Pages

Friday, 25 October 2013

63. QUALIFICATION AND RESPONSIBILITY TO BECOME A LEADER - 63. தலைவர் ஆவதற்கு தகுதியும் பொறுப்பும்


HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

63. QUALIFICATION AND RESPONSIBILITY
 TO BECOME A LEADER
* The roll of a head in an organization / Company is very very important. He must be able to organize all and able to build a team. A head can think and initiates to form a plan process . When a plan is being formulated, all details must be analyzed  thorough and also potential obstacles must be recorded as well as it's remedial action to be planned whether it is short term or long term? All solutions will come in to view and the ways to reach the goal will become clear. So we have to think and select a good head. After we get a head and stay behind the head.  
* ' Many days, many months, many years hidden lies will become to true display within a few movement. 
The appalling thing in the world is very best work for life is not getting any awards as well as it is not popular among the people.   But many works which are not eligible for human life which are getting stir and also become very famous due to the domination of the competition, jealousy and selfishness. 
Success life steps continuous  next...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

63. தலைவர் ஆவதற்கு தகுதியும் பொறுப்பும் 
* ஒரு நிறுவனத்தில் அல்லது ஒரு கம்பெனியில் தலைவரின் பொறுப்பு மிகவும் முக்கியமானது. அவர் அனைவரையும் ஒன்று சேர்க்கும் திறமை மற்றும் குழுவாக வேலை செய்யும் தகுதியும் பெற்றிருக்க வேண்டும். ஒரு தலைவர், அவர் நினைப்பதோடு திட்டம் போட்டு அதன் செயல் முறை உருவாக்கித் தொடங்கச் செய்ய வேண்டும். திட்டம் உருவாக்கியவுடன் எல்லா விவரங்கள் மற்றும் சாத்தியமான தடைகள் பதிவு செய்து நன்றாக ஆராய்ந்து  அதை தடுக்கும் குறுகிய அல்லது நீண்ட கால திட்டமும்தீட்ட வேண்டும். அனைத்தும் பார்வைக்கு வந்தவுடன் குறிக்கோளை அடையும் வழி தெளிவாக தெரியும். ஆகையால் நன்றாக யோசித்து ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த தலைவர் கிடைத்தவுடன் அவர் பின்னே நடக்கவேண்டும். 
* 'பொய்' பல மணி நேரம், பல மாதங்கள், பல வருடங்கள் வேஷம் போட்டு மறைந்து வந்தாலும் 'உண்மை' ஒரு சில நிமிடமே வெளிச்சத்திற்கு கொண்டு வந்துவிடும்.  
* இந்த உலகில் பரிதாபத்திற்குரியது என்னவென்றால் வாழ்க்கைக்குத் தேவையான மிகச் சிறந்த படைப்புகள் விருது பெறாமலும், மக்கள் மத்தியில் பிரபலம் அடையாமலும் இருக்கின்றது. இதற்குக் காரணம் போட்டி, பொறாமை, சுயநலம். ஆனால் தகுதியில்லாத பல படைப்புகள் போட்டி, பொறாமை, சுயநலம் போன்ற காரணத்தினால் மக்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பையும், பிரபலமும் அடைந்து வருகின்றது. 

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Monday, 21 October 2013

16 செல்வங்களும் அவைகளைப் பெறும் வழிகளும் - 16 WEALTHS


16 செல்வங்களும்
 அவைகளைப் பெறும் வழிகளும் - 16 WEALTHS 
மதுரை கங்காதரன் 

குறிப்பு: இவற்றில் உங்களிடம் எத்தனை செல்வங்கள் இருக்கின்றது என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

இதோ 16 வகையான செல்வங்கள் 

1. புகழ்    2. வெற்றி    3. பணம் (பொன்),  4.  இரக்கம்   5. அறிவு   

6. அழகு  7. கல்வி    8.  நோயின்மை   9. வலிமை    10. நல்விதி 

11. உணவு  12. நன் மக்கள் 13. பெருமை   14. இனிமை 15. துணிவு 

16. நீண்ட ஆயுள் 


16 செல்வங்களைப் பெரும் வழிகள் 

1. புகழ்  :


யாரும் புகழோடு தோன்றுவதில்லை. செய்யும் செயலிலும், நடக்கும் விதங்களிலும், நன்னடத்தை மற்றும் உதவி மனப்பான்மையான குணங்களைப் பொறுத்து தான் புகழ் கிடைக்கும்.


2. வெற்றி  


வெற்றி என்பது பிறரை தோற்கடித்து நாம் வெற்றி பெறுவது அல்ல. நம்மை நாமே வெற்றி கொள்வதாகும். இன்றைய நிலையை விட நாளைய நிலைமை உயர்த்துவதற்கு கடின உழைப்பும், விடாமுயற்சியும் மேற்கொள்ளுதல் வேண்டும்.

