன்னிடம் கொடுப்பது தான். என்னென்ன செல்வங்கள் என்று கேட்கிறாயா! இதோ பட்டியலிட்டு சொல்கிறேன். 

* ஆரோக்கியமான உடல் மற்றும் மனம், 
* எப்போதும் மகிழ்ச்சியை கொடுப்பது மூலம் உன்னை என்றும்     
   இளமையாக  வைத்திருத்தல்,
* அன்பான குடும்பமும், உறவும்,
* பேர் சொல்லும் நன்மக்கட்செல்வமும்,
* எல்லோருக்கும் நன்மை செய்யும் குணமும்,
* மானம் காக்கும் உடையும்,
* சகாதாரமான இருப்பிடமும்,
* பசியறியாமல் இருக்க உணவும்,
* பசுமை மாறாத இயற்கை வளமும்,
* நல்ல நட்பை நாடும் நண்பர்களும்,
* வாக்கு தவறாத குணமும்,
* பிறர்க்கு அள்ளித் தருவதற்குச் செல்வமும்,
* தடைபடாத உனது இளமையின் கல்வி,
* செல்வங்களை சேர்க்கும் நல்ல தொழிலும்,
* துன்பம் இல்லாத பெருவாழ்வும்,
* சான்றோர்களை மதிக்கும் குணமும்,
* பெரியவர்களின் நல்லாசியும் 
* நிறைந்த ஆயுளும் 
* என்னை மறக்காமல் இருக்கும் மனம் 

பிரியமுள்ள மனிதா! இந்த செல்வங்களில் இப்போது உன்னிடத்தில் என்னென்ன இருக்கின்றது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். உன்னிடத்தில் பாதிக்கும் கீழ் உள்ளது தான் என்னை பாதித்த விஷயம். அனைத்தையும் உனக்கு கொடுப்பதற்குத் தான் இத்தனை படாதபாடு படவேண்டியுள்ளது. உன்னை என்னுடன் கைகோர்த்துக் கொண்டு வருமாறு கூறுகிறேன். இப்போதாவது என் வாக்கு உன் மனதில் பிரதிபலிக்கின்றதா! இன்னமும் உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதன் நம்பிக்கை இழக்கவில்லை! உன்னை ஜெயிக்க வைப்பதே என் குறிக்கோள் கூட.

பாசமுள்ள மனிதா! நீ மூச்சு இழுத்துவிடும் போது என்ன நடக்கிறது என்று தெரியுமா! சுத்தமான காற்று உள்ளே உடலுக்குள் இழுத்து அசுத்த காற்றை வெளியே தள்ளுகிறேன். அப்போது ஏதேனும் சிறிய தூசி இருந்தால் உடனே தாமதிக்காமல் உன்னிடம் கேட்காமல்  இருமல் மற்றும் தும்மல் மூலமாக வெளியே தள்ளி விடுகிறேன் எனபதை உனக்கு ஞாபகப்படுத்துகிறேன். காற்று சுத்தமாக தான் இருக்கவேண்டும் என்று ஏன் நான் அடம்பிடிக்கிறேன் - விரும்புகிறேன் - பிடிவாதம் பிடிக்கிறேன் - மறைமுகமாக கட்டளையிடுகிறேன் ஏனென்றால் சுத்தமான காற்று ஒன்றினால் தான் உன் உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள இயலும். அந்தக் காற்று எவ்வளவு சுத்தமாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு உனது ஜீவ ஓட்டத்தின் ஆயுள் கெட்டியாக இருக்கும். காற்று தான் என் முதல் ஜீவ நாடி. அதேபோல் நீ உண்ணும் உணவும், நீரும் கூட சுத்தமாக இருக்கவேண்டும். அப்போது தான் உன்னை என்னால் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியும். கெட்ட அல்லது அசுத்தமான காற்று அல்லது உணவு எனது ஆன்ம ஓட்டத்தை பாதிக்கச் செய்து உன்னை கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது திடீரென்றோ அழித்துவிடும். பிறகு நான் எடுத்த முயற்சி அனைத்தும் வீணாகிவிடும். 

மதிப்புமிக்க மனிதா! நான் உனக்குள் இருந்துகொண்டு என்ன செய்கிறேன்? என்னால் உனக்கு என்ன லாபம்? உள்விதி மனிதன் என்று யாருமில்லை! அவன் தயவுத் தேவையில்லை என்று ஒரு இளைஞன்  என்னுடன் விவாதம் செய்தான்.அதற்கு நான் அவனிடம் கோபப்படவில்லை. 

"அப்படியா, உன்னைப்போன்ற ஒருவனைத் தான் இதுநாள் வரை தேடிக்கொண்டு இருந்தேன்" என்றேன்.
  
"எதற்காக ?" என்று கேட்டான்.
"அறுசுவை உணவுகொண்டு உனக்கு பரிமாற !" என்று சொல்லி அவனை ஆச்சரியப்படுத்தினேன்.

"மூன்று நாட்கள் தான் உங்களுடன் தங்குவேன்" என்று கண்டிப்பாகச்  சொன்னான்.
"அதுவே எனக்கு அதிகம்" என்று அவனை உட்கார வைத்து மரியாதையாக அனைத்தையும் பரிமாறினேன்.

