Pages

Friday, 23 November 2012

உள்விதி மனிதன் பாகம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி- INNER MAN'S HELP TO AGED PEOPLE



உள்விதி மனிதன் 
சமமனிதக் கொள்கை  

பாகம் : 31 வயதானவர்களுக்கு உள்விதி மனிதன் செய்யும் உதவி-
INNER MAN'S HELP TO AGED PEOPLE 


என் இனிய மனிதா! உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன் ஜீவ ஓட்டத்துடன் பேசுகிறேன். என்னைப்பற்றி இப்போது சற்று தெளிவாக புரிந்துகொண்டிருப்பாய் என்று நம்புகிறேன். மனிதா! ஞானம், நல்ல செயல்கள், அறிவு, உணர்வு, ஆயுள், கல்வி, ருசி இவைகள் போன்றவைகளெல்லாம் பிறர் உனக்கு அன்பளிப்பாகவோ, தானமாகவோ, பணம் கொடுத்தோ வாங்கிவிடலாம் என்று நினைத்தால் அது உன்னால் முடியவே முடியாது. 


நேசமுள்ள மனிதா! உனக்குத் தேவையென்றால் அதை அடைவதற்கோ அல்லது அதை பெறுவதற்கோ நீ தான் முழு முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். அவைகள் வெறும் அருளினாளோ, பக்தியினாலோ, செல்வங்களினாலோ, தீட்சையினாலோ, பாடுவதினாலோ, ஆடுவதினாலோ, படித்து மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதினாலோ, பேசுவதினாலோப் பெற முடியாது. உன் செயலினால் தான் அதை அடைய முடியும். வேண்டுமென்றால் அவர்களின் துணையை நாடலாம் . அறிவுரையை பின்பற்றலாம். ஆனால் செயல் முக்கியம். அதைப் பொருத்து தான் உனக்குப் பலன் கிடைக்கும்.

அன்பு மனம் கொண்ட மனிதா! மேலும் இவைகளைத் தருகிறவர்கள் இப்போது இந்த உலகத்தில் இல்லை. அப்படியிருந்தாலும் அதை எவ்வாறு கண்டுகொள்வது என்ற சந்தேகம் உன் மனதில் எழலாம் ! அது கண்டு கொள்வது ஒன்றும் பிரமாதமில்லை. யார் ஒருவர் உன்னுடையப் பசியை தள்ளிப்போடும் செயல் செய்கிறார்களோ அவர்களே நீ தேடிக்கொண்டிருக்கும் குருக்கள், மகான்கள்! மனிதா! உன்னாலும் அந்தப் புனிதமான, தூய்மையான நிலையை அடைய முடியும். அதற்கு உனது கடமையை தினமும் தவறாது அன்புடனும் நல்ல எண்ணங்களுடன் பிறர்க்கு நன்மை தரும் செயல்கள் செய்தாலே போதுமானது. நீயும் ஒரு மகானின் அந்தஸ்து அடையலாம். அதற்கு இந்த உள்விதி மனிதனின் ஒத்துழைப்பு உனக்கு எப்போதும் உண்டு. ஏனெனில் மனித பிறப்பு எடுத்திருக்கும் எல்லோரும் இத்தகைய நற்கதி அடைய வேண்டுமென்பதே இந்த உள்விதி மனிதனின் நோக்கம். அப்போது தான் நீ நினைக்கும் செயல்கள் மகிழ்ச்சியாக நடக்கும்.


பெருமைக்குரிய மனிதா! இந்த நவநாகரிக கணினி உலகில் பலர் தங்களை அண்டியிருக்கும் சற்று வயதானவர்களைக் (தாய் தந்தை மற்றும் உறவினர்கள்) கீழ்த்தரமாகவும், இளக்காரமாகவும், மரியாதை இல்லாமல் பேசுவதும், வேண்டாதவர்களைப் போலவும், அவர்கள் ஒரு சாபக்கேடு போலவும் நடந்துகொள்ளும் விதம் எனக்கும் மிகவும் துக்கத்தை தருகிறது. அவர்கள் தங்களுடைய ஒரு சாண் வயிற்றுக்காக உன்னிடத்தில் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நினைக்கும்போது எனக்கு மிகவும் வேதனை தருகின்றது. நீயே இவ்வாறு நினைத்தால் நான் எப்படி உன்னிடத்தில் நடந்துகொள்ள வேண்டும்? உன்னிடத்தில் இதைவிடக் கடுமையாக நடந்துகொள்ள முடியும்!


