Pages

Monday, 11 March 2013

திரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'

சின்னத்திரை, திரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது' என்ற வாசகம் வேண்டும்  
           
இன்றைய நாட்டு நடப்புகள் 
         
மதுரை கங்காதரன் 

           


நாம் சின்னத்திரை அல்லது திரைப்படம் பார்க்கின்ற போது இடை இடையே 'சிகரெட் பிடிக்கும் காட்சிகள் அல்லது மது அருந்தும் காட்சிகள்' வரும்போது ஒன்றோ அல்லது இரண்டோ இந்த வாசகங்கள், அதாவது 'புகை பிடிப்பது புற்று நோய் உண்டாகும்' ' புகை பிடிப்பது உயிரைக் குடிக்கும்' என்கிற வாசங்களும் 'மது அருந்துவது வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு' என்று கட்டாயம் காட்டுவார்கள். அதன் நோக்கம் இப்படி காட்டினாலாவது மக்கள் அதை நாடுவதை, விரும்புவதை குறைத்துக் கொள்வாரகள் என்பது தான். 

                  

ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே தான் இருக்கின்றது. இன்னும் சொல்லப்ப் போனால் அந்த வாசகங்கள் வரும்போது சிறியவர்களின் கவனம் குடிப்பவர்கள், புகை பிடிப்பவர்களை கூர்ந்து பார்க்க நேருகிறது. அது ஒரு விளம்பரமாகவே தெரிகின்றது. அது சரி ஆங்கிலப் படங்களில் வரும்போது ஆங்கிலத்தில் அத்தகைய வாசகங்கள் வருவதில்லை. ஏன்?

       

அதற்குப் பதிலாக சின்னத் திரை மற்றும் திரைப்படங்களில் லஞ்சம் கொடுக்கின்ற காட்சிகள் வரும்போது ' லஞ்சம் வாங்கினால் சிறை தண்டனை கிடைக்கும்' என்றும், பாலியல் பலாத்காரம் நடக்கும் காட்சியில் 'பாலியல் பலாத்காரம் ஆயுள் அல்லது மரண தண்டனை' கிடைக்கும் என்றும் பெண் கொடுமை, விபச்சாரம் , ஏமாற்றுத் திருமணங்கள், பால்யத் திருமணம், முதியோர் கொடுமை, ஆபாசம், கறுப்புப் பணம், பதுக்குதல், தற்கொலை, வரதட்சணை காட்சிகளில் 'கடுமையான தண்டனை கிடைக்கும்' என்றும், அராஜகம், உடலில் ஆசிட் ஊற்றுதல், கொலை செய்யும் காட்சிகளில் 'ஆயுள் அல்லது மரண தண்டனை' உறுதி என்றும், ஏமாற்று, மோசடி, பொய் காட்சிகளில் 'கடுமையான தண்டனை கிடைக்கும்' என்றும், சட்டம் மற்றும் காவல் துறையை மதிக்கதவர்களுக்கு 'XXX ஆண்டுகள் தண்டனை ' கிடைக்கும் என்றும், குழந்தை தொழிலார்கள், அடிமைத் தொழிலார்கள் இருக்கும் காட்சிகளில் 'தண்டனை பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் வரவேண்டும். அது எந்த மொழியானாலும் சரி கண்டிப்பாக அதை பின்பற்றியே தீரவேண்டும் என்கிற கேளிக்கைச் சட்டம் கொண்டுவரப்படவேண்டும். 

                            

அதை 'சின்னத்திரை மற்றும் திரைப்படம்' சென்சாருக்கு வரும்போது காட்டாயம் மேற்கண்ட வாசகம் இருப்பதை உறுதி செய்த பிறகே மக்கள் பார்வைக்கு வெளி வரவேண்டும். இப்போதுள்ள A / U சான்றிதல்கள் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை. அப்போது தான் திரைப்படங்கள், எவ்வாறு தரக்குறைவாக, மக்கள் சமுதாயத்தை கெடுக்கும்படி இருக்கின்றது என்பது தெரியும். அதிகமாக வாசகங்கள் வரும் திரைப்படம் கட்டாயம் வன்முறை தூண்டும் திரைப்படம் என்று முத்திரை குத்திட வேண்டும். ஏனென்றால் இத்தகைய விழிப்புணர்வு இல்லாமையால் இளைஞர் சமுதாயம் தெரிந்தோ தெரியாமலோ பல தவறுகள் செய்து வருகிறார்கள். கதாநாயர்கள் எந்த தவறு செய்தாலும் அது சரி தான் என்று இளைய சமுதாயம் உணருவதை தடுத்திடவேண்டும். சட்டம், நீதி மற்றும் தண்டனை பற்றிய விழிப்புணர்வு இருந்தால் தான் நல்ல சமுதாயம் எதிர்பார்க்க முடியும். ஓரளவு சட்டம் பற்றிய தெளிவும், பயமும் இதன் மூலம் கொடுக்கலாம்.

