Pages

Showing posts with label கவலைகளை அழிக்கும் வழி - ஆசை நிறைவேறும் வழி - A WAY TO DESTROY WORRIES. Show all posts
Showing posts with label கவலைகளை அழிக்கும் வழி - ஆசை நிறைவேறும் வழி - A WAY TO DESTROY WORRIES. Show all posts

Monday, 7 January 2013

கவலைகளை அழிக்கும் வழி - ஆசை நிறைவேறும் வழி - A WAY TO DESTROY WORRIES

கவலைகளை, கஷ்டத்தை, தீயவைகளை அழிக்கும் எளிய வழி மற்றும் 
உங்கள் ஆசை நிறைவேறும் வழி - 
A WAY TO DESTROY YOUR WORRIES
அனுபவப் பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 


நமக்கு உபயோகப்படாத பொருட்களை ஒருபோதும் பத்திரப்படுத்தி வைத்திருப்பதில்லை. மாறாக அதை எரித்டுவிடுகிறோம். கெட்டு போன உணவுகளை நாம் குப்பையில் சேர்த்துவிடுகிறோம். வேண்டாத உறவுகளையும், நட்பையும் நாம் அடியோடு மறந்து விடுகிறோம். 

  

அதற்குமாறாக நமக்கு நன்கு தேவைப்படும் பொருட்களை மிகவும் பத்திரமாக [பாதுகாத்து வருகிறோம். உணவு பொருட்களை கெடாமல் இருக்க அதை குளிர் சாதணப் பெட்டியில் வைக்கிறோம். அன்பான உறவுகளையும், நம்பிக்கையான நட்புகளையும் நாம் விட்டுக்கொடுக்காமல் இருந்து வருகிறோம்.

 

ஆனால் மனதில் இருக்கும் கவலைகளை, பிரச்சனைகளை எவ்வாறு நாம் தூக்கி எறிவது? அதேபோல் நன்மை தரும் நினைவுகளை, வாழ்கையை உயர்த்தும் குறிக்கோளை எவ்வாறு அடைவது என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.


அன்றாடம் சிலர் பின்பற்றும் முறைகள் :

குழப்பமான முடிவுகள்: 

 

நம்மால் கணிக்க முடியாத குழப்பமான முடிவுகளை பூவா, தலையா போட்டுப் பார்த்தும், பூ போட்டுப் பார்த்தும், ஒற்றையா? இரட்டையா ? மூலமாகவும், சின்ன விரல், பெரிய விரல் என்பதிலும், நம்பிக்கையானவர்களின் ஆலோசனைபடியும் முடிவு எடுக்கிறார்கள்.


கவலைகளை அழிக்கும் வழி :

 

இப்போது உங்களுக்கிருக்கும் கவலைகள், பிரச்சனைகள மற்றும் கஷ்டங்களை வரிசைபடுத்தி அல்லது உங்களிடம் இருக்கும் கவலைகளை ஒரு பேப்பரில் எழுதவும். அதாவது 'என்னிடம் இந்த கஷ்டத்தை அழித்துவிடுகிறேன்' என்று எழுதி அந்த பேப்பரை எரித்துவிடுங்கள். இவ்வாறு மூன்று நாட்கள் தொடர்ந்து செய்தால் உங்களின் அந்த பிரச்சனை நீங்கிவிடும். பிறகு வேறொரு கஷ்டத்தை பேப்பரில் எழுதி அதை எரித்து விடுங்கள். இந்த முறையினை பின்பற்றினால் கூடிய விரைவில் உங்களிடம் இருக்கும் அனைத்து கவலைகளும் நீங்கிவிடும். இந்த முறை உங்கள மனதில் பதிந்திருக்கும் கவலைகளை எழுத்து மூலம் பேப்பரில் எழுதி உங்கள் கண் முன்னே அழியும்போது உங்கள் மனதில் உள்ள கவலையும் சேர்ந்து அழிந்துவிடுகின்றது.

குறிப்பு.  (இதற்கு மிகவும் கவனம் தேவை. வெளியில் இதை  செய்ய வேண்டும். கை, கால் உடம்பில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்)

ஆசைகளை அடையும் வழி :

 

அதேபோல் நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான கடின வேலைகளை ஒரு பேப்பரில் தினமும் ஒருமுறை எழுதுங்கள். அவ்வாறு மூன்று முறை எழுதி அதை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். கட்டாயம் உங்களது குறிக்கோள் நிறைவேறும். மனதில் உள்ள குறிக்கோளை பேப்பரில் எழுதி படித்து பார்க்கும்போது உங்களுக்கு தன்னம்பிக்கையும், அதிக ஆற்றலும் கிடைக்கின்றது. அதனால் எளிதாக உங்கள் ஆசை நிறைவேறும்.