Pages

Wednesday 7 June 2023

பாகம் 50 - உள்விதி மனிதன் - பிரம்மம் (கடவுளை) அடையும் கடவுச்சொல் (மந்திரம்) உன்னிடத்தில்....

 

11.2.2022

உள்விதி மனிதன்

பாகம் 50 பிரம்மம் (கடவுளை) அடையும் கடவுச்சொல் (மந்திரம்) உன்னிடத்தில்....

இதுவரையில், 49 பாகங்கள் உள்விதி மனிதனைப் பற்றி எழுதி இருந்தேன். அந்த வேளையில், என்னுள் இருக்கும் 'உள்விதி மனிதன்', முதல் வரியைத்  தொடர்ந்து வரிசையாகச் சொல்ல, அதன் பிறகு மளமளவென்று எழுத ஆரம்பித்தேன். எந்த ஒரு சுயசிந்தனை இல்லாமல், எனது கை தானாக ஒவ்வொரு பாகத்தை எழுத ஆரம்பித்தது. அது, 49வது பாகத்தில் நின்றது.  அவை எனக்குள் இருக்கும் ஏதோ ஒரு சக்தியால், ஒரு உத்வேகத்தால், "நீ என்னைப் பற்றி எழுதியே தீர வேண்டும்" என்று எனக்குள் இருக்கும் உள்மனிதன் சொல்லச் சொல்ல எழுதியது. ஆனால், ஏனோ 50வது பாகத்தை எழுத இயலவில்லை. ஏனென்றால், அதைமட்டும் "உனக்குத் தோன்றும்போது எழுதுவாயாக என்று சொல்வதுபோல் நான் எடுத்துக் கொண்டேன்". இன்று 11 2 2022 அந்த பொறி கிடைத்துவிட்டது. ஆம், 'கணினி காலம் தான் அதற்குச் சரியான காலம்' என்று இருந்ததால் என்னவோ, இன்று வரையில் கிடைக்காத என் கேள்விக்கு பதில், இன்று கிடைத்தது. 

அதாவது, கடவுள் மனிதனைப் படைக்கும்போது அவரவர்களுக்கு உண்டான விதியை அல்லது கடவுளை அடையும் வழியை ஒரு கடவுச்சொல்லை எழுதியோ, சொல்லியோ, தொடுதல் மூலமாகவோ, பார்த்தல், கேட்டல், மூலமாக,  , மேன்மையான மனிதா! நீ தான் பூமியில் பிறந்து 'பிரம்மம்' ஆகிய என்னை அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டாய். ஆகையால், உன்னை  மனிதனாக இந்தப் பூமியில்  பிறக்க  வைத்தேன்.   ஆனால், பூமியில்  என்னை மறக்கும் விதமாக பல விசயங்கள் நடக்கும். அதையெல்லாம் சமாளிக்க வேண்டும். அதனால் உனக்குப் பல பிரச்சனைகள்  வரலாம். அதனையெல்லாம் தீர்க்கும் விதமாக  உனக்கு  ரகசியம்  சொல்லுகிறேன். "இது தான் உனது கடவுச்சொல்!" இதனை எப்போதும் நினைவில் வைத்திரு. எந்த சூழ்நிலையிலும் மறக்காதே! நீ எப்போது என்னை அடைய விரும்புகிறாயோ அப்போது இந்த கடவுச்சொல்லை உச்சரித்தால் நீ என்னை வந்து அடைவாய்! ஆனால், இந்த கடவுச்சொல்லை (மந்திரம்) மறக்கும்படி பூமியில் பல மாயசக்திகள், பஞ்சபூதங்கள் அல்லாமல்  புதிய புதிய பல பூதங்கள்  உன் மனதை திசை திருப்ப பார்க்கும். அதற்கு நீ இடம் கொடுத்தால், நான் உன்னிடத்தில் சொன்ன கடவுச்சொல் மந்திரம் மறந்து போகும். பிறகு, நீயாக அதனை நினைவில்  கொண்டு வந்து அந்த கடவுச்சொல் மந்திரம் சொல்லும் வரையில், பல பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கும். அது ஒரு ஜென்மமோ , பல ஜென்மமோ, அது உன்  நினைவை, எண்ணத்தைப் பொறுத்து இருக்கிறது.

