Pages

Tuesday 11 August 2020

நான் தலைவன்! & யார் தலைவர்? புதுக்கவிதை மதுரை கங்காதரன்

 நான் தலைவன்!

புதுக்கவிதை

மதுரை கங்காதரன்


நெறியோடு மக்களை நடத்துவேன்

நேர்மையோடு நீதி காப்பேன்


வளமோடு விவசாயத்தை  வளர்ப்பேன்

வறுமையை அடியோடு ஒழிப்பேன்


அறிவியலால் அறிவை வளர்ப்பேன்

அன்பால் ஆன்மீகத்தை வளர்ப்பேன்


தொழிற்சாலையோடு வேலைப் பெருக்குவேன்

தொழிற்நுட்பத்தோடு திறமையைக் கொடுப்பேன்


தெளிவானச் சுற்றுச்சூழல் காப்பேன் 

தூய்மையால் கொரனாவை வெல்வேன்


ஒற்றுமையால் சவால்களை முறியடிப்பேன்

ஒன்றே பாரதமென முழங்குவேன் 

**********************

 

யார் தலைவர்?

புதுக்கவிதை

கவிபாரதி கங்காதரன், மதுரை.

 


 நெறியோடு மக்களை நடத்துபவர்

நேர்மையோடு நீதியைக் காப்பவர்

 

ஏழைகளின் வாழ்க்கையை உயர்த்துபவர்

அறத்தோடு ஆட்சியை நடத்துபவர்

 

கல்வியைக் கண்களாகக் காப்பவர்

கற்றபடி உறுதியாய் நடப்பவர்

 

வளமோடு விவசாயத்தை வளர்ப்பவர்

வறுமையை அடியோடு ஒழிப்பவர்

 

அறிவியலால் அறிவை வளர்ப்பவர்

அன்பால் ஆன்மீகத்தைப் பரப்புபவர் 

 

தொழில்களில் வேலையைப் பெருக்குபவர்

தொழினுட்பத்தோடு திறமையைக் கொடுப்பவர்

 

தூசியில்லாச் சுற்றுச்சூழலைக் காப்பவர் 

தூய்மையால் சுகாதாரம் தருபவர்

 

ஒற்றுமையால் சவால்களை முறியடிப்பவர்

ஒன்றே பாரதமென முழங்குபவர் 

 

**********************



No comments:

Post a Comment