Pages

Tuesday, 29 January 2013

SEE YOUR OPPORTUNITY IS VERY NEAR - உங்கள் பக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்

உங்கள் பக்கத்திலே அருமையான 
வாய்ப்பு இருப்பதை பாரீர் - 


SEE YOUR OPPORTUNITY IS VERY NEAR 


              
அனுபவப் பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 

                                

எரியக்கூடிய ஒரு மெழுவர்த்தி தானாகவே எரிந்துவிடாது. அது எரிவதற்கு வாய்ப்புகளைத் தேடுகின்றது. அதோ அதற்கு வாய்ப்பு தீக்குச்சியின் சுடர் வடிவத்தில் வருகின்றது. மேலும் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜன் உதவிகொண்டு தொடர்ந்து எரிகின்றது. அதுபோல 

                      

உலகில் பலர் எப்பொழுதும் வாய்ப்புகளைத் தேடும் வண்ணம் இருக்கின்றனர். சிலர் தேடிப்போன வாய்ப்புகள் கிடைக்காதபோது கிடைக்கும் வாய்ப்புகளை நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுகின்றனர். அதிலும் சில காலங்களே அவர்களால் தாக்கு பிடிக்க முடிகின்றது. அப்புறம் என்ன பழைய குருடி ! கதவை திறடி ! என்ற கதை தான். என்ன தான் விஷயங்கள் ஆயிரம் இருந்தாலும், அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருந்தாலும், சலிக்காத உழைப்பு இருந்தாலும், விடாத முயற்சிகள் அடங்கிய மெழுகுவர்த்தி நன்றாக எரிகின்ற போதும்  அவர்கள் எதிர்கொள்ளும் தோல்விகள், விமர்சனங்கள், தடைகள், கஷ்டங்கள், பிரச்சனைகள் போன்றவைகள் ஒரு கண்ணாடி ஜாடியாக அதன்மேல் கவிழும் போது தொடர்ந்து அந்த மெழுவர்த்தி எரிவது அணைந்து விடுகின்றது! 

          

அதற்கு காரணம் என்ன? மெழுவர்த்தி எரிவதற்கு பிராணவாயு என்கிற ஆக்ஸிஜன் தேவை. ஆனால் கண்ணாடி ஜாடிக்குள் குறைந்த அளவே ஆக்ஸிஜன் இருப்பதால் அது சீக்கிரமே அணைந்துவிடுகின்றது. உண்மையில் எரிவதர்க்கான ஆக்ஸிஜன் அந்த ஜாடி அளவே தான் உள்ளதா?  

                  

இதோ அணைந்த மெழுகுவர்த்தி கண்ணாடியை விட்டு வெளியில் வரும்போது தான் அது உணர்கிறது. உலகம் சுற்றிலும் ஆக்ஸிஜன் இருக்கிறது என்று. அது நாள் வரை கிணற்றுத் தவளையாய் இருந்ததை நினைத்து வேதனைபடுகிறது. 

 

அதாவது ஆங்கிலத்தில் ஒரு வாக்கியத்தை இருவர் வாசிக்கிறார்கள். ஒருவர் தோல்வி அடைகிறார். மற்றொருவர் அதே வாக்கியத்தை தனக்கு சாதகமாக்கி வெற்றி பெறுகிறார். அந்த வாக்கியம் தான் இது.

                           

முதல் வாக்கியத்தின் அர்த்தம் - OPPORTUNITY IS NO WHERE - அதாவது வாய்ப்பு எங்கும் இல்லை என்பது. அதனால் முதலாமவன் தோல்வியைத் தழுவினான்.

            

அதே வாக்கியத்தை இரண்டாமவன் எப்படி வாசிக்கிறான் என்றால் - OPPORTUNITY IS NOW HERE - அதாவது 'W' எழுத்தை சற்று முன்னாலும் 'H' என்ற இடத்தில் பிரிந்ததும் வாசிக்கிறான்- இப்போது இதன் அர்த்தம் முற்றிலும் வெற்றிக்குச் சாதகமாக 'வாய்ப்பு இங்கு இருக்கிறது' என்று மாறிவிடுகின்றது.