பாசமுள்ள மனிதா! உனக்காக, உன் மகிழ்ச்சிக்காக எவ்வளவோ அற்புத படைப்புகளை படைத்துள்ளேன். அதற்கு உன்னிடத்தில் எந்த ஒரு விசுவாசமும், பிரதி பலனும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த வயதானவர்கள் தானே உன்னை ஆக்கியவர்கள், படைத்தவர்கள், உனக்கு இந்த பிறவியைக் கொடுத்தவர்கள். அவற்றையெல்லாம் மனதில் கொள்ளாமல் அவர்களை தினமும் இம்சைபடுத்தி சுடுசொற்களைக் கொண்டு தாக்கி தினம் தினம் அவர்களின் ஜீவ ஓட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டிருக்கிறாயே, அந்தச் செயலுக்கு அர்த்தம் என்ன? அதற்குப் பெயர் தான் சுயநலம் என்பதா? பேராசை என்பதா? போலி அல்லது வறட்டு கெளரவம் என்பதா? அவர்களை மதிக்கக் கூடாது என்கிற எழுதாத சட்டம் நடைமுறையில் இருப்பது மனித படைப்புக்கு அவமானமாகும். அவை இனிமேலும் நீடித்தால் இந்த உலகம் மிகப் பெரிய அழிவை சந்திக்க வேண்டியிருக்கும். அதற்காக நீ இப்போதிலிருந்து அவர்களின் நல்வாழ்வுக்காக கொஞ்சமாவது முயற்சி எடுத்துக்கொள்.


இரக்கமுள்ள மனிதா! கொசு என்று கேவலமாக எண்ணுகிறாயே, அந்தக்  கொசுவுக்கும் கூட வாழ்கையில் மேல் எவ்வளவு அக்கறை அல்லது ஆசை? நம்மைப் போல் அது அனுபவிப்பதில்லை. அனுபவிக்கவும் முடியாது. தன்னுடைய ஆயுள் சில நாட்களே இருந்தாலும் அது உயிர் வாழ்வதில்லையா? மனிதனில் ஓடும் இரத்தத்தை உறிஞ்ச நினைத்தால் நம்மை அடித்து கொன்றுவிடுவார்கள் என்பதால் கொசுக்கள் மனிதனைக் கடிக்காமல் தானே நெருப்பில் குதித்து மாண்டுபோகின்றதா? அல்லது கொசு உற்பத்தி செய்வதை நிறுத்திவிடுகின்றதா? அப்படியில்லையே. தான் இறந்தாலும் பரவாயில்லை என்று மனிதனைக் கடிக்கச் தான் செய்கின்றது. அதனால் சில இறக்கின்றது. பல உயிர் வாழ்கின்றது! கொசுவிற்கே இந்த உயிர் மேல் ஆசை. இதை போல் சில மணிநேரமே ஆயுள் இருக்கும் ஈசலுக்கும் தான் எத்தனை ஆசை !

மதிப்புமிக்க மனிதா! அதுமட்டுமா! புல் பூண்டுகள் நீ கால்பட்டு மிதித்தாலும், பிடுங்கி எடுத்தாலும், எரித்து அழித்தாலும் அது மீண்டும் மீண்டும் வளர்வது ஆசையினாலா? ஒரு சிறிய விதை கூட காய்ந்துவிடாமல் எப்படியாவது, எந்த மூலையிலாவது புதைந்து ஒரு சொட்டு தண்ணீர் கொண்டு வளரத்துடிப்பது வாழ்கையின் மகத்துவம் நீ உணருவதற்காகப் படைத்துள்ளேன்.

