Pages

Showing posts with label 20.4.2020 காணொளிக் கவியரங்கம்- தமிழ் படித்து வெல்தமிழா! மாமதுரைக் கவிஞர் பேரவை. Show all posts
Showing posts with label 20.4.2020 காணொளிக் கவியரங்கம்- தமிழ் படித்து வெல்தமிழா! மாமதுரைக் கவிஞர் பேரவை. Show all posts

Tuesday, 21 April 2020

20.4.2020 காணொளிக் கவியரங்கம்- தமிழ் படித்து வெல்தமிழா! மாமதுரைக் கவிஞர் பேரவை


20.4.2020 காணொளிக் கவியரங்கம் 
மாமதுரைக் கவிஞர் பேரவை, மதுரை.

தமிழ் படித்து வெல்தமிழா! தலை நிமிர்ந்து நில் தமிழா!
 கு.கி.கங்காதரன்



தாய் இல்லாமல் எவரும் பிறந்ததில்லை
தாய்மொழி இல்லாமல் எவரும் இருந்ததில்லை
தமிழ்மொழி பேசாமல் தமிழர்கள் வாழ்ந்ததில்லை
தமிழ்மொழி படிக்காமல் தமிழர்கள் வென்றதில்லை

கொட்டும் அருவியில் குளிப்பது சுகம்
கொஞ்சும் தமிழில் பேசுவது சுகம்
சொக்கும் தமிழில் படிப்பது சுகம்
சொத்தானத் தமிழைக் காப்பதில் சுகம்.

கடலைக் காக்க இருகரைகள் வேண்டும்
உடலைக் காக்க ஓருயிர் வேண்டும்
தொழிலைக் காக்க தொழிலாளர்கள் வேண்டும்
தமிழைக் காக்க தமிழர்கள் வேணடும்.

வரம் பெற்றத் தமிழை மதிப்போம்
தரம் உள்ளத் தமிழை உயர்த்துவோம்
கரம் கொண்டுக் தமிழைக் காப்போம்
சிரம் நிமிர்ந்து தமிழை படிப்வோம்.

நன்றி, வணக்கம்.
....................