Pages

Monday, 13 January 2014

WE DO NOT CARE ABOUT OUR MONEY கவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்

கவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்
WE DO NOT CARE ABOUT OUR MONEY 

விழிப்புணர்வு கட்டுரை 
மதுரை கங்காதரன் 

இந்த காலத்தில் ஒவ்வொருவரும்  உழைப்பின் மூலம் பணத்தை சம்பாதிப்பது என்பது மிகவும் கடினமானகாரியம் தான். உழைக்கும் அளவிற்கு ஊதியம் கிடைப்பத்தில்லை என்பது வேறு விஷயம். அதிலும் கிடைக்கும் / சம்பாதிக்கும் பணத்தை நாம் காப்பாற்றிக் கொண்டு வருகிறோமா ? / செலவழிக்கும் எல்லா பணத்திற்கு சரியாக கணக்கு வைத்துக் கொள்கிறோமா? அல்லது எல்லாவித செலவும் ஆக்கப்பூர்வமாக / உபயோகமாக செலவழித்திருக்கிறோமா? என்கிற கேள்வியை நாமே கேட்டுக்கொண்டால் அதற்கு பதில் 'இல்லை' என்று ஆணித்தரமாக வரும். வேண்டுமென்றால் ஒப்புக்காக 'எல்லாமே சரியாய் இருக்கும்' என்பார் பலர். உண்மையில் அன்றாட வாழ்கையில் நமக்குத் தெரியாமல் நமது சம்பாத்தியத்தின் ஒரு சில பகுதியை பலவழிகளில் இழக்கிறோம் என்றால் ஆச்சரியமாக இருக்கின்றதா? அதற்கு ஒரு உதாரணம் சொல்லி விவரித்தால் உடனே உங்களுக்கு உண்மை புரியும்.
ஒரு மன்னன் தனது மதி மந்திரியுடன் மாறுவேசத்தில் நகர் வலம் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டுத் திண்ணையில் ஒருவன் தனது பழைய செருப்பை ஒரு விலையுயர்ந்த பட்டுத் துணியால் துடைத்துக்கொண்டிருப்பதை பார்த்த மன்னன் ஆச்சரியமடைந்தார். அதற்கான காரணத்தை மந்திரியிடம் கேட்க அவரோ " அரண்மனைக்குச் சென்ற பிறகு அதன் ரகசியத்தைச் சொல்கிறேன்" என்றார்.

ஆவல் தாங்க முடியாத மன்னன் அரண்மனை அடைந்தவுடன் தான் கண்ட அந்த காட்சியின்  ரகசியத்தை சொல்லச் சொன்னார். அதற்கு மந்திரி " ரகசியம் ஒன்றுமில்லை, அதாவது அந்த பழைய செருப்பு அவன் சொந்த பணத்தில் வாங்கியதாக இருக்கும் . ஆனால் அவன் துடைத்துக் கொண்டிருந்த விலையுயர்ந்த பட்டுத் துணி அவன் தாத்தா வாங்கியதாக இருக்கும்" என்று பதிலளித்தார்.
இதிலிருந்து தெரியவருவது நாம் சொந்த பணம் கொடுத்து வாங்கிய எல்லாப் பொருட்களையும்  பத்திரமாக வைத்துகொள்வோம். ஆனால் வேறு ஒருவர் வாங்கிய பொருள் எவ்வளவு விலையுயர்ந்ததாக இருந்தாலும் அதை அனாவசியமாக கையாளுவோம். அல்லது நமது பணத்தின் இழப்பு குறைவாக / சொற்பமாக இருந்தால் அதைப் பற்றி அவ்வளவாக கவலைப்படுவது இல்லை அல்லது தெரிந்தும் தெரியாமல் விட்டுவிடுகின்றோம். அந்த வகையில் இப்போது சில உதாரணங்களைப் பார்ப்போம்.

1. பல இடங்களில் சில்லறை வாங்க மறக்கிறோம் அல்லது சில்லறை வாங்காமல் விட்டுவிடுகிறோம் :
நாம் அன்றாடம் வாங்கும் பலசரக்கு, மருந்து, காய்கறி, ஆட்டோ, பஸ்களில் மிகக் குறைந்த சில்லறை முதல் 500 ரூபாய் கொடுத்து சில்லறை  வாங்க மறந்தது உங்கள் வாழ்கையில் எத்தனை முறை என்று உங்களால் சொல்ல முடியுமா?    

பெரும்பாலோர்  மறப்பது எந்த சூழ்நிலையில் என்றால் அரக்கபரக்க பலவித யோசனைகளில் வேலைக்குச் செல்பவர்களே அதிகம் பேர் இருக்கின்றனர் . அப்படி பலவித சிந்தனைகளில்  பஸ்சில் ஏறுபவர்கள் / பயணம் செய்பவர்களே அதிகம். மேலும்  பஸ்சில் ஏறியவுடன் இறங்கும் ஸ்டாப்பில் தான் கவனம் பெரும்பாலும் இருக்கும்.அதனால் சில்லறை வாங்க மறந்து விடுகின்றனர். இது ஒரு காரணம். சில கண்டக்டர்கள் வேண்டுமென்றே சில்லறை தராமல் இழுத்தடித்து மறக்க வைப்பது சற்று வருத்தம் தரும் விஷயம். பலமுறை 'சில்லறை பாக்கி' என்று கேட்டாலும் ஞாபகப் படுத்தினாலும் கொடுப்பதில்லை. சிலர் பயணச் சீட்டில் எழுதி கொடுப்பார். அப்போதும் சில்லறையை கேட்க மறக்கின்றனர். எப்படி இருந்தாலும் நாம் மறந்துவிட்டால் சில்லறை 'அம்போ' தான். ஆனால் பல கண்டக்டர்கள் சரியாக கேட்டு தருகின்றனர் என்பது ஆறுதல் தரும் விஷயம்.