பொறுமையுள்ள மனிதா! இவ்வகை ஜந்துகளுக்கே உயிர்மேல் ஆசை இருக்கும் போது பலவற்றை வாழ்ந்து அனுபவித்த வயதானவர்களுக்கு உயிர்மேல் எவ்வளவு ஆசை இருக்கும் என்பதை நினைத்துப் பார். நீ வாழ்கையில் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதற்காகவே இந்த வகையானப் படைப்புகளைப் படைத்துள்ளேன். மனிதா! என்னால் உன்னை அசையா மரமாகவோ, பேசாத விளங்கினமாகவோ படைத்திருக்க முடியும். ஆனால் அப்படி செய்வதால் என் படைப்பை யார் அனுபவிப்பார்கள்? அதற்காகவா அத்தனையும் படைத்து அதை பார்க்க உனக்குள் உள்விதி  மனிதனாக இருக்கிறேன்? 

உண்மையுள்ள மனிதா! வயது என்பது இயற்கையானது. கட்டாயம் மனிதப் பிறவிகள் மற்றுமுள்ள உயிரினங்கள் எதிர்கொண்டேத்  தீரவேண்டிய காலம். அப்படியிருக்கும்போது வயதானவர்களின் இயலாமையைச் சுட்டிக்காட்டி அல்லது மனதில் வைத்துக்கொண்டு சிலர் அவர்களைக் கொடுமை படுத்துவதை என்னால் இனிமேலும் சகித்துக்கொள்ள முடியாது. இனிமேல் அவ்வாறு நடந்துகொண்டால் இந்த உள்விதி மனிதன் உன்னை நிம்மதியாக வாழவிடமாட்டான்.


பிரியமான மனிதா! நீ  மற்றவர்களுடைய நலனுக்காக நல்லவழியில் நல்ல செயல்கள் செய்யாமல் இருந்தால் அது மன்னிக்கமுடியாத மானுட தர்மமாகும். நீயும் ஒரு நாள் அவர்களைப் போல வயோதிகனாக மாறப்போகிறாய். அவர்கள் படும் அவஸ்தை மற்றும் கஷ்டம் நீயும் ஒருநாள் அனுபவிக்கப் போகிறாய். அப்போது நீ என்னிடம் 'எனக்கு உதவி செய்' என்று மன்றாடுவாயானால் அதற்குப் பலன் கிடைக்காது. ஏனென்றால் நீ மற்றவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறாயோ அதுபோலத் தான் உன் வாழ்விலும் பிரதிபலிக்கும் . அது தான் இந்த உள்விதி மனிதன் வகுத்து வைத்திருக்கும் சட்டம்.

நல்ல குணமுள்ள மனிதா! நீ உனது நல்ல செயல்கள் மூலம் இந்த உள்விதி மனிதனைக் கவனிப்பாயானால் நான் அதற்குப் பரிகாரமாகப்  பல நன்மைகளைத் தருவேன். அப்படியில்லாமல் நீ என்னை தீய செயல் கொண்டு பழக்குவாயானால் அதற்கு உபகாரமாக உனக்குத் தீமையையே தருவேன். இது உறுதி. ஆகவே வயதான இந்த அனுபவமிக்க உள்விதி  மனிதனையும், உன்னைச் சார்ந்து இருக்கும் வயதானவர்களை தினமும் நன்றாக கவனித்தாயானால் உனக்கு எப்போது மகிழ்ச்சி தான். உனது வயதான காலத்தில் இந்த உள்விதி மனிதன் உனக்கு மகிழ்ச்சி பல அளிப்பான். இதை நம்பினால் நீ நலம் பெறுவாய்.


உள்விதி மனிதனின் இந்த ஜீவ ஓட்டம் இன்னும் தொடரும். 

வயதானவர்களின் ஆரோக்கியத்திற்கும், மகிழ்ச்சிக்கும்  தினமும் தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சியைக் கற்றுக்கொடுங்கள்.



