Pages

Showing posts with label பாரதியின் புது கவிதை ஜோதி - மதுரை கங்காதரன். Show all posts
Showing posts with label பாரதியின் புது கவிதை ஜோதி - மதுரை கங்காதரன். Show all posts

Sunday, 8 July 2012

பாரதியின் புது கவிதை ஜோதி - மதுரை கங்காதரன்

 பாரதியின் புது கவிதை ஜோதி - மதுரை கங்காதரன் 




காலம் (ன் ) மட்டும் காத்திருந்தால் 
கதாநாயகன் ஆயிருப்பாய் !
உம இலட் சிய கனவின் 
உண்மை சொருபத்தை பார்த்திருப்பாய் !

உமக்குத்  தெரியுமா ? பாரதி !
நம்மை ஆண்ட வெள்ளையன் 
நம்மை விட்டு வெளியேறிவிட்டான் !
அனறு 
'வந்தேமாதரம் ' சொன்னால் 
சிறையில் தள்ளப்பட நாங்கள் 
இன்று 
எல்லா சுதந்திரத்தையும் 
பெற்றுவிட்டோம் 

நீர் கண்ட புதுமை பெண்கள் 
அணுக்கு நிகராக 
ஆட்டோ முதல் ராக்கெட் வரை 
இய்க்குகின்றனர் !

கண்ணமாக்களும் , சக்திகளும் 
இன்று ஆட்சி கூட செய்துவருகின்றனர் 


'பாஞ்சாலி சபதம் ' படைத்த நீ 
சுதந்திர இந்தியாவில் இருக்கும் 
"தமிழாட்சி' காவியத்தை தந்திருப்பாய் 

உன் எழுச்சி கவிதைகள் மூலம் 
இன்றைய தலைமுறைக்கு புத்துயிர் 
தந்திருப்பாய் !
உன் சுதந்திர கனவு நனவாக்கிய 
வித்தையை கற்று கொடுதிருப் பாய் 

இளையதலையினருக்கு 
அவர்களின் கனவை  எப்படி நனவாக்கும் 
ரகசியத்தை சொல்லியிருப்பாய 

உன் கவிதை வெள்ளி திரையிலும் 
டி .வி சீரியலிலும் 
வெப் சைட்டிலும்  இண்டர்நெட்டிலும் 
மொபைலிலும் எதிரொலித்து 
இந்த  உலகை வலம்  வந்திருக்கும் 

உன் கவிதை வரிகளை 
கண்ணதாசனும் , வைரமுத்தும் 
இன்னும்  தற்போதுள்ள கவிஞர்களும் 
சிறிய பெரிய திரைகளில் 
கொடுத்து உன் புகழ் பரப்புகின்றனர்..

கவலை  வேண்டாம் பாரதி !
நீ ஏந்திய லட்சிய கவிதை ஜோதியை 
என் போன்றவர்களும் 
கவிஞர்களும் அறிஞர்களும் 
எப்போதும  அணையாமல் 
எந்திவருகின்றோம்   

வெகுவிரைவில் உலகம் முழுதும் 
உம்மை விழா எடுக்கும் 
அப்போது அக்னி குஞ்சுகளாக 
உயிர்தெளுவோம் 
என்றும் 
புதுகவிதை ஜோதியை காப்போம்..

-----  ஆக்கியோன் - கங்காதரன்  .