 2. வங்கி , அஞ்சல் சேமிப்பு :
இன்றைய சூழ்நிலைகளில் ஒரே இடத்தில் இருந்து  குடும்பம் / வாழ்க்கை நடத்துவது சற்று இயலாத காரியம் தான். இடமாற்றம் தவிர்க்க முடியாத ஒன்று. அத்தகைய சூழ்நிலையில் வீடு மாறுவது தவிர்க்க முடியாததாகும். அந்த நிலையில் சிலர் இருக்கின்ற இடத்தில் இருக்கும் வங்கிகளில் , அஞ்சல் அலுவலகங்களில் பணபரிவர்தனை செய்வதற்கு சேமிப்பு கணக்குகளைத் தொடங்குகிறார்கள். ஆனால் இடம் மாறும்போது பலர் தங்களுடைய சேமிப்பு கணக்குகளை மாற்றுவதில்லை. குறைந்த இருப்பு தானே இருக்கிறது ! 'போனால் போகிறது' என்று விட்டுவிடுகின்றனர். சிலர் வங்கி கணக்கு இருப்பதையே மறந்து விடுகின்றனர்.

சில நேரங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கும்போது 'நாமினி' கொடுப்பதில்லை. அந்த சமயத்தில் கணக்கு தொடங்கிய நபர் மரணமடைந்து விட்டாலோ அல்லது ஞாபக மறதி ஆகிவிட்டாலோ அந்த பணம் அவருக்கு இழப்பு தான்.

இதேபோல் நிரந்தர டெபாசிட்டுகள் , பங்குகள், பாண்டுகள், இன்சுரன்ஸ், பத்திரங்கள் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அனைத்திலும் பணம் போடுகிற வரைக்கும் உங்கள் கால் பிடிப்பார்கள். ஆனால் பணம் வாங்குவதற்குள் போதும் , போதும் என்றாகிவிடும். கையெழுத்து சரியில்லை, யார் போட்டனரோ அவரே வரவேண்டும், அடையாள அட்டை என்று படாதபாடு படுத்திவிடுவார். அந்த சூழ்நிலையில் பலர் அலைவதற்கு சோம்பேறித்தனப்பட்டு பணத்தை இழப்பர். அல்லது புரோக்கர்கள் மூலம் சிறிது பணம் கொடுத்து வாங்குவர். இதுபோல் உங்கள் வாழ்கையில் எதிர்கொண்டு அதனால் கஷ்டப்பட்டதுண்டா? நினைத்துப் பாருங்கள். அவ்வாறு கேட்காத கணக்குகள் சுமார் கோடிக்கணக்கில் பணம் வங்கியில் / அஞ்சல் அலுவலகத்தில் இருக்கின்றன. அது யாருக்குச் சொந்தமோ? என்ன செய்கிறார்களோ?

3. இன்சுரன்ஸ் பிரிமியம் :
பலர் ஆசையிலோ அல்லது நண்பர்கள் / உறவினர்கள் நச்சரிப்பில் இன்சுரன்ஸ் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் பலர் ஒரு சில பிரிமியங்கள் வரை கட்டுகிறார்கள். பிறகு கட்டாமல் விட்டுவிடுகிறார்கள். அந்த நிலையில் நீங்கள் கட்டிய பிரிமியம் பணம் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு சென்று விடுகின்றது. அவ்வாறு 'கிளைம்' பண்ணாத ரூபாய் கோடிக் கணக்கைத் தாண்டும். உங்களுக்கு இவ்வாறு நேர்ந்து பணத்தை இழந்திருக்கின்றீர்களா?  ஆகவே கணக்கைத் தொடங்கும் போது நீண்ட வருடம் தொடர்ந்து கட்டமுடியுமா? என்று பலமுறை யோசித்து சேருங்கள்!  

4. பி.எப். என்கிற வருங்கால வைப்பு நிதி :
ஒவ்வொருவரும் வேலைக்குச் சேரும் போது பெரும்பாலான நிறுவனங்களில் அவர்கள் பெயரில் வருங்கால வைப்பு நிதி கணக்கு ஒன்று கட்டடாயம் தொடங்கி வைப்பார்கள். அதில் தொழிலாளர் சம்பாதிக்கும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதமும் , அதே  தொகை முதலாளியும் செலுத்தவேண்டும். அதற்கு வட்டி மற்றும் பென்சன் (பத்து ஆண்டு பிறகு) உண்டு. ஆனால் நடைமுறையில் பெரும்பாலான தொழிலாளர்கள் ஆறு  மாதங்கள் முதல் ஒருவருடத்தில் வேறு ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து விடுகின்றனர். அப்போது அவர் அறியாமலே அவரின் பணம் இழக்க நேரிடுகிறது. அதை பழைய நிறுவனத்திற்குச் சென்று அங்குள்ள அதிகாரியினிடத்தில் கையெழுத்து வாங்க வேண்டும் என்கிற சோம்பேறித்தனத்தால் யாரும் வாங்குவதில்லை. மேலும் நிறுவனத்தை விட்டு விலகி வரும்போது பலர் சுமூக உறவுடன்  வெளிவருவதில்லை.அந்த நிலையில் அவர் தன்னுடைய கணக்கில் இருக்கும் பி.எப் பணம் இழக்கிறார். இந்த பணம் அந்த தொழிலாளியின் கைக்கு வராமல் அந்த பி.எப் கணக்கில் இருப்பதால் அந்த இழப்பை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இப்போது ஆன்-லைன் சேவை .வந்துவிட்டது. ஆகவே பணத்தை பெறுவதற்கு ஒரு கஷ்டமும் இல்லை. மேலும் பி.எப் அலுவலகம் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அதன் மூலம் ஒருவித குறையும் இல்லாமல் உடனுக்குடன்  மிகச் சிறப்பான  சேவை செய்து வருகின்றது.  