Monday, 19 November 2012

பாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் ' - BHARATHIYAAR NEW SONG - மதுரை கங்காதரன்


பாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '



மதுரை கங்காதரன் 



பாரதியே! உனக்கு
பெண் சுதந்திரத்தில்
நம்ம்பிக்கை இல்லை போலும்!
'புதுமைப் பெண் ' படைத்து
விழிப்புணர்வு ஏற்படுத்தினாய் !



வீட்டில் ஒடுங்கிக் கிடந்தவளை
தன் மகிழ்ச்சியை தியாகம் செய்தவளை
ஆணின் கட்டுக்கடங்கியிருந்தவளை
குடும்பத்தில் அடிமையாயிருந்தவளை
உன் கவிச் சாட்டையால் உசுப்பேற்றினாய் !
அதை எதிர்ப்பவர்களை சுட்டுப் பொசுக்கினாய்!



சேவல் கூவும் வேளையில் எழுந்து
எறும்பாய் தினமுழைத்து
மாடாய் குடும்பபாரத்தை இழுத்து
கால் செருப்பாய் ஓரத்தில் கிடந்தது
படிப்பு வாசனையில்லாமல் வாழ்ந்து
பிள்ளை பெறும் இயந்திரமாய் இருந்து
சிறைப் பறவையாய் அடைபட்டுக்கிடந்தவளை
பாரதியே! உன் கவிச் சாவியால் தானே
சிறையினைத் திறந்தாய்!
சுதந்திரப் பறவையாய்
பறக்க வழி செய்தாய்!



கோலங்கள் போட அவள் தான்
சுடுநீர் சாப்பாட்டுக்கு அவள் தான்
பலசரக்கு காய்கறிக்கு அவள் தான்
சமைப்பது அவள் தான்
சோரூட்ட அவள் தான்
பள்ளி இதரவேலைக்கு அவள் தான்
வீட்டுக் காவலுக்கு அவள் தான்
எல்லாவற்றுக்கும் அவள்
வேண்டும் ! வேண்டும்!



குடும்பத்திற்கு சம்பளமில்லா
வேலைக்காரியாய்
கணவனுக்கு காலம் காலமாய்
கொத்தடிமையாய்
குழந்தைக்கு தாய் உரிமையில்லா
ஆயாவாய்
மொத்தத்தில் அழகுள்ள
பொம்மையாய்
பாரதியே! ஜடமாக நடமாடியவளை உன்
கவியால் உயிரைக் கொடுத்தாய்!



தானாக கிடைக்காத மகிழ்ச்சி
கடனாக கிடைக்குமா ? ஏங்கியவள்
தினமும் விடிந்த பொழுதுகளை பார்த்து
தனது விடிவுக்காக ஏங்கியவள் 
பாரதியே! ரௌத்திரமுள்ள கவியால்
அவளது ஏக்கத்தை தனித்தாய்!



அவனுக்கு சுதந்திரமாம் இவளோ அடிமையாம் 
அவனுக்கு மகிழ்ச்சியாம் இவளுக்கு துக்கமாம் 
அவனுக்கு சுகமாம் இவளுக்கு கஷ்டமாம் 
அவனுக்கு அமுதாம் இவளுக்கு நஞ்சாம் 

அவனுக்கு வரவாம் இவளுக்கு செலவாம் 
அவனுக்கு உணர்வாம் இவளோ ஜடமாம் 
அவனுக்கு ஆட்சியாம் இவளோ அடங்கியவளாம் 
அவனோ கௌரவமாம் இவளோ அவமானமாம் 

அவனுக்கு உரிமையாம் இவளுக்கு வெறுமையாம் 
அவன் தெய்வமாம் இவளோ பக்தையாம் 
பாரதியே! உன் புதுமைப் பெண் கவியால் 
அவனுக்கு இவள் சமமென்று புதுவிதி கொடுத்தாயே!