சாப்பிட்டுக்கொண்டே "என்ன தான் நீங்கள் அன்பாக உபசரித்தாலும் நான் அசர மாட்டேன். எனது எண்ணத்தை இந்த உள்விதி மனிதனால் மாற்றமுடியாது " என்று என்னை எச்சரித்தான்.
நானும் "ம் .." என்று தலையாட்டினேன்.


சும்மா சொல்லக்கூடாது அனைத்தையும் ஒரு வெட்டு வெட்டிமுடித்தான். 
"ரொம்ப திவ்யமாக இருக்கின்றது" என்று எனக்குச் சான்றிதழ் கொடுத்தான்.
"சும்மாவா, அனைத்தும் தனி நெய்யினால் தயாரித்தவை " என்றேன்.
"அப்படியா!" என்று கைகழுவ சென்றான். கழுவுகிறான், கழுவுகிறான் கழுவிக்கொண்டே இருந்தான்.


"என்னப்பா! இன்னும் கை கழுவி முடிக்கவில்லையா ? " 
"எண்ணெய் கையில் ஒட்டிக்கொண்டு போகமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றது. சோப்பு இருந்தால் கொடுங்களேன் "
நானும் அவனுக்கு சோப்பு கொடுத்தேன். கையை சுத்தமாக கழுவிமுடித்தான். சோப்பை என்னிடத்தில் திரும்ப கொடுத்தான். நான் வாங்கிக்கொள்ள மறுத்தேன். காரணம் தெரியாமல் முழித்தான். நானே அதற்கான விளக்கத்தைச் சொன்னேன்.


"இளைஞனே, வெளியே உன் கையில் ஒட்டிய எண்ணெயை சோப்பு போட்டு நன்றாக சுத்தம் செய்தாயே ! உனக்குள்ளேயும் இதே எண்ணெய் ஒட்டிக்கொண்டிருக்குமல்லவா! அதை யார் சுத்தம் செய்வது. இந்தா இந்த சோப்பை முழுங்கு! தானாக சுத்தம் ஆகிவிடும் " என்றேன்.
முதல் முறையாக அவன் ஏதோ உணர்ந்தவனாய் , "இது நாள் வரை நான் என் உடலுக்குள்ளே சுத்தம் செய்யவில்லை. ஆனால் இன்றளவும் அது சுத்தமாக இருக்கின்றது.. எப்படி என்று தெரியவில்லை? என்று என்னிடத்தில் கேள்விகுறியோடு பதில் சொன்னான்.


"இப்போது தெரிந்து கொள் ! உனக்குள் இருக்கும் நான் எவ்வித சோப்புத் துணை இல்லாமல் நீ சாப்பிடும் போது, ஏதாவது குடிக்கும்போதும் உடனுக்குடன் சுத்தம் செய்துகொண்டு வருகிறேன் என்று இப்போதாவது தெரிந்ததா!" என்றேன்.

"தெரிந்தது . பாதியளவு நீ இருப்பதை ஒத்துக்கொள்கிறேன். முழுமையாக இல்லை! " என்றான். இப்படியே இரண்டு நாட்கள் கழிந்தன. மூன்றாவது நாள் வந்தது. இன்றைக்கு என்ன விருந்தோ என்று ஆசையுடன் இருப்பதை தெரிந்து கொண்டேன். நான் அவனுக்கு முன் முதல் நாள் ஆஹா...ஓஹோ..என்று சாப்பிட்ட சாப்பாட்டை அவனருகில் வைத்தேன். மூக்கைப் பொத்திக்கொண்டு ..

" இவ்வளவு நாற்றம் அடிக்கின்றது. இதை யார் சாப்பிடுவது?" என்று சண்டை போடாத குறையாக கேட்டான். நானும் விடாமல் 
"இதைத்தானப்பா இரண்டு நாளுக்கு முன் நன்றாக இருப்பதாகச்  சொன்னாய்.!"
"ஆமாம் சொன்னேன். இப்போது கெட்டுவிட்டது. அதை சாப்பிட முடியுமா!"

"இது தானே இப்போது உன் உடலில் இருக்கும். அது எப்படி கெடாமல் எவ்வித துர்நாற்றமும் இல்லாமல் யார் பார்த்துக்கொண்டிருப்பார்கள்?" என்றேன். இப்போது எவ்வித பதிலும் பேசாமல் பிறகு சிறிது நேரம் சிந்தித்து "இப்போது எல்லாம் புரிந்தது. என் உடல் சுத்தம், எண்ணத்தின் சுத்தத்திற்குக் காரணம் தாங்கள் தான் என்று இப்போது ஒத்துக்கொள்கிறேன். இனிமேலும் இந்த மாதிரியான சந்தேகம் வரவே வராது" என்று என்னைப் பற்றி முழுமையாக இப்போது உணர்ந்தான். நீங்களும் இந்த உள்விதி மனிதன் உங்கள் உடலுக்குள் என்னென்ன வேலைகள் செய்கிறான் என்று புரிந்ததா? புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

உள் மனிதனின் ஓட்டம் தொடரும்.   