5. வாகனம், ரியல் எஸ்டேட், பிளாட், அடகு மற்றும் வீடு:
மீடியாக்கள், பத்திரிகைகள், ஆலோசகர்கள் மற்றும் வியாபாரிகள் எல்லோரும் மேற்கூறியனவற்றில் முதலீடு செய்யுங்கள். கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைகளைக் காட்டி எப்படியோ தலையில் கட்டி அதற்கு நிதி உதவியும் செய்து கொடுக்கிறார்கள். ஆனால் ஓரிரு வருடம் கழித்துத் தான் தெரிகின்றது அவர்களால் 'வட்டி , அசல்' கட்ட முடியாது என்று. பிறகென்ன ! நட்டையோ, குட்டையோ கிடைக்கும் விலையில் தள்ளி விடுவதன் மூலம் கொஞ்சம் பணத்தை இழக்கின்றனர். அதாவது பலர் கையில் சூடுபட்டுத் தான் உண்மை நிலை உணருகிறார்கள். அதனால் எவ்வளவு பணம் செலவு ! நஷ்டம்! ஆகவே கையில் பணம் இருந்தால் எதுவும் வாங்கலாம். பணம் இல்லாமல் வட்டியில் வாங்கினால் வாழ்கை 'பணால்' தான். மேலும் வாங்கும்போது இருந்த விலை விற்கும்போது கிடைப்பதில்லை.

 6. அதிக வட்டிக்கு ஆசை :
சிலர் பணத்தை அதிக வட்டிக்கு கடன் கொடுக்கிறார்கள். ஆனால் நாளடைவில் வட்டி வராமல்   அசலும் இழந்து தெருவில் வந்தோர் பலருண்டு. ஆகவே அதிக வட்டிக்கு ஆசைபடாமல் வங்கியில் போட்டு கிடைக்கும் வட்டி வந்தால் போதும் என்று இருப்பது உத்தமம். இல்லாவிட்டால் அதிக வட்டியால் பணம் கண் முன்னே அழிந்து போவதைப் பார்க்கலாம்.

7. வீட்டில் மறைத்து வைத்தல்:
சிலருக்கு வீட்டில் ஏதோ ஒரு இடத்தில் பணத்தை மறைத்து வைக்கும் பழக்கம் உண்டு. அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் மறைத்து வைப்பதால் நாளடைவில் எங்கு வைத்தோம் என்று தெரியாமல் இருப்பார்கள். அதனாலும் பணம் இழக்கலாம்.

8. அடிக்கடி 'பாஸ் வேர்ட்' மாற்றுவது :
சிலர் அடிக்கடி   'பாஸ் வேர்ட்' மாற்றுவதால் கடைசியாக என்ன வைத்தோம் என்று தெரியாமல் அவர்களின் வங்கி அல்லது மற்ற கணக்கை இழக்கிறார்கள். அதனாலும் பணம் இழக்கலாம்.

9. தங்கம், வெள்ளி, பங்குச்சந்தை , ஊக வணிகம் :
இப்போது பரப்பரப்பாக மக்களை ஏமாற்ற மேற்கூறியவற்றைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் கையில் உள்ள எல்லாப் பணத்தை இழந்தபிறகு தான் அது மக்களை காவு கொடுக்கும்  'புதைகுழி' என்று தெரிகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் இதன் மூலம் சில ஆயிரம் கிடைப்பதை பெரிதாகவும் பல லட்சம் இழந்ததை மறைத்தும் விடுகின்றனர். ஆகவே மக்களுக்கு அது ஒரு கவர்ச்சியான முதலீடாகத் தெரிகின்றது.    

10. பாதுகாப்பு பெட்டகம் (Safety Locker)
ஒரு சிலர் பத்திரங்கள், நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வங்கியில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் பத்திரப்படுத்தி வைக்கின்றனர். சில சமயங்களில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அந்த பொருட்களை இழக்க நேரிடுகின்றது. ஆகவே இதை நல்ல முறையில் நம்பிக்கையுள்ள மற்றொருவருக்கும் தெரிகின்றவாறு உபயோகப்படுத்தினால் ஆபத்து சமயத்தில் அது பயன் தரும்.

11. நண்பர்களிடம் / உறவினர்களிடம் பணம் கொடுத்து வைப்பது :
ஒரு சிலர் நம்பிக்கையுள்ளவர்களிடம் பணத்தைக் கொடுத்து வைக்கின்றனர். அவர் இக்கட்டான அல்லது ஆபத்தான சூழ்நிலையில் மாட்டிக்கொள்ளும் போது நமது பணத்தை அவரிடம் எப்படி கேட்பது என்று தெரியாமல் இழக்க நேரிடுகின்றது.   

12. எலக்ட்ரானிக் சாமான்கள் :
இன்றைய நாகரீக உலகில் தினமும் நாம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் சாமான்கள் வாங்குவது தவிர்க்க முடியாது தான், ஆனால் போட்டி மற்றும் உற்பத்தியினால் அதன் விலைகள் நாளுக்கு நாள் குறைவதோடு அதன் கவர்ச்சியும், வசதியும் கூடிக்கொண்டே போகின்றது. நேற்று பத்தாயிரம் கொடுத்து வாங்கிய எலக்ட்ரானிக் சாமான்கள் இன்று அதே பொருட்கள் சந்தையில் ரூபாய் ஏழாயிரம், எட்டாயிரம் ரூபாய்க்குக் கிடைகின்றது. இதனாலும் நாம் பணத்தை ஓரளவு இழக்க நேரிடுகின்றது. 