அன்று 
பெண்னென்றால் இழிவாய் பேசியவர்கள் 
இன்று 
பெருமை கொண்ட 
புதுமை பெண்ணாக மறுஜென்மம் 
பெற்றுவிட்டாள் !



அவள் பூமாதேவி தான்
பொறுமை மிக்கவள்  தான்
பூப்போல் இதயம் கொண்டவள்
குடும்பத்தை பொறுப்பை நடத்தியவள்
தன சுகத்தை தொலைத்து நின்றவள்
பாரதியே! உன் சக்திமிக்க கவியால்
பெண்ணை எழுச்சி பெறச்செய்தாய்!



ஆணுக்கு நிகர் பெண் 
உன் கனவு பலித்துவிட்டது 
இறக்கை கொண்ட 
கூண்டுப் பறவையாய் இருந்தவள் 
சுத்ந்திரப் ப்றவையாக உலகை 
வலம் வருகிறாள் 
உன் கவியல்லவோ  
அவளுக்கு இறக்கை இருப்பதை உணர்த்தியது 
பறக்கும் சக்தியைக் கொடுத்தது.



ஆண் பார்க்கும் வேலைகள் 
பலவும் அவள் பார்க்கிறாள் !
பெண் பார்த்த வேலைகளை 
ஆண் பார்க்க வேண்டுமல்லவா!
கற்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் 
பொதுயென்றாய்
வேலைகளும் உணர்வுகளும் 
பொதுவென்று சொல்ல மறந்தாயே!



புதுமைப் பெண்ணுக்கு 
பழமை ஆண் 
மனப் பொருத்தம் இல்லையே!
பழமையில் ஊறிய ஆணுக்கு 
புதுமை ஆண் விதியை  யார் வகுப்பது!



புதுமை பெண்ணுக்கு 
புதுமை ஆண் தானே வேண்டும் !
பாரதியே! நீர் இருந்தாலும் 
புதுமை ஆண் கட்டாயம் கொடுத்திருப்பாய்!
உன்னை மனதில் எண்ணி 
புதுமை ஆண் வெள்ளோட்டம் விடுகிறேன்.



இவன் புள்ளி வைக்க அவன் கோலம் போட வேண்டும் 
இவன் பால் வாங்கிவர அவள் காபி போட வேண்டும் 
இவன் தண்ணீர் பிடிக்க அவள் சுடுநீர் போட வேண்டும் 



அவள் காய்கறி வாங்கிவர அவன் நறுக்கித் தரவேண்டும் 
அவள் துணி துவைக்க அவன் காயப் போடவேண்டும் 
அவளை மகிழ்விக்க அவன் அன்பு காட்டவேண்டும் 



அவளிடம் பழக அவன் நட்பாய் மாறவேண்டும் 
அவள் சுதந்திரத்திற்கு அவன் ஆதரவு தர வேண்டும் 
அவள் செய்யும் வீட்டு வேலைக்கு அவன் உதவ வேண்டும் 



அவள் பூவானால் அவன் மணமாய் மாறவேண்டும் 
அவள் தேனானால் அவன் இனிமையாக வேண்டும் 
அவள் உடலானால் அவன் உயிராய் இருக்கவேண்டும் 


அவள் மலரானால் அவள் வண்டாய் இருக்கவேண்டும் 
அவள் கொடுக்கும் குழந்தைக்கு அவன் அரணாக வேண்டும் 
அவளை ஆயுள் முழுதும் காக்க அவன் உறுதி கொள்ளவேண்டும் 



அவள் கண்கலங்காமல் இருக்க அவன் இரக்கம் கொள்ளவேண்டும் 
அவளை தன பாதியாக அவன் நினைக்க வேண்டும் 
அவளின் இதயத்திற்கு அவன் துடிப்பாய் இருக்கவேண்டும் 



அவளின் தூய்மை அன்புக்கு அவன்  பொய் கலவாமை வேண்டும் 
அவளைத் தன வாழ்க்கைக்கு எற்றமாய் அவன் நினைக்க வேண்டும் 
அவள் இல்லாமல் நான் இல்லை என்று அவன் உணரவேண்டும் 



