Pages

Tuesday, 13 May 2014

ஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள் - JOKES IN VOTE BOOTH

ஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை  சிரிப்பு வெடிகள்
 

JOKES  IN VOTE BOOTH 

மதுரை கங்காதரன் 


" என்னங்க அதிசயம் ! சில  அரசியல்வாதிங்க தேர்தல் ஆணையத்திற்கு முன் உட்கார்ந்து தர்ணா பண்றாங்க "

" அது வேற ஒண்ணுமில்லைங்க.  'நோடா'  (None Of The Above ) பொத்தான் கொடுத்தது போல 'ஆடா ' (All Of The Above)  பொத்தான் வேண்டுமாம். அதாவது 'ஆல் ஆப் தி அபோவ் ' பொத்தான் கொடுக்க வேண்டுமாம்.

" அப்படீன்னா ?"

" எனது ஓட்டு எல்லா வேட்பாளர்களுக்கும்"    

குறிப்பு : ஓட்டளிக்க விரும்பாதவர்களுக்கு  'நோடா' பொத்தான் கொடுத்தது போல் 

அனைத்து வேட்பாளர்களையும் விரும்புபவர்களுக்கு 'ஆடா ' பொத்தான் கொடுத்தால் இன்னும் ஓட்டுப்பதிவு அதிகமாக இருக்கும்.

(ஆனால் இதற்கு  வாக்களித்தவர்கள் பலரிடம் பணம் வாங்கிவிட்டவர்கள் என்று மக்கள் தவறாக நினைக்கக் கூடாது. அன்பினால் கூட இருக்கலாமல்லவா ! )   
----------------------------------------------------------------------------------------------------------

 "என்ன இருந்தாலும் ஓட்டு போடும்போது அந்த நடிகை அப்படி சொல்லியிருக்கக் கூடாது "

"அப்படி என்னாங்க சொன்னாங்க"

" எனக்கு பதிலாக என்னோட 'டூப்'க்கு அடையாள மை வைங்கன்னு சொன்னாங்க"

-------------------------------------------------------------------------------------------------------


" எனக்கு சுண்டு விரல்ல நீளமா மச்சம் இருக்கிறது தப்பா போயிடுச்சு "

"அதுகென்ன இப்போ "

"அதை பார்த்தவுடனே 'நீங்க ஏற்கனவே ஓட்டு போட்டீங்கன்னு' திருப்பி அனுப்பீட்டாங்க "

---------------------------------------------------------------------------------------------------

" எனக்காக நீங்க ஓட்டு போடுங்கன்னு 'நம்ம தலைவர்' சொன்னது தப்பா போயிடுச்சி "

"அதிலே என்னாங்க தப்புயிருக்கு"

" தலைவரோட ஓட்டு போடுறதுக்கு பல தொண்டர்கள் பூத்துக்கு வந்துட்டாங்க "

___________________________________________________________


"அந்த நடிகர் ஓட்டு போடுறதுக்கு என்ன வேணுமாம்"

" டைரக்டர் , காமெரா மேன் இருந்தாத் தான் ஓட்டுப் போடுவேன்னு ரொம்பவே அடம்பிடிக்கிறாருங்க "

----------------------------------------------------------------------------------------------------------


" இதெல்லாம் ரொம்ப ஓவராத் தெரியலே "

"எதுங்க"

நடிக்கிறதுக்கு டைரக்டர் சொல்லித் தரலாம். எப்படி ஓட்டுப் போடனும்னு கூட டைரக்டர் சொல்லித் தரணுமாம் "

----------------------------------------------------------------------------------------------------------


"அந்த கிரிக்கெட் வீரர் என்ன சொல்றாரு ?

"என்னதான் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரராக இருந்தாலும் ஓட்டு அடையாள மையை கிரிக்கெட் பேட்டும் , பந்தும்  விரல்லே வரையனுமாம்" 

-----------------------------------------------------------------------------------------------------------


"அந்த நடிகை ஏன் 'அடையாள மை' வைக்கக்கூடாதுன்னு சொல்றாங்க. வேற எதை வைக்கணுமாம்"   

" அடையாள மை வைப்பதற்கு பதிலாக அதே மாதிரி 'ஸ்டிக்கர்' ஒட்டச் சொல்றாங்க!"

-----------------------------------------------------------------------------------------------------------


" எனக்கு வயசு பதினெட்டு ஆகியும் என்னால ஓட்டு போட முடியல்லே "

"அடடா என்ன காரணமோ "

" ஓட்டு போடுற தேதியிலே என்னால போக முடியல்லே ! அதனாலே மறுநாள் போனேன்".

" ??????????????"

-----------------------------------------------------------------------------------------------------------


"பொதுவாக மக்கள் தான் 'இலவசம்' கேட்பாங்க. ஆனா அரசியல் கட்சிகள் எதை இலவசமாகக் கேட்கிறாங்களோ ?"  

" அவங்களுக்கு   'ஒரு ஓட்டுக்கு ஒரு ஒட்டு இலவசம் வேணும்ன்னு' கேட்கிறாங்க". 