அன்புள்ளம் கொண்ட மனிதா! இதில் ஒரு சூட்சமம் வைத்திருக்கிறேன். இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கடவுச்சொல் மந்திரத்தை சொல்லி அனுப்புகிறேன். ஒருவரின் கடவுச்சொல் மந்திரம் மற்றொருவருக்கு உதவாது. வேலை செய்யாது! ஒவ்வொரு பிறவி எடுக்கும்போது, ஒவ்வொரு கடவுச்சொல் மந்திரத்தைச் சொல்லி அனுப்புகிறேன். அதனை நீ ஞாபகத்தில் வைத்துக்கொள்ள அந்தக் கடவுச் சொல் மந்திரம் எப்பொழும் உன்னுள் ஒலிக்குமாறு உன்னைப் படைத்திருக்கிறேன். அதோடு, அந்த கடவுச்சொல்லை உனக்கு ஞாபகப்படுத்துவதற்காக, அதாவது, அதை நீ மறந்துவிட்டால்? நீ படிக்கும் புத்தகங்களில், நீ பார்க்கும் காட்சிகளில், நீ பயன்படுத்தும் பொருட்களில், நீ காணும் மனித உறவுகளில், நீ உன்னும் உணவுகளில், நீ எண்ணும் எண்ணங்களில், நீ செய்யும் செயல்களில், நீ கேட்கும் ஒலிகளில், நீ இருக்கும் சூழ்நிலையில், இயற்கையில், ஏதாவது ஒன்றில் அந்தக் கடவுச்சொல் மந்திரத்தை உனக்கு எடுத்துக்காட்டுவேன். அப்போது, நீ சுதாரிப்புடன் இருந்தால், அதனைப் பெற்று, அதனை அறிந்து, அதனைச் சொல்லி என்னை அடைவாய். மேலும், அதனை விட்டுவிட்டாலும், கவனிக்காவிட்டாலும், பலவிதங்களில் பலசந்தர்பங்கள் உனக்களிப்பேன். உனக்கு  நினைவூட்டுவேன்.  எல்லாமே நீ என்னை அதாவது இந்த பிரம்மம் அடையவேண்டும் என்பதே அதுவே என் ஆசை. அதனை பூர்த்தி செய்யவேணடும் என்பதே உன் கடமை.  முதல் பிறவியில் சற்று கடினமாகவும் போகப்போக அடுத்தடுத்து எடுக்கும் பிறவிகளில் சற்று எளிமையாகத் தருகிறேன். அது உனது கர்மவினை படி நடக்கும். ஆக உனக்குக் கொடுத்திருக்கும் பிறவியை எவ்வாறு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துகிறாய் என்பதைப் பொருத்தே அது அமையும்.  எப்போது உன்னைப் பிடித்திருக்கும் மாயா சக்திகளை உதரித்தள்ளுகிறாயோ, அதாவது உன்  மனதில் எப்பொழுது களங்கமில்லாமல்,  தூய்மையாய் மாறுகின்றதோ,  அந்த நேரத்திலிருந்துதான் நான் உனக்களித்த கடவுச்சொல் மந்திரம் உன் மனதில் கேட்கும். அதனை நீ உச்சரித்தால், உனது பிறவி நீங்கும். அதன்பின் என்னுடனே அதாவது இந்த பிரம்மம் உடன் நீ ஐக்கியமாவாய்" என்று சொல்லித்தான் பூமியில் உன்னைப்போன்ற மனிதர்களைப்    படைக்கிறேன்.  ஆகையால், இந்தப்  பிறவிப் பெருங்கடலை நீந்த மாயசக்திகளையும், பஞ்சபூதங்களையும் வென்று உங்களுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும் கடவுச்சொல் மந்திரத்தைக் கேட்டு அதனை நீ உச்சரித்து கடவுளோடு, இந்த பிரம்மம் உடன் ஐக்கியமாக வேண்டும். இதுதான்   உனக்குள் இருக்கும் உள்மனிதனின் ஆசை. அதனை நீ   நிறைவேற்றுவாய் என்று  நம்புகிறேன்.  அந்த நேரத்திற்காக நான் உன்னை மகிழ்ச்சியோடு  வரவேற்கக்  காத்திருக்கிறேன்.  . 

நீ விழிப்புடன் இருந்தால், விதியை மதியால் நான் கொடுத்த கடவுச்சொல்லால்,  மந்திரத்தால் வெல்லலாம். பிறவி விமோட்சனம் அடையலாம் நீ என்னை அடையலாம்.

நன்றி 

****************************      

No comments:

Post a Comment