              

இதை நடை முறைப்படுத்தினால் கட்டாயம் நாட்டு மக்களிடையே கண்டிப்பாக நன்மைதரும் மாற்றங்கள் நிகழும். இதை உலகம் முழுவதிலும் நடைமுறைப் படுத்தும்போது மக்களின் வாழ்க்கை பாதுகாப்பாகவும், இயல்பாகவும் இருக்கும். இதை தனி ஒரு மனிதனால் சாதிக்க முடியாது. தன்னார்வத் தொண்டுகளும், மக்கள் உரிமை அமைப்புகளும், மக்கள் சேவை அமைப்புகளும், பெண் பாதுகாப்பு அமைப்புகளும், மக்களும், அரசுகளும் ஒன்று சேர்ந்து ஒலி கொடுத்தால் தான் வெற்றி கிடைக்கும்.

                 

எடுத்தவுடன் அனைத்தும் கொண்டுவருவது என்பது முடியாத காரியம். ஆனால் இப்போது நடைபெறும் லஞ்சம் மற்றும் பெண் கொடுமைகள், பலாத்க்காரம் போன்றவைகளை முதலில் வெகுசீக்கிரமாக கொண்டு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும். பொது மக்கள் இந்த கருத்துக்களை பற்றி பதிவு செய்தால் இன்னும் அதிகமாக கவனத்திற்கு வரும். உங்கள் பதிவுகள் சக்தியுள்ளதாக இருக்கட்டும். ஆதரவு தாரீர். மாற்றம் கொண்டுவருவோம். புதிய உலகம் படைப்போம். புதுச் சரித்திரம் எழுதுவோம்.

             

நன்றி


வணக்கம்.
      

Monday, 25 February 2013

நீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா ?

நீங்கள் குண்டா / ஒல்லியா / கருப்பா / குட்டையா / நெட்டையா / தொப்பையா /அழகைக் கூட்ட வேண்டுமா ?எதற்கு பயம்? நாங்கள் இருக்கிறோம் !
விழிப்புணர்வு / நாட்டு நடப்பு கட்டுரை 
         
மதுரை கங்காதரன்  


டி.வி யை திருகினாலும் சரி, பேப்பரை விரித்த்தாலும் சரி, எந்த வலை தளத்திற்கு போனாலும் சரி, குறுந்தகவல்கள் வந்தாலும் சரி , யாரைப் பார்த்தாலும் சரி , எந்த விற்பனையாளரும் சரி மேற்கூறிய ஏதாவது ஒன்றைப் பற்றி கண்டிப்பாக பேசியேத் தீருவார்கள். அதாவது ஒருவர் மற்றொவருவரை கவருவதால் தன்னுடைய அந்தஸ்து கூடும் என்கிற  ஒரே  குறிக்கோள் தான் இத்தகைய செயல்களைச் செய்யச் சொல்கிறது. அது மட்டுமா ? ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியே அழகு நிலையங்கள் பல்கி பெருகி வருகின்றது. அதிலும் பல 'சிறப்பு நிபுணர்களும்' முளைத்துவிட்டார்கள். சிகிச்சை முறைகள் ஆயுர்வேதிக் மருந்து வேண்டுமா அல்லது அல்லோபதி மருந்து வேண்டுமா என்று போட்டி போட்டுக்கொண்டு மக்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.
       
ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த அல்லது படித்த தகவல்களை பரிமாறிக்கொள்ளத் தவறுவதில்லை. இவ்வளவு ஏன் தினம் தினம் இதே கவலையோடு தான் தூங்குகின்றனர், காலையில் எழுகின்றனர்! இந்த குறையினால் வாழ்க்கையில் ஏதோ பெரிய ஒன்றை இழந்துவிட்டது போல எண்ணி முகத்தில் கலையில்லாமல் எந்தெந்த வழிகளில் அழகை கூட்ட வேண்டுமோ, என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்து பார்த்தும் தாங்கள் நினைக்குமளவிற்கு முன்னேற்றம் இல்லை என்பதை மிக மிக தாமதமாக, பக்க விளைவுகள் வந்த பிறகு தான் அதை பின்பற்றுவதை தவிர்க்கின்றனர். கட்ட கடைசியில் 'உள்ளதும் போச்சுட லொல்ல கண்ணா' என்று புலம்புவது தான் மிச்சம்.

எதற்கு எதற்கு மக்கள் அக்கறையோடு இருக்கிறார்கள் என்பதற்கு சில உதாரணங்கள்.

                          

முடி கொட்டுவதை தடுப்பதற்கு ஒரு தைலம் :  இந்த XXX தைலத்தை தொடந்து தடவுங்கள் நிச்சயம் முடி உதிர்வதை நின்றுவிடும் என்று ஒரு தைலத்தை கொடுப்பார்கள். தினம் ஒரு தைலம் அறிமுகமாகின்றது. இவைகள் யாவும் சில மாதமே வந்து மறைந்து விடுகின்றது. ஆனால் அவர்கள் சொல்வதோ 'இதை தேங்காய் எண்ணையில் கலந்து தேய்த்து வாருங்கள் . முடி கொட்டுவது நின்றுவிடும்' என்பார்கள். 

முடி கொட்டுவதற்கு காரணம், அநேகம் பேர் தினமும் எண்ணெய் தடவுவதே இல்லை. முடியை பெரும்பாலும் காய்ந்து தான் இருக்கும். அது தண்ணீர் ஊற்றாத செடி போல. அது எப்படி பட்டு போகின்றதோ அது போல் தலைமுடியும் கொட்டி விடுகின்றது.
             
இதை தவிர்க்க நல்ல தரமுள்ள தேங்காய் எண்ணெய்தினமும் தவறாமல்  தடவி வந்தாலே போதும். மேலும் நல்ல பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது  முடியை உறுதியுடன் இருக்கச் செய்யும் வழியாகும். ஒரே நாளில் பலனை யாராலும் தர இயலாது. ஆகவே பலன் மெல்லவும், உறுதியும் உங்களுக்கு தேவையானால் தெரிந்த இயற்கையான வகைகளை மட்டுமே உபயோகிங்கள். 

உடல் எடையைக் குறைப்பதற்கு மருந்து மற்றும் சாப்பாடு முறை:

                            

இதை சாப்பிடக் கூடாது, அதை சாப்பிடக் கூடாது. எண்ணெய் , இனிப்பு பலகாரங்கள், நொறுக்கு தீனிகள் சாப்பிடக் கூடாது. சாதாரணமாக இவைகள் குறைத்தாலே உடல் எடை குறைந்துவிடும். அதோடு நிற்காமல் ஏதோ ஒரு பொருளைக் கொடுத்து இதை கொண்டு 20 தடவை உட்கார்ந்து எழுந்தால் மூன்றே மாதத்தில் எடை குறையும். தியானம், யோகாவும் செய்யச் சொல்வார்கள். அதே சமயத்தில் சில மருந்துகளையும் சாப்பிட சொல்வார்கள். பணம் செலவழித்தது தான் மிச்சம். பலன் என்னவோ பூஜ்யம் தான். ஏனென்றால் மேற்க்கூரியத்தை யாரும் தவறாமல் செய்ததாக சரித்திரம் இல்லை. அந்த சமயத்தில் ஆர்வமாக செய்வார்கள். பிறகு மறந்து விடுவார்கள்.

இதை தவிர்க்க தினம் தினம் உணவுக் கட்டுப்பாடு, தியானம் மற்றும் யோகா வை தவறாமல் செய்து வந்தாலே போதும். மற்ற எதுவும் தேவையில்லை.