-----------------------------------------------------------------------------------------------------------


"அவரு ஏங்க அடையாள மை வைக்கிறதுக்கு விரலைக் காட்டாம நெஞ்சை காட்டுறாரு ?

"அவரு தலைவரோட விசுவாசியாம் ! அவரை நெஞ்சிலே இருக்கிறதுக்கு அடையாளமா அங்கே தான் அடையாள மை வைக்க வேண்டுமாம் "

------------------------------------------------------------------------------------------------------


"எப்படி அந்த பொண்ணு ஓட்டு போடுறது இது தான் முதல்முறைன்னு ரொம்ப சரியா சொன்னீங்க !" 

"அதுவா  ஓட்டு அடையாள மை வைக்கிறதுக்கு ஒத்த விரல் காட்டாமே மெகந்தி வைக்கிறது போல முழு கையும் காட்டினாங்களே "

-------------------------------------------------------------------------------------------------------

"ஓட்டு போடும்போது வைக்கிற அடையாளக் குறி சில நாட்களுக்கு அழியவே அழியாதுன்னு என் குழந்தை கிட்டே சொன்னது தப்பா போயிடுச்சி "

"எதனாலேங்க "

"அந்த மையை பேனாவிலே நிரப்பிக் கொடுத்தாத் தான் எழுதுவேன்னு அடம்பிடிக்கிறா"

-------------------------------------------------------------------------------------------------------- 

"அவங்க என்ன தாங்க சொல்றாங்க "

" தன்னோட  தலைவருக்கு 'பச்சை' நிறம் தான் அதிர்ஷ்டமாம்"

"அதனாலே என்ன இப்போ "

" பச்சை நிறத்திலே தான் அடையாள மை வைக்க வேண்டுமாம்"

-------------------------------------------------------------------------------------------------------  

   
       

Monday, 28 April 2014

89 . THE WAY WHAT DO YOU THINK WILL HAPPEN? - 89. நீங்கள் நினைப்பது நடக்க...

HAVE A NICE LIFE STEPS


MADURAI GANGADHARAN

89 . THE WAY WHAT DO YOU THINK WILL HAPPEN?

 

* If you want to think will happen, during your sleeping time you keep a small lovely favorite thing below to your pillow. You will sleep well and you will get the power also. One thing you must always keep in your mind that what do you think should not give any problem to others.  

 

* A thief also behaves good when he is watched by others.'


* During animals were doing lifting work, people were lived in comfort . After the lifting work changed to Machine, people are getting tired.


* People are using 'True events' to write the history. The same if you make a film which will be used for getting awards and for entertainment.  Only few people are getting experience from it.


* The harm , loss , joy , happy are all able to give by close relations only .

Success life steps continues next....

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 

மதுரை கங்காதரன் 


89. நீங்கள் நினைப்பது நடக்க... 
 

* நீங்கள் நினைத்தது நடக்கவேண்டுமென்றால் தினமும் தூங்கும்போது உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு சிறிய பொருளை உங்களை தலையணை அடியில் வைத்து தூங்குங்கள். உங்களுக்கு தூக்கம் நன்றாக வரும். நீங்கள் நினைத்ததை நடத்திக் காட்டும்  சக்தியும் பெறுவீர்கள் . ஒன்று மட்டும் உறுதியாய் இருக்கவேண்டும். அதாவது நீங்கள் நினைப்பது கட்டாயம்  மற்றவர்களுக்கு கஷ்டம், பிரச்சனை இல்லாமல் இருக்கவேண்டும்.

 

* 'நம்மை பிறர் பார்கின்றார்கள்' என்று எண்ணுகிறபோதெல்லாம்  திருடனும்  கூட யோக்கியமாக நடந்துகொள்வான்.  


 
* விலங்குகள் சுமைகள் தூக்கும் காலத்தில் மனிதன் வசதியாய் வாழ்ந்தான். விலங்கின் சுமைகள் இயந்திரத்திற்கு மாறியவுடன் மனிதன்  அசதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.


* மனிதர்கள் உண்மை நிகழ்வுகளை சரித்திரம் எழுதுவதற்கு மட்டும் பயன்படுத்துகிறான். அதுவே திரைப்படமாக கொடுக்கும் போது விருது வாங்குவதற்கும் , ரசிப்பதற்கும் தான் பயன்படுத்திக் கொள்கிறான். ஒரு சிலர் மட்டுமே அதை அனுபவப் பாடங்களாக எடுத்துக்கொள்கின்றனர்.


* மனிதனுக்கு ஏற்படும் கஷ்டமும், நஷ்டமும், மகிழ்ச்சியும் , சந்தோசமும் நெருங்கிய உறவுகளால் மட்டுமே கொடுக்க முடியும். 



வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 

பாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்

தொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் 

பாகம் : 7


பாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம்

பற்றிய  விளக்கம் 

 






பற்றிய  விளக்கம்  

'புதிய தென்றல்' ஏப்ரல்  2014  மாத இதழில் 

வெளியான பகுதி.

மதுரை கங்காதரன் 

மேலும் ரசிக்க, படிக்க இப்போதே கடையில் கேட்டு வாங்கிப் படியுங்கள்.... 








நன்றி .... வணக்கம்.....

########################################