Pages

Showing posts with label கவிபாரதி பூ. வைத்தியலிங்கம் அவர்களின் பாராட்டு விழா. Show all posts
Showing posts with label கவிபாரதி பூ. வைத்தியலிங்கம் அவர்களின் பாராட்டு விழா. Show all posts

Sunday, 17 May 2015

கவிபாரதி பூ. வைத்தியலிங்கம் அவர்களின் பாராட்டு விழா



கவிபாரதி பூ. வைத்தியலிங்கம் அவர்களின் பாராட்டு விழா
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்

உருவத்தை மீறிய உயர்ந்த கற்பனைகள்
கல்வித் தகுதியை மீறிய கவிதை படைப்புகள்
வயதிற்கும் மீறிய இளமைத் துடிப்புகள்
செயலுக்கும் மீறிய பொது நலப்பணிகள்

இவரின் 'சின்ன சின்ன பூக்கள்' கவிதைகள் தமிழில்
அன்று பெரிய பெரிய சாதனைகள் செய்தது
இன்றோ 'சிரிக்கின்ற பூக்கள்' ஆங்கிலத்தில்
தமிழ் மொழியையும் தாண்டித் தந்த அற்புதம்

சாதரணமாய் வாழ்வது தான் வாழ்கையா?
வாழ்ந்ததற்கு அடையாளம் இருக்க வேண்டாமா?
சாதாரணமாய் அன்று இருந்தவர்
கவிதைகளால் இன்று உதாரணமாய் வாழ்பவர்.

தங்கள் பெருமை புகழைப் பறைசாற்ற
தலைவர்களுக்கு சிலை வைக்கிறார்கள்
இவரோ கவிதை நூல்களை வெளியிட்டு
நம்மை சிலையாக்கி விட்டாரே!

அகவை எழுபதிற்கு ஒருவிழா!
'சின்ன சின்ன பூக்கள்' கவிதை நூலுக்கு ஒருவிழா!
'சிரிக்கின்ற பூக்கள்' கவிதை நூலுக்கு ஒருவிழா!
முப்பெரும் விழாவிற்கு உரியவர் இந்த நாயகர்

ஐயா கவிபாரதி பூ. வைத்திய லிங்கம் அவர்கள்
இன்று போல் எந்நாளும் இனிதாய் வாழ்ந்து
மேலும் மேலும் புதிய நூல்களை வெளியிட வேண்டும்
அவரது முயற்சிகள் வாழ்க வாழ்கவே!

வெல்க அவரது சேவை!
ஓங்குக அவரது கவிதைப் பணி!

நன்றி, வணக்கம்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%