இதில் என்ன கூத்து என்றால், எல்லாமே சில நாட்கள் தான் பின்பற்றுவார்கள். பிறகு சீ .. என்று சலித்து பழையபடி இருந்துவிட்டு போகட்டும் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். பணம் வீணாகியது தான் மிச்சம். மனம் பாதிப்பு அடைந்தது தான் பலன். ஆக நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

முகப்பரு நீக்க , முகத்தின் அழகு கூட்ட :

இதோ இந்த YYYY கிரீம் தடவுங்கள் கருப்பான உங்கள் முகம் வெள்ளையாக மாறும். இந்த சோப்பை கொண்டு தினமும் மூன்று வேலை வெது வெதுப்பான நீரில் முகத்தைக் கழுவுங்கள். உங்கள் முகம் பள பளவென்று ஜொலிக்கும்.

பெரும்பாலும் யாருமே ஒரு தடவைக்கு மேல் முகத்தை கழுவுவதில்லை. அப்படியே வெதுவெதுப்பான நீரில் கழுவுவதில்லை. பொதுவாக வெதுவெதுப்பான நீர் முகத்தில் இருக்கும் எண்ணெயும், பிசுபிசுப்பையும் அகற்ற வல்லது. ஆக அது மட்டும் செய்து சாதாரண சோப்பை உபயோகித்தாலே போதும். உங்கள் முகம் பளிச்சிடும். வறட்சியான முகமாக இருந்தால் முகத்தை கழுவுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு சிறிதளவு தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தாலே போதும்.

உயரமாக வளருவதற்கு:

இதோ போஷாக்கு நிறைந்த சத்துள்ள டானிக் மற்றும் பானம். இதை பாலில் கலக்கி சாப்பிட்டால் உங்கள உயரம் நான்கே மாதத்தில் அதிகமாகும். 

பாலென்றால் யாரும் விரும்பி குடிப்பதில்லை. பின் எப்படி சத்து கிடைக்கும். உயரமாக வளரமுடியும். 

வாரம் மூன்று முட்டை மற்றும் தினமும் பாலை அருந்தினாலே உங்களுக்கு பலம் கிடைக்கும். உயரமும் கூடும். தினமும் 15 நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது தவறக்கூடாது. இவைகள் எல்லாம் நன்றாக வேலை செய்வது உண்மையானால் இந்நேரம் ஜப்பானியர்கள் எல்லோரும் நெட்டையாக இருப்பார்கள்.

                                    

கடைசியாக உங்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால் சினிமா நடிகர், நடிகை யானாலும் சரி, சின்னத்திரை ஆனாலும் சரி பல நடிக , நடிகையர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு தட்டிப் போவதன் காரணம் மேற்கூறிய பிரச்சனைகளே. ஏன் அவர்கள் நினைத்தால் தங்கள் அழகைக் கூட்ட ஆயிரங்கள் என்ன லட்சங்கள் கூட செலவழிக்கத் தயாராக் இருப்பார்கள். அவர்கள் இதைவிட அதிக தரம் வாய்ந்த பொருட்களை உபயோகப்படுத்தியும் இருப்பார்கள். பலன் என்னவோ சொல்லிக் கொள்ளும்படி இல்லாத காரணத்தினால் அவர்கள் வாய்ப்பை இழக்கின்றனர். பெரும்பாலும் அலர்ஜியால் பாதிக்கப் பட்டு இருக்கின்ற அழகையும் கெடுத்துக் கொண்டவர்கள்  தான் அதிகம் பேர்.

இன்னும் ஒருபடி அதிகமாக சொல்லப் போனால் நடிகர்கள் புருவங்கள், மீசை எல்லாமே ஒட்டு ஆகவோ அல்லது கருப்பு மையால் வரைந்தோ இருப்பார்கள். தலையில் முடி இல்லாததால் டோபா அல்லது விக் போட்டிருப்பார்கள். முகத்தில் சுருக்கங்களை மறைக்க அரை இஞ்ச் பவுடர் அல்லது கிரீம் போட்டிருப்பார்கள். எல்லாமே டக் டக்கென்று காட்சிகள் மாறுவதால் நமக்கு அதிகமாக வித்தியாசம் தெரிவதில்லை. நடிகையர்கள் கூட அப்படித் தான்.

எந்த ஒரு கருப்பான நடிகர்கள் சிகப்பாக நேரில் காட்சியளித்திருக்கிறார்களா? குட்டையானவர்கள் நெட்டையாக வளர்ந்துள்ளனரா? ஓம குச்சியை இருப்பவர்கள் குண்டாக அல்லது குண்டாக உள்ளவர்களாக மாறியுள்ளனரா? தொப்பை உள்ளவர்கள் சிலிம் ஆக மாறி இருக்கின்றனரா? ரூபாய் லட்சம் கொடுத்து தலைமுடியை ஒட்டிகொண்டவர்கள், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு இருப்பவர்களைப் பாருங்கள். அதன் உண்மை புரியவரும்.காரணம் சில இயற்கைகள் மாற்றுவது முடியாத காரியம்.    