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

Monday, 22 October 2012

உள்விதி மனிதன் பாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடி வருடம் INNER MAN'S EXPERIENCE IS CRORES OF YEARS



உள்விதி மனிதன் 

 சம மனிதக் கொள்கை 
பாகம்:22 உள்விதி மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம் 
INNER MAN'S EXPERIENCE IS CRORES OF YEARS

பிரிய மனிதா! இந்த உள்விதி மனிதன் சொல்வது அனைத்திலும் உனக்கு உடன்பாடு இருக்கும் என்று நினைக்கிறேன். மனிதனுக்கு மனிதன் மேல் நம்பிக்கை இல்லை. மனிதனை மனிதன் பகையாளியாக பார்க்கிறான். எதனால்? எல்லாமே பேராசை மற்றும் புகழுக்காக! இந்த பூமி இதைவிடப்  பேராசை பிடித்தவர்களும், புகழுக்காக எதையும் செய்ய துணிந்தவர்களும் வாழ்ந்து அழிந்த சரித்திரத்தை  இன்றும் மக்கள் மறக்கவில்லை என்றே சொல்லலாம். அவர்கள் போட்ட 'பகைமை' விதை, நாட்டிற்கு நாடு பகையைத் தூண்டிவருகின்றது. அதன் மூலமாக  ஒரு நாட்டைப் பிடிக்கும் ஆசை, அங்குள்ள செல்வங்களைக்  கொள்ளையடிக்கும் பேராசை, பணியாவிட்டால் மக்களை வதைக்கும் செயல் இன்னும் இவ்வுலகில் ஒரு சில நாடுகளில் தொடர்கின்றது. அது ஒருவழியாக குறைந்துவிட்டது எனலாம். ஆனால் அதுவே வேறுவிதமாக  ஒரு நாட்டின் தலைவர் மக்களிடத்தில் பலவழிகளில் கொள்ளை அடிக்கும் நிலைமையை இன்று காண்கிறோம். அதுவும் நிலைமாறி நாட்டுக்கு நாடு பகை என்று போய் இன்று அந்த தொத்து வியாதி மாநிலத்திற்கு மாநிலம் பகையாக உருமாறியும், வீடுகளுக்குள்ளேயும் பகைமை விதை வேரூன்றி வளர ஆரம்பித்திருக்கின்றது. இப்படியே இருக்கவிட்டால் உன்னில் இருக்கும் எனக்கும், உனக்கும் அந்த பகைக்கு ஆளாகி இந்த உலக மக்களை அழிப்பதோடு நில்லாமல், இந்த பிரபஞ்சத்தில் மனிதனுக்குச் சொர்க்மாகத் திகழும் இந்த பூமியையே அழித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. 



என் இனிய மனிதா! இதன் காரணமாகத் தான் நானாக சிவனே என்று இருந்த இந்த உள்விதி  மனிதனான நானே உனக்கு மீண்டும் அறிமுகம் செய்து, மக்கள் இழந்த சந்தோஷத்தை, நிம்மதியை, மகிழ்ச்சியான வாழ்க்கையை கொடுப்பதற்கு வந்துள்ளேன். உன் மூலமாக அதை நிறைவேற்றும் காரண கர்த்தாவாகவும் மாறிவிட்டேன். இனி என் விருப்பபடி, உன் துணை கொண்டு அனைத்தையும் செவ்வனே செய்து இந்த உலகத்தின் சுபிட்சதிற்க்காக உன்னுள் அடிக்கல் நாட்டிவிட்டேன். 



பிரியமுள்ள மனிதா! 'உனக்கு என்ன என்னைவிட  அதிகமாக  திறமை மற்றும் அனுபவம் இருக்கின்றதா?' என்று என்னைப்பார்த்து எள்ளி நகையாடலாம் அல்லது சந்தேகமாகவும் இருக்கலாம்! எனது பிறப்பு, எனது ஆயுள், எனது அனுபவம் இன்றும், இனிமேலும் யாராலும் கணக்கிடமுடியாது. நான் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டேன். நான் தான் இறப்பற்றவன். ஒரு உயிரிலிருந்து மற்றொரு உயிருக்கு செல்பவன். அப்படியென்றால் உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனின் பயணம் இதற்குமுன் எங்கெங்கெல்லாம் இருந்து வந்திருப்பேன், நான்  அவர்களிடத்திலிருந்து எவ்வகையான அனுபவங்களைப் பெற்றிருப்பேன் என்று இப்போது சொல்கிறேன் கேள்! பற்ப்பல அறிஞர்கள், பெரியோர்கள், மகான்கள், முனிகள், ரிஷிகள், அரசர்கள், தலைவர்கள், ஆன்மீகவாதிகள் சிந்தனைச்சிற்பிகள், அறிவியல் மேதைகள், பொருளாதார நிபுணர்கள், வியாபாரமேதைகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதனால் தான் இப்போது பிறக்கும் குழந்தைகள் கற்கால குழந்தையாக இல்லாமல் செல்போன்களைக்கூட எளிதாக கையாள்கிறது. அதற்குப் பிறப்பிலே அத்தனை அறிவு, திறமை எங்கிருந்து வந்தது. பலவகையான மொழிகள் பேசுகின்றன. அவைகளெல்லாம் என் அறிவு, என் ஆற்றல் படி , எனது சொல்படி, எனது அனுபவப்படி நடப்பதால் தானே வந்திருக்கின்றது.