இந்த கட்டுரை பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
 தங்கள் ஆலோசனைகளை இங்கு பதிவு செய்யுங்கள்.

நன்றி , வணக்கம்..

//////////////////////////////////////////////////*********************************\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

 

         

 

72 . who are the real preachers / religious leaders ? 72. உண்மையான சாமியார்கள் / மதத்தலைவர்கள் யார் ?

HAVE A NICE LIFE STEPS 
MADURAI GANGADHARAN 

72 . who are the real preachers / religious leaders  ?
* The real preachers / leaders, who are wishing without offering money and anythings from the people. Because real preachers are all apart from desire and enjoyment. So be careful from cheating preachers. 
* If you follow self cooking then your food cost will be reduced by half and you can save  another half. So learn how to cook ? It will always helpful in your life.
* Confident with one and cheated by one are not avoided in every human's  life. 
*  He, who will fight with people's everyday issues and getting win will be praised by all and very soon he will become a famous leader.  
* The strange thing is that some genius people are act as fools and some fools are act as wise men. 
* Scientists are saying , human's nature and behavior are depend upon  their 'genes'. They are giving examples : the son of Doctor become a Doctor, a  politician 's son become a  politician. But nowadays  villager also becoming a scientist  or a genius in music or a doctor or an engineer ! Now you tell to me ! what is the relationship between you and genes? What I want to say, everything is in your hands !

Success steps continuous next ...

******************************************************************************************

இனிய வாழ்க்கையின்  வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 


72.  உண்மையான சாமியார்கள் / மதத்தலைவர்கள் யார் ?
* உண்மையான சாமியார்கள் / மதத்தலைவர்கள் யார் என்றால் பொருள் வாங்காமல் அருள் வழங்குபவர்கள். ஏனெனில் அவர்கள் ஆசையும் , ஆடம்பரத்திற்கும் அப்பாற்ப்பட்டவர்களா -யிற்றே!  ஆகையால் போலிகளைக் கண்டு  ஏமாறவேண்டாம்.
* நீங்களே சமைத்து சாப்பிட்டால் சாப்பாட்டு செலவு சுமார் பாதிக்கு பாதி குறைகிறது. மீதம்  பாதி நீங்கள் சேமிக்கலாம். ஆகவே சமைக்கக் கற்றுக்கொள்ளுங்கள் ! அது எப்போதும் உங்களுக்கு வாழ்கையில் கை கொடுக்கும். 

* மனித வாழ்கையில் ஒருவரிடம் நம்பிக்கை வைத்தல் மற்றும் ஒருவரிடம் ஏமாறுதல் இரண்டும் இல்லாமல் இருக்காது.
* யார் மக்களின் பொது பிரச்சனைகளை முன் வைத்து போராடி வெற்றி பெறுகிறவரே விரைவில் மக்கள் போற்றும் தலைவராகிறார். 
* மனிதர்களில் அதிசயம் என்னவென்றால் சில அறிவாளிகள் முட்டாள்களாகவும், சில முட்டாள்கள்  அறிவாளிகளாகவும் நடந்து கொள்வது தான்.


* அறிவியல் அறிஞர்கள், மனிதனின் குணம் மற்றும் நடத்தைகளுக்குக் காரணம் 'ஜீன்கள்' என்று கூறுகிறார்கள். அதாவது டாக்டரின் மகன் டாக்டராகிறான். அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதியாகிறான். ஆனால் இப்போதெல்லாம் ஒரு கிராமத்துவாசி விஞ்ஞானியாக , இசைமேதையாக , டாக்டராக , பொறியியல் வல்லுநராக ஆகிறான். இப்போது நீங்களே சொல்லுங்கள் ! இவர்களுக்கும் ஜீன்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றனவா? அதாவது நான் சொல்ல வருவது என்னவென்றால் எல்லாமே உன் கையில் இருக்கின்றது! 

வாழ்க்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Saturday, 14 December 2013

71. WHEN WILL YOU NEED GOD'S HELP? - 71. இறைவனின் உதவி உனக்கு எப்போது வேண்டும் ?

HAVE A NICE LIFE STEPS 

MADURAI GANGADHARAN

71. WHEN WILL YOU NEED GOD'S HELP?
* Your life extreme situation or chaotic situations only you want to think God or approach to God. 

* A hundred years is not enough to fully understand human's organ and it's functions. 

* Instead of comprehend written of hundred pages, doing same thing in a minute of time that better, easier knowledge also. 
* When someone admire you that time you feel that you are flying like an eagle in the sky . Also it is a nice way to express your thoughtfulness and gratitude.

* Your quality (character) and fault will reflect on your face. Also your sincere efforts produces results and rewards.

LIFE STEPS CONTINUOUS NEXT...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 


 இனிய வாழ்க்கைக்கான  வெற்றிப்படிகள் 

மதுரை கங்காதரன் 
71. இறைவனின் உதவி உனக்கு எப்போது வேண்டும் ?

* யாரிடமும் உதவி கிடைக்காதபட்சத்திலும் , குழப்பமான  சூழ்நிலைகளில் மட்டுமே மனிதன் இறைவனை நினைக்கிறான் அல்லது இறைவனை நாடுகிறான்.
* மனிதனுடைய ஒவ்வொரு உறுப்பின் செயல்களையும், வளர்ச்சிகளையும் முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு ஒரு நூறு ஆண்டுகள் போதாது.