வெற்றியாளர்கள் பலர் நேற்று வரை முகவரி இல்லாமல் தான் இருந்தனர். ஆனால் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டு இருப்பதன் ரகசியம் இதோ.. அதாவது மெழுகுவர்த்தியாய் எரிந்துகொண்டிருக்கும் போது அவர்கள் தோல்வி என்கிற கண்ணாடி ஜாடி மூடும் போதெல்லாம் அதை உடைத்தோ அல்லது அந்த ஜாடியைவிட்டு வெளியில் வந்து வேறு ஒரு நல்ல வாய்ப்பை அமைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் 'தன்னால் முடியும்' என்கிற உறுதியோடும் 'முயலாமை, இயலாமை' போன்றவற்றை துரத்திவிட்டு கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியோடு தான் வெற்றியை நிலைநாட்டி வருக்கின்றனர்.    


           

வாய்ப்பு இங்கு இல்லை என்று முடங்கி, 
ஒதுங்கி விடாதீர்கள்.
அதோ உலகம் சுற்றிலும் வாய்ப்பு இருக்கின்றது. உங்களைப் போன்றவர்களுக்காக காத்திருக்கின்றது. பிடித்துக் கொள்ளுங்கள். கெட்டியாக.. விடாதீர்கள்!!


நன்றி ! வணக்கம்.

Monday, 28 January 2013

YOU WILL NOT WORRY IF YOU KNOW TO DO WORKS-வேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.

வேலைகளை கற்றுக்கொள் .
 வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.
YOU WILL NOT WORRY IF YOU KNOW TO DO WORKS
அனுபவப் பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 


   
இன்றைய இளைஞர்கள் பலர் பெரிய அளவில் படிப்புகளை படித்தும் அவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்புகளும், அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பதை இன்றைக்கு நிலவி வரும் நாடு தழுவிய நிதிநெருக்கடி மற்றும் பொருளாதார வீழ்ச்சியின் மூலம் தெரியவருகிறது. உள் நாட்டில் திறமைக்கான மதிப்பு இல்லாததால் வெளிநாடு சென்று சம்பாத்தியம் செய்யும் சூழ்நிலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 

   

சில இளைஞர்கள் படிப்பதில் கவனம் செலுத்தாமல் ஆட்டம், பாட்டு, நடிப்பு, பேச்சு, விளையாட்டு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகின்றனர். நமது நாட்டில் எல்லாத் துறைகளில் தங்களின் வாரிசுகளை இறக்கி வருவதால் உண்மையான திறமை மற்றும் அறிவு ஜீவிகளுக்கு இடமில்லாமல் போகிறது. அதாவது சமீபத்தில் ஒலிம்பிக் போட்டியில் தேந்தெடுக்கப் பட்டவர்கள் அரசியல் சிபாரிசினால் உள்ளே நுழைந்தவர்கள் என்கிற செய்தி நம் விளையாட்டுத் துறையின் லட்சணம் தெரிய வருகிறது. அதேபோல் அரசியலிலும் பரவி கொஞ்சம் கொஞ்சமாக இசை, பாட்டு , நடனம், சினிமா, தயாரிப்பு, வெளியீடு, டி.வி , நடிப்புத் துறையிலும் பரவிவிட்டது. இப்படி இருக்கும்போது சாதாரணமானவர்களுக்கு  எப்படி வாய்ப்புகள் கிட்டும்?  
  

