Pages

Wednesday 19 November 2014

TAMIL LANGUAGE IS HONEY - தேனினும் இனிய செந்தமிழ் - புதுக் கவிதை

       தேனினும் இனிய செந்தமிழ் 
                       
          TAMIL LANGUAGE IS HONEY

                    புதுக் கவிதை

                 மதுரை கங்காதரன் 


தேனினினும் இனிய செந்தமிழ்   
தேடினும் கிடைக்காத கருத்துகளும்   

வயதினும் மூத்த மொழியும் 
வாழ்த்தினும் அழியாத தவமும் 

       

பாடினும் சுரக்கும் அமுதமும் 
கேட்டினும் தெவிட்டாத இனிமையும் 

ஆடினும் அசைகின்ற அழகும்
ஓடினும் நிற்காத உவகையும்  

அள்ளினும் குறையாத ஊற்றும்
கில்லினும் மங்காத புகழும் 

         
சொல்லினும் எட்டாத படைப்புகளும்  
எண்ணினும் முடியாத அளவும் 

பழகினும் வருகின்ற எளிமையும் 
படிப்பினும் திகட்டாத சுவையும்  

அழைப்பினும் அணைக்கின்ற தாயும் 
தழைப்பினும் வருகின்ற செழுமையும் 

காண்கினும் கவருகின்ற மகிமையும்   
கண்டினும் பிரியாத மனமும் 

எங்கினும் இல்லாத புதுமையும் 
தங்கினும் உண்டாகும் பரவசமும் 

பிறப்பினும் அழியாத காவியங்களும்  
இறப்பினும் அறியாத முத்தமிழும் 

நோக்கினும் எட்டாத உயரமும் 
நுகரினும் இன்பமான மணமும் 

பருகினும் மறவாத நவரசமும்
வாழ்வினும் கிடைக்காத பாக்கியமே. 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 

No comments:

Post a Comment