* நூறு பக்கங்கள் எழுதி புரிந்துகொள்ளும் அறிவின் நேரத்தை விட அதை ஒரு நிமிடம் செய்து காட்டும் அறிவு மேலானதும், எளிமையானதாகும். 
* ஒருவர் உன்னைப்  புகழுகின்ற போது நீ வானத்தில் கழுகு போல் பறப்பது போல உணருவாய். மேலும் அது நல்ல சிந்தனை மற்றும் நன்றியை தெரிவிப்பதாகும்.

* உனது தரமும் (குணம்) தவறும் உன்னுடைய முகத்தில் பிரதிபலிக்கும். மேலும் உன்னுடைய தவறாத முயற்சி நல்ல முடிவையும், புகழ்ச்சியும் பெற்றுத் தரும்.  

வெற்றிப்படிகள் இன்னும் ...உயரும்.  


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நல்லாட்சி மலர தேவை அரசியல் விழிப்புணர்வு! - NEED POLITICAL AWARENESS !

நல்லாட்சி மலர தேவை  அரசியல் விழிப்புணர்வு!
NEED POLITICAL AWARENESS !

 இன்றைய   தேர்தல் புதுக்குறள் 
வலைதளத்தில் வலம் வருவோரே தேர்தலில் வெற்றி கொள்வர் 
மற்றவர்  டெபாசிட் இழந்து தோற்பர்.
  
சமீபத்தில் டெல்லியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 'ஆம் ஆத்மி கட்சி'  என்கிற சமீபத்தில் உதயாமான புது கட்சி இரு பெரும் தேசியகட்சிகளை எதிர்த்து அவர்களுடைய பணபலம்,   அதிகாரபலத்தையும்   தாண்டி எளிய மக்களைக்கொண்டு மிகக்குறைந்த காலத்தில் பெரிய சரித்திர வெற்றியைப் பதித்ததற்குக் காரணம் அவர்களின் அணுகுமுறை தான். அதாவது எல்லாமே வெளிப்படையாகவும், மக்களை மூளை முடுக்குகளில் சென்று நேரில் சந்தித்து அவர்களின் அன்றாட பிரச்சனைகளை அதாவது அரசியலில் மலிந்து கிடக்கும் லஞ்சம் ஊழல்,  மின்சாரம், குடிநீர் போன்றவைகளை தேர்தல் சமயத்தில்  மட்டுமில்லாமல் அதற்கு முன்னமே கேட்டறிந்து மக்களின் ஒட்டுமொத்த குரலாய் அவர்கள் ஓங்கி ஒலித்த அந்த ஒலி ஒவ்வொரு மக்கள் காதில் விழுந்து அதுவே அவர்களுக்கு ஒட்டு போடவைத்தது. அதுவும் டெல்லி சரித்திரத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.  இவர்களுக்கு உதவியாக சில மீடியாக்கள் இருந்ததென்னவோ உண்மை. 
இத்தகைய அந்த செயல்முறைகள் மற்ற கட்சிகளுக்கும் பெரிய கிலி ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இனிமேல் தொகுதிக்கு வராமல் / படுத்துக்கொண்டே யாரும் எளிதாக வெற்றி பெற முடியாது. யார் தினமும் மக்களை சந்தித்து மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்கிறார்களோ அவர்களுக்குத் தான் வெற்றியைத் தருவார்கள்.மேலும் தேர்தலில் போட்டியிடுபவர்கள் நேர்மையாகவும், ஊழல்,லஞ்சத்திற்கு எதிராகவும், மக்களுக்கு சேவை செய்பவர்களாகவும் இருக்கவேண்டும் என்று மிகவும் எதிர்பார்கிறார்கள். அது தவிர வேட்பாளர்கள் தங்களைப் பற்றிய முழுவிவரங்களையும் வலைதளத்தில் வெளியிட வேண்டு மென்று  நினைக்கிறார்கள். தலைவராக பார்த்து தேர்தலில் நிறுத்துவதை மக்கள் அறவே மறுக்கிறார்கள். மக்களே தகுதியுள்ளவர்களை  பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். இப்போது மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு வந்துவிட்டது என்று கருதலாம். ஒருவேளை இவற்றிற்கெல்லாம் மசியாது பழைய பத்தாம்பசலித்தணமாய் தேர்தலில் சந்தித்தால் பலன் கண்டிப்பாக பூஜ்யம் தான் கிடைக்கும். தோற்ற பிறகு அவர்களின் செயல்முறைகளை மாற்றிக்கொள்வதோ, காரணம் கண்டுபிடிப்பதோ , ஆராய்வதோ ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆனால் இதுநாள் வரை என்ன நடந்துள்ளது. இனி எப்படி நடந்து கொண்டால் அரசியல் கட்சிகளுக்கு வெற்றிவாய்ப்பு கிடைக்கும் என்று கொஞ்சம் பார்க்கலாம்.  
இதுவரை ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் தலைவர்கள் / தொகுதி தேர்தல் வேட்பாளர்கள் தங்கள் இஷ்டம் போல் வாக்குறுதிகளை அள்ளிவீசுவதை கவனித்திருக்கிறோம் ! பார்த்தும் இருக்கிறோம்! ஆனால் வெற்றி பெற்றவுடன்  வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் தங்கள் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு அவர்களின் வருமான வேலைகளை சரியாக செய்து சொத்து மேல் சொத்து சேர்த்து வருவதை சில ஊடகங்கள், மீடியாக்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றது.