என்பாசமுள்ள மனிதா! இறப்பவர்களுடைய ஜீவ ஓட்டம் நின்றாலும், அந்த ஜீவன் அந்த உடலை விட்டுவிட்டு புதிதாகப் பிறக்கப் போகும் ஜீவனை இயக்கவல்லது. அதற்கு ஜீவ ஓட்டம், ஆன்ம ஓட்டம் கொடுக்க வல்லது. அந்த ஓட்டம் தான் உன்னுடைய உடம்பில் இரத்த ஓட்டமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. என்னுடைய முன் ஜென்ம எண்ணங்கள், திறமைகள், ஆற்றல் எல்லாமே உனக்குள் புதைந்து இருக்கின்றன. உனக்குத் தேவையானதை நீ இந்த உள்விதி மனிதன் மூலமாக எளிதாக பெற்றுக்கொள்ளலாம். அதற்கு நான் உனக்கு உதவி செய்கிறேன். அவைகளைக் கொடுத்து உன்னை மகிழ்ச்சியடையச் செய்வதே எனது குறிக்கோள். 



பண்புள்ள மனிதா! அனைவருக்குள்ளும் எனது கோடிக்கணக்கான ஆண்டுகளின் அனுபவங்கள் ஒளிந்து இருக்கின்றன என்று இப்போதாவது புரிந்து கொண்டாயா! அந்த அற்புதச் சக்தியினால் தான் முட்டாள்களும் திடீரென்று மேதையாகின்றனர். இயற்கையில் ஒரு கூழாங்கல் வைரமாக மாறாது. ஆனால் மனிதனில் அந்த அற்புதங்கள் நடக்கும். நேற்று வரை ஏழையாய் இருந்தவன் திடீரென்று பணக்காரனாக மாறுக்கிறான். எல்லாம் இந்த உள் மனிதனின் செயலால் தான். ஆனால் எல்லாவற்றையும் நான் கொடுத்திருந்தாலும் நீ அதிலிருந்து கொஞ்சம் தான் எடுத்துக் கொண்டிருக்கின்றாய். இன்னும் இருக்கும் விலைமதிப்பில்லாத பொக்கிஷத்தை எடுத்துக்கொள்ள மறுக்கிறாய்.

இரக்கமுள்ள மனிதா! அதனுள் பெரியோர்களின் நீதிபோதனைகள், வற்றாத செல்வங்கள் அடையும் வழிவகைகள், நாட்டுத் தலைவர்களின் அதிகாரங்கள் மற்றும் நீதிமான்களின் சட்டங்கள், பல அரசர்களின் வெற்றிவழிகள், வீர தீரச் செயல்கள், உலக கல்விகள், மக்களுக்காக நேர்வழியில் உழைத்த தலைவர்களின் எண்ணங்கள், விஞ்ஞான அறிஞர்களின் அறிவியல் சாதனைகள், தொழில் நுட்பம், மருத்துவம் மற்றும் கலைகளில்  சிறந்தவர்கள், விவசாயிகள், பலத்தரப்பட்ட தொழிலாளர்களின் கஷ்ட நஷ்ட அனுபவங்கள், முதலாளிகளின் எண்ணங்களும் செயல்களும் இவைகள் அனைத்தும் அடங்கும். உனக்குத் தேவையானதை எடுத்துக்கொள்ளலாம்.   

மதிப்புமிக்க மனிதா! சில மனிதர்கள் பல நூல்கள் கற்று கல்விமானாக ஆவதும், கடின உழைப்பில் செல்வச் சீமானாக விளங்குவதும், நாடு போற்றும், மக்கள் போற்றும் தலைவராக ஜொலிப்பதும், அரிய பெரிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து உலகுக்கு கொடுக்கும் அறிஞராக போற்றுவதும், சத்திய வழியில் ஆன்மீக குருவாக மக்களுக்கு பல நன்மைகள் செய்வதும், சில நாட்டுத்தலைவர்கள் நல்லாட்சி நடத்துவதும் எப்படி ஏற்படுகின்றது. இவைகளெல்லாம் எனது அனுபவ அறிவை தந்து அதன் ஆற்றலை வெளிப்படுத்துவதால் தான் என்பதை தெரிந்து கொள்.

இனிய மனிதா! இவர்கள் இப்படியிருக்க சிலர் கெட்ட வழியை தேர்ந்தெடுத்து உலகத்தையும், உலக மக்களையும் மாசுபடுத்துகின்றனர். அந்த மாதிரியான எண்ணங்களை அழிக்கவே எல்லோரிடத்திலும் உள்விதி மனிதனாக வந்திருக்கிறேன். நல்ல மனிதர்கள் சிலர் இருப்பதனால் தான் ஓரளவாவது மழை பெய்கின்றது. பூமி நனைகின்றது. மக்களின் வயிறு நிறைகின்றது. ஓரளவு மகிழ்ச்சி கிடைக்கின்றது. 

இனிமையான மனிதா! நீ எப்படி முன்னேறினாலும், எதைப்  படைத்தாலும், எதைக் கண்டுபிடித்தாலும் என்னைவிட அதிகமாக முன்னேறிவிடமாட்டாய். ஆகவே உனது முன்னேற்றங்களை நல்லவழியில் பயன்படுத்தி மக்களுக்குப் பல நன்மைகள் கொடுத்து வாழ்க்கையைச் சிறப்படையச் செய்யவே உனக்குள் இருக்கிறேன்.