3. பணம் (பொன்)



செழிப்பான வாழ்க்கைக்குத் தேவையானவைகளில் பணமும், பொன்னும் ஆகும்.அவற்றைப் பெறுவதற்குச் சிறந்த வழிகள் தொழில் செய்வது அல்லது நல்ல வேலைக்குச் சென்று சம்பாதிப்பது.


4.  இரக்கம்  

இருப்பவர்களுக்கு கொடுக்கிற மனமில்லை. மனமிருப்பவர்களுக்கோ கொடுப்பதற்கு ஏதுமில்லை. இது தான் இன்றைய நிலை. அன்பு காட்டுவது, அரவணைப்பிற்கு  கூட பணம் கேட்கும் காலம். இருப்பினும் வெகு சிலர் இரக்கம் காட்டி பல ஏழைகளுக்கு உதவி செய்து இறைவனைப்போல் தரிசனம் தந்து கொண்டிருக்கின்றனர்.


5. அறிவு   

கல்வியும், அறிவும் வேறு வேறு என்று உணர வேண்டும். படித்துத் தெரிந்து கொள்வது கல்வி. அறிவோ பார்த்து, கேட்டு, அனுபவப்பட்டு வருவது. அறிவுடையோருக்கு கல்வி குறைவாக இருந்தாலும் எந்த நேரத்தில் என்ன செய்தால் வாழ்க்கை நன்றாக வாழ முடியும் என்பதில் அதிக அறிவு இருக்கும். 


6. அழகு 

பார்த்தவுடன் கவருகின்ற தன்மையை அழகு என்று பெரும்பாலோர் எண்ணிக்கொண்டு சற்று கருப்பாக, குண்டாக இருப்பவர்கள் 'தாங்கள் அழகில்லையே' என்று தாழ்வு மனப்பான்மையோடு வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்குள் பலவகையான அழகுகள் இருப்பதை தெரிந்துகொண்டால் இந்த மாதிரி தாழ்வுமனப்பான்மை எண்ணங்கள் வரவே வராது.சில வகை அழகுகள்  இதோ ! குரல் இனிமை, கவரும் பேச்சு, தாளம் போட வைக்கும் பாட்டு, நளினமான நடனம், உடை அழகு, அறிவு, அன்பு, கருணை காட்டுதல் இன்னும் பல. 

 7. கல்வி 


கல்வி பெரிதாக தேவைபடாவிட்டாலும் அடிப்படை கல்வி மிகமிக அவசியம். அதுவும் படித்து மனப்பாடம் செய்யும் ஏட்டுக் கல்வி வாழ்க்கை வாழ்வதற்கு உதவாது. அதோடு செய்முறை பயிற்சி வளமான துணையோடு கையும் கொடுக்கும். வளமான வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்வது நல்லது.


8.  நோயின்மை 

நல்ல உணவு, சிந்தனை மற்றும் செயல் நோயற்ற வாழ்வுக்கு ஆணிவேராகும். 'நோயின்மை' ஒருவன் வாழ்நாளில் பெற்ற விலைமதிப்பில்லாத பொக்கிசமாகும். எங்கே நோய் இல்லையோ அங்கே மகிழ்ச்சி பொங்கி வழியும்.


9. வலிமை 

உடல் வலிமை பெற உடற்பயிற்சியும், மனவலிமை பெற தியானம் மற்றும் தன்னம்பிக்கை வேண்டும். வலிமை பெற அதிக நேரம் செலவழிக்க வேண்டியதில்லை. வெறும் 5 முதல் 10 நிமிடங்களே போதுமானது.


10. நல்விதி

நல்ல எண்ணமும், செயலும் நல்விதிக்கு அடிப்படை காரணமாக விளங்குகின்றது.'விதி' என்பது கஷ்டம் தருவது மட்டுமல்ல. நன்றாக மகிழ்ச்சியோடு இருப்பது கூட விதியாகும். ஆக விதி என்பது உன் கையில் தான் இருக்கின்றது. அதை நமக்கு சாதகமாக ஏற்படுத்திக்கொள்வது நமது புத்திசாலித்தனத்தில் இருக்கின்றது.
  

11. உணவு



உடை, இருப்பிடம் முக்கியமானதாக இருந்தாலும் வேளாவேளைக்கு நல்ல உணவு உண்ணுவது அவசியம் வேண்டும். உணவு , உடலும் அருவும் வளர்வதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பதாகும். 



