Pages

Friday 30 December 2022

25.12.2022 மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் - பைந்தமிழ் பாவலர் பாரதி - புதுக்கவிதை - கு.கி.கங்காதரன்

               பைந்தமிழ் பாவலர் பாரதி

                  


 
                          புதுக்கவிதை 

                      கு.கி.கங்காதரன் 

பாரதி பிறந்தது எட்டயபுரம் - இவரின் 
புகழோ எட்டாத உயரம் 
பன்மொழிப் பயின்ற அறிஞர் - இவரின் 
பெருமையைப் போற்றி வணங்குவோம்.

புதுக்கவிதைக்கு பாரதி அடித்தளம் 
புத்தம்புதுச்சிந்தனைக்கு ஓடுதளம் 
மரபுக் கவிஞர்களுக்கு போர்க்களம் 
மழலைக் கவிஞர்களுக்கு ஆடுகளம்.

பாரதி கவிகள் அக்னிப்பிழம்பாய் உமிழும்
பாக்களில் மல்லிகையின் மணமும் கமழும்
எதிரிகளுக்கு சிம்மச் சொப்பனமாய்த் திகழும்
அவரது  சொற்களை உச்சரித்தால் அதிரும்.

சுடர்மிகுக் கவிகளைப் படைத்த கவிஞர் 
இடரோடு இதழ்களை நடத்திய இதழாசிரியர்  
பகுத்தறிவை பரப்பிட்ட சமூக சீர்திருத்தர் 
புதுமைப் பெண்ணைச் செதுக்கிய நவீனச்சித்தர்.

பல்சுவை இலக்கியங்களைப் படைத்திட்டப் பாவலர் 
பற்பல தொண்டுகள் ஆற்றிய சேவகர்
விடுதலை வேட்கையை வித்திட்ட தேசியக்கவி 
வீரத்திற்கு மீசை முறுக்கிய முண்டாசுக்கவி 

எட்டு திசைக்கும் தமிழைப் பரப்பியவர் 
ஏழ்மையிலும் கவி படைக்கச்  சளைக்காதவர் 
தாய்மொழித் தமிழ் என்று முழங்கியவர்
தமிழர் பலருக்கு முன்மாதிரியாய் திகழ்பவர் 

************************************

No comments:

Post a Comment