உள்மனிதனின் கோடி ஆண்டு அனுபவம் உனக்குக்  கிடைத்த விலைமதிப்பற்ற பொக்கிஷம் ! 
    உள்விதி மனிதனின் ஓட்டம் தொடரும்.   

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

எல்லாம் பணமயம் - ஆனால் கூடவே வரும் பயம்- IF YOU HAVE MORE MONEY THEN YOU FACE FEAR

அனுபவ பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 

எல்லாம் பணமயம் - ஆனால் கூடவே வரும் பயம்-
IF YOU HAVE MORE MONEY THEN YOU FACE FEAR 


பணம் ஒரு மிகப்பெரிய ஆயுதம். அது நமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானது என்று எல்லோருக்கும் தெரிந்தது தான். கடவுள் படைத்த இந்த அற்புத உலகில் மனிதன் சக்தி வாய்ந்தவன் என்று சொன்னால், மனிதன் படைத்ததில் மிக மிக சக்தி வாய்ந்தது 'பணம் ' என்று சொன்னால் மிகையாகாது.


பஞ்சபூதத்தில் இதை ஆறாவதாக சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் இதை ஆக்கத்திற்கும், அழிவுக்கும் பயன்படுத்தலாம். அதாவது 'தீ ' விளக்காக இருக்கும் வரையில் அது மற்றவர்களுக்கு ஒளி தந்து உதவுகிறது. அதுவே பெரிய நெருப்பாக பற்றி எரியும் போது , தீ உருவான இடத்தையும் அதைச் சுற்றியுள்ள இடத்தையும் அழிக்கவல்லது. பணம் அளவோடு இருக்கும் வரையில் அது அமைதியாக இருக்கச் செய்கிறது. அளவுக்கு அதிகமாகும் போது அது தனது விஸ்வரூபத்தை காட்ட ஆரம்பிக்கின்றது. பணம் நீ கையாளுவதை பொறுத்து தெய்வமாக கருணை காட்டும். அதுவே சாத்தானாக மாறி தீமையை உண்டாக்கும்.

பணம் நமது மனப்பான்மை , நம்பிக்கை மற்றும் ஐடியாக்களை வளர்க்கிறது. ஆனால் எப்போதும் பணம் இருக்கும்போது உன்னைப்பற்றியும், பணத்திற்கும்  உனக்குமுள்ள உறவை பற்றியும் தெளிவாக மனதில் வைத்துகொள். பணம் தேவையான அளவு இருந்தால் நாம் சொல்வதை பணம் கேட்கும். தேவைக்கு அதிகமாக இருந்தால் அது சொல்வதை நாம் கேட்கவேண்டியிருக்கும். 


பணம் அமைதியை கெடுக்கவல்லது. குணத்தை மாற்றவல்லது. உறவுகளை எதிரியாக நினைக்கச் சொல்கிறது. நட்பை பகையாய்  பார்க்கச் செய்கிறது. அன்பை அரக்கத்தனமாய் நினைத்துப் பார்க்கிறது. மரியாதை உள்ளவர்களை அவமதிக்கிறது. 'நான்' என்கிற அகந்தையும் , தலைக்கணமும் வளர்க்கிறது.  ஆசையை பேராசையாக மாற்றி அழிவுப் பாதையில் அழைத்துச் செல்கிறது. பையில் பணம் கூடக்கூட மனதில் 'கணம் ' கூட ஆரம்பித்து விடுகின்றன.


பணத்தைக் கொண்டு பொருட்களை விலைக்கு வாங்கமுடியும். ஆனால் குணத்தை வாங்க முடியாது. அதாவது அன்பு, கருணை, பாசம், நேசம், இரக்கம் , கல்வி மற்றும் வீரம் முதலியவைகள் . 

பணம் நமக்கு அடிமையாக இருக்கவேண்டுமென்றால்.... 


* எண்ணத்தில் கவனம் இருக்க வேண்டும்.

* காட்டுகின்ற உணர்வில் உண்மை இருக்கவேண்டும்.

* செயல்கள் சத்தியப் பாதையில் இருக்கவேண்டும் 

* செயல்களின் விளைவுகள் நன்மை தரக்கூடியதாய் இருக்கவேண்டும்.   

பணம் இருக்கும் போது நீ எதைப் பார்க்கிறாயோ அதைக்கொண்டு தீர்ப்பு சொல்லாதே. சிந்தித்து செயல்பாடு. எப்போதும் உன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதில் விழிப்புடன் இரு. வாழ்கையில் நீ முன்னேறும்போது உனது குணம் மிளிர்கின்றதா என்பதை உறுதி செய்துகொள். 


பணம் உன்னிடம் ஒட்டியிருக்கும் வரை மற்றவர்கள் உன்னிடம் ஒட்டியிருப்பார்கள். பணம் உன்னைவிட்டு விலகி விட்டால் நீ மற்றவர்களிடம் ஒட்டிக்கொள்ள வேண்டியிருக்கும். 

பணத்தின் மீது நமது கவனம் கூடக் கூட அது போகும் திசையிலெல்லாம் நம்மை இழுத்துக்கொண்டு செல்லும். அப்போது தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.