12. நன் மக்கள்



பொதுவாக குழந்தையாக இருக்கும்போது சூது, வாது ஏதும் தெரிவதில்லை.தீ ஜுவாலை கூட கவர்ச்சி மிக்க பொருளாகத் தெரியும். தீ கங்கு கூட சாப்பிடும் பழமாகத் தெரியும். ஆனால் அவர்களை நன்மக்களாக வளர்ப்பது பெற்றோர் கையிலும், சிறந்தவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள் கையிலும் , அவர்களை நன்றாக உபயோகித்துக் கொள்வது மக்கள் கைகளிலும் இருக்கின்றது.
13. பெருமை

பிறர் பெருமைபட வாழ்தல் ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் சாதனையாகும். ஆனால் 'தற்பெருமை' என்பது அறவே விரும்பத் தகாததாகும். பெரும்பாலும் தற்பெருமை பேசுபவர்களைச் சுற்றிலும் ஒரு கூட்டம் வெறும் பணத்திற்காகவும், பதவிக்காகவும் வேறு பல எதிர்பார்ப்போடும் இருப்பார்கள். உண்மையான பெருமை என்பது சர்க்கரையைத் தேடி எறும்பு வருவது போல நல்ல செயல்களைச் செய்யும் போது பெருமை தானாக தேடி வரும்.


14. இனிமை

பேச்சில் இனிமை, நன்மைக்களிடம் பழகுவதில் இனிமை, சொற்களில் இனிமை, எழுதுவதில் இனிமை ஆகியவைகள் என்றுமே நன்மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.

15. துணிவு

துணிவு இல்லையேல் வெற்றி இல்லை. திட்டமிடுதல் துணிவுக்கு அடித்தளம். திட்டம் சரியாக இருந்தால் எந்த செயலையும் துணிவோடு செய்யலாம். வெற்றி பெறலாம். 

16. நீண்ட ஆயுள்

மேற்கூறிய எல்லா (15) செல்வங்களை பெற்றுவிட்டால் நீண்ட ஆயுளுக்குத் துணையாய் இருக்கும். 


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




HAPPY DEEPAVALI WISHES TO ALL OF YOU ! உலக மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!




உலக மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!  

புதுக்கவிதை 
மதுரை கங்காதரன் 


தீப ஒளித் திருநாளாம் தீபாவளியாம்!

புத்தாடை உடுத்தி மகிழ்வார்களாம்.

பட்டாசு போட்டு  வெடி வெடிப்பார்களாம் 

கடல் அலையாய் கூட்டம் கூடுமாம் 

அரிதானவர்களை அன்று பார்க்கலாமாம் 

உறவினர்கள் பலரும் ஒன்று சேர்வார்களாம்  

நண்பர்களை விருந்துக்கு அழைப்பார்களாம்  

சிறுவர்கள் ஆடிப் பாடி விளையாடுவார்களாம் 

வேலை செய்பவர்களுக்கு 'போனஸ்' பெறுவார்களாம் 

தொழில் செய்பவர்களுக்கு 'லாபம்' கிடைக்குமாம்    

புதுத்திரைப்படங்கள் தியேட்டர்களில் ஓடுமாம் 


இளைஞர்கள் வாகனத்தில் பவனி வருவார்களாம் 

கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுவார்களாம் 

சாதி சமய இன வேறுபாடில்லாமல் கொண்டாடுவார்களாம் 

ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலை மோதுமாம்.

கடைகள் போட்டி போட்டுத் 'தள்ளுபடி'  கொடுப்பார்களாம் 

ஏழைகள் இந்த நாளில் தான் புத்தாடை வாங்குவார்களாம் 

இந்த நாளில் தான் அவர்கள் பலகாரம் செய்வார்களாம் 

இந்த நன் நாளில்பலருக்கு பரிசுகள் கொடுப்பார்களாம் 

அனாதை இல்லங்களில் மகிழ்ச்சி பொங்க வைப்போம்

இனிப்பு வழங்கி அவர்களோடு கொண்டாடுவோம் 

முதியோர் இல்லங்களில் சோகத்தை துரத்துவோம் 

தானங்கள் கொடுத்து மனித நேயத்தை வளர்ப்போம் 

நாட்டின் ஒற்றுமையை இதன் மூலம் காட்டுவோம்..

*******************************************************************************************
நன்றி, வணக்கம்..

*******************************************************************************************
DEAR WORLD PEOPLE! 
HAPPY DEEPAVALI WISHES TO ALL OF YOU !

MADURAI GANGADHARAN


Colourful lights are seen in this Deepavali Festival 

All are happy by wearing new dresses

Fire crackers are lighted by all aged categories

People are gathered like ocean

Rare persons are seen in this occasion

All relations are united in in the festival time

Given special hospitality to all friends
Children and kids are playing and dancing happily

Working people are getting 'Bonus' for that year 

Owners are seeing 'Profit' in this festival season

Many new films are released in this time

Youngsters are rounding their area with bikes

Go to the temple and Worship the God with family 

Celebrate this festival irrespective of religion and caste

Crowd seen in all stores, shops and textiles showrooms 

Sell their goods with competitive by giving 'Reduction' 

This is the only day poor are wearing new cloths

Poor are making sweets and preparing tiffin this day only 

Giving presentations and gifts to all their relative and neighbors 

We give gift to orphanage and make them happy

By giving sweets to them and celebrate this festival

Going to old-age home and make them happy 

Giving donations and shows our humanity   

Show our national integrity through this festival.  

*******************************************************************************************