அவளை அமுதசுரபியாக அவன் நினைக்கவேண்டும் 
அவள் செல்வம் தரும் பொக்கிஷமாய் அவன் நினைக்கவேண்டும் 
அவளை தன பிரச்சனைக்குத் தீர்வாய் அவன் நினைக்கவேண்டும் 



அவளை தன குடும்பத்திற்கு குத்துவிளக்காய் அவன் நினைக்கவேண்டும் 
அவளை வாரிசு கொடுக்கும் வள்ளலாய் அவன் நினைக்கவேண்டும் 
அவளை தனது வாழ்க்கைக்கு ஆலமரமாய் அவன் கருதவேண்டும் 
அவளை எல்லாம் கொடுக்கும் காமதேனுவாய் அவன் கருதவேண்டும் 



அவளுக்கு இவன் உயிராய் 
இவனுக்கு அவன் உயிராய் 
ஈருயிரும் ஓருயிராய் 
எந்நாளும் இணைந்தே வாழ 
புதுமை ஆணாக புரட்சி வேண்டும்.



குடும்ப சச்சரவுகள் களைய 
வேண்டாத் குழப்பங்கள் நீங்க 
சந்தேக பிசாசை விரட்டியடிக்க 
சரிநிகராக மதிப்பளிக்க 



வரதட்சணையை வேரறுக்க 
புரிதலை ஓங்குவிக்க 
விவாகரத்து சாத்தானை விரட்ட 
இருவரும் ஓருயிராய் மாற 

 

வேண்டும் வேண்டும் 
புதுமை ஆண் வேண்டும் வேண்டும் 
புதுமைப் பெண் கொடுத்த பாரதிக்கு 
புதுமை ஆண் பரிசாக தருவோம்.



வையகம் வாழ்த்தும்
புதுமை ஆண் புரட்சி படைப்பான்..



நன்றி 



வணக்கம்.




------------------------------------------------------------------------------------------------------------


'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை

'தெய்வப்பெண்' மறந்த பாரதி  
புதுக்கவிதை 





காணுமுன்னே தோன்றி 

கண்ணெதிரே மறைந்தவள் 

பாரதி படைத்தான் 
புதுமை பெண் 
இவன் படைப்பதோ 
தெய்வப் பெண் 



ஈடில்லா அன்பு 
அளவில்லா பொறுமை 
அசராத உறுதி 
பார்ப்பதில் குளுமை 
பழகுவதில் இனிமை 
தோற்றத்தில் எளிமை 
அவளே தெய்வப் பெண் 

வார்த்தையின் கணம் 
படிக்கும் போதும் 
நட்பின் கணம் 
பிரியும் போதும் 
உறவின் கணம் 
இழக்கும் போதும் உணரும்.

வாழ்க்கை ஒரு புதிர் 
நிறைந்த பயணம் 
இறந்த காலம் தெரிந்த விடை 
எதிர்காலமோ தெரியாத விடை 
நிகழ காலம் புரியாத விடை.



அன்புக்கு உதாரணம் 
தாய்.
பேரன்புக்கு 
தெய்வப் பெண்.

புதுமைப் பெண்ணாய் 
இருக்கும்போது 
ஓரெழுத்து கூட எழுதாதவன் 
ஒரு வரி கூட படிக்காதவன் 
எதையும் சிந்திக்காமல் 
இருந்தவன்.



தெய்வப் பெண்ணாய் 
மாறிய பிறகு 
வண்டி வண்டியாக எழுத வைத்தவள் 
பலவற்றை படிக்க வைத்தவள் 
புதிது புதிதாக சிந்திக்க வைத்தவள் 
எல்லாம் 
எனக்குள் அவள் விதைத்த விதைகள்.



வாழ்க்கைக்கு புது இலக்கணம் 
கற்றுக் கொடுப்பவள் 
புதுமைப் பெண்ணுக்கு 
புது விதி தந்தவள்.