மனிதன் 'நார் ' என்றால் பணத்தை  'பூ ' என்று என்று சொல்லலாம். அதாவது மனிதனுக்கு மதிப்பு பணத்தால் மட்டுமே வருகின்றது. 


பணமுள்ளவனிடத்தில் குணமும் இருப்பது தான் மிகவும் சிறப்பு. அது தான் மனிதனை தெய்வமாக காட்டும்.

'பணம்' சம்பாதிப்பது 'மரம் ' நடுவதற்க்குச் சமமாகும். அதாவது நட்டவனுக்கு பலன் தருவதைக்காட்டிலும் மற்றவர்களுக்கு அதிக பலன் கொடுக்கின்றது. 


பணத்தை சம்பாதிக்க வேண்டும்!


அதேசமயத்தில் குணத்தை இழக்காமல்!

இன்னும்  வரும் ... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com   

Saturday, 20 October 2012

உள்விதி மனிதன் பாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள் - THE EXPIRY OF THIS EARTH

உள்விதி மனிதன் 
சம மனிதக் கொள்கை 
பாகம்:21 உள்விதி மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள் -




THE EXPIRY OF THIS EARTH 

இன்று எல்லோரும் பபரப்பாக பேசிக்கொண்டிருக்கும் செய்தி.. இந்த பூமி 21.12.12 அன்று அழியும் என்று சொல்கிறார்களே அது உண்மையா? அல்லது பொய்யா? அப்படியென்றால் உலகம் எப்போது அழியும்? இதோ உள்விதி மனிதன் கணிக்கும் உலகத்தின் வயதும் அதன் விளக்கமும் படிக்க..

பிரியமுள்ள மனிதா! நான் உனக்குள் உள்விதி மனிதனாக இருந்துகொண்டு உனக்கு உதவி செய்கிறேனா அல்லது இல்லையா? என்கிற சந்தேகம் இருக்கும். உன் உடல் நன்மைக்காக எவ்வளவு தூரம் பாடுபடுகின்றேன் என்பதை சிறிய உதாரணம் மூலம் விளக்குகிறேன். அதாவது ஒருவர் உன்னை அடிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். மெல்ல அடித்தால் அதை பற்றிக் கவலை படாமல் வாயை மூடிக்கொண்டு இருப்பாய். சற்று பலமாக அடித்தால் உன் கை அடிபட்ட இடத்திற்க்குச் செல்கின்றது. இன்னும் பலமாக அடித்தால் ஆ..ஊ ...என்று அலறித் துடிக்கிறாய். எதற்காக நீ கத்துகிறாய். யார் உனக்கு கத்த சொல்லி ஆணையிட்டார்கள், அதை சிந்தித்துப் பார்த்தாயா? எல்லாமே உன் உடல் சிறிது கூட சேதமடையக் கூடாது என்கிற எச்சரிக்கைக்குத் தான். 


என் இனிய மனிதா! உன் உடலின் இரத்த ஓட்டமே எனது ஜீவ ஓட்டம் என்பதை எப்போதும் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதன் மூலமாவது தாக்குதலுக்கு உட்பட்டால் அதை பார்த்து என்னால் சும்மா இருக்கமுடியாது. நீ நல்லவிதமாக இருக்கும்போது நானும் நன்றாக இருப்பேன். அந்த சமயத்தில் நீ மகிழ்ச்சியாய் இருப்பாய். ஆனால் உன் உடலில் ஒரு தாங்க முடியாத கஷ்டமோ அல்லது மனக்கஷ்டமோ வரும்போது என்னுடைய இயலாமையை 'வலி' மூலம் உனக்கு உணர்த்துகிறேன். அப்படி செய்தால் தான் நீ ஏதாவது செய்து வலியைப்  போக்குவாய். ஏனென்றால் வலி தொடர்ந்து இருந்தால் உடம்பு தாங்காது. உனக்குள் இருக்கும் நானும் தாங்கமாட்டேன். அந்த வலி அதிகமாகுமுன்னே மற்றும் வந்த வலி போகும்வரை நான் உன்னை சும்மா விடமாட்டேன். அதைப்போக்குவதற்கு என்னென்ன வழிகள் உண்டோ, தேவைபட்டால் யாரையெல்லாம் பார்க்க வேண்டுமோ அத்தனையும் உனக்குள் இருந்துகொண்டு உனக்கு கட்டளையிடுவேன். சில சமயங்களில் அதற்காக உன்னை தூங்க விடாமல் மன உளைச்சலையும் தருவதற்கும் தயங்கமாட்டேன். மீறி கவனிக்காமல் இருந்தால் அதைவிட ஒருபடி மேலே போய் உன்னை சாப்பிடாமலும் செய்துவிடுகிறேன். ஏனென்றால் உனது உடல் ஆரோக்கியம் எனது ஆரோக்கியம். நீ அதைப்பற்றி கவலை படாவிட்டாலும் அதை சரியாக வைத்துக் கொள்வது எனது பிரதான கடமையாகும்.