இது இப்படியிருக்க மெத்த படித்தவர்கள் கடைசியில் படிப்பு இல்லாத அல்லது குறைந்த படிப்பு உள்ளவர்களிடம் போய் வேலை செய்யும் நிலை உண்டாகின்றது. இது எதனால்? இப்போதுள்ள இளைஞர்கள் படிப்பதோ ஏட்டுக் கல்வி. அதாவது வெறும் மனப்பாடம் செய்யும் படிப்பு. இதனால் உண்மையில் ஒருவித உபயோகமும் இல்லை. ஆடுவதற்கு, பாடுவதற்கு, விளையாடுவதற்கு, நடிப்பதற்குத் தேவையானது வெறும் அடிப்படை கல்வியே போதுமானது. ஆனால் தினப்பயிற்சி தான் வெகு முக்கியம். அந்த மாதிரியான துறைகளில் வாரிசுகள் நுழைந்து வருவதால் மற்றவர்களுக்கு வாய்ப்பு அதிகபட்சமாக 1 % கிடைத்தாலே அதிகம் தான்.
  
மேலும் இந்த கால இளைஞர்களுக்கு அரிசி எப்படி கிடைக்கிறது என்று தெரிவதில்லை. அவர்களுக்கு நெல்லிருந்து தான் கிடைக்கிறது என்கிறது கூட தெரிவதில்லை. தேங்காய் மரம் எப்படி இருக்கும் என்று கேட்கிறான்? அதாவது செய்முறை பயிற்சியோடு இருக்கின்ற கல்வி முற்றிலும் போய்விட்டது. அன்றாடம் உபயோகப்படும் பொருட்களைப் பற்றிய அறிவு சுத்தமாகவே இல்லை என்று கூறலாம். 

 
சிறிய சிறிய சோதனைகளைக் கூட பள்ளியில் செய்து காண்பிப்பதில்லை. பூவின் பாகங்கள், இலையின் வடிவங்கள், காய் கனிகள், வரலாற்று சிறப்புள்ள சுற்றுலா இடங்கள், சிறு சிறு தொழில்சாலைகள், தோட்டங்கள், பூங்கா, அணைகள், பொருட்காட்சிகள், இரயில் நிலையங்கள், துறைமுகம், விமான நிலையம்  போன்றவற்றை காண்பிப்பதோ அழைத்துச் செல்வதோ அறவே இல்லை எனலாம். இது தான் இன்றைய கல்வியின் நிலை. 
   
இன்னும் சொல்லப் போனால் இப்போது நன்றாக படித்த மாணவர்கள் கூட வங்கிகளில் பணம் செலுத்துவது எப்படி என்று தெரிவதில்லை! தபால் நிலையத்தின் பயன்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை. ஓரிடம் விட்டு ஓரிடத்திற்குச் சென்று விலாசம் விசாரித்து செல்லும் தைரியம் இல்லை. ஒரு வரி கூட ஆங்கிலத்தில் எழுதத் தெரிவதில்லை. என்னென்றால் அவர்களின் படிப்பு முறையும், சொல்லித்தரும் ஆசிரியர்களும் அப்படி இருக்கிறார்கள். சொல்லித் தரும் வகுப்பு ஆசிரியரைவிட அதிக அளவு டியூஷன் ஆசிரியர்களையும், நோட்ஸ் களையும் அதிகமாக நம்புகிறார்கள். சொந்தமாக சிந்திக்கும் ஆற்றல் வெகுவாக குறைந்துவிட்டது என்றே சொல்லலாம். அதுவும் அறிவியல், கணினி, கணிதப் பாடங்களில் சிறந்தவர்களை சந்திப்பது அரிதாகவே நிலவி வருகிறது. இதில் ஆய்வு மேற்கொள்பவர்கள் வெகுவாக குறைந்து விட்டார்கள்.

  
இளைஞர்கள் தங்களின் வருங்கால வாழ்க்கைக்கு வாழ்கையில் உபயோகப் படும் தொழில் கல்வியே முக்கியம் என்பதை இப்போதாவது தெரிந்து கொள்வது அவசியம். வெறும் பத்தக பூச்சிகளாக இருப்பதால் அவர்களின் எதிர்காலத்தில் குனிந்து நிமிர்ந்து ஒரு சிறு வேலை செய்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அதனால் வேலை கிடைத்தாலும் அங்கு நிரந்தரமாக தங்குவது கேள்விக்குறியாகவே இருக்கின்றது? என்னதான் படிப்பு இருந்தாலும் வேலை செய்யத் தெரிந்தால் தான் மதிப்பு என்று தாமதமாகத் தெரிந்துகொள்கிறார்கள். 
   