பிரபல ஹாலிவுட், பாலிவுட் மற்றும் கோலிவுட் நடிகர்கள்  என்னென்னவோ எவ்வளவோ எங்கெங்கோ பல லட்சம் செலவு செய்து பார்த்தார். அவர் முகம், முடியில் எதுவும் மாற்றமில்லை. இன்னும் சொல்லப் போனால் முன்பை விட அழகு குறைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். இயற்கையில் இருக்கும் அழகு என்றும் நிரந்தரம். செயற்கையாய் செய்துகொள்ளும் அழகு சிறிது நேரத்தில் மறைந்து போகும். மீண்டும் அழகை ஏற்றிக்கொள்ள வேண்டும். மேக் அப் இல்லாமல் எந்த ஒரு நடிகர் நடிகையும் வெளியில் வரமாட்டார்கள். அப்படி வந்தாலும் பார்க்குபடி இருக்க மாட்டார்கள்.  

இதையும் மீறி சில நடிக, நடிகையர்கள் என்றும் இளமையாக இருப்பதன் இரகசியம் அவர்கள் விதவிதமான ஷாம்புகள்  உபயோகிப்பதால் அல்ல, விலை உயர்ந்த கிரீம்கள்  தடவுவதால் அல்ல, அழகுகலை நிபுணர்கள் பரிந்துரை செய்யும் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் அல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் மேற்கொள்ளும் தினம், தினம் செய்யும் உடற்ப்பயிற்சி, தியானம், யோகா போன்றவை. இவைகளை அவர்கள் பிரமாதப்படுத்திச் சொல்வதில்லை. ஏனெனில் இவைகளுக்கு செலவு இல்லை. வரவும் இல்லை அவர்கள் பணத்திற்காக மட்டுமே சோப்பு, கிரீம், ஷாம்பு  என்று விளம்பரத்தில் நடித்து வருகின்றனர். உண்மையில் அவைகள் அவர்கள் உபயோகிப்பது கிடையாது.

ஆகவே..
இயற்கையாய் இருங்கள்..

இயற்கையை பின்பற்றுங்கள்..

இளமையாய் உணருங்கள்..
இன்பமாய் வாழ்க்கையை அனுபவியுங்கள்..     

  

Monday, 18 February 2013

உங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது ? HOW ABOUT YOUR LIFE? புதுக்கவிதை - MADURAI GANGADHARAN

உங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது  ?
        
              HOW ABOUT YOUR LIFE?
                        
                                  புதுக்கவிதை 
                            மதுரை கங்காதரன் 
                          
வாழ்க்கை எனக்கு கடவுள் போல 
இருப்பது போல் இருக்கின்றது 
இல்லாதது போலும் இருக்கின்றது.

வாழ்க்கை எனக்கு அதிர்ஷ்டம் போல 
எப்போது வரும் இன்று தெரியவில்லை 
எப்போது வராது என்றும் தெரியவில்லை.

வாழ்க்கை எனக்கு கனவு போல 
தூக்கும் போது இனிமையாய் இருக்கிறது 
விழிக்கும்போது கசப்பாய் இருக்கிறது.

வாழ்கை எனக்கு பேயைப் போல 
நேற்றும் அடித்து விரட்டுகிறது 
இன்றும் அடிக்க வருகின்றது.



வாழ்க்கை எனக்கு மனம் போல 
நேற்று நான் நினைத்தபடி நடந்தது 
இன்றும் அதுபோல் நடக்கிறது.

வாழ்க்கை எனக்கு குரங்கு போல 
நேற்று இருந்த குணம் இன்றில்லை 
இன்றைய குணம் நாளை மாறிவிடுமோ?

வாழக்கை எனக்கு டி.வி சீரியல் போல 
'முடியும்' என்று நினைக்கும்போது தொடர்கிறது 
'தொடரும்' என்கிறபோது முடிந்து விடுகிறது.