பண்புள்ள மனிதா! உன்னை எதற்காக படைத்திருக்கிறேன்? நீ பல சாதனைகளை சாதிக்க வல்லவன். மக்கள் குலத்திற்கு நன்மையையும், மகிழ்ச்சியையும் கொடுக்க பிறந்தவன், பலஜீவ ராசிகளின் துயரை துடைக்கவே இந்த பூமியில் அவதரித்தவன். மனிதனை தெய்வமாக்கி உனது பெயரழியாப் பெருவாழ்வு கொடுக்கவே படைத்திருக்கிறேன். அதை மறந்து நீ எனக்கு எதிராகப் பல செயல்களைச் செய்யும்போது உன்னை நீயே சிறிது சிறிதாக அழித்துக் கொண்டு வருவதோடு என்னையுமல்லவா அழிக்க நினைக்கிறாய். இந்த மாதிரியான செயல்களை உன்னைச் செய்யவிடாமல் தடுக்கவே உள்விதி மனிதனாக வந்துள்ளேன்.


மேன்மையான மனிதா! பத்து மாதம் தாயின் வயிற்றில் இருக்கும்போது நீ என் பேச்சுகளை, போதனைகளை, உன் கடமைகளை, நீ யார் என்பதையும், எதற்காக இந்தப் பிறவி  எடுத்துள்ளாய் என்பதையும் அமைதியாக கேட்டாய். என் வாக்குப்படி நடப்பேன் என்று சத்தியம் செய்து கொடுத்தாய். ஆனால்  நீ பூமியில் வந்த பிறகு, உனக்கு வயது ஏற ஏற , நல்லது கெட்டது தெரியத்தெரிய உனது செய்கைகள் தடம் புரண்டு மாறிவரும்போது அது என்னை வருத்தத்தில் ஆழ்த்துகின்றது.    


பாசமுள்ள மனிதா! உனக்கு வயது ஆக ஆக உன் அறிவும் ஆற்றலும் வளர வளர என் செயலை அலட்சிய படுத்திவிட்டு 'நான் தான் எல்லாம்' என்கிற மமதையில் நீ செய்ய வேண்டிய கடமையை மறந்து உன்னிஷ்டப்படி சுயநலத்திற்காக பல செயல்களை செய்து கொண்டிருக்கிறாய். அந்த செயல்களை அறவே அழித்து  மனிதகுலத்திற்கு நன்மை தரும் செயல்களை செய்யத் தூண்டவே உனக்குள் வந்துள்ளேன். 


இரக்கமுள்ள மனிதா! எனக்கென்று தனியாக எவ்வித ஆசையும் கிடையாது. எனக்குள்ள ஒரே கொள்கை மக்கள் இந்த உலகில் சீரோடும், சிறப்போடும், மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும். அவர்கள் எவ்வித கஷ்டமின்றி சந்தோஷமாக வாழவேண்டும். அதைப்போல் நீயும் 'என்னால் பிறர் கஷ்டப்படக் கூடாது' என்ற கொள்கையினைக் கடைபிடிக்கவேண்டும் என்பதை ஞாபகப் படுத்திக்கொண்டே இருக்கவே உள்விதி மனிதனாக இருக்கிறேன். 


சாந்தமுள்ள மனிதனே! இன்றைய நிலையில் இந்த உலகில் மனிதனுக்கே மனிதனைப் பற்றிய நல்லெண்ணம் இல்லை! மனிதனுக்குண்டான குணங்களை குழிதோண்டி புதைத்துவிட்டான். மனிதன் இப்போது மாறிவிட்டான். அதற்கு நீ மட்டும் பொறுப்பல்ல. உனக்குள் இருக்கும் நானும் அதற்கு பொறுப்பு. ஒன்று தெரியுமா ? நான் ஐந்தறிவு கொண்ட உயிர்களிடத்திலும் இருக்கிறேன். ஆனால் அவைகள் எனது கட்டளைபடி என்னோடு இணைந்து செயல்படுவதால் அவைகளுக்கு நான் கொடுத்த கட்டளையான 'மற்றவர்களுக்கு உதவி செய்வதே  கடமையாகக்' கொண்டு  வாழ்ந்து வருகின்றது. இதுநாள் வரை அவைகள் மாறவில்லை.

சக்தியுள்ள மனிதா! உன் கெட்ட எண்ணங்களால்  நீயும் அழிந்து, நான் படைத்த இந்த உலகத்தையும் அழித்துவிடுவாயோ  என்று எண்ணி உனக்குள் புது அவதாரம் எடுத்துள்ளேன். அது உண்மையாக்கும் வண்ணம் இன்றைய மனிதர்கள் பூமியின் அழிவை பலவாறு கணித்துக்கொண்டு இருக்கின்றனர். அந்த கணிப்பில் இந்த உலகம் இந்த வருடத்தில் (2012) அழியப் போகிறது என்று மக்களை பயமுறுத்தி வருவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே உள்விதி மனிதனாக வந்துள்ளேன். அவ்வளவு எளிதில் இந்த உலகத்தை அழிய விடமாட்டேன். இன்னும் சொல்லப் போனால் இந்த உலகிற்கு அழிவில்லை. 