இதுநாள் வரையில்  மாவட்ட, மாநில அளவில் முதல் மதிப்பெண்கள் வாங்கி சாதனை படைத்தவர்கள் எத்தனை பேர் சுய தொழில் செய்து ஒரு சிறந்த வெற்றியாளாராக இருக்கின்றனர்?அப்படி இல்லவே இல்லை என்று கூறலாம். அவர்களில் பெரும்பாலானோர் எங்கேயாவது, யாரிடமாவது கை கட்டி, வாய் பொத்தி அடிமை பட்டு சம்பளம் வாங்குபவர்களாகவே இருப்பார்கள். என்னென்றால் தொழில் வேறு , படிப்பு வேறு. இரண்டும் இருக்கும் போது தான் சாதனை நிகழ்த்த முடியும். இன்றைய நிலவரப்படி தொழில் தான் படிப்பை விடச் சிறந்தது.
  
அதற்குத் தனியாக நேரம் செலவிடத் தேவையில்லை. இளம் வயது முதற்கொண்டு சிறு சிறு தொழில்களை சுயமாக கற்பதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுங்கள். அதுவே அவர்களுக்கு புதிய அறிவையும், தொழில் நுணுக்கத்தையும், கடின உழைப்போடு விடாமுயற்சி, தன்னம்பிக்கை, பொறுமையும் , வாழ்கையில் முன்னேற்றத்திற்கான வழியும் தெரியும். இந்த அனுபவமே பிற்காலத்தில் வெற்றிகரமாக தொழில் நடத்துவதற்கு பெரிதும் உதவும். 


அதாவது அன்றாடம் பயன்படும் மொபைல், கணினி, டி.வி, பிரிட்ஜ், ஏ.சி, எலெக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், தையல் மிசின், சமையல் அறையில் உபயோகமாகும் பொருட்கள், பாஷின் டிசைன், கிரைண்டர், மிக்சி, வாஷிங் மிசின், சைக்கிள் , பேன் போன்ற பொருட்களின் தொழில் நுணுக்கத்தை இளமை காலம் முதற்கொண்டே பழகினால் பின்னாளில் ராக்கெட், கப்பல் மற்றும் விமான தொழில் நுட்பத்தை எளிதாக பழகிவிடலாம். முதலில் தொழில் ஆர்வம் ஏற்பட்டாலே போதும். அந்த நம்பிக்கை எதிர்காலத்தில் மிகுந்த பலன் கொடுக்கும்.
 
சிறிய வயதில் தொழில் ஒன்றை கற்றுக்கொள்ள வழி வகை செய்யுங்கள். உங்கள் குழந்தை வருங்காலத்தில் ஜி .டி நாயுடாகவோ, பில் கேட்ஸ் ஆகவோ மாறுவதற்கு வாய்ப்பு மிகவும் அதிகம். அவ்வாறு தொழிலில் ஈடுபடும்போது தன்னம்பிக்கையோடு வேறு தவறான சிந்தனைகள் வருவது தவிர்க்கப் படும். உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். இதை ஒரு பழக்கமாக பழகிவிட்டால் அவர்களின் எதிர்கால வாழ்கையில் வெற்றி கிடைப்பது நிச்சயம்.
      

நன்றி 
   

வணக்கம்

  .

