Pages

Wednesday 7 June 2023

சகலகலை வல்லவர் ‘கலைஞர்’ - புதுக்கவிதை

 








சகலகலை வல்லவர் கலைஞர்

            புதுக்கவிதை

        கு.கி.கங்காதரன் 

 

 தமிழன்னைப் பேரைக் காத்தவர்

தமிழுக்குக் கேடயமாய் நின்றவர்

தமிழில் பல்வித்தைக் காட்டியவர்

தமிழைச் செம்மொழியாக உயர்த்தியவர்

 

தமிழ்த்தொண்டில் கடலாக வாழ்ந்தவர்

தடையின்றி தமிழில் சொல்லாற்றுபவர்

தமிழர்களின் அடையாளமாய் இருப்பவர்

தமிழனுக்குத் திசைக்காட்டியாய் விளங்கியவர்

 

தமிழின் உரிமைக்காகப் போராடியவராம்

தமிழ்நாட்டின் அதிசயப் பிள்ளையாம்

திரைபடத் துறையில் கோமானாம்

திறமையாய் அரசியல் செய்தவராம்

 

திட்டங்கள் பலவற்றைத் தந்தவராம்

பட்டங்கள் இவருக்காகத் தவமிருந்ததாம்

சட்டங்கள் இவரிடம் மண்டியிட்டதாம்

கூட்டங்கள் உடன்பிறப்பாக மாறியதாம்

 

எழுத்துலகில் சிகரமாய்த் திகழ்ந்தவர்

அரசியல் தலைவர்களுக்குக் கைகொடுத்தவர்

ஓய்வின்றி பணியாற்றுவதில் மனிதச்சூரியன்

இணையில்லாத புகழுக்குச் சொந்தக்காரர்

              ******************************


No comments:

Post a Comment