இன்னும் சொல்லப் போனால் சில வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பிறகு தொகுதி பக்கம் தலைவைத்து கூட  படுப்பதில்லை. மேலும் சட்டசபைக்கு தவறாமல் செல்வதில்லை. சென்றாலும் மக்கள் குறைகளை பேசுவதில்லை. அன்றாடம் மக்கள் சந்தித்துவரும் குடிநீர், மின்சாரம், சாக்கடை, ஆக்கிரமிப்பு, கல்வி, போக்குவரத்து, சாலை, ரேசன் விநியோகம், விலைவாசி, வெள்ளம், வறட்சி, தொழில், கடன், வேலைவாய்ப்பு போன்ற சிறுசிறு பிரச்சனைகள் வந்தால் கூட அந்த தொகுதி எம்.எல்.ஏ அல்லது எம்.பியோ  தலைகாட்டுவதில்லை.  ஆனால் தினமும் தலைவர்கள் தவறால் ஏதாவது ஒரு பிரச்சனை / பல பிரச்சனைகளைப் பற்றி பேசி வருவதை நாம் பார்க்கிறோம். ஆனால் தலைவர்களுக்கு அந்த தொகுதி வெற்றி பெற்ற வேட்பாளர்களை விட அதிகம் தெரிவதற்கு வாய்ப்பில்லை. 

தினசரியில் படிக்கிறோம். வெறும் தலைவர்கள் மட்டும் பேசினால் போதுமா? தொகுதி வேட்பாளர்கள தொகுதி மக்களுக்கு என்ன சேவை செய்கிறார்? என்னென்ன வசதிகள் செய்து தருகிறார்?  மக்களின் அன்றாட பிரச்சனைகள் (குடிநீர், மின்சாரம், கல்வி போன்றவை)  எவ்வாறு தீர்க்கிறார் என்கிற விவரம் மக்களுக்குத் தெரியாத ஒன்றாக இருக்கின்றது. மேலும் சொந்த தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களே தங்கள்  தொகுதிக்குச் செல்வதில்லை. வேறு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் எப்படி அந்த தொகுதிக்குச் சென்று மக்களின் குறைகளைத் தீர்ப்பார்கள்? பல தொகுதி பிரச்சனைகளைப் பற்றி ஊடகங்களும், பத்திரிக்கைகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தனிப்பட்ட மனிதன் தான் கவலை படுகிறார்கள். அதன் பலனாக ஒரு சில குறைகள் தீருவதென்னவோ உண்மை தான்,
ஆனால்  சும்மா சொல்லக் கூடாது. பொது தேர்தலோ அல்லது இடைத்தேர்தல் வரும்போது அரசியல் தலைவர்கள் சரி, அமைச்சர்கள் சரி மற்றும் தொகுதி வேட்பாளர்கள் சரி எல்லோரும் மக்களைச் சந்திக்கத் தவறுவதில்லை! தேர்தல் முடிந்துவிட்டால் மக்களை 'அம்போ' என்று விட்டு விடுவார்கள்!   