MATCHING 10 FOR HAPPY MARRIAGE LIFE - திருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி

MATCHING 10 FOR HAPPY MARRIAGE LIFE - 
திருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி 
அனுபவப் பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 
ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று . அது தான் வாழையடி வாழையாக உங்கள் குலம் செழிக்க நல்ல வாரிசுகளை கொடுக்கும் வைபவம். பொதுவாக இருமனங்களின் சங்கமம தான் திருமணம். அந்த இரு மனங்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை தெரிந்து கொண்டால் உங்கள் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். அதற்கு பத்து பொருத்தம் அவசியம். அவைகள் என்னென்னவென்று இப்போது பார்ப்போம்.

1. மனப்பொருத்தம்:

மனப்பொருத்தம் என்றால் எனக்கு மஞ்சன் நிறம் பிடிக்கும். அவளுக்கும் மஞ்சள் நிறம் பிடிக்கும். எனக்கு தோசை பிடிக்கும். அதேபோல் அவளுக்கும் தோசை என்றால் மிகவும் இஷ்டம். எனக்கு சினிமா பிடிக்கும். அவளுக்கும் சினிமா பிடிக்கும் என்பது அல்ல. அப்படி இருப்பவர்கள் மனப்பொருத்தம் உடையவர்கள் அல்ல. அவர்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். அப்படியிருந்தால் பிரயோஜனம் இல்லை. இன்னும் சொல்லப்ப்போனால் அதுவும் ஒருவகையில் போலித்தனத்தின் வெளிப்பாடுகள் தான். மனப்பொருத்தம் என்பது ஒருவளுக்கு பிடித்தது அந்த ஒருவன் ஏற்றுக்கொள்ள் வேண்டும். அதேபோல் ஒருவனுக்கு பிடித்தது அந்த ஒருத்தியும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இருவரும் இப்படி இருக்கும் வாழ்கையில் புரிதல் ஓங்கும். நம்பிக்கை வளரும். இல்லறம் சிறக்கும். முக்கியமாக இருவருக்கும் பொறுமையும் பொறுப்பும் நிறைந்து இருக்க வேண்டும்.

2. உறவு மற்றும் சமூகத்தை அனுசரித்தல்:

இருமனங்களின் அனுசரிப்பு குடும்பத்தில் வெளிப்படும். அந்த குடுமப் அனுசரிப்பு நட்பு, உறவு மற்றும் சமூகத்திலும் பிரதிபலித்து குடும்பத்திற்கு நல்ல பெயரையும் புகழையும் வாங்கித்தரும்.

3.  அமுத சுரபி போல் அன்பு:

கொடுக்க கொடுக்க குறையாதது அன்பு என்பதை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்று இல்லாமல் மோகமும் ஆசையும் கலந்து  ஆயுள் முழுவதிலும் ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டும். இந்த அன்பு தான் இனிய வாழ்க்கைக்கு அடித்தளம் என்பதை தெரிந்து கொண்டு எப்போதும் விட்டுக்கொடுத்து அன்புடன் வாழ்க்கை நடத்தும்போது குடும்பமே மகிழ்வு பெறும்.

4. நீண்ட ஆயுள் :


சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும். அதாவது ஆரோக்கியமான மனமும் உடலும் நீண்ட ஆயுளைத் தரும். அதற்கு மனமும், உடலும் பரிசுத்தமாக இருக்கவேண்டும். வெளிப்படையாக உணர்வுகளை பகிர்ந்தது கொள்ளும்போது மனஅழுத்தம் குறைகிறது. மகிழ்ச்சி அதிகரிக்கிறது.

5. என்றும் பதினாறு:

இருவருக்குமிடையே உள்ள நெருக்கம், கவர்ச்சி என்றும் பதினாறு போல் இளமையாக இருக்க வேண்டும். வயது ஏறினாலும் இலையான துடிப்பும், எண்ணமும், மனமுடன் இருக்கவேண்டும்.