வாழ்க்கை எனக்கு கிரிக்கெட் போல 
எப்போது 'சிக்ஸர்' அடிப்பேன் 
எப்போது 'டக் அவுட்' ஆவேன் தெரியவில்லை.

வாழ்க்கை எனக்கு விதை போல 
நேற்று தான் விதைத்தது போல இருந்தது.
இன்று நெடு நெடுவென்று வளர்ந்துவிட்டது.

வாழ்க்கை எனக்கு கடல் போல் 
நீந்தத் தெரிந்தோர் பிழைக்கின்றனர் 
தெரியாதோர் செத்து மடிகின்றனர்.

வாழ்க்கை எனக்கு விலைவாசி போல 
தினம் தினம் ஏறிக்கொண்டிருக்கின்றது 
ஏறிய வயது இறங்குவதுண்டோ ?

வாழ்க்கை எனக்கு செல்வம் போல 
நேற்று என்னிடத்தில் இருந்தது 
இன்று வேறு ஒருவனிடத்தில் போய்விட்டது.

வாழ்க்கை எனக்கு தேன்கூடு போல 
கஷ்டப்பட்டு கட்டியது நான் 
ஆனால் அனுபவிப்பதோ வேறொருவன்.

பொதுவாக வாழ்க்கை என்பது 
உண்மையும் பொய்யும் கலந்த கலவை 
பிறப்பும் இறப்பும் கொண்ட அதிசயம்.
                 
                               நன்றி 
                
                          வணக்கம்.
 

Friday, 15 February 2013

என்னைக் கவர்ந்த வெண்ணிலாவே - MY FAVORITE MOON - புதுக்கவிதை

      என்னைக் கவர்ந்த வெண்ணிலாவே -
                        
                       MY FAVORITE MOON -
                        
                                            புதுக்கவிதை 
                                      மதுரை கங்காதரன் 

இரவின் இருளைப் போக்க வந்த 
எப்போதும் எரியும் அணையா விளக்கு நீ 
எண்ணெய் திரியில்லாமல் இயற்கை தந்த 
இருளை அகற்றும் ஒளி விளக்கு நீ 

கவிஞர்களுக்கு நீ கற்பனை ஊற்று 
காதலர்களுக்கு நீ அழகு தேவதை 
மழலைகளுக்கு நீ காட்சி பொருள் 
எல்லோருக்கும் நீ அதிசயப் படைப்பு.



தூய அன்பு உடையவர்களுக்கு நீ உதாரணம் 
வெள்ளை உள்ளங்களுக்கு நீ எடுத்துக்காட்டு 
கறைபடியாத வாழ்க்கைக்கு நீ சாட்சி 
பரிசுத்த ஆன்மாக்களுக்கு நீயொரு முன்மாதிரி.

வாழ்கையில் இருள் வரும் ஒளியும் வீசும் 
எப்போதும் ஒரே நிலையில் இரு 
என்று இலவசமாக வாழ்க்கை பாடத்தை 
கற்றுக்கொடுக்கும் ஆசான் நீ.  



அன்று உன்னை கவியால் மட்டுமே 
தொட்டு பார்த்தவர்கள் 
இன்றோ உன்னை அறிவியல் வளர்ச்சியால் 
எட்டி பிடித்திருக்கின்றனர் சிலர்.

பகலின் வெப்பத்தை தணிக்க வந்த 
இரவு குளிர் காற்று நீ 
இரவு பொழுதில் உறங்குவதற்கு 
மடியைக் கொடுக்கும் அன்னை நீ.

விஷேங்களுக்கு நீ அடையாளம் 
அமாவாசை நாட்களில் நீ தெரிவதில்லை 
பௌர்ணமியில் நீ முழுமையாக தெரிகின்றாய் 
பிறையில் நீ தெரியும் அழகோ அழகு தான்.

நான் மட்டும் உன்னை விரும்பவில்லை 
உலக மக்கள் அனைவரும் விரும்புவது 
உன்னைப் போல மாசற்று வாழவேண்டும் 
உலக மக்களை நல்வழி படுத்தவேண்டும்.

                         நன்றி 
 
                     வணக்கம்.

இது நம்ம சானல் - THIS IS OUR CHANNEL - பாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா?