அதற்கெல்லாம் ஒரே காரணம் மக்கள் ஒட்டு போடும்போது நல்லாட்சி கொடுக்க விரும்பும் வேட்பாளர்களைப்   பற்றிய எல்லா விவரங்கள் தெரியாவிட்டாலும் குறைந்தபட்ச விவரமாவது ஓட்டு போடும் மக்களுக்குத் தெரியவேண்டுமல்லவா? ஆனால் வேட்பாளர்களை சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்கள் நேர்முகம் காணல் மூலம் அவர்கள் நினைக்கும் தகுதி உள்ள வேட்பாளர்களைத்  தேர்ந்தெடுத்து தேர்தலில் நிற்க வைக்கிறார்கள். அதாவது வேட்பாளர்கள் தங்கள் தலைவர்களுக்கு விசுவாசமாக இருப்பது ஒரு தகுதியாக வைத்திருக்கிறார்கள். மக்களுக்கு விசுவாசகமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று தான் இது நாள் வரை கடைபிடிக்கிறார்கள். ஏன்? சில ஊடங்கங்கள் , சில மீடியாக்கள் , அரசு அதிகாரிகள் வேட்பாளர்களைப் பற்றிய விவரங்கள்  பலவற்றை மறைத்து வருகிறார்கள்.
மக்களுக்காக சேவை செய்ய  விரும்புகிறவர்கள் நேர்மையாகவும், ஒளிவுமறைவில்லாமல்,  சாதி மத இன வேறுபாடில்லாமல்  பாரபட்சமின்றிநடந்துகொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லையே? அதற்காக அவர்களுக்கு அளிக்கப்படும் அரசு சலுகைகள் கொஞ்சனஞ்சமா?  ராஜமரியாதை அல்லவா கிடைக்கிறது! வெறும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்தை மட்டும் வைத்து மக்கள் கண்மூடிக்கொண்டு இதுநாள் வரை ஓட்டு போட்டுவருகிறார்கள். அதைப் பார்க்கும்போது முன்பு வாரிசு இல்லாத நாட்டில் ராஜா / ராணியைத் தேர்ந்தெடுப்பதற்கு பட்டத்து யாணை தும்பிக்கையில் மாலை கொடுத்து  ஒருவரை அதாவது அவர் ஆண்டியானாலும் சரி , செல்வந்தர் ஆனாலும் சரி , முட்டாளாக இருந்தாலும் சரி, கோழையாக இருந்தாலும் சரி  அவர் தான் நாட்டையும்  நாட்டு மக்களையும்  ஆளவேண்டும். அதிலும் ஒரு நல்லது இருக்கின்றது. அதாவது நாட்டை ஆள்பவர்களுக்கு கண்டிப்பாக வீரம் இருக்கவேண்டும். வீரம்  இருந்தால் தான் யாணையின் முன்னால் நிற்க முடியும். அது போடும் மாலையை ஏற்றுக்கொள்ள முடியும்.
இன்றைய இளைஞர்கள் கையில் தான் எல்லாமே இருக்கின்றது என்று சொல்லலாம். சமீபத்தில் நடக்கும் பல மாற்றங்களுக்கும் அவர்களே முக்கிய காரணம். அவர்களின் ஓட்டு தான் பல வெற்றியின் தலை எழுத்தை மாற்றிவிடுகின்றது. அவர்கள் பெரும்பாலும் கணினி மற்றும் வலைதளங்களில் அதிக நாட்டம் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆகவே அரசியல் கட்சி தலைவர்கள், தொகுதி வேட்பாளர்கள் வலைதளத்தில் வலம் வந்தால் அதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். அதில் தங்களின் விமர்சனங்களை தருகிறார்கள். கேள்வியும் கேட்டு பதிலும் பெறுகிறார்கள். ஆக இன்றைய மக்கள் வேட்பாளர்கள் பற்றிய விவரங்களை ஏதாவது ஒரு வலைதளத்தின் மூலம்  வேட்பாளர் எப்படிப்பட்டவர்? அவரின் நோக்கம் என்ன? எதிர்கால மக்களுக்கு அவர்  செய்யபோகும் திட்டங்கள் எவை எவை? அவரின்  படிப்பு , தொழில், சொத்து போன்ற விவரங்கள் கொஞ்சமாவது தெரிந்துகொள்ள ஆசைபடுகிறார்கள். அவ்வாறு மக்களுக்குத் தெரிந்தால் தானே  சரியான வேட்பாளரை தேர்ந்தெடுக்க முடியும்.  எதுவுமே தெரியாமல் ஓட்டுப்போடுவது பாழும்கிணற்றில் நாமே விழுவதை போன்றதாகும் என்று நினைக்க ஆரம்பித்து வருகிறார்கள்.  அதைவிடக் கொடுமை வேட்பாளர் தான் வெற்றி பெற்ற தொகுதி தனது சொந்த தொகுதி இல்லையென்று ஜெயித்த பின் மக்களுக்குத் தெரியவருகிறது. பின் எப்படி அந்த வேட்பாளர் மக்களின் குறைகளைக் கேட்டு தீர்த்துவைப்பார்? இன்றைய இளைஞர்கள் வேட்பாளர் மனுதாக்கல் செய்தவுடனே அவர் கீழ்க்கண்ட விவரங்கள் அடங்கிய படிவத்தை பூர்த்தி செய்து அவர் நிற்கும் தொகுதியில் உள்ள ஒவ்வொரு பூத்தில் ஒட்டிவைக்க வேண்டும் என்றும்  மேலும் வலைதளத்தில் வெளியிடவேண்டும் விருப்பப்படுகிறார்கள்.

இதோ இந்த படிவத்தின் மாதிரி (இதில் எது தேவை இருக்கின்றதோ அவைகளை மட்டும் வைத்துக்கொள்ளலாம்)


1.  வேட்பாளர் பெயர்         :                       வேட்பாளர் புகைப்படம் 
2.  தற்போதைய முகவரி  :
3.  நிரந்தர முகவரி             :
4.  வயது    
5.  படிப்பு                               : 
6.  பொழுது போக்கு           :
7.  ஆரோக்கியம்                 :  
8.  குடும்ப உறுப்பினர்கள் :
9.  போட்டியிடும் சின்னம் :
10. சொந்த தொகுதியின் பெயர் :
11. குடும்ப உறுப்பினர் / உறவினர் தற்போது அரசியலில் இருக்கின்றனரா? 
12. தொழில் / பதவி பெயர் :
13.  தொழில் வரி / வருமான வரி கட்டுபவரா?
14. சொத்து / சமபளம்        :
15. குற்றப்பின்னணி  (ஏதேனும் இருந்தால்) விவரம்:
16. நிலுவை வழக்கு  (ஏதேனும் இருந்தால்)       :
17. பொது சேவை விவரம் (ஏதேனும் இருந்தால்)
18. தேர்தலில் நிற்பதன் நோக்கம்:
19. தொகுதியில் வருங்காலத் திட்டங்கள்:
20. இதற்கு முன் எம்.எல்.ஏ / எம்.பி உறுப்பினரா ?
21. எத்தனை ஆண்டுகள் :
22. சட்ட / பாராளுமன்றத்திற்கு சென்ற சதவீதம் :
23. மக்களுக்காக பேசியது எத்தனை முறை         :
24. தொகுதிக்குச் எத்தனை முறை சென்ற விவரம்:
25. மக்களுக்காக என்ன சேவை / வசதிகள் செய்துகொடுத்த விவரம்:
26. போராட்டத்தில் கலந்து கொண்ட முறைகள் :

மேற்கூறிய விவரங்கள் அனைத்தும் உண்மையே. ஏதேனும் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்  ஒருவேளை நான் பதவியில் இருந்தால் அப்பதவியை ராஜினாமா  செய்கிறேன். மேலும் நான் ஊழல் செய்ய மாட்டேன். லஞ்சம் வாங்கமாட்டேன். மக்களுக்கு பிரச்சனை கொடுக்கும் எந்தவகையான குற்றச்செயல் மற்றும் போராட்டத்தில்  ஈடுபடமாட்டேன். அப்படி ஒருவேளை நிரூபிக்கப்பட்டால் நான் என்  பதவியை ராஜினாமா செய்வேன். சட்ட / பாராளுமன்றத்தின் கண்ணியத்தைக் காப்பேன். தவறாது கூட்டத்திற்குச் சென்று மக்களின் குறைகளை எடுத்துச் சொல்லி அவற்றை தீர்த்து வைப்பேன்.அரசு கொடுக்கும் சலுகைகளை தவறாக உபயோகிக்க மாட்டேன். அரசு சொத்துக்களை காப்பேன்.