                                      சராசரி மனிதனின் வயது X மக்கள் தொகை X புவியீர்ப்பு விசை 
பூமியின் ஆயுள் : --------------------------------------------------------------------------------------------
                                                        மனிதனின் சராசரி வேகம் 


சராசரி மனிதனின் வயது                                 : 50

(2012) மக்கள் மக்கள் தொகை                          : சுமார் 700 கோடி 

புவிஈர்ப்பு விசை                                                  : 9.8 மீட்டர் / நொடி 

மனிதனின் சராசரி வேகம்                               : 1.0 மீட்டர் / நொடி  


இதில் எவ்வளவு வருகின்றதோ அதுவே பூமியின் ஆயுள். கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 

இதை யாராவது மறுத்தால் அதை தெரியப்படுத்த வேண்டுகிறேன்.


ஆனால் தீய எண்ணம் உள்ளவர்கள் அனைவரும் இன்னும் திருந்தாவிட்டால் அவர்கள் அழிவதை யாராலும் தடுக்க முடியாது. உலகை அவர்கள் பிடியில் சிக்கிக்கொண்டு அழிவைத் தடுத்தேத்  தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு எல்லோரையும் நல்லவர்களாக்கி அவர்களை நல்வழிப் பாதையில் அழைத்துச் செல்லவே வந்துள்ளேன்.
உள் மனிதனின் ஓட்டம் தொடரும்.   
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

உன்னை உயர்த்திக் கொள்ள 'தகுதி' என்ற மூன்றெழுத்தின் சூத்திரம் - LIFE'S GROWTH FORMULA

அனுபவ பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 

உன் தகுதியை உயர்த்திக் கொள்ள 'தகுதி' 
என்ற மூன்றெழுத்தின் சூத்திரம் -
LIFE'S GROWTH FORMULA  

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தகுதியை உயர்த்திக்கொள்ள வேண்டுமென்று ஆசை இருக்கின்றது . அதற்காக அவன் பலவிதத்தில் முயற்சி செய்துவருகிறான். 'தகுதி ' என்ற மூன்றெழுத்தில் என்னதான் ரகசியம் இருக்கின்றது. இதோ அந்த சூத்திரம்..


தகுதி என்ற மூன்றெழுத்தில் 

த - தரம் என்ற மூன்றெழுத்து 

கு - குணம் என்ற மூன்றெழுத்து 

தி - திடம் என்ற மூன்றெழுத்து 

தரம்:

தரமுள்ள மனிதன் என்றுமே தாழ்ந்து போனதாக சரித்திரம் இல்லை. பளிங்கு கல் என்ன தான் பளபளப்பாக இருந்தாலும் அது வைரத்திக்கு ஈடு இணையாகுமா? போலியான தரம் உண்மையான மதிப்புக்கு சமமாகாது!

தரம் என்பது பல திறமைகள் சரியான விகிதத்தில் கலந்து இருப்பது. அதாவது ஒரு வார்த்தையின் தரம், தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துக்களை ஒன்று சேர்த்தலில் இருக்கின்றது. ஒரு பாடலில் இனிமை, தரமான அழகிய இராகங்களை கலந்து கொடுப்பதில் இருக்கின்றது. ஒரு தோட்டத்தின் அழகு, தரமான அழகிய பூச்செடிகளை பொறுத்து இருக்கின்றது. தரம் எந்தகாலத்திலும் நிரந்தரம்.

குணம்:

தண்ணீர் ஒரு தங்க பாத்திரத்தில் அல்லது வெள்ளி பாத்திரத்தில் அல்லது மண்பாத்திரத்தில் இருந்தாலும் அதன் குணம் மாறுவதில்லை. அதுபோல  உன்னுடைய நிலை உயர்ந்தாலும் , தாழ்ந்தாலும் மனிதனின் குணமான அன்பு, கருணை, பாசம், இரக்கம் , பொறுமை போன்ற குணங்களை மாறாமல் கடைப்பிடித்தல் அவசியம்.

திடம்:


தரம், குணம் இவைகள் இருந்தால் 'திடம் ' தானாக வந்துவிடும். இங்கு திடம் என்பது உன்மீதுள்ள உறுதியான நம்பிக்கை.

இதைத் தவிர வாழ்கையில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:


1. நீங்கள் வாழ்கையில் எதற்கு வேண்டுமானாலும் காத்திருங்கள். ஆனால் அது வீணாக போய்விடக்கூடாது.

2. நமது எண்ணங்களினால் தான் நாம்  இன்று இந்த நிலைமையில் இருக்கின்றோம்.  

3. நீங்கள் வாழ்கையில் எந்த வேலை வேண்டுமானாலும்  செய்ய நினைக்கலாம். ஆனால் அதை ஆரம்பிபதில் தான் அதன் வெற்றி இருக்கின்றது.

4. நமது 'வருங்காலம்' என்கிற பாறையை செதுக்கும் சிற்பி நாம் தான். அது நன்றாக செதுக்குவதும் , மட்டமாக செதுக்குவதும் நம் கையில் தான் இருக்கின்றது.

5. உங்களுக்கு எதற்கும் நேரம் கிடைக்காது. உங்களுக்குத் தேவையான நேரத்தை நீங்கள் தான் ஏற்ப்படுத்திக் கொள்ளவேண்டும். அவசியமான வேலைக்கு முன்னுரிமை கொடுப்பது மூலம் சாத்தியப்படும்.

வாழ்கையில் உங்கள் 'தகுதி'யை 
உயர்த்திக் கொள்ளுங்கள்!


மூன்றெழுத்து மூல மந்திரத்தின் உதவியினால்!  

இன்னும்  வரும் ... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com