6. அள்ள அள்ள குறையாத செல்வம்:

பணம் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்று தான். நிறைந்த மனமுடன் இருந்தாலே பணம் சேர்ந்து விடும். எப்போதும் ஒளி வீசும் பிரகாசமான வாழ்க்கை எப்படியிருக்க வேண்டுமென்றால் நாளுக்கு நாள் வான் நிலவு வளர்ந்து பௌர்ணமி நிலவாய் முழுநிலவாய் வாழ்கையில் வளர்ச்சி இருக்க வேண்டும். அதற்கு திட்டமிட்ட வாழ்க்கை தான் மிகவும் அவசியம். திட்டமிட்ட வாழக்கை  ஒரு குறிக்கோளை உருவாக்குகிறது. அதை அடைவதற்கு இருவரும் ஒன்று சேர்ந்து உழைக்கும்போது வாழ்க்கையும் வளருகிறது.

7. திருப்தியான வாழ்க்கை:

ஒரேநேரத்தில் அனைத்தையும் வாங்குவதோ அல்லது அனுபவிப்பதோ யாராலும் முடியாத ஒன்றாகும். கிடைக்காததை எதிர்பார்த்து இருக்கின்ற வாழ்கையை அனுபவிக்கத் தவறினால் காலம் முழுவதும் அதிருப்தி ஏற்பட்டு வாழ்வு நரகமாகவே மாறிவிடும். இருக்கின்ற அல்லது கிடைத்த ஒரு வாழ்கையை இனிமையாக திருப்பதியாக வாழும் மனப்பக்குவம் சிறந்த பொருத்தத்திற்கு ஒரு அடையாளமாகும்.

8. நல்ல வாரிசு:

பேர் சொல்லும் பிள்ளை வேண்டுமென்றால் இருவரும் ஒத்த மனதில் தான் இருக்கின்றது. மனமும் உடலும் ஒன்றாகும்போது அழகான வாரிசு உருவாகின்றது. இவற்றுக்கு நல்ல குணமும் மற்றும் பழக்கவழக்கமும் இருந்தால் முத்தான வாரிசு உண்டாகும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.  

9. அமைதியும், மகிழ்ச்சியும்:

அமைதி எங்கு இருக்கின்றதோ அங்கு மகிழ்ச்சி குடியிருக்கும். வாழ்கையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள், புயலும் தென்றலும், உயர்வும் தாழ்வும், கஷ்டமும் நஷ்டமும், சந்தோசமும் துக்கமும் மாறி மாறி வரும். எது வந்த போதும் அதை சமாளித்து வாழ்கையில் என்றும் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு இருவரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். தனி மரம் தோப்பாகாது. ஒரு கையால் ஓசை வராது. இரு சக்கரம் எந்த ஒரு பாரத்தையும் இலேசாக தூக்கிச் செல்லும். நம்மால் எல்லாம் முடியும் என்ற நம்பிக்கை இருவரிடம் இருக்கும்போது வாழ்கையில் என்றும் மகிழ்ச்சி தான்.

10. வாரிசுகளின் வளர்ச்சி:

வெறும் வாரிசுகளை கொடுப்பது மட்டும் போதாது. அந்த வாரிசுகளுக்கு அடித்தளமாக இருந்து அவர்களின் வளச்சிக்கு உறுதுணையாக இருந்து அனைத்து உதவிகளையும் காலம் தாழ்த்தாமல் செய்து கொடுக்கவேண்டும். முக்கியமாக தொழில் மற்றும் கல்வியை கொடுப்பதோடு உங்கள் அனுபவங்களையும் பகிந்துகொள்ளவேண்டும். அப்போது தான் பேறு பெற்றதன் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். அது இருவரின் கையில் இருக்கின்றது.


மேற்கண்ட பத்து பொருத்தம் இருக்கும் போது உங்கள் திருமண வாழ்வு மிகவும் மகிழ்ச்சி தரும். இத்தகைய பொருத்தங்கள் தானாக வருவதில்லை. நாமாக உண்டாக்கிக்கொள்ள வேண்டும். உங்கள் திருமண வாழ்க்கை பலரின் வாழ்த்துகளுடன் இனிமையாக இருக்கட்டும்.
வாழ்த்துக்கள்.