                                                                           இப்படிக்கு 
சாட்சிகள் :                               போட்டியிடும்  வேட்பாளர் கையெப்பம் 


இளைஞர்கள் இவற்றை கேட்பது எதற்காகவென்றால் வெற்றிபெற்ற வேட்ப்பாளர்கள் பலர் தாங்கள் பதவியில் இருப்பது மக்களுக்குத் தெரியாமல் இருந்துவிடுகிறது. சத்தமில்லாமல் 5 / 10 / 15 வருடங்களை பதவியில் இருந்துகொண்டு கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்து வளம் பெறுகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டை . சிலர் ஏதோ பிரச்சனையில் மாட்டும்போது தான் அவரின் உண்மையான பின்னணி அதாவது படிப்பறிவு இல்லாதவர் , குற்றப்பின்னணி உள்ளவர் என்று தெரியவருகிறது. 

எல்லாத்தையும் விட கூட்டணி பேரம் நடத்தும்போது மக்களை முட்டாளாகவே நினைக்கிறார்கள். மக்கள் விரும்பாத கட்சியில் கூட்டணி வைத்துகொள்ளும் சம்பவம் அதைவிட மக்களுக்குச் செய்யும்   துரோகம் வேறு எதுவுமில்லை.அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமல்லவா? எத்தனைக் காலம் தான் இப்படியே ஆட்டுமந்தைகள் போல் ஆதிகாலத்து முறையைப் பின்பற்றுவது? ஓட்டு போடுவதில் மட்டும் மாற்றம் செய்வதோடு நில்லாமல் வேட்பாளரின் விவரங்களை அறியும் விதத்திலும் மாற்றம் மற்றும் விழிப்புணர்வு வேண்டும். 


ஆகவே மக்களே எல்லோரும் நலம் பெற , நல்லாட்சி பெற்றிட  இன்றே நாம்  அரசியலில் விழிப்புணர்வு பெறுவோம். நாட்டை லஞ்சம் ஊழல் இல்லாமல் புனிதமாக்குவோம். உலகத்தில் சிறந்த நாடு என்று பெயர் எடுப்போம்.

  நன்றி , வணக்கம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& 
                           

தமிழ் எழுத்துகள் மட்டுமே தமிழைக் காக்கும் ! READ TAMIL AND WRITE TAMIL !

8.12.13 அன்று மதுரையில் 'மாமதுரை கவிஞர் பேரவை' நடத்திய பாரதியார் கவிதைப் போட்டியில் நான் வாசித்த புதுக்கவிதை 

 

தமிழ் எழுத்துகள் மட்டுமே தமிழைக் காக்கும்



                                            மதுரை  கங்காதரன்  


 திராவிடக் குடும்பத்தின் முதன்மை மொழி தமிழ் 
 எளிமையான ஏராளமான கலைச் சொற்கள் கொண்ட மொழி தமிழ் 

 எட்டு கோடி மக்கள் பேசும் சிறப்பு மிக்க மொழி தமிழ் 
 ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தொன்மை மொழி தமிழ் 

 கல்வெட்டு பனை ஓலைகளில் எழுத்துகள் ஆதாரமுள்ள மொழி தமிழ் 
 இலங்கை சிங்கபூர் மலேசியாவில் பரவி இருக்கும் மொழி தமிழ் 

 வீரமா முனிவர் பெரியாரால் எழுத்துகளில் சீர்திருத்தம் கண்ட மொழி தமிழ் 
 அகத்தியரால் இலக்கணம் வரையறுக்கப்பட்ட செம்மை மொழி தமிழ் 

 இன்று அந்நிய மொழியில் மருத்துவம் பொறியியல் கணினி படிப்பு பயில்கிறாய் 
 அதில் தேர்ச்சி பெற்று வெளிநாடு சென்று புகழும் அடைகிறாய் 

 எம்மொழி பேசினாலும் எந்நாட்டில் இருந்தாலும் உன்னை ஏற்றிவிட்ட ஏணி தமிழ் 
 பெற்ற தாய்க்குச் சமமாக மற்றவர்கள் அன்புகாட்ட முடியுமா?

 தமிழ் மொழிக்குச் சமமாக மற்ற மொழிகளில் உணர்வுகளைத் தர முடியுமா?
 திருக்குறளும், பாரதி கவிதைகளும் எழுத்துகளாய் கிடைத்தது தமிழுக்குப் பெருமை 

 சிலப்பதிகாரம் கம்பராமாயணம் எழுத்து விதைகள் தமிழுக்கு மரமாய் நிற்கின்றன 
 அந்த தமிழ் எழுத்துகள் உலக நல்வாழ்வுக்கு வழிகாட்டும் தடங்கள் 


 விண்கலம் ஏவி சாதித்தவரும் ஆஸ்கார் நாயகனும் தமிழர்களே 
 கணினி வலைதளத்தில் தமிழ் எழுத்துகள் பலவடிவில் உள்ளவரை தமிழ் அழியாது 

 உன்னை அடையாளம் காட்ட தமிழ் மொழியில் ஒன்றையாவது படைத்து விடு 
 நாம் சிறந்து வாழ தமிழ் வாழ எல்லாமே தமிழ் எழுத்துகளில் எழுது !


வாழ்க தமிழ் !

வளர்க தமிழ் !!

நன்றி , வணக்கம் !

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^