இது நம்ம சானல் - THIS IS OUR CHANNEL 
(புதிய பகுதி) A NEW CHANNEL
இது யாரையும் புண்படுத்தும் நிகழ்ச்சி கிடையாது. முழுக்க முழுக்க கற்பனை தான். தவறு இருப்பின் மன்னிக்கவும்...
பாகம் : 1 நேயர்கள் கடிதம் -
 உங்களுக்கு சமைக்க ஆர்வமா?


உள்ளது உள்ளபடியே சொல்லும் சானல் !

ஒளிவு மறைவு இல்லாமல் உண்மை பேசும் சானல்!

இப்போது நிகழ்ச்சிக்கு போவோம்.... வாருங்கள்....

இது நம்ம சானல் சார்பாக உங்கள் எல்லோருக்கும் வணக்கம்.

நிலைய இயக்குனர்: 

இன்றைய நிகழ்ச்சி - நேயர்கள் கடிதம்.- சென்ற மாதம் ஒலி - ஒளிபரப்பிய 'உங்களுக்கு சமைக்க ஆர்வமா? பற்றி நிறைய கடிதம் வந்துள்ளது. முதல் கடிதம் படியுங்கள்...

முதல் கடிதம் படிக்கிறார்.... நிலைய தொகுப்பாளர்:


சென்ற மாதம் ஒளி -ஒலி பரப்பிய 'உங்களுக்கு சமைக்க ஆர்வமா?' என்ற நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதில் 'புதுவகை இட்லிகள்' எப்படி செய்வது என்று செய்து காண்பித்தார்கள். அதன்படி ஒன்று தவறாமல் அப்படியே செய்தேன். இட்லி கொஞ்சம் கூட ருசியில்லாமல், ரொம்ப கன்றாவியா இருந்தது. ஆனால் நீங்கள் அதை சாப்பிட்டு விட்டு 'அஹா ரொம்ப அற்புதம் ! இது நாள் வரை இந்த மாதிரி இட்லி என் வாழ்நாளில் சாப்பிடவே இல்லை. என்று புகழ்ந்தீர்கள். அப்படியென்னா உங்க டேஸ்ட் அவ்வளவு கன்றாவியா?' எனக்கு கண்டிப்பா பதில் சொல்லுங்க.. 

நிலைய இயக்குனர் பதில் சொல்கிறார்.

மன்னிக்க வேண்டும். வந்த கடிதங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட இப்படித் தான் எழுதியிருக்கிறார்கள். தவறு எங்கள் மீது இல்லை. பலர் நிகழ்ச்சியை முழுவதும் கடைசிவரை பார்க்கவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. நிகழ்ச்சியின் கடைசியில் நாங்கள் சொல்ல வந்ததை மீண்டும் உங்களுக்காக ஒலி -ஒளி  பரப்புகிறோம். இப்போது... நிகழ்ச்சி கடைசியில்...


..... இதோ பாருங்க ! நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த 'புது வகை இட்லிகள் ' என்று இட்லி கொப்பரையை திறக்கிறார். ஆ .... இட்லி கூழ் போல இருக்கே. எனக்கு மயக்கம் வருதே. பாக்கிறதுக்கே இவ்வளவு மட்டமாக இருக்கே ! இதை சாப்பிட்டு வேறே பார்க்கணும்மா.. என்னால கற்பனை செய்துகூட பார்க்க முடியலே. ஒருவித குமட்டல் வருகிறது. சரி சரி ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு சமைச்சு பணத்தை வீணாக்குகிறீங்க ! நேரே உங்கள் தெரு முக்குக்கு போங்க ! நல்ல ஹோட்டலே பார்த்து நுழையுங்க.. நீங்க எதிர்பார்த்த வகை வகையான இட்லியென்ன , தோசையென்ன சட்னி சாம்பாரோடு நல்ல சாப்பிடுங்க.. புது தினுசா சமைக்கிற ஆசை விடுங்க.. மீண்டும் அடுத்த வாரம் 'உப்பு காப்பி' செய்வது எப்படின்னு பிரபல சமையல் கலை நிபுணர் விளக்குவார்.. அதுவரை.. உங்கள் எல்லோருக்கும் வணக்கம் வணக்கம்..

நிலைய இயக்குனர்..இப்போது நேயர்களின் சந்தேகம் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறோம்.. நேயர்களுக்கு ஒரு வேண்டுகோள். இனிமேலாவது நிகழ்ச்சிகளை முழுமையாகப் பாருங்க.

 நன்றி
 வணக்கம்...