அவள் இருக்கும்போது 
எழுத நேரமில்லாதவன் 
படிக்க நேரமில்லாதவன் 
சிந்திப்பதற்கு நேரமில்லாதவன் 
அவள்  நினைவு 
என் பேனாவில் நுழையும் போது 
ஆஹா...அற்புத படைப்புகள் 
எழுதியது நானா?
இல்லை அந்த தெய்வப் பெண்ணா?



அணுஅணுவாக ரசிப்பவள் 
அக்கறையோடு செதுக்குபவள் 
அளவில்லா இன்பத்தை தருபவள் 
ஆரோக்கிய வாழ்வு கொடுப்பவள் 
அன்பை கொட்டி தீர்ப்பவள் 
அவளஅல்லவோ தெய்வப் பெண்.




அவளில்லாமல் என்னை நினைக்காதவன் 
அவள் இருக்கும்போது சுகமாய் உணர்ந்தவள் 
நொடிபொழுது கூட கவலை தராதவள் 
கவலைப்படத் தெரியாமல் காப்பவள் 
எப்போதும் புத்துணர்வு தருபவள் 
மாறாத புன்சிரிப்பை உதிர்ப்பவள் 
அவள் பெயர் தெய்வப் பெண்ணோ?



நல்லதை கற்கச் சொல்பவள் 
நன்மை தரும் செயலை செய்பவள் 
அழக் கற்றுக்கொடுக்காதவள் 
அன்பே வடிவமாய் ஆனவள் 
அவளே தெய்வப் பெண் 



வாழ்க்கைக்கு வலிமை கொடுப்பவள் 
செயலில் தன்னம்பிக்கை தருபவள் 
சிந்தையில் புதுமை உருவாக்குபவள் 
எதையும் செய்யும் துணிச்சல் தருபவள் 
வெற்றிகளை குவிக்கும் ஆசி கொடுப்பவள் 
தெய்வப் பெண்ணே 
நீ என்றும் வாழ்கவே பல்லாண்டு.



நீ கண்ட கனவு 
நிச்சயம் மெய்படும்.
புதுமை பெண்ணுக்கு இணையாய் 
அனைவருக்கும் துணையாய் 
வாழ்கையில் நம்பிக்கை 
தருவாள் 
இந்த தெய்வப்பெண்!




பாரதி படைக்க மறந்த படைப்புகள் 




-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாரதியின் புது கவிதை ஜோதி - மதுரை கங்காதரன்

 பாரதியின் புது கவிதை ஜோதி - மதுரை கங்காதரன் 




காலம் (ன் ) மட்டும் காத்திருந்தால் 
கதாநாயகன் ஆயிருப்பாய் !
உம இலட் சிய கனவின் 
உண்மை சொருபத்தை பார்த்திருப்பாய் !

உமக்குத்  தெரியுமா ? பாரதி !
நம்மை ஆண்ட வெள்ளையன் 
நம்மை விட்டு வெளியேறிவிட்டான் !
அனறு 
'வந்தேமாதரம் ' சொன்னால் 
சிறையில் தள்ளப்பட நாங்கள் 
இன்று 
எல்லா சுதந்திரத்தையும் 
பெற்றுவிட்டோம் 

நீர் கண்ட புதுமை பெண்கள் 
அணுக்கு நிகராக 
ஆட்டோ முதல் ராக்கெட் வரை 
இய்க்குகின்றனர் !

கண்ணமாக்களும் , சக்திகளும் 
இன்று ஆட்சி கூட செய்துவருகின்றனர் 


'பாஞ்சாலி சபதம் ' படைத்த நீ 
சுதந்திர இந்தியாவில் இருக்கும் 
"தமிழாட்சி' காவியத்தை தந்திருப்பாய் 

உன் எழுச்சி கவிதைகள் மூலம் 
இன்றைய தலைமுறைக்கு புத்துயிர் 
தந்திருப்பாய் !
உன் சுதந்திர கனவு நனவாக்கிய 
வித்தையை கற்று கொடுதிருப் பாய் 

இளையதலையினருக்கு 
அவர்களின் கனவை  எப்படி நனவாக்கும் 
ரகசியத்தை சொல்லியிருப்பாய 

உன் கவிதை வெள்ளி திரையிலும் 
டி .வி சீரியலிலும் 
வெப் சைட்டிலும்  இண்டர்நெட்டிலும் 
மொபைலிலும் எதிரொலித்து 
இந்த  உலகை வலம்  வந்திருக்கும் 

உன் கவிதை வரிகளை 
கண்ணதாசனும் , வைரமுத்தும் 
இன்னும்  தற்போதுள்ள கவிஞர்களும் 
சிறிய பெரிய திரைகளில் 
கொடுத்து உன் புகழ் பரப்புகின்றனர்..

கவலை  வேண்டாம் பாரதி !
நீ ஏந்திய லட்சிய கவிதை ஜோதியை 
என் போன்றவர்களும் 
கவிஞர்களும் அறிஞர்களும் 
எப்போதும  அணையாமல் 
எந்திவருகின்றோம்   

வெகுவிரைவில் உலகம் முழுதும் 
உம்மை விழா எடுக்கும் 
அப்போது அக்னி குஞ்சுகளாக 
உயிர்தெளுவோம் 
என்றும் 
புதுகவிதை ஜோதியை காப்போம்..

-----  ஆக்கியோன் - கங்காதரன்  .

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



பாரதி விரும்பிய புதுமை பெண் - கவிதை - மதுரை கங்காதரன்

பாரதி விரும்பிய புதுமை பெண்  

கவிதை - மதுரை கங்காதரன் 



காலம் செய்யாததை 
கவி மூலம் செய்த 
மகாகவி பாரதிக்கு நன்றி 


அடிமை பெண்ணிலிருந்து 
புதுமை பெண்ணாய் மாற்றியதற்கு.

கொலு பொம்மையாய் இருந்தவளை 
கோபுரத்தில் ஏற்றியதற்கு .

சமையலறையில் தவமாய் இருந்தவளை 
சாதனைகள் பல செய்பவளாய் மாற்றியதற்கு.

வீட்டு கூண்டில் அடைபட்டு கிடந்தவளை 
ரெண்டு இறக்கை கட்டி பறக்கச் செய்ததற்கு.    

பிரசவ ஆஸ்பத்திரியை குத்தகை எடுத்தவளை 
பிறவி பயன் பெற்றவளாய் மாற்றியதற்க்கு.

பல துறையில் அவளின் முன்னேற்றத்தின் காட்சி 
பள்ளி தேர்ச்சி விகிதமே சாட்சி.

பூப்பெய்தும் வரை தான் கல்வி என்பதை மாற்றி 
பூமியை தாண்டி விண்ணுக்கு பயணித்ததற்கு.

அன்பால் உலகை திரும்பி பார்க்கச்செய்த்த பெண் 
அதரவற்றோருக்கு அடைக்கலம் தந்த பெண் 


அனைத்து விமர்ச்சனங்களையும் தாண்டி 
ஆசைகளை தியாகம் செயத பெண் 

ஆண்டவனாய் அனுப்பிய தெய்வப் பெண் 
அன்னை தெரசா என்ற நோபல் விருது பெண் 


ஆணுக்கு அடிமையாய் கிடந்த பெண் 
அவனுக்கு நிகராய் வளரும் பெண் 

அலங்கார பதுமையாய் இருந்த பெண் 
ஐ.ஏ.எஸ் படித்து ஆளும் பெண் 


பெண்ணுக்குள் உறங்கி கிடந்த 
பல புதுமைகளை கொடுக்கும் பெண் 


திறமைகளை வளர்த்து 
தரணியை ஆளும் பெண் 

பெண்ணில்லாமல் ஆணில்லை 
இருவர் இல்லையேல் உலகில்லை 

பெண்ணிற்கு உரிமை பல கொடுப்போம் 
பெண் குலத்தை போற்றுவோம் .



வாழ்க பாரதி !
வளர்